என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனவெறி"

    • 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர்.
    • அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.

    மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை என அழைக்கப்படுகிறது.

    17 வயதுடைய வெள்ளையின லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை ஷூ பாலிஷ் தொழில் செய்த 19 வயது கறுப்பின இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரவிய தகவலை அடுத்து கறுப்பினத்தவர்களின் வீடுகள் மட்டும் கதைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வெள்ளியாயினத்தவர் இந்த படுகொலைகளை அரங்கேற்றினர்.

    ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட பொய் செய்தியால் நிற வெறி தூண்டப்பட்டு இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்தது.

    சுமார் 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக தீவைக்கப்ட்டு நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர்.

    இந்நிலையில் துல்சா படுகொலையில் உயிர்த்தியவர்களில் தற்போது மூத்தரவாக அறியப்படும் 111 வயதுடைய வயோலா பிளெட்சர் கடந்த திங்கட்கிழமை காலமானார்.

    அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.

    படுகொலைக்குப் பிறகு வீடற்றவராக மாறிய பிளெட்சர் தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வெள்ளையர் குடும்பங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.

    சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், அவர்களின் உடல்கள் தெருக்களில் கிடப்பதையும், அவர்களின் கடைகள் எரிக்கப்படுவதையும் இன்னும் என்னால் பார்க்க முடிகிறது," என்று விவரித்தார். 

    • மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் நின்றிருந்தபோது காரணமின்றி தாக்கினார்.
    • இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளி, "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று கேட்கிறார்.

    மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது நபர் ஒருவர் காரணமின்றி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

    வீடியோவில், இளைஞரை, போதையில் இருப்பது போல் தோன்றும் அந்த நபர் எவ்வித காரணமுமின்றி தள்ளிவிடுகிறார். இதனால் இளைஞரின் கைபேசி கீழே விழுந்தது.

    இளைஞர் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்தபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளுகிறார். "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று அவர் இளைஞரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.

    • மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார்.
    • வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கனடாவில் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே" என்று கூறுவது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்த உணவகம் ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.
    • திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே தந்தையால் காண முடிந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் ஜாலகான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் ரஹீம் கான் (21 வயது).

    இவர் கடந்த திங்கள்கிழமை உள்ளூர் கபே ஒன்றில் மாற்று சமூகத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

    இந்த கபே ஜாம்நர் காவல் நிலையத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் உள்ளது.

    இந்நிலையில் சுலைமானை நெருங்கிய 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை உணவகத்தில் இருந்து காருக்கு இழுத்துச் சென்று உள்ளே ஏற்றி, பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளது.

    பின்னர் மயக்கமடைந்த அவரை அவரின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுள்ளது. அப்போது அந்த கும்பலை தடுக்க முயன்ற சுலைமானின் தாய், சகோதரியை அந்த கும்பல் தாக்கிவிட்டு சென்றுள்ளது.

    சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    போலீசார் கூற்றுப்படி, சுலைமானை அந்த கும்பல் கட்டைகள் மற்றும் இரும்பக் கம்பிகளால் தாக்கியதில் அவரின் உள்ளுறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    12 ஆம் வகுப்பு முடித்த சுலைமான் போலீசில் சேர காத்திருந்தார். சம்பவத்தன்று அவரின் தந்தை போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்க சென்றிருக்கிறார்.

    திரும்பி வந்து பார்த்தபோது காயத்தால் கன்றிய அவர் மகனின் உயிரிழந்த உடலை மட்டுமே அவரால் காண முடிந்தது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார் அந்த கும்பலை தீவிரத்துடன் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

    • நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
    • அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.

    அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.

    தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.

    நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.

    நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.

    மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
    • இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.

    அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது. 

    இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார்.

    செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மைக்கேல் டி ஹிக்கின்ஸ், இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.

    இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும், அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதுபோன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.

    தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டூப்ளினில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது.   

    • தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.
    • இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டார்.

    வெளிநாடுகளில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த சம்பவம் ஜூலை 19 சனிக்கிழமை இரவு அடிலெய்டில் உள்ள கிந்தோர் அவென்யூவில் நடந்தது.

    நகரின் லைட் ஷோவை பார்க்க 23 வயதான சரண்ப்ரீத் சிங் அவரது மனைவியும் வந்திருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் எந்தத் தூண்டுதலும் இல்லாமல் சரண்ப்ரீத்தை காரில் இருந்து இழுத்து சாலையில் தள்ளி அவர்கள் தாக்கியுள்ளனர்.

    தாக்குதலில் சரண்ப்ரீத்தின் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டது.அவர் மயக்கமடைந்த பிறகு காவல்துறையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்தியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் தாக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாக்குதலை படம் பிடித்துக் கொண்டிருந்த சரண்ப்ரீத்தின் மனைவியையும் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
    • காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.

    அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது.

    குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.

    பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

    • அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

    ஆறு வயது பாலஸ்தீன- அமெரிக்க சிறுவனை குத்திக் கொன்ற அமெரிக்க முதியவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

    இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவின் வசித்து வந்த ஜோசப் என்ற வயது 73 முதியவரின் வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.

    கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டின் அருகே அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

    இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஜோசப் மீது இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
    • இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.

    பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். 



    • பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார்.
    • பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீயுடன் இணைந்து வர்ணனை பணியில் ஈடுபட்ட இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை இஷா குஹா, இந்திய பவுலர் பும்ராவை இனவெறியுடன் விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    பும்ரா ஒரு எம்.வி.பி. அதாவது மிகவும் மதிப்புமிக்க 'பிரைமேட்' என்று வர்ணித்தார். பாலூட்டி வகை பெரிய விலங்கினங்களை 'பிரைமேட்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குறிப்பாக குரங்குக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது உண்டு. அதனால் பும்ராவை விலங்குடன் ஒப்பிட்டு பாராட்டுவதா என்று குஹாவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலியாவின் சைமண்ட்சை குரங்கு என்று திட்டியதாக பிரச்சினை வெடித்தது. அதை இந்த விமர்சனம் நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே நேரலையில் இஷா குஹா மன்னிப்பு கேட்டார்.

    இன்று காலை வர்ணனையின் போது அவர் கூறியதாவது:-

    நேற்று நான் வர்ணனையின் போது பல்வேறு வழிகளில் விளக்க கூடி ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்களின் மரியாதை விஷயத்தை நான் மதிக்கிறேன்.

    நான் பும்ராவின் சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன். அதற்காக நான் தவறான வார்த்தையை தேர்ந்து எடுத்துள்ளேன். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

    இவ்வாறு இஷா குகா கூறியுள்ளார்.

    உடனே அருகில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இஷா குஹாவை துணிச்சலான பெண் என பாராட்டினார். நேரலையில் மன்னிப்பு கேட்ட துணிச்சல் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறினார்.

    ×