search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wipro"

    • விப்ரோ நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • புதிய சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) ஆக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்நிலையில், புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 4 ஆண்டாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து கீழறங்குகிறார் என விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த முக்கிய தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனிவாஸ் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார் என விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

    புதிய சி.இ.ஓ. ஆக பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீனிவாஸ் பாலியா, புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் என்றார்.

    இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிறுவனத்திற்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 நண்பர்களுடன் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார், என்.ஆர்.என்.
    • விப்ரோவிற்கு பெரும் போட்டி நிறுவனமாக உருவெடுத்தது, இன்போசிஸ்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம், இன்போசிஸ் (Infosys).

    1981ல் இன்போசிஸ் நிறுவனத்தை தனது 6 நண்பர்களுடன் தொடங்கியவர், "இந்திய மென்பொருள் துறையின் தந்தை" என அழைக்கப்படும் என். ஆர். நாராயண மூர்த்தி (77).

    சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மென்பொருள் துறைக்கான கல்வி பயிலும் பல இளைஞர்களுக்கு கனவு நிறுவனமாக திகழ்வது, இன்போசிஸ்.

    இன்போசிஸ் துவங்கும் முன்பே 80களில் துவங்கப்பட்ட மற்றொரு மென்பொருள் துறை நிறுவனம், விப்ரோ (Wipro). இதன் தலைவர் அசிம் பிரேம்ஜி (Azim Premji).

    தனது ஆரம்ப கால வாழ்வில் செய்த பல முயற்சிகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை கூறி வரும் நாராயண மூர்த்தி, தான் வேலைக்கு செல்ல முயன்றது குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

    நாராயண மூர்த்தி தெரிவித்ததாவது:

    அக்காலத்தில் நான் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினேன். அதற்கென விண்ணப்பமும் செய்தேன். ஆனால், என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

    அதற்கு பிறகுதான், நான் என் நண்பர்களுடன் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினேன். அதுதான் இன்போசிஸ்.

    இது குறித்து பல வருடங்கள் கழித்து பிரேம்ஜியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என்னை தேர்ந்தெடுக்காமல் விட்டது ஒரு தவறான முடிவு என பிரேம்ஜி தெரிவித்தார்.

    ஒரு வேளை பிரேம்ஜி என்னை தேர்வு செய்திருந்தால், எனது வாழ்க்கையும், பிரேம்ஜியின் வாழ்க்கையும் பெரிதாக மாறியிருக்கும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.

    விப்ரோ மென்பொருள் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக இன்போசிஸ் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.


    நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியும் ஒரு பொறியாளர். இன்போசிஸ் தலைமை பொறுப்பில் அமர அவர் விரும்பியும், நாராயண மூர்த்தி மறுத்து விட்டார்.

    இது குறித்து சில தினங்களுக்கு முன் பேசிய நாராயண மூர்த்தி, "எங்கள் 7 பேரையும் விட மிகுந்த திறமைசாலியான சுதாவை தலைமை பொறுப்பிற்கு வர அனுமதிக்காதது, நான் செய்த மிக பெரும் தவறு" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தான் செய்த தவறையும், பிரேம்ஜி செய்த தவறையும் நாராயண மூர்த்தி கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பயனர்களால் விவாதிக்கப்படுகிறது.

     

    • பணியாளர்களுடன் மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" ஒப்பந்தம் போடுவது வழக்கம்
    • விப்ரோவிலிருந்து விலகிய ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்

    கல்லூரி முடித்து வேலை தேடும் இந்திய இளைஞர்களுக்கு மென்பொருள் துறைதான் கனவுத்துறையாக உள்ளது. ஏசி அறை வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, அதிகளவு ஊதியம், அதிக எண்ணிக்கையில் விடுமுறைகள் என பல காரணிகள் இதற்கு கூறப்படுகின்றன.

    ஆனால், அத்துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மாற வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதல்ல. போட்டி நிறுவனத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் பணியாளர்கள் சேர்வதை தடுக்கும் விதமாக மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" (non-competition) ஒப்பந்தங்கள் போடுவது பரவலான வழக்கம்.

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர் அஜிம் பிரேம்ஜி (Azim Premji). இவர் துவங்கிய மென்பொருள் நிறுவனம் விப்ரோ (Wipro). தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் போட்டி நிறுவனங்களில் சேர்வதற்கு சுமார் 12 மாதங்களுக்கு விப்ரோ தடை செய்திருந்தது.

    2002ல் விப்ரோவில் சேர்ந்து 21 வருடங்கள் தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்தவர் ஜதின் தலால் (Jatin Dalal). இவர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் (National Institute of Technology) பொறியியல் பட்டம் பெற்றவர்.

    விப்ரோவில் ரூ.12 கோடியாக இருந்த அவரது ஆண்டு ஊதியம், ரூ.8 கோடியாக குறைந்தது.

    இதையடுத்து, அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் (Cognizant) எனும் வேறொரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

    இதையடுத்து அவரிடம் ரூ.25,15,52,875.00 நஷ்ட ஈடு கோரி விப்ரோ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    காக்னிசன்ட் நிறுவனத்தில் ஜதினுக்கு ரூ.43 கோடி ஆண்டு ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×