என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவகுமார்"

    • அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்
    • ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். இந்த பிரச்சனைக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார் "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

    இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சித்தராமையா, "கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு குறிப்பிட்ட கணதிற்கு அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

    நான் உட்பட காங்கிரஸ் கட்சி, நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகக்கு நாம் கோடுத்த வாக்கு வெறும் முழக்கம் அல்ல. அந்த வார்த்தை தான் நமது உலகம்" என்று தெரிவித்துள்ளார்.

    இரு தலைவர்களிடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் உருவாகி உள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
    • விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது

    கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார்.  முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

    • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
    • தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

    இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். 

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
    • தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

    இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார். 

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.  

     

    இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.

    அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.

    அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார். 

    • நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
    • நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் நேற்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கர்நாடகாவில் நேற்று இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவகுமார் பங்கேற்று பேசினார்.

    அப்போது டி.கே. சிவகுமார் பேசுகையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு மற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி.கே.சிவகுமார் கூறுகையில், நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டிய எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை என்னிடம் கேட்டுள்ளனர். ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர், சிலர் ஆர்வம் காட்டவில்லை, சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டெல்லி மேலிடம் ஒரு பதிலைக் கொடுக்கும்.

    எனது பதவிக் காலத்தில் குறைந்தது 100 காங்கிரஸின் அலுவலகங்களையாவது கட்டுவேன். நான் அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல என்றார்.

    இதனிடையே, தனது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்களிடையே பேசிய டி.கே. சிவகுமார்,

    * நான் இங்கு (கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ) நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.

    * நான் 5.5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன், மார்ச் மாதத்தில், நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்வேன்.

    * மற்றவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன்.

    * நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.

    * கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.

    * நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    * நமக்கு அதிகாரம் கிடைக்கும், கவலைப்படாதீர்கள். ஆனால் அதை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

    2020-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முதலில் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார்
    • தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்

    நேற்று கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

    பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டி.கே. சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.

    உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே' பாடலை பாடினார். இதனால் எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் உடன் கைகோர்ப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நான் ஒரு அர்ப்பணிப்புள்ள காங்கிரஸ்காரன். என் வாழ்க்கை, என் இரத்தம் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியை வழிநடத்தி வரும் நான், ஒரு தூணாக நிற்பேன்.

    ஆர்.எஸ்.எஸ் கீதத்தைப் பாடுவது குறித்து கேட்டபோது, "நான் ஜனதா தளம் மற்றும் பாஜகவை பற்றி படித்திருக்கிறேன். மேலும் ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கற்றுக்கொண்டேன்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியைப் பற்றியும் எனக்குத் தெரியும். தாலுகா மற்றும் மாவட்ட மையங்களில் கள அளவில் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அதன் அமைப்பை எவ்வாறு பலப்படுத்துகிறது என்பது எனக்குத் தெரியும்.

    அரசியல் ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு தலைவராக, என் எதிரிகளில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் அறியாமல் இருக்க முடியாது? அதனால்தான் நான் ஆர்எஸ்எஸ் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.

    சில நேரங்களில் சில அமைப்புகளில் சில நல்ல குணங்கள் இருக்கும். அவற்றை நாம் கவனிக்க வேண்டும், இல்லையா? நான் அதைத்தான் செய்திருக்கிறேன்" என்று சிவகுமார் கூறினார்.

    • பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
    • உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார்.

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார்.

    இந்நிலையில் நேற்று சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

    பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டிகே சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.

    உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

    எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2025 ஐபிஎல் போட்டியில் ஆர்சிவி வெற்றியை கொண்டாட சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவின்போது வெளியே நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதி சோனியா காந்தியை பதவி ஏற்க சொன்னபோது எனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்று கூறினார்.
    • நம்மில் சிலர் அதிகாரத்தை பகிர்ந்து கொள் ஒப்புக்கொள்வதில்லை.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவிவகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்தராமையா மற்றும் டிகே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே முதல்-மந்திரி பதவி தொடர்பாக கடும் விவாதம் நடந்து வருகிறது.

    மேலும் இது தொடர்பாக அடிக்கடி சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் நானே முதல்-மந்திரியாக நீடிப்பேன என்று சித்தராமையா அறிவித்தார்.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லியில் அரசியலமைப்பு சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் சோனியா காந்தி குடும்பத்தை பாராட்டினார். அதே சமயம் சிலர் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்வ தில்லை என்றும் பரபரப்பாக பேசினார்.

    கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதி சோனியா காந்தியை பதவி ஏற்க சொன்னபோது எனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்று கூறினார். மேலும் ஒரு சீக்கியர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார நிபுணர் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். இது ஒரு ஒப்பற்ற அரசியல் தியாக செயல். இவ்வளவு பெரிய ஜனநாயகத்தில் யாராவது இவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்களா?

    இன்று யாராவது ஒரு சிறிய பதவியைக் கூட தியாகம் செய்கிறார்களா? பஞ்சாயத்து மட்டத்தில் கூட பலர் அவ்வாறு செய்வதில்லை. சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் நம்மில் சிலர் அதிகாரத்தை பகிர்ந்து கொள் ஒப்புக்கொள்வதில்லை என்று பேசினார்.

    சிவகுமார் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவருக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான அதிகார பகிர்வு ஒப்பந்தம் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.

    • ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார் .
    • எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

    நேற்று (சனிக்கிழமை) மாலை மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் கவுடஹள்ளி அருகே இந்த விபத்து நடந்தது.

    சிவகுமார் பயணித்த காருக்கு பின்னல் வந்த எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு டி.கே. சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், கான்வாய் விபத்துக்குப் பிறகு டி.கே. சிவகுமார் பெங்களூருக்குத் திரும்பினார்.  

    • டிகே சிவகுமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    • பாஜக இதை சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்னேற்பாடு என்று கூறி வருகிறது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    சித்தராமையா பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஒரு முக்கிய தலைவராக இருப்பதால், கட்சி அவரது தலைமைத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று டிகே சிவகுமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    வரும் ஜூலை 15 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான OBC குழு கூட்டத்திற்கு சித்தராமையா தலைமை தாங்குவார் என்று அவர் கூறினார்.

    "அவர் அதிகாரப்பூர்வமாக குழுவின் தலைவர் அல்ல என்றாலும், அவர் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அமைப்பிற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி அவரது தலைமைத்துவத்தையும் திறன்களையும் பயன்படுத்துகிறது" என்று சிவகுமார் தெரிவித்தார்.

    முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமாருக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் குறித்த கேள்விக்கு, "தற்போது முதல்வர் பதவி காலியாக இல்லை. எனவே, இது போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல" என்று பதிலளித்தார்.

    சித்தராமையா OBC குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதை காங்கிரஸ் மறுத்தபோதிலும், பாஜக இதை சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முன்னேற்பாடு என்று கூறி வருகிறது. 

    • முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும் என்றார் சித்தராமையா.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டு முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவில் முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், எனக்கு என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவரை (சித்தராமையா) ஆதரிக்க வேண்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. கட்சி உயர்மட்டம் என்ன சொன்னாலும், அது என்ன விரும்பினாலும், அது நிறைவேறும் என தெரிவித்தார்.

    • அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும்.
    • பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்

    கர்நாடகாவில் முதல்வரை மாற்ற கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துணை முதல்வர் டி.கே. சிவகுமார், உடனடியாக முதல்வராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், 2028 சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள் காங்கிரஸை வலுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.

    இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், "கட்சியும் ஒழுக்கமும் முக்கியம். நாடு முழுவதும், அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களையும் வலுப்படுத்த விரும்புகிறோம். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டும் பொறுப்பை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க வேண்டும்," என்று கூறினார்.

    அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவிக்கு டி.கே.சிவகுமாரை பரிசீலிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கருத்து குறித்து கேட்டபோது, "யாருடைய ஆதரவும் தனக்கு தேவையில்லை என்றும், தற்போது முதல்வர் நாற்காலியை நோக்கிப் இருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

    அடுத்த தேர்தலிலும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே தனது முன்னுரிமை என்று கூறினார். கர்நாடகாவில் தலைமை மாற்றத்திற்கான திட்டம் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் தெளிவுபடுத்தினார். 

    ×