என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddaramaiah"

    • ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது.
    • விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார்.

    கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ஷரணகவுடா பாட்டீல் பையாபுராவின் மகனின் திருமணம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரு என்ற இடத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜர்கிஹோலி தனிதனி ஹெலிகாப்டர்களில் வர முடிவு செய்தனர். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வருகைக்காக ராய்ச்சூர் சாலையில் 2 ஹெலிபேடுகள் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு கலபுரகி சாலையில் உள்ள எம்.எல்.ஏ., மணப்பா வஜ்ஜலின் ஹெலிபேடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க நெறிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு இருந்தன.

    அப்போது முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பைலட் தவறாக தரையிறக்கினார். அப்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் சித்தராமையாவை வரவேற்க யாரும் இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து தவறை உணர்ந்த விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் முதல்-அமைச்சர் சித்தராமையா திருமணத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சித்தராமையா இறங்க வேண்டிய ஹெலிபேடில் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

    முதல்-அமைச்சர் சித்தராமையாவின் பைலட் குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.

    • சித்தராமையா தலைமைத்துவம் மாற்றப்படலாம் என கர்நாடக காங்கிரசில் பேசப்பட்டு வருகிறது.
    • ஆனால் காங்கிரஸ் உயர் தலைமை இதுவரை வெளிப்படையாக ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    முதலமைச்சர் மாற்றம் குறித்த விவகாரத்தில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை உயர் தலைமை ஏற்கவில்லை. மாற்றம் கிடையாது என தெளிவான சிக்னல் கொடுத்துவிட்டதாக, சித்தராமையா மகனும், கர்நாடக மாநில மேலவை எம்.எல்.ஏ-வுமான யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா மகன் யதீந்திரா கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில், உயர் தலைமை இது தொடர்பாக வெளிப்படையாக சொல்லியிருக்காது. ஆனால், எந்தவொரு தலைமைத்துவம் மாற்றமும் இருக்காது என தெளிவான சிக்னல் கொடுத்துள்ளது. ஆகவே, சித்தராமையா ஐந்து வருடம் முதல்வராக பணியாற்றுவார் என நம்புகிறேன். இது தீர்க்கப்பட்ட விசயம். இப்போது அப்படித்தான் தெரிகிறது. சித்தராமையாவை நீக்க வேண்டும் என்றோ அல்லது நீக்கப்படுவார் என்றோ யாரும் கூறவில்லை.

    இவ்வாறு யதீந்திரா சித்தராமையா தெரிவித்தார்.

    முன்னதாக,

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    • சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது.
    • 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா பேசி வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுத்துள்ளார்.

    அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன். அவரும் என் பக்கம் தான் நிற்பார். எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும்" என்று டி.கே சிவகுமார் தெரிவித்தார்.

    • என்னுடைய அரசு, அதற்கான திசையை இழக்கவும் இல்லை. மோசமானதும் இல்லை.
    • நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

    கர்நாடக மாநில சட்டசபையில் சித்தராமையா ஆட்சி குறித்து எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு சித்தராமையா பதில் அளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    அரது தனது இலக்கை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். என்னுடைய அரசு, அதற்கான திசையை இழக்கவும் இல்லை. மோசமானதும் இல்லை. நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

    எங்களுடைய அரசு உணர்வுப்பூர்வமானது. முன்னதாக இருந்த பாஜக அரசு உணர்வுப்பூர்வமற்றது. அன்னபாக்கிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை எடியூரப்பா குறைத்தார். விவசாயிகள் உரங்களை கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குக்கூட சென்றனர்.

    பாஜக அரசு நலத்திட்டம் தொடர்பாக திட்டங்களை நிறுத்தியது. பாஜக அரசால் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. நாங்கள் மனிதாபிமான, உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை கடைபிடிக்கிறோம்.

    கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் சமராஜாநகரில் 36 பேர் உயிரிழந்தனர். பாஜக அரசு 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தது. இதுதான் உங்கள் உணர்ச்சிவசப்படும் தன்மையா?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது

    முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.

    கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.

    தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.

    வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.

    ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.

    முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.

    அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.

    இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

    • டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரசாரிடம் எழுந்து வருகிறது.
    • காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும் என சித்தராமையா திட்டவட்டம்.

    கர்நாடக மாநில முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சினை காங்கிரசில் இன்னும் நீடித்து வருகிறது. சித்தராமையாவின் இரண்டரை வருட முதலமைச்சர் பதவிக் காலம் முடிவடைந்ததால், டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார்.

    ஆனால், காங்கிரஸ் மேலிடம்தான் இதுகுறித்து முடிவு செய்யும். 5 வருட முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாக சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்த நிலையில், சித்தராமையாவிடம் நீங்கள் டெல்லிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சித்தராமையா, "காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் நான் டெல்லிக்கு செல்வேன்" என்றார்.

    துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் டெல்லியில் இருந்து நேற்று கர்நாடகம் திரும்பினார். இதன்மூலும் தலைமைத்துவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்பதை அவரது டெல்லி பயணம் குறிக்கிறது.

