என் மலர்
நீங்கள் தேடியது "Shashi Tharoor"
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.
- வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன
அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நாளிதழ் நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் கடந்த புதன்கிழமை, 300 பத்திரிகையாளர்கள் வரை பணிநீக்கம் செய்தது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் பதிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வில் லூயிஸ் நேற்று (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கையாண்ட விதம் குறித்து ஊழியர்களிடையே எழுந்த கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் வில் லூயிஸ் பதவி விலகியுள்ளார். கடந்த 15 மாதங்களாக அவர் அந்த பதவியில் இருந்தார்.
"வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன" என்று லூயிஸ் தனது பிரியாவிடை குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜெஃப் டி'ஒனோப்ரியோ தற்காலிக சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.
- சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
- 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இஷான் தரூர் உடன் கிட்டத்தட்ட 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இதுகுறித்து இஷான் தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக என் நண்பர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்காகவும் நான் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றுவது ஒரு மரியாதை. உலகத்தையும் அதில் அமெரிக்காவின் இடத்தையும் வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் ஜனவரி 2017 இல் WorldView பத்தியைத் தொடங்கினேன். மேலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு பல முறை இந்தப் பத்தியைப் படித்த 5 லட்சம் விசுவாசமான சந்தாதாரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியா- சீனாவின் 2020 சண்டை குறித்து ராகுல் காந்தி பேசித் தொடங்கினார்.
- அப்போது பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது நாட்டுப்பற்று, பயங்கரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பாஜக உறுப்பினர் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இந்தியா- சீனாவின் 2020 சண்டை தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய புத்தகத்தில் உள்ள குறிப்பை சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.
இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறுகையில் "அரசு அதிக அளவில் எதிர்வினை ஆற்றியதால் மக்களவை நடவடிக்கை முடங்கியது. விவாதத்திற்கு ஏன் அரசு பயப்படுகிறது?" என்றார்.
என் புரிதலின்படி, ராகுல் காந்தி எழுப்ப விரும்பிய விசயம் ஏற்கனவே பொதுவெளியில் உள்ள ஒன்று என்பதால், அரசு தரப்பில் ஒரு அதீத எதிர்வினை இருந்ததாக நான் நினைக்கிறேன். அவர், இன்னும் வெளியிடப்படாத ஜெனரல் நரவனேயின் ஒரு சுயசரிதையை மேற்கோள் காட்டிய 'Caravan' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் அடிப்படையிலேயே பேசினார்.
ஆகவே, முன்னாள் ராணுவ தளபதி புத்தகம் வெளியிடப்படவில்லை என்ற உண்மையை ஆட்சேபிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ராகுல் காந்தியை பேச அனுமதித்திருக்க வேண்டும். ஏனெனில் எப்படியிருந்தாலும் அந்தப் பத்திரிகை பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடியதாகவே உள்ளது.
ராகுல் காந்தி படித்த அதே கட்டுரையை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நான் கூட இப்போதுதான் அதை படித்தேன். மற்றவர்களும் இப்போது அதைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
- ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை
- நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், ராகுல் காந்தியை தெளிவான பார்வை கொண்ட தலைவர் என்றும், மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல்என்றும் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டிய சசி தரூர், "மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.
தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், "நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.
- சசிதரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
புதுடெல்லி:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கினார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்குமேல் என்ன சொல்ல முடியும்.
நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை என தெரிவித்தார்.
- சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை சசி தரூர் எம்.பி. புறக்கணிப்பார் என கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டத்தில் இருப்பேன். கூட்டத்தைப் புறக்கணிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்தார்.
சமீபத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கி மகிழ்ந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
- நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி.
- முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமான கருத்துகளை பகிர்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீறியது இல்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி. பல்வேறு விஷயங்களில் நான் என் கருத்துக்களைத் தெரிவித்தபோதும், பெரும்பாலான விஷயங்களில் நானும் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தோம்.
நான் உண்மையில் என்ன எழுதினேன் என்பதை மக்கள் படித்திருக்கிறார்களா என்று நான் கேட்டால், பெரும்பாலானோர் படித்திருக்கவில்லை. முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது
தான் 17 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், சக தோழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். இப்போது திடீரென்று எந்த தவறான புரிதலுக்கும் அவசியமில்லை.
நான் பிரதமர் மோடியை எங்கே புகழ்ந்தேன் என்று சுட்டிக்காட்டும்படி மக்களிடம் கேட்டேன். முழுப் பதிவையும் படித்தால், அதில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிறகுதான் இந்த பிரச்சனைகள் தொடங்கியதா என்று கேட்டதற்கு "நான் போட்டியிட்டு தோற்றேன். அந்த அத்தியாயம் அங்கேயே முடிந்துவிட்டது. இதில் நான் எந்தப் பெரிய விஷயத்தையும் பார்க்கவில்லை. கட்சியின் வரலாற்றில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, பலரும் வெற்றி பெற்றும் தோற்றும் உள்ளனர்" என்றார்.
சசி தரூர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளையொட்டி "98-வது பிறந்த நாள் கொண்டாடும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை.சேவை வாழ்க்கைக்கு முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி" எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.
ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சசி தரூர் கோபத்தில் இருந்தனர். தற்போது அத்வானியை புகழ்ந்து பேசியது மேலும், ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் நான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
- ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காகக் கிரிக்கெட்டை பலிகடா ஆக்கக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது.
பிசிசிஐ-யின் கட்டளையை ஏற்று, 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.
- "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று சிறுமைப்படுத்தியுள்ளனர்.
- பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது
வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தரகாண்டில் இனவெறி தாக்குதலால் கொள்ளப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
24 வயதான ஏஞ்சல் சக்மா உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்பிஏ பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் ஆகியோர் டேராடூனில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு கும்பல்அவர்களை இனரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளது. "சீனாக்காரன்", "மோமோஸ் விற்பவன்" என்று அவர்களைச் சிறுமைப்படுத்தியுள்ளனர்.
இதனை ஏஞ்சல் சக்மா தட்டிக்கேட்டபோது, ஆத்திரமடைந்த கும்பல் கையில் கிடைத்த கற்கள் மற்றும் இரும்புத் கம்பிகளால் ஏஞ்சல் சக்மாவை கொடூரமாக தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடிய நிலையில், டிசம்பர் 26 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு சகோதரனை பறிகொடுத்த மைக்கேல் வேதனையுடன் தெரிவித்தார்.
தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
"இது ஒரு தேசிய அவமானம். நம் நாட்டு மண்ணிலேயே ஒரு இந்தியரை அந்நியர் போல உணரச் செய்வது நாகரீக சமூகத்திற்கு அழகல்ல," என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைத் தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.
இந்தக் கொடூரமான கொலையைக் கண்டித்து திரிபுராவில் மாணவர்கள் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர்.
- லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள்.
- கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை.
கடும் பனி மூட்டத்தால் லக்னோவில் நடைபெற இருந்த 20 ஓவர் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
லக்னோவில் போட்டி தொடங்குவதற்காக ரசிகர்கள் வீணாக காத்துக் கொண்டிருந்தார்கள். வட இந்திய நகரங்கள் பெரும்பாலானவற்றில் காற்றின் தர குறியீடு (411) மோசமாக இருந்தது. இது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு தேவையான பார்வை தெளிவில்லை. காற்று தரக் குறியீடு திருவனந்தபுரத்தில் சுமார் 68 ஆக உள்ளது. இதனால் அங்கு போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
- இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை
- சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருகிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தநிலையில், இன்று 9 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோ திரும்பினார். இதனிடையே இன்றிரவு 7 மணிக்கு புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதநிலையில், எம்பி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை காங்கிரஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சொந்தக் கட்சியின் தலைவர்களே அழைக்கப்படாதபோது, தனக்கு வந்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "அழைப்பு அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைவரின் மனசாட்சிக்கும் ஒரு குரல் உண்டு. நமது தலைவர்கள் அழைக்கப்படாதபோது, நாம் அழைக்கப்பட்டிருந்தால், விளையாட்டு ஏன் விளையாடப்படுகிறது, யார் விளையாடுகிறார்கள், நாம் ஏன் அதில் பங்கேற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.
நேற்று, "இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.






