search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjun Kharge"

    • தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!
    • தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சமூகநீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
    • குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் வருகிற 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கேமராக்களுக்கு முன்பு இத்தகைய கூட்டம் நடத்தும்போது நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மோடி ஜி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உங்கள் அரசு குழியில் தள்ளிவிட்டது.

    வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

    20 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இளைஞர்களிடையே வேலை சந்தையில் கடுமையான நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.

    விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு, 50 சதவீதத்துக்கு மேற்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டன.

    7 பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் வேலை இழப்பு நடந்துள்ளது. இந்த நிறுவனங்களில் அரசின் பெரும்பான்மை பங்குகள் விற்கப்பட்டு விட்டன. இதுவும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வேலையிழப்புக்கு காரணம் ஆகும்.

    2016-ம் ஆண்டில் இருந்து 20 பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கை குறைந்த அளவுக்கு மோடி அரசு விற்றதன் மூலம் 1.25 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு உச்சம் தொட்டிருக்கிறது. பருப்பு, மாவு, அரிசி, பால், சர்க்கரை, தக்காளி, உருளைக்கிழக்கு, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.

    இதனால் குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.

    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு கணிசமாக சரிந்திருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சராசரி வேலை நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது.

    மோடி ஜி கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் உங்கள் அரசை விளம்பரப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறீர்கள். மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கிறீர்கள்.

    ஆனால் 2024 ஜூன் மாதத்துக்கு பிறகு இனியும் அது வேலைக்கு ஆகாது. மக்கள் உங்களிடம் கணக்கு கேட்க தொடங்கி உள்ளனர்.

    நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு மல்லிகர்ரஜுன கார்கே கூறியுள்ளார்.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் குழந்தைகள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசினார். அப்போது, "ஹத்ராஸ் போன்ற கூட்டநெரிசல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், இத்தகைய போலி சாமியார்களை சமாளிப்பதற்கு தேவையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    போலி சாமியார்களால் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் குருட்டு நம்பிக்கையில் கலந்து கொள்கின்றனர். இத்தகைய மத நிகழ்ச்சிகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும். இத்தகைய கூட்டங்கள் எங்கு நடத்த வேண்டும். எவ்வளவு பரப்பளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடத்தும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட வேண்டும்.

    இப்போது பல போலி சாமியார்கள் சிறையில் இருக்கின்றனர். மத கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த சட்டமும் இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது.
    • மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. '400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்' என்று அவர் கூறியும், மக்கள் பா.ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளார்.

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள், ஜனாதிபதி உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
    • நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பது நேற்று தொடங்கியது.

    பாராளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பு புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    முதலில் பாராளுமன்ற ஆளும்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டு எம்.பி.யாக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதன் பிறகு மாநிலம் வாரியாக ஆங்கில அகர வரிசைபடி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு புதிய எம்.பி.க்கள் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். நேற்று மொத்தம் 262 பேர் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அனைத்து எம்.பி.க்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இன்று மொத்தம் 271 எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று மாலையுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இதனிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    எனினும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கேரள காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னிஸ் சுரேஷ் மனுத்தால் செய்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இரவு 8 மணிக்கு பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்குச் சென்றார். அவரை சந்தித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • ஜவகர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்.

    இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.

    திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்னு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் மற்றும் மயிலாடுதுறையில் வக்கீல் சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    அத்துடன், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை இன்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும் வாழ்த்து பெற்றார். அப்போது செல்வ பெருந்தகையும் உடனிருந்தார்.

    • 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்.
    • மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

    மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

    இந்த நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • அதன்பின் பேசிய கார்கே, பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான ஆணையாகும்.

    மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்.

    இது எங்களுடைய முடிவு. இந்த விஷயங்களில் நாங்கள் முழுமையாக உடன்பட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பா.ஜ.க. ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.

    இது மோடிக்கு அப்பட்டமான தோல்வி. தோல்விகளை மறைக்க மோடி பல்வேறு யுக்திகளைக் கையாள்வார். மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆனால் இதை மோடி மாற்ற துடிக்கிறார் என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் கார்கே.
    • அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா என பூனாவாலா கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்தால் நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாரர்ஜூன கார்கே தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மல்லிகார்ஜுன கார்கே (இந்தியா கூட்டணியின் பிரதமர் முகத்திற்கு) விருப்பம் எதுவாக இருந்தாலும், அது பொதுமக்களின் விருப்பமா என்பதுதான் கேள்வி?

    காங்கிரசுக்கோ அல்லது இந்தியா கூட்டணிக்கோ ஆட்சிக்கு வருவதற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

    ஆனால் மல்லிகார்ஜுன கார்கே தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா?

    இந்தியா கூட்டணி கடைசிக் கட்டத்தில் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளப் போவதில்லை. டெல்லியில் நட்பைக் கடைப்பிடித்தவர்கள் பஞ்சாபில் எதிரிகளாக மாறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

    "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

    நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

    நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×