search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddaramaiah"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது
    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும் 2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் கர்நாடக மாநிலத்திலேயே நிறைவேற்றப்படவில்லை இங்கும் நிறைவேற்றமாட்டார்கள் என சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா துணை முதல் மந்திரி சிவக்குமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் பிரசாரம் செய்யும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சித்தராமையா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும்.

    தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தனது 6 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன். 

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணியிட மாற்றம் குறித்து யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
    • 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் பண மூட்டையுடன் செல்கிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகவில் பணியிட மாற்றம் தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா ஆகியோரும், முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகளும் பணியிட மாற்றத்தில் மூழ்கியுள்ளனர். இதில் பண பரிமாற்றம் நடக்கிறது. இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை குற்றம்சாட்டினேன். அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பணியிட மாற்றம் குறித்து யதீந்திரா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

    யதீந்திராவுக்கு போன் செய்தது யார்?, அப்பா என்று யாரை சொன்னார்?, விவேகானந்தா யார்?. மகாதேவிடம் போனை கொடுங்கள் என்று கூறியது ஏன்?. இதில் 'சூப்பர் சி.எம்.' யார்?. இதில் பணியிட மாற்ற விஷயம் இருக்கிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற வேண்டும். தந்தை-மகன் இடையே நடைபெற்ற போன் உரையாடல் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும். முதல்-மந்திரி சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்.

    எம்.எல்.ஏ. ஒருவரின் பரிந்துரை கடிதத்தை எடுத்து வந்தவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டவர்கள் இவர்கள். அந்த நபர் குறித்து நானே கூறினேன். 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் பண மூட்டையுடன் செல்கிறார்கள். 'ஹிட் அன்ட் ரன்' என்று என்னை குறை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வீடியோ ஆதாரமே வெளியாகியுள்ளது. இதற்கு என்ன சொல்கிறார்கள்?.

    காங்கிரசில் உள்ள சிறிய தலைவர்கள் கூட என்னை பற்றி விமர்சித்து பேசினர். இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்?. என்னை மின்சார திருடன் என்று காங்கிரசார் சொல்கிறார்கள். மின்சாரத்தை திருடும் அளவுக்கு எனக்கு தரித்திரம் இல்லை. யாரோ செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்தேன். ஆனால் காங்கிரசார் என்னை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டினர்.

    கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் பேசிய வீடியோ குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், தனது மகன் யதீந்திரா பணம் குறித்தோ, பணியிட மாற்றம் குறித்தோ பேசவில்லை. பணம் பெற்றுக்கொண்டு பணியிட மாற்றம் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்.
    • அவருடன் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரும் நாளை டெல்லி செல்ல உள்ளார்.

    பெங்களூரு:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிக் கூறினோம். காவிரியில் கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமரிடம் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு.
    • தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார்.

     

    இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, "மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்," என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்களான பசுவராஜ் பொம்மை மற்றும் குமாரசுவாமி ஆகியோர் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரி பகுதி அமைச்சர்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து இருந்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் டெங்கு கண்காணிப்பு தொழில்நுட்ப இணைய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரதுறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    டெங்கு பாதித்தவர்கள் பலர் ரத்த தட்டுகள் குறைந்து காணப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ரத்த தட்டுக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல ரத்த வங்கிகள் ரத்த தான முகாம்கள் நடத்தி வருகின்றது.

    இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து பெங்களூரு நகர எல்லைக்குள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்வது, தூய்மையை பராமரிப்பது போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுற்றிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் டெங்கு கண்காணிப்பு தொழில்நுட்ப இணைய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த மென்பொருள், சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள ரோபோடிக் தொழில்நுட்ப பார்க் மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இது, டெங்கு காய்ச்சல் பரவலை 4 வாரங்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கும். கர்நாடகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் இது பரவும் என்பது குறித்த தகவலையும் வழங்கும். வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் பிற நோய்களை கண்டறியவும் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும்.
    • மிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    பெங்களூரு:

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது.

    இதனை சரி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது.

    ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக மாநில அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனைக்கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14-ந் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தி தமிழகம், கர்நாடகா முன் வைக்கும் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    காவிரி ஆணைய உத்தரவை கர்நாடகா செயல்படுத்தியதா? என்பது குறித்தும் பிரமாணப் பத்திரத்தில் விளக்கம் தேவை எனவும் அணைகளில் தற்போதைய நீர் இருப்பு விவரம், மழைப்பொழிவு உள்ளிட்டவை குறித்து செப்டம்பர் 1-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

    இதனிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள 2 வாரங்களுக்கான நீர் பங்கீடு தொடர்பான, ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கர்நாடக அணைகளில் இருந்து, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வரை, காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விடும்படி பரிந்துரை செய்யப்பட்டது.

    இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்கள் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது.

    கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    தற்போது கர்நாடக அணைகளில் குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதன் பின்னர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 295 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு 1,891 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 101.82 அடியாக உள்ளது.

    அதுபோல் கபினி அணைக்கு 1,630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் நீர்மட்டம் 73.77 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் இன்று நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 293 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் 4 ஆயிரத்து 293 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இன்று நடைபெறுவது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது தொகுதி பிரச்சினைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார்.
    • முதல்-மந்திரியை சந்தித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் பா.ஜனதாவில் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்திய எல்லாப்பூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சிவராம் ஹெப்பார் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் சந்தித்து பேசியுள்ளார். அவர் தனது தொகுதி பிரச்சினைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார்.

    அவரும் காங்கிரசில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.டி.சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.ஏக்கள் அடுத்தடுத்து முதல்-மந்திரியை சந்தித்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை பா.ஜனதாவிலேயே தக்க வைத்துக் கொள்ள அக்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அவர்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் 2 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo