search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.பாரதி"

    • ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை திருவல்லி கேணியில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் அசோசியேசன் சார்பில் தனியார் ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி சேர்மன் சிற்றரசு, நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முஹம்மது நபி வாழ்க்கையில் சமத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரையாற்றப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, அன்வர் பாசா, நீலம் பாசா காதிரி, இர்பான், சதக்கத்துல்லா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வாழ்நாள் சேவை சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் பிரசிடன்ட் நாகூர் கலீபா சாஹிப் தென்னிந்திய தர்காக்கள் பற்றி புத்தகத்தை வெளியிட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுகொண்டார். விழா ஏற்பாடுகளை அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் செய்திருந்தார். பொருளாளர் அபு மூசா நன்றியுரை கூறினார். பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார்.
    • தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார்.

    அதில், தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தி.மு.க.வினர் சொத்துப் பட்டியல் தொடர்பாக இணைய தளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும்.

    48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

    மேலும், இழப்பீடு தொகையாக தி.மு.க.வுக்கு ரூ.500 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
    • கலைத்துறை வாரிசுபோல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு?

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறியுள்ளார். கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார் என்றும், அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    • எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்.
    • கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது.

    சென்னை ஆர்.எஸ் புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை . உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை இந்தி பேசாத மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 22 வது வட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிவன் தியேட்டர் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு

    மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலரும், முன்னாள் மண்டல தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்வராஜ், வடக்கு மாநகர செயலா ளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜ், அண்ணா காலனி தொகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், 1 மண்டல தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் பேசினர்.

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமை வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டம ன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம் , கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருவகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை திமுக ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரி ந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

    தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பாஜக காரர்களைப் போல பேசி வருகிறார் , ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரு ம்போது அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சபாநாயகர் மீது குறை கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. அதிமுக எப்போது இருந்தாலும் திமுகவிற்கு பங்காளிதான், ஆனால் பாஜக திமுகவிற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் பா.குணராஜ், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, வடக்கு மாவட்ட நிர்வாகி திலக்ராஜ், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், மாணவரணி அமைப்பாளர் தளபதி அன்பு, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், கவுன்சிலர்கள் பி.ஆர்.செந்தில்குமார், அனுஷ்யா, பத்மாவதி, பிரேமலதா கோட்டாபாலு, வேலம்மாள், வடக்கு மாவட்ட நிர்வாகி அன்பழகன், மாநகர நிர்வாகி பாக்கியராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர்கள் பாக்கியராஜ், ஜான் வல்தாரிஸ்,பகுதி நிர்வாகி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்ம நாபன் நாடார் தலைமையில் கூட்டம் நடந்தது
    • ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.

    ஆலந்தூர்:

    நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த. பத்மநாபன் நாடார் தலைமையில் இன்று நடந்தது.

    கொட்டிவாக்கம் முருகன், ஆலந்தூர் கணேசன், சந்திரசேகர பாண்டியன், ராஜ்குமார், சுந்தரேஸ்வரன் ,மின்னல் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினார்கள்.

    பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

    காமராஜர் குறித்து அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது. அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது, அனைத்து போராட்டங்களையும் தலைவர் த.பத்மநாபன் நாடார் தலைமையில் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் ஜெயபால் நாடார், தங்கமுத்து நாடார், கொட்டிவாக்கம் முருகன், சநதிரசேகர பாண்டியன் நாடார், சுந்தரேஸ்வரன் நாடார், மாரி தங்கம் நாடார், ஆலந்தூர் கணேசன் நாடார், பூவை ஜெயக்குமார் நாடார், மின்னல் ஸ்டீபன் நாடார், முத்து ரமேஷ் நாடார், உத்திர குமார் நாடார், ஆனந்தராஜ் நாடார், மனோகரன் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம் தெரிவித்தார்.
    • எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா இன்று நடந்தது. இைதயொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    இதில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், நிர்வாகிகள் சுப்பிரமணியன், சரவணபகவான்,சத்யன், ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்ப ரசு உட்பட பலர் கலந்து கொண்டனர் .

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அண்மையில் மதுரை வந்த பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா மதுரை மக்களிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சம்பந்தமாக தவறான தகவலை ெதரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ததாகவும் அதற்கு தமிழக அரசு தாமதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.

    ஆரம்பத்தில் மதுரை விமான நிலையத்தில் அண்டர் பாஸ் முறையில் திட்டம் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறைந்த அளவு இடம் போதும் என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது அதிக இடம் வேண்டும் என்று கூறி அண்டர் பாஸ்ட் திட்டம் கைவிடப்பட்டது என திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது.

    இதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக தெரிவித்துள்ளார். இதுவும் தவறான தகவல். இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் நாங்கள் கூறினால் தவறாக திரித்து கூறுவதாக சொல்கின்றனர்.

    அண்மையில் தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, பெருந்தலைவர் காமராஜர் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் தி.மு.க.வினரின் கட்டை விரலை வெட்டு வேன் என்று கூறியதாகவும், அவருக்கு கல்லறை அமைத்தது தி.மு.க. தான் என்றும் கூறி உள்ளார்.

    காமராஜர் இதுபோன்ற கடினமான வார்த்தைகளை எப்போதும் பேசியது கிடையாது. இன்றளவும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர். அவரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வார்த்தைகளை அளந்து பேச வேணடும் என ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
    • மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-

    வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். வார்த்தைகளை எப்படி பிரயோகிக்கவேண்டும், எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும், யார் மீது பிரயோகிக்க வேண்டும் என அனைத்து வித்தைகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு கருதி அப்படி பேசவில்லை.

    அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவ்வப்போது கொடுப்போம்.

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா கொடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளையெல்லாம் திமுக காலத்தில் அப்போதே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

    • அ.தி.மு.க. மோதலுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
    • நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. மோதலுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாருடைய அழிவிலும் தி.மு.க. இன்பம் காணாது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் வீணாக தி.மு.க.வை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

    அ.தி.மு.க. செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் தி.மு.க. இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    எதற்கெடுத்தாலும் முதலமைச்சரையும், தி.மு.க.வையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது. யார் மீதோ உள்ள கோபத்தை தி.மு.க.வின் பக்கம் எடப்பாடி பழனிசாமி காட்டுகிறார். வருமான வரி சோதனையை கண்டிக்க தெம்பில்லாமல் தி.மு.க.வை குறை கூறுகிறார்.

    சட்டம், ஒழுங்கு காரணமாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.

    ×