என் மலர்
நீங்கள் தேடியது "mallikarjun kharge"
- 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21 ராஜினாமா செய்தார்.
- பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 15வது ஜனாதிபதி ஆகியுள்ளார்.
அவர் பதியேற்ற பின் முதல் முறையாக அவர் தலைமையில் இன்று மாநிலங்களவை நடந்தது.
அவையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர், சிறிதும் எதிர்பாராமல் திடீரென விலகினார். பாராளுமன்ற வரலாற்றில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை.
அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்" என்றார்.
கார்கேவின் பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, "புதிய தலைவருக்கு வாழ்த்து கூற வேண்டிய நேரத்தில் கார்கே, தேவையின்றி தன்கர் விவகாரத்தை எழுப்புகிறார்.
இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்பாதீர்கள்" என்று தெரிவித்தார்.
- தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
- விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது
கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார். முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
- தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.
இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.
அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.
அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார்.
- அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
- மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.
சமீபத்திய செங்கோட்டை பயங்கரவாத தாக்குதை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக-ஜேடியுவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. பீகார் தேர்தலிலும் வாக்கு மோசடி நடந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிப்பதாவதும், அது குறித்து ஆய்வு செய்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவிரித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், பீகார் மக்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தை பலவீனமாக்கும் தீய சகதிகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
பீகார் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை கண்டறிவோம். காங்கிரஸ் தொண்டர்கள் தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்.
காங்கிரசின் மகாபந்தன் கூட்டணிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
மக்களுடன் மக்களாக அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் எங்கள் போராட்டம் போராட்டம் மிக நெடியது. அதில் உண்மையுடன் முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
- காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சர்தார் வல்லபாய் படேல், இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி ஆகிய இருவரும்தான் நாட்டின் ஒற்றுமைக்காக மிகக் கடுமையாக உழைத்தார்கள்.
அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் மரியாதை கொடுத்திருக்கிறது. பாஜகவும் அதன் தலைவர்களும் நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மோதல் நிலவியதுபோன்ற பொய்யான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக நல்ல உறவில் இருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் சொன்ன கருத்துக்களை உண்மையிலேயே மதித்தால், ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய வேண்டும்.
இன்று நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்குபாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸுமே காரணமாக இருக்கின்றன. நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளுக்கும் இவர்களே மூல காரணமாக உள்ளனர்
சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்ஸை ஏன் தடை செய்தார் என்பதற்கான காரணங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
சர்தார் படேல், ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காந்தியின் மரணத்தைக் கொண்டாடி, இனிப்புகளை விநியோகித்தனர்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் பேச்சுகள் விஷம் நிறைந்தவை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு அவரது முயற்சிகளைத் தடுத்தார் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடியாக கார்கே பேசியுள்ளார்.
1948 மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்பு 1949 இல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
- கார்கே உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன்.
பெங்களூரு:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (வயது 83) கடந்த 2022-ம் ஆண்டு முதல் அகிய இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் இந்தியா கூட்டணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது முதிர்வு காரணமாக கால் வலி, இருதய பிரச்சனைகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதய துடிப்பு சீரான நிலையில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேஸ்மேக்கர் பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்த பேஸ்மேக்கர் இருதயத் துடிப்பின் வேகத்தையும், சீரையும் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சிறிய, பொருத்தக்கூடிய மருத்துவக் கருவியாகும். குறிப்பாக இருதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைப்பதே இதன் முக்கிய பணியாகும்.
அறுவை சிகிச்சை மூலமாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அவரது மகனும், கர்நாடக மாநில மந்திரியுமான பிரியங்க் கார்கே கூறுகையில், பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. எல்லாம் சரியாக உள்ளது. நலமாக இருக்கிறார். மக்கள் கவலைப்பட தேவையில்லை. மக்களின் ஆசீர்வாதங்களால் அவருக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் அக்கறை மற்றும் வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி, என்று எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் கார்கேவை, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மந்திரிகள், இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு கார்கே உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கே அவர்களிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன், விரைவில் குணமடைய வாழ்த்தினேன். அவரது தொடர்ச்சியான நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
- மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு பெரிய அட்டை பெட்டியுடன் ராகுல் காந்தி வந்தார்.
- ராகுல் காந்தி சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேத்தியின் பிறந்தநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரிசு வழங்கி உள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு பெரிய அட்டை பெட்டியுடன் வந்த ராகுல் காந்தி, அதில் இருந்து பரிசை எடுத்து கொடுக்கிறார். அதில் இருந்த நாய்க்குட்டியை எடுத்து அவர்களிடம் காண்பிக்கிறார்.
நாய்க்குட்டியை பார்த்து முதலில் தயங்கிய சிறுமி சிறிதுநேரத்தில் அதனை தடவிக்கொடுத்து, அதனுடன் விளையாட தொடங்கினார். ராகுலும் நாய்க்குட்டியை தடவிக்கொடுத்து, விளையாடினார்.
இதையடுத்து ராகுல் காந்தி சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
- திமுக எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு கலந்துகொண்டனர்.
- பாதிவழியில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியின் தாஜ் பேலஸ் ஓட்டலில் இரவு விருந்து வைத்துள்ளார்.
இதில், சரத் பவார், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், ஜெயா பச்சன், திமுக எம்.பி கனிமொழி, டி.ஆர்.பாலு, உத்தவ் சிவசேனாவின் சஞ்சய் ராவத் மற்றும் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சமீபத்தில் ராகுல் காந்தியின் வீட்டில் இதேபோல இரவு விருந்து நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரால் பாதிவழியில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள்.
- 50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும்.
புதுடெல்லி:
ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார்.
இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் தேசிய நலன் மிகவும் உயர்ந்தது. நமது வெளியுறவு கொள்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் 50 சதவீத வரியை உயர்த்தி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியபோது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். குறைந்தது 30 முறையாவது கூறிவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி அன்று பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார். அங்கு பிரதமர் மோடி அமர்ந்து இருந்தார். வெளிப்படையாக சிரித்து கொண்டே இருந்தார். அதே நேரத்தில் டிரம்ப் 'பிரிக்ஸ்' இறந்து விட்டதாக அறிவித்தார்.
பல மாதங்களாக சமச்சீர் வரிகளை டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். அது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. விவசாயம், சிறு-குறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்கள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் நீங்கள் (மோடி) எதுவும் செய்யவில்லை.
உங்கள் மந்திரிகள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகின்றனர். அவர்களில் சிலர் பல நாட்களாக வாஷிங்டனில் முகாமிட்டு இருந்தனர்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இப்போது டிரம்ப் மிரட்டி வற்புறுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.
50 சதவீத வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு வெளியுறவு கொள்கையில் ஒரு பேரழிவாகும். இதை பிரதமர் மோடியால் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது மோடி அரசுக்கு தெரியாது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார்.
- நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துக்கள் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தன.
இறுதியில், ஜே.பி. நட்டா தனது கருத்துக்களை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டதால் சர்ச்சை தணிந்தது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது கார்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
கார்கேவின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் தனது மன சமநிலையை இழந்து வருவதாக ஜே.பி. நட்டா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மோடி குறித்த கார்கேவின் கருத்துக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நட்டா கோரினார்.
கார்கே குறித்த நட்டாவின் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நட்டா உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கார்கே கோரினார்.
இதற்க்கு பதிலளித்த நட்டா, தான் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.
இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்றும், கார்கே தனது நிலையை மீறி அத்தகைய மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும் நட்டா வருத்தம் தெரிவித்தார்.






