என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சியினர் தொடர்பாக பொதுவெளியில் விவாதம் கூடாது - திமுக
    X

    'தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சியினர் தொடர்பாக பொதுவெளியில் விவாதம் கூடாது' - திமுக

    • அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது
    • கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள்.

    தேர்தல் கூட்டணி பற்றி பொது வெளியில் பேசக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,.

    "கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை கட்சித் தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காரணம் என்ன?

    கூட்டணியில் இருந்தாலும் கடந்தசில நாட்களாகவே திமுக-காங்கிரஸ் நிர்வாகிகளிடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. இது கூட்டணிக்குள்ளும், கூட்டணிக்குள் இருக்கும் பிற கட்சிகளுக்கும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. முக்கிய தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்காவிட்டாலும், இருகட்சி நிர்வாகிகளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மூலமும் மனகசப்பு இருப்பதை உறுதிப்படுத்தி கொண்டே வருகின்றனர். இதன் சமீபத்திய உதாரணம் மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. தளபதியின் பொதுக்கூட்ட பேச்சு.

    "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

    இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

    இவரைத்தொடர்ந்து எம்.பி.ஜோதிமணி, " காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல முன்னரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் காங்கிரஸ் நிர்வாகிகளை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் கூட்டணி கட்சியினர் மீது விவாதம் கூடாது என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×