search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President"

    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது
    • கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் படாப்ஸ்கோ நதியின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது நேற்று அதிகாலை சரக்கு கப்பல் ஒன்று பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பாலம் உடைந்து தண்ணீரில் விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள், பாலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.

    இந்தவிபத்தில் 6 பேர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.நீரில் மூழ்கிய 6 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.




    மேலும், பாலத்தின் மீது மோதிய கப்பல் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. சரக்கு கப்பலில் 22 இந்திய மாலுமிகள் பணியாற்றினர். சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோத உள்ளது குறித்து கப்பல் மாலுமிகள் முன்னதாக தகவல் தெரிவித்ததால் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.மேலும் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    அந்த கப்பலில் 4 ஆயிரத்து 679 கண்டெய்னர்கள் இருந்து உள்ளது. இலங்கையை நோக்கி அந்த கப்பல் சென்று கொண்டு இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த விபத்திற்கு இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்து உள்ளது.



    இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது :-

    கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கப்பல் பணியாளர்கள் முன்னரே எச்சரித்தனர். இதன் மூலம் பால்டிமோர் பாலத்தில் போக்குவரத்து மூடப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து அதிகாரிகளுக்கு கப்பலில் பணியாற்றிய இந்தியகுழுவினர் உடனடியாக தகவல் தெரிவித்து உதவியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. எனவே கப்பலில் பணியாற்றிய இந்திய குழுவினருக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு ஜோபைடன் கூறி உள்ளார்.

    • ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.

    இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.

    ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

    அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.

    அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.

    இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.

    முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.

    இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
    • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

    உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

    அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அரசாணையை திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடிதத்தை திமுக எம்பி வில்சன் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த சில நாட்களாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள், இந்நாள் தேர்தல் ஆணையர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது.

    இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார். இந்த திட்டத்தை தி.மு.க. நிராகரிப்பதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், இது குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கி செல்வதற்கு சமம் என்றும் திமுகவினரால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்த திட்டதை கைவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து கேட்டு வரும் நிலையில் தி.மு.க. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.
    • மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். 'காசாவின் மனிதாபிமான நிலைமை பற்றி அவரிடம் நிருபர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.

    அப்போது ஜோ பைடன் 'மனிதாபிமானப் பொருட்களுக்கான நுழைவாயிலைத் திறக்க மெக்சிகோவின் ஜனாதிபதி எல்.சி.சி.-யுடன் பேசினேன். நான் அவரை வாயிலைத் திறக்கச் சொன்னேன்," என்று கூறினார்.

    எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.-யை தவறுதலாக "மெக்சிகோவின் ஜனாதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.

    அமெரிக்க குடியரசுக் கட்சியினர் ஜோ பைடன் மறதி காரணமாக அடிக்கடி நினைவு இழக்கிறார் என்பதற்கான சமீபத்திய ஆதாரமாக அந்த வைரல் வீடியோவை மேற்கோள் காட்டி மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.

    86-வயதாகும் ஜோ பைடன் உலக தலைவர்களின் பெயர்கள் குறித்து தற்போது 3-வது முறையாக தவறுதலாக உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    • வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.
    • செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

    இங்கே வரவேற்கும் போதும் சிலர் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்தீர்கள். அதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. 'சின்னவர்' என்று கூப்பிடுகிறீர்கள். வயதிலும் அனுபவத்திலும் உங்களைவிட உண்மையாகவே நான் சின்னவன்தான்.

    அதற்காக சின்னவர், இளைய கலைஞர், வாலிபப் பெரியார் என்றெல்லாம் அழைப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். சட்ட மன்ற உறுப்பினர், இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர்… என்ற இந்தப் பொறுப்பெல்லாம் இன்றைக்கு வரும் நாளைக்குப் போய்விடும். ஆனால் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதுதான் நிரந்தரம். இப்போது அமைச்சராக இருப்பதால் கொஞ்சம் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருக்க முயற்சிக்கிறேன். தயவுசெய்து பட்டப்பெயர் வைத்து அழைப்பதை தவிர்த்து விடுங்கள்.

    தேர்தல் பணியை நம்முடைய தலைவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார். மூன்று குழுக்கள் அமைத்தார். அதில் ஒருங்கிணைப்புக் குழுவில் நான் இருக்கிறேன்.

    ஒவ்வொரு தொகுதியாகச் சந்தித்து அதில் இருக்கக் கூடிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் வரச் சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒவ்வொரு நாளும் நான்கு தொகுதிகளைச் சந்திக்கிறோம். தொகுதியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள், மனக் கசப்புகள், தொகுதிப் பிரச்சினைகள், வெற்றி வாய்ப்புகள் என்று இப்படி தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றோடு 36 தொகுதி முடித்துவிட்டோம். மீதியுள்ள 4 தொகுதிகளையும் முடித்து விடுவோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால் நிச்சயம் 40க்கு 40ஐ நாம்தான் வெற்றி பெற போகிறோம்.

