என் மலர்

    நீங்கள் தேடியது "minister kn nehru"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
    • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

    நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.
    • பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மாலை 4 மணிக்கு நெல்லை மாநகருக்கு வருகிறார்.

    ரூ. 427.56 கோடி

    தொடர்ந்து அவர் பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநகர பகுதியில் ரூ.427.56 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    அதாவது ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.56.71 கோடி செலவில் கட்டப்பட்ட பொருட்காட்சி மைதான வர்த்தக மையம், ரூ.23.14 கோடியில் நெல்லை எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள பன்னடுக்கு இருசக்கர வாகன காப்பகம், ரூ.11.97 கோடி மதிப்பிலான நேருஜி கலையரங்கம், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதியில் 3 இடங்களில் சலவைத்துறைகள், ரூ.12.31 கோடியில் 6 பசுமை பூங்கா, ரூ.8.40 கோடியில் 9 இடங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, ரூ.2.22 கோடியில் 9 இடங்களில் நகர்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், விளை யாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லி க்கோட்டை செல்லத்துரை, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    பேனா நினைவு சின்னம் பணி

    தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான அடிக்கல்லை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் கே.என். நேரு நாட்டுகிறார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர் கார்த்திகேயன், மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் ராஜூ கலந்து கொள்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.

    *** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது.
    • பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    அந்த பணிகளும் முடிக்கப்படும்.பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.

    வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை.

    பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை மேலும் ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார் அவரை நான் என்ன செய்ய முடியும்

    இவ்வாறு அவர் கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம்.

    110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.

    மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
    • திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சென்னை நீங்கலாக அனைத்து மாநகராட்சிகளின் கமிஷனர்களுடன் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சி கமிஷனர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்துவர வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    மேலும், புதிய திட்டங்களுக்கான கருத்துருக்களும், விரிவான திட்ட அறிக்கைகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவது, சொத்துவரி விதிப்பது போன்ற பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், காலி மனையிடங்களை முறையாக சொத்து பதிவேட்டில் பதிவு செய்து தணிக்கைக்கு உட்படுத்திட வேண்டும்.

    அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் தினந்தோறும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி கமிஷனர்கள் முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் கோடைகாலத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஷ்ணுசந்திரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
    • திருமகன் ஈவெரா தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். மாநகர பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீரமைக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருமகன் ஈவெரா இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    மகன் விட்டு சென்ற பணியை நிச்சயமாக அவருடைய தந்தை செயல்படுத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராமச்சந்திரன் மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக் கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதனை கூறி வாக்கு சேகரிப்போம். வரும் 3-ந் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
    • சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர