search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Real Madrid"

    • பிரான்ஸ் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
    • அந்த அணியில் எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.

    இதையடுத்து, அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பிரான்சின் பிரபல கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிளப் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார்.

    ரியல் மாட்ரிட் அணியின் பிரபல வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10-வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

    • இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
    • டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.

    UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.

    இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.

    டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

     

    இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளா
    • ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே. 25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இவர் பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார். ஆனால், போட்டி டிரா ஆகி பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா கோப்பையை வென்றன. 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல் அடித்துள்ளார். 2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

    • ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    • இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    பாரீஸ்:

    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் ஜோஸ்லு அடித்த கோல்களால் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி பெற்றது.

    ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

    அரையிறுதியின் முதல் டெக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

    • பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
    • தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    ரியல் மாட்ரிட் அணி வெல்லும் 14-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    மாட்ரிட்:

    கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), லிவர் பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர் பூல் அணியை வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடியபோது அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெர்மனி அணியின் மிட்பீல்டரான டோனி குரூஸ் ரியல் மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.
    ஜெர்மனி கால்பந்து அணியின் மிட்பீல்டர் டோனி குரூஸ். இவர் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு யூரோ சாம்பியன் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட், இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இதனால் ரியல் மாட்ரிட் 14 வீரர்களை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியானது, இதில் டோனி குரூஸ் பெயரும் இருந்தது. இந்நிலையில் குரூஸ் ரில் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதுவரை 233 போட்டிகளில் விளையாடி 11 கோப்பைகளை முத்தமிட்டுள்ளார்.
    லா லிகா கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆகியோர் வெளியேறிய பின், அந்த அணி தடுமாற ஆரம்பித்தது.

    இதனால் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நிமியத்துள்ளது. கடைசி கட்டத்தில் அவரால் சிறப்பான ஆணியை உருவாக்க முடியவில்லை.

    தற்போது 2018-19 சீசன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் வீரர்கள் டிரான்ஸ்பர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது.  ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் காரேத் பெலே, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கெய்லர் நவாஸ் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட்டை 3-0 என சிஎஸ்கேஏ மாஸ்கோ பந்தாடி அதிர்ச்சி அளித்துள்ளது. #ChampionsLeague
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோவை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ அணி ஆச்சர்யம் அளிக்கும் வகையில் விளையாடியது.

    ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.



    ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RealMadrid
    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட் அணி. உலகிலேயே மிக பிரபலமான கிளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது ரியல் மாட்ரிட். அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அத்துடன் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிரடியான யுவான்டஸ் அணிக்குச் சென்றார்.

    அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக ரியல் மாட்ரிட் அணியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் கால்பந்து ஆணையம் லோபெட்டோகுய்-ஐ அதிரடியாக பணி நீக்கம் செய்தது.



    லோபெட்குயிவின் கீழ் 2018-19 கால்பந்து சீசனில் ரியல் மாட்ரிட் 3 வெற்றிகளுடன் நல்ல துவக்கம் பெற்றாலும், அதன்பின் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. சிறிய அணிகளுடனும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தில் இருக்கும் பரம எதிரியான பார்சிலோனாவிடம் 5-1 என படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்டேகுய்-ஐ அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. தற்காலிகமாக சான்டியாகோ சோலரியை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    ×