என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்கொடை"

    • அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக தகவல் வெளியானது
    • அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அண்மையில், அமைச்சர் கே.என்.நேரு திருப்பதி கோவிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.என்.நேரு, "நான் பணம் கொடுக்க கூடாதா? நான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் காணிக்கை வழங்கியது குறித்து விமர்சனம் செய்யட்டும்... எல்லோரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா?" என்று கோவமாக பதில் அளித்தார்.

    இந்நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "திருப்பதி கோவிலுக்கு நான் நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணமில்லை. என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என் பெயரில் நன்கொடை கொடுத்துள்ளார். எனக்கு இது முன்னரே தெரிந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • 2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி ரூ.407 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
    • விப்ரோ முன்னாள் தலைவர் ஆசிம் பிரேம்ஜி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

    2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, விப்ரோ முன்னாள் தலைவர் அசீம் பிரேம்ஜி, ஜெரோதா இணை நிறுவனர் கமல்நாத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி ரூ.407 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

    விப்ரோ நிறுவனத்தில் இருந்து அசீம் பிரேம்ஜி தொடங்கிய அறக்கட்டளைக்கு 29 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பங்குகள் வழங்கப்பட்டுள்ளது. 

    • அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

    தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.

    முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

    • ‘நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்’ நன்கொடை தருமாறு கேட்டனர்.
    • பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கீழ்கரை கணியான்விளையை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் விக்னேஷ் (32).எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் இவர் வீட்டிலிருக்கும்போது 2 வாலிபர்கள் அவர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 'நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்' நன்கொடை தருமாறு கேட்டனர். இவர்களது பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ், வாலிபர்கள் கையில் வைத்திருந்த நன்கொடை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் இரு வாலிபர்களும் கோவை தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என தெரிய வந்தது. வாலிபர்கள் வைத்திருந்த நன் கொடை புத்தகம் போலியாக அவர் கள் அச்சிட்டு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதற்கிடையே பொது மக்கள் அங்கு திரண்டனர்.பின்னர் விக்னேஷ் பொது மக்கள் உதவியுடன் 2 வாலிபர்களையும் குளச்சல் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசார ணையில் வாலிபர்கள் கர்நாடகா மாநிலம் பிஜப்பூர் குந்தவன் பகுதியை சேர்ந்த சச்சின் திலீப் ஜெகதாப் (24) மற்றும் பிஜப்பூர் மெலடியை சேர்ந்த பாரத் லெட்சுமணன் சவான் (26) என்பதும், இவர்கள் கடந்த 8 மாதமாக தோவாளை பகுதியில் கொட்டகை போட்டு தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து போலியாக நன்கொடை வசூல் செய்தது தெரிய வந்தது.

    பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர். ரூ.2 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி இரு வாலிபர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 உள்பட பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்றிரவு இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    • கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
    • காங்கிரஸ் கட்சிக்கு ரூ.541 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்றது ரூ.1,033.7 கோடி ஆகும். அக்கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது.

    அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது என தெரிவித்துள்ளது.

    • சிவகங்கை புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
    • சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    புத்தகத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள், மாயாஜாலக் காட்சிகள் நடந்தன.

    இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணை யாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. அதனை கருத்தில் கொண்டு, இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அந்த புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்க முன்வரலாம்.

    தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூலகங்களை தத்தெடுத்தும், பல்வேறு வகையான புத்தகங்களை கிராம நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கு வழங்கியும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.

    தன்னார்வலர்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தேவ கோட்டை செந்தில் மருத்து வமனை நிறுவன தலைவர் சிவக்குமார் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர்.

    இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தாமாகவே முன்வந்து தங்களது பங்களிப்பையும் அளிக்கும் வகையில், இந்த புத்தக திருவிழாவின் மூலம் பல்வேறு நூல்களை நூல கங்களுக்கும், பள்ளி களுக்கும் வழங்கி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெறும் புத்தகத்திரு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு வார கலெக்‌ஷன் 10 ஆயிரத்தை வழங்கினார்
    • இதுவரை 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாக பெருமிதம்

    திருச்சி,

    துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கி ணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(வயது 73). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பிரிந்து வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். 1980ம் ஆண்டு முதல் தனக்கு யாசகமாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த பள்ளி வளர்ச்சிக்கும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் நன்கொடை யாக கொடுத்து வந்துள்ளார்.கொரோனா கால கட்டத்திற்கு பின்னர் தனக்கு கிடைக்கும் யாகசக பணத்தை அரசு பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, தனக்கு யாசகமாக கிடைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கலெக்டர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து வழங்கினார்.இது குறித்து அவர் கூறும்போது....கடந்த ஒரு வார காலமாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் யாசகம் கேட்டு வந்தேன். ஒரு வார காலத்தில் எனக்கு கிடைத்த 10 ஆயிரம் ருபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். இது வரை யாசகமாக எனக்கு கிடைத்த 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளேன். ஒரு வார காலத்திற்குள் 10 ஆயிரம் ரூபாய் வசூலா என்று உங்களுக்கு ஆச்சர்யம் வரலாம். எனக்கு யாசகமாக கிடைக்கும் உணவு பண்டங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறேன்.யாசகமாக பெறும் பணத்தை நான் என் சொந்த நலனிற்காக எடுப்பதே இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாலும், யாசகம் பெறும் தொகையினை நற்காரியங்களுக்காக அரசிடம் வழங்குவதாலும் எனக்கு அவர்களாகவே முன்வந்து யாசகம் அளிக்கின்றனர். இனி ஜுன் மாதம் வரை நான் யாசகம் எடுத்து கிடைக்கும் பணம் அனைத்தையும் பள்ளிகளுக்கு வழங்க உள்ளேன் என்று அவர் கூறினார், 

    • பாரத் பள்ளியின் நிறுவனர் சிறிய கால்வாய் மற்றும் பாலம் அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வழங்கி வருகிறார் என தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், இம்மிடி நாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான டி.மணி, இம்மிடிநாயக்கனப்பள்ளி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

    இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜோசப்ராஜ் வரவேற்றார். விழாவிற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார்.

    விழாவில் தலைமை ஆசிரியர் பேசுகையில், இப்பள்ளி வனப்பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது-. இங்கு ஏழை மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இந்த பகுதியில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும் போது கால்வாய் நீரை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர்.

    இதை அறிந்த பாரத் பள்ளியின் நிறுவனர் சிறிய கால்வாய் மற்றும் பாலம் அமைக்க ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை வழங்கி வருகிறார் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை.
    • ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்க ப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில், ரூ.2 கோடி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்த செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், ஏற்றுமதி காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், செஞ்சிலுவை சங்க நிர்வாகி தாமோதரன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏவிபி. கார்த்திகேயன், பல்லடம் ஆறுமுகம், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • . இதனை மயிலம் வட்டார கல்வி அலுவளர் மதன்குமார் தொடங்கி வைத்தார்,

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மயிலம் அருகே உள்ள சித்தனி அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதும இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகள ஏந்தி சேர்ப்போம், சேர்ப்போம், அரசு பள்ளிகளிள் தமிழ் வழியில் மாணர்களை சேர்ப்பபேம் என கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வந்தனர்.       

                   நிகழ்ச்சியில் முன்னதாக சித்தனி அரசு நடுநிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தேசிய மக்கள் நேய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க புரவளருமான சித்தனி ஏழுமலை ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பீரோ, மின்விசிறி ஆகியவற்றை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகதிர்காமன், துணை தலைவர் அமர்நாத், ஊராட்சி செயலாளர் முருகன், ஆசிரியர்கள் அருளப்பன், தட்சினாமூர்த்தி, பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன.
    • ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.

    புதுடெல்லி :

    ஒவ்வொரு நிதிஆண்டிலும், அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல், 2021-2022 நிதிஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட 26 அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்த விவரத்தை சேகரித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 26 கட்சிகளும் மொத்தம் ரூ.189 கோடியே 80 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன. இவற்றில், 5 மாநில கட்சிகள் மட்டும் பெற்ற நன்கொடை ரூ.162 கோடியே 21 லட்சம் (85.46 சதவீதம்) ஆகும்.

    இந்த நன்கொடையில், பாரத ராஷ்டிர சமிதி ரூ.40 கோடியே 90 லட்சம் நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி ரூ.38 கோடியே 24 லட்சம், ஐக்கிய ஜனதாதளம் ரூ.33 கோடியே 26 லட்சம், சமாஜ்வாடி ரூ.29 கோடியே 80 லட்சம், ஒய்.எஸ்,ஆர்.காங்கிரஸ் ரூ.20 கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பா.ம.க., தேசிய மாநாட்டு கட்சி ஆகிய கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன.

    2020-2021 நிதிஆண்டில் நன்கொடை பெறாத ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தே.மு.தி.க. ஆகியவை 2021-2022 நிதிஆண்டில் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. தே.மு.தி.க. ரூ.50 ஆயிரம் பெற்றதாக கூறியுள்ளது.

    மொத்தம் ரூ.190 கோடியில், ரொக்கமாக ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிகபட்சமாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை ரொக்கமாக பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் ரொக்கமாக (ரூ.5 லட்சத்து 50 ஆயிரம்) நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.

    • அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
    • இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கலையரசி வரவேற்றார். விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்து, மலர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, முன்னாள் எம்.பி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவகுமார், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வித்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×