    சித்தராமையா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவும் தனக்கு இருப்பதாக டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை.
    • தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன். காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் இது தொடர்பாக முடிவு செய்யும் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வருட முதலமைச்சர் பதவிக்காலத்தை நிறைவு செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ந்தேதியுடன் அதிக காலம் கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவராஜ் உர்ஸ் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். நாளையுடன் கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை சித்தராமையா பெற இருக்கிறார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். தேவராஜ் உர்ஸ் எத்தனை வருடங்கள் மற்றும் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. இன்று மக்களில் ஆசீர்வாதத்தால், தேவராஸ் உர்ஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடம் எப்போது முடிவு செய்யும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் எப்படி முதலமைச்சராகியிருப்பேன்?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
    • 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள்.

    மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு 'விபி ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியது.

    மேலும் திட்டத்தில் பல்வேறு திருத்தங்களையும் கொண்டு வந்து மசோதா நிறைவேற்றி அது சட்டமாகவும் மாறியது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா,

    "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏழைகள் மற்றும் சிறு விவசாயிகளுக்காக வேலை செய்யும் உரிமையைக் கொண்டு வந்தார்.

    இப்போது மத்திய அரசு மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரப் போக்கோடு இந்த விபி ஜி ராம் ஜி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

    நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ல் கொண்டு வந்து, அடுத்த நாளே விவாதம் இன்றி இந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

    பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

    முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

    ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

    இந்த விபி ஜி ராம் ஜிசட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய 100 நாள் வேலைத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

    வேளாண் சட்டங்களைப் போராடித் திரும்பப் பெற வைத்தது போல, இந்த மக்கள் விரோதச் சட்டத்தையும் திரும்பப் பெற வைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார். 

    • தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார்.
    • சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஊகங்கள் எழுகின்றன

    கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் அடுத்த மாத தொடக்கத்தில் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் மீண்டும் கூறியுள்ளார். சிவகுமாரின் ஆதரவாளரான ராமநகரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனவரி 6 அல்லது 9 ஆம் தேதிகளில் 200% சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார். 

    இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார். இல்லையென்றால் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்' என தெரிவித்தார்.

    கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த ஊகங்கள் எழுந்து வருகின்றன. 

    சிவக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள் அவருக்குப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், சித்தராமையாவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 25-ல் மைசூரில் பெரிய அளவிலான மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப் பிறகே முதலமைச்சர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு தலைவர்களும் தாங்கள் கட்சி மேலிடத்தின் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறியுள்ளனர். அதேசமயம் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடம் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தான்தான் ஐந்தாண்டு காலமும் பதவியில் நீடிப்பேன் என்றும் டிசம்பர் 19 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது. 

    • பெங்களூருவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்.
    • புல்டோசர் ஆக்சன் என பினராயி விஜயன் கண்டனம்.

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசைகளை சித்தராமையா அரசு அகற்றியது. இதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புல்டோசன் ஆக்சன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், "கர்நாடக மாநில விவகாரத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலையிடுவதை தவிர்கக் வேண்டும்" எனப் பதில் அளித்துள்ளார்.

    மேலும், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களுருவை பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். பெங்களுருவில் ஆக்கிரமிப்புக்காரர்கள் குடிசைகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. பினராயி விஜயன் அவரது மாநிலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    சித்தராமையா, அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பதற்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையானது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • பாக்ஸ்கான் 30 ஆயிரம் பெண்களை பணிக்கு அமர்த்தியதை ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
    • மேக் இன் இந்தியா திட்டத்தை பாராட்டியதாக ராகுல் காந்திக்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார்.

    கர்நாடக மாநிலத்தின் சாதனைகளுக்கு பெருமை தேடிக்கொள்வதன் மூலம் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கர்நாடகத்தின் வெற்றியை திருடுகிறார் என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றியை அங்கீகரித்தற்காக மக்களவை எதர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனது புதிய யுனிட்டில் 30,000 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மேலும், இத்தகைய அளவில் மற்றும் வேகத்தில் உற்பத்தி வளரக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியதன் மூலம் முன்மாதிரியாகத் திகழ்ந்த கர்நாடகாவைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு அஷ்வினி வைஷ்ணவ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் சித்தராமையா, "மேக் இன் இந்தியா உண்மையாக வெற்றி பெற்றிருந்தால், கர்நாடகா அரசு செய்த சாதனையை, பாஜக ஆளும் இரட்டை என்ஜின் மாநிலங்களால் ஏன் செய்ய முடியவில்லை. எங்களால் சாதனையை காட்ட முடியாதபோது, நீங்கள் மற்றவர்களின் வெற்றியை திருடி, பெருமையை எடுத்துக் கொள்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவுக்கு வெளியே பெங்களூரு அருகே தேவனஹல்லியில் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஐ-போன் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக பாக்ஸ்கான் திகழ்கிறது.

    • 2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது
    • இது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.

    கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் - 2025' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அப்போது பேசிய சித்தராமையா, "காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வென்றால் 4 கோடி ரூபாயும், வெண்கல பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும். இது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும், பேசிய அவர், "அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. காவல்துறையில் 2 சதவீதமும் வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2028 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×