    நம்முடைய தலைவர் யாரை முடிவு செய்கிறாரோ, தி.மு.க. யாரை முடிவு செய்கிறதோ அவர்தான் அடுத்த பிரதமர் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

    சமீபத்தில் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தைத் திறந்தார்கள். இந்த நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை. ஏனென்றால் அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், கணவரை இழந்தவர். அந்தக் காரணத்திற்காக அவரை அழைக்கவில்லை. ஆனால் செங்கோல் வைக்கிறோம் என்று இருக்கிற எல்லா சாமியார்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    10 நாட்களுக்கு முன்பு இன்னொரு நிகழ்ச்சி நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். தி.மு.க. எந்த மதத்துக்கோ, வழிபாட்டுக்கோ எதிரான கட்சியல்ல. எங்களுக்கு ''ஒன்றே குலம், ஒருவனே தேவன்''. நீங்கள் கோவில் கட்டினால் தமிழ் நாட்டு மக்கள் நன்றாக வழிபடுவார்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் உதய சூரியன் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

    இந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சாமியார்கள் யாருமே செல்லவில்லை. மோடி வருகிறார், அதனால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று சங்க ராச்சாரியார்கள் சொல்லிவிட்டார்கள். இதைத்தான் 4 மாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். அனைவரும் சமம் என்று அப்போது நான் பிரதமருக்கும் சேர்த்துப் பேசியிருக்கிறேன்.

     

    அதற்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, ''மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் கலைஞரின் பேரன். சொன்னால் சொன்னது தான்!'' என்று சொல்லிவிட்டேன். என் மீது தவறு இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். இங்கு ஜாதி, மத பாகுபாட்டுக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இங்கே ஒரு அடிமைகள் கோஷ்டி இருக்கிறது. ஓ.பி.எஸ்.தான் முதலில் கைதாவார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் கைதாவார் என்று அதேநாள் மாலையில் ஓ.பி.எஸ். சொல்கிறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் கைதாகப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். கைதாகி சிறைக்குப் போகும்போதாவது தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டாம், கால் வலி வரும் என்ற கோரிக்கையை மட்டும் நான் அவர்களுக்கு வைக்கிறேன்.

    2021-ல் அடிமைகளை விரட்டி வீட்டுக்கு அனுப்பினோம். இப்போது இந்தத் தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமக்கு இருக்கிற ஒரே குறிக்கோள் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி. நாற்பதும் நமதே, நாடாளுமன்றமும் நமதே.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • ராஜ்காட்டில் சர்வ தர்ம பிரார்த்தனை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதனையடுத்து ராஜ்காட்டில் சர்வ தர்ம பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும்.
    • நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இது மாற்றத்திற்கான தருணம். இந்தியா ஜனநாயகத்தின் தாய். 140 கோடி இந்தியர்களும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

    நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை வழங்கிய அனைவருக்கும் அஞ்சலி. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்விற்கு நாம் அனைவரும் சாட்சியாக விளங்குகிறோம்.

    நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது நல திட்டமாக இது இருக்கும். நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அறிஞர்கள் குறித்து நாம் எப்போதுமே பெருமைக் கொண்டிருக்கிறோம்.

    இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன்.
    • நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம்.

    சென்னை:

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.-ல்.) உள்ள பெண் கமாண்டோ படையினர் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை 'பெண்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி குஜராத் மாநிலத்தை சென்றடைந்தது.

    பேரணியில் சென்ற பெண் கமாண்டோ படையினர் பல்வேறு சாகசங்களை குஜராத்தில் செய்து காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பெண் கமாண்டோக்கள் சிறப்பாகவும், திறமையாகவும் சாகசங்களை செய்தனர்.

    இதையடுத்து வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. தேர்வான 9 பேரில் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஜான்சி மனோகரன் என்பவரும் ஒருவர்.

    இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன். பெண் கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் திறமையாக சாகசங்களை செய்து காட்டியதால், குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளோம்.

    மொத்தம் 60 பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதில், நான் உள்பட 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா, கலைவாணி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக்காட்ட உள்ளேன்.

    இதற்காக நாங்கள் 3 பேரும் தினமும் கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26-ந்தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர்கள் முன்பு எங்களது சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை பெற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.

    • நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராக தேர்வு.
    • நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்) தேர்வு.

    பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

    இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராகவும், ஏசியன் பப்ளிகேஷன்ஸ் டபுள்யுஜே சுரேஷ் பொருளாளராகவும், நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்), சர்வோதய இலக்கியப் பண்ணை புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), பழனியப்பா பிரதர்ஸ் மு.துரைமாணிக்கம் இணைச் செயலாளராகவும், புலம் லோகநாதன் துணை செயலாளராகவும் (தமிழ்), ஃபார்வேடு மார்க்கெட்டிங் சாதிக் பாட்சா துணை செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் -நான்கு பேர்) ஜலால் (இஸ்லாமிக் சொசைட்டி), செந்தில்நாதன்(பரிசல்), அருணாசலம் (அருண் பதிப்பகம்), கண்ணப்பன் (கண்ணப்பன் பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்- நான்கு பேர்) பாலாஜி( பாலாஜி புக் செல்லர்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக்ஸ்),

    ராம் குமார் ( ஆப்பிள் புக்ஸ்), அசோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக (தமிழ்- இரண்டு பேர்) ஹரிபிரசாத் (ஆண்டாள் திரிசக்தி), மோகன் ( மயிலின் பதிப்பகம்) மற்றும் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்-இரண்டு பேர்) சிவகுமார் (சிவா புக்ஸ்), யுவராஜ் (புக் வேர்ல்டு) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

    • கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவர் கைது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

    இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை வருநதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சற்று நேரம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதன் எதிரொலியால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.

    இந்நிலையில், குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என டிஜபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    ×