search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "racist attack"

    • மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
    • இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

    இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Racistattack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்தவன் ஜான் கிரைன். சம்பவத்துன்று இவன் ஒரு கடைக்கு சென்று காபி குடித்தான். அதற்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றான். அங்கு சீக்கியர் ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குடித்த காபிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கினான்.

    மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றி அவமதித்தார். இத்தாக்குதலில் சீக்கிய ஊழியர் காயம் அடைந்தான். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கிரைன் அங்கிருந்து ஓடிவிட்டான். மறுநாள் அவனை போலீசார் கைது செய்தனர்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது. அவரை முஸ்லிம் என கருதி தாக்கினேன் என கிரைன் கூறினான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். திருட்டு- தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூபா கவுண்டி சிறையில் அவன் அடைக்கப்பட்டான். #Racistattack
    அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய வெள்ளைக்கார வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். #Racistattack
    நியூயார்க்:

    அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் ஹர்விந்தர்சிங் டாட் என்ற சீக்கியர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.

    நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஆண்ட்ரூ ராம்சே என்ற 24 வயது வெள்ளைக்கார வாலிபர் வந்தார். அவரிடம் சிகரெட் தயாரிக்க ரோலிங் பேப்பர் கேட்டார். அதற்கான அடையாள அட்டை இல்லாததால் அவர் தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஹர்விந்தர் சிங்கிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். அவரது தாடியை பிடித்து இழுத்து முகத்தில் குத்தினார். தொடர்ந்து அடித்து உதைத்து கீழே தள்ளினார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தும் அவர் விடவில்லை. தொடர்ந்து இனவெறி தாக்குதலில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்துனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் மீது இனவெறி தாக்குதல் பிரிவில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  #Racistattack
    ×