search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Bharathi"

    • இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது.
    • மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.

    தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள்.

    இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த சவால்களுக்கு மத்தியில் தி.மு.க. தொண்டர்கள் கொஞ்சமும் சலிப்பில்லாமல் உறுதியோடு பணியாற்றியுள்ளனர். ஜாதியை தூண்டி விட்டு பேசியவர்கள் மத்தியில் கரியை பூசி இருக்கிறார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
    • ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    * நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை.

    * ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.

    * ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

    * ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.

    * இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
    • நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.

    திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.

    நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.

    ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா?

    எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது" என்று பேசினார்.

    ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.
    • விஜய் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    சென்னை: 

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மேலும், அரசியலில் முதன் முதலாக கல்வி விவகாரம் குறித்து விஜய் கருத்து தெரிவித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    இதனிடையே திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நீட் தேர்வுக்கு எதிராக ஆளும் கட்சி தீவிரமாக இருக்கிறோம்.

    நீட் தேர்வு மட்டுமல்லாது கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி இருக்கிறாரே என்று கேட்டதற்கு...

    வரவேற்கத்தக்கது. கொஞ்ச கொஞ்சமாக he is on the line என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
    • இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

    • டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூத் கேப்சரிங்கை தொடங்கியதே அ.தி.மு.க.தான். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் கலாச்சாரம் தொடங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. சொல்லும் சாக்குதான் புறக்கணிப்பு. டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

    இடைத்தேர்தலில் ஓட்டுப்போட வேண்டாம் என அதிமுகவினரிடம் சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தார்கள் என்று அர்த்தம்.

    வன்னியர் சமூகத்தினருக்கு பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான்.
    • மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து பேசி வருகிறார்.

    அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று பேசி இருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என்று கையேந்தி நிற்பது?

    ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்தோம். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனாலும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு பற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது. காமராஜர் எண்ணங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில்தான் அவரது பெயரால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது.

    அவர் கல்விக்கு வித்திட்டார். அந்த கல்வியை ஆலமரமாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவ செல்வங்கள் 100-க்கு 100 வாங்கும் நிலை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உருவாகி இருக்கிறது.

    எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்சியிடம் தொகுதி கேட்டு கையேந்துவது. அந்த நிலை மாற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். அது அவரது ஆசை. அது நிறைவேறுமா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான். ஆகவே செல்வப்பெருந்தகை அதே ஆசையில் கூறி இருக்கிறார். அவரது ஆசையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது மக்கள் விருப்பம்தான். எனவே காங்கிரஸ் செல்வாக்கை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் இன்று பேசும்போது கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.

    தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது. பேசவும் கூடாது. நல்ல வேளை தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான்.

    மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.

    காமராஜர் ஆட்சி என பெயர் வைக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
    • வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?

    ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?

    ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.

    தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.

    ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க.வின் மாநில முன்னாள் தலைவரும்-மகளிருமான டாக்டர் தமிழிசை துணை நிலை கவர்னராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற- இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி "பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா…? என கேட்கிறேன்.

    அத்துடன், "உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மை தான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.



    அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை-அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை!

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித் தனமான கொலையையும்-பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங்கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.
    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பொதுக்கூட்டம் காலாப்பட்டு தொகுதி கருவடிகுப்பத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி சனாதத்தை பேசியதில் தவறில்லை. சனாதானத்தை பற்றி நாங்கள் கூறியதை திரும்ப பெற மாட்டோம். அது பற்றி பேச வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    காங்கிரசை காப்பாற்றப்போவது நாம்தான். சனாதானத்தை பேச வேண்டாம் என்று கூறிய கமல்நாத் இன்று பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார்.

    தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்து மதிப்பை பார்க்கிறார்கள். சொத்து மதிப்பு கூடுதலாக இருந்தால் வழக்கும் தொடர்வார்கள்.

    ரவுடி, கொலை செய்தவர்களை எங்கும் தேட வேண்டாம், எல்லோரும் பா.ஜனதா அலுவலகத்தில் உள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என கருணாநிதி நினைத்தார்.

    ஆனால் சிலர் நம்மோடு அவரை வர விடவில்லை. ஓட்டு பிரிந்தது, அதன் விளைவு தி.மு.க. தோற்றது.

    பிரதமர் மோடி அரசில் ரூ.7.5லட்சம் கோடி கையாடல் செய்ததாக மத்திய தணிக்கை குழு குற்றம் சாட்டியுள்ளது.

    தி.மு.க. ரூ.1 லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறியதற்காக 1¾ வருடம் சிறையில் இருந்தோம். தோலை தின்றவனுக்கு 1¾ வருடம் சிறை என்றால், 2024-க்கு பிறகு ஆயுள் கைதியாகத்தான் பிரதமர் மோடி இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.
    • முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மறைந்தார். அவர் மறைந்த செய்தி வந்த சில மணி நேரத்திலேயே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அவரிடம் பிரேமலதா உள்பட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அவராகவே உத்தரவிட்டார்.

    2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைக்க கலைஞர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார்.

    அவர் மட்டும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் முதலமைச்சராக இறந்திருப்பார். இன்னும் சொன்னால் அவர் மறைந்திருக்வே மாட்டார். அந்த தெம்பிலேயே அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்.

    இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஜெயலலிதா கூட இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் ஜெயலலிதா அமெரிக்கா சென்று அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்.

    அதேபோல், விஜயகாந்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர் அதோடு எழுந்திருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து, இன்றும் எதிர்க்கட்சி தலைவராகவே இருந்திருப்பார்.

    ஆனால், விஜயகாந்த் திமுகவுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார். எதிர்க்கட்சி தலைவராக இல்லாத நிலையில் கலைஞர் மறைய செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

    இருந்தாலும், விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் அரசு மரியாதை செய்தார் என்றால் அந்த வலி அவருக்கு தெரியும். கலைஞர் இறந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடக்கம் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கை போட்டு கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் 5 ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எய்ம்ஸ் கல்லூரிக்காக பிரதமர் மோடி நாட்டிய ஒற்றை செங்கல்லை வைத்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.

    ஆனாலும் இன்னும் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆனாலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வந்து சென்ற பிறகும் நிவாரணத்துக்காக சல்லி பைசா கூட தரவில்லை.

    எங்களிடம் இருந்து பறித்து வைத்துள்ள நிதியில் 71 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்தை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    தமிழகத்துக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு அல்வா கொடுப்பதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அல்வா கொடுக்கப்போகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பா.ஜனதா கட்சிக்கு கிடைக்காது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    ×