என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Real Madrid"
- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
- தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
- சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்
பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.
மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.
இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.
இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.
இதனால் ரியல் மாட்ரிட் 14 வீரர்களை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியானது, இதில் டோனி குரூஸ் பெயரும் இருந்தது. இந்நிலையில் குரூஸ் ரில் மாட்ரிட் உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்.
பேயர்ன் முனிச் அணியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதுவரை 233 போட்டிகளில் விளையாடி 11 கோப்பைகளை முத்தமிட்டுள்ளார்.
இதனால் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நிமியத்துள்ளது. கடைசி கட்டத்தில் அவரால் சிறப்பான ஆணியை உருவாக்க முடியவில்லை.
தற்போது 2018-19 சீசன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் வீரர்கள் டிரான்ஸ்பர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் காரேத் பெலே, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கெய்லர் நவாஸ் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சாலோவ், 43-வது நிமிடத்தில் ஜியோர்ஜி ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதி நேரத்தில் சிஎஸ்கேஏ மாஸ்கோ 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரத்திலும் சிஎஸ்கேஏ மாஸ்கோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரியல் மாட்ரிட் அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பான வகையில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்னோர் ஒரு கோல் அடிக்க சிஎஸ்கேஏ மாஸ்கோ 3-0 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது.
ரியல் மாட்ரிட் தோல்வியடைந்தாலும் ‘ஜி’ பிரிவில் 6 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்ததோடு, நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோமா 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 9 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.
அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.
மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக ரியல் மாட்ரிட் அணியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் கால்பந்து ஆணையம் லோபெட்டோகுய்-ஐ அதிரடியாக பணி நீக்கம் செய்தது.
லோபெட்குயிவின் கீழ் 2018-19 கால்பந்து சீசனில் ரியல் மாட்ரிட் 3 வெற்றிகளுடன் நல்ல துவக்கம் பெற்றாலும், அதன்பின் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. சிறிய அணிகளுடனும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தில் இருக்கும் பரம எதிரியான பார்சிலோனாவிடம் 5-1 என படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்டேகுய்-ஐ அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. தற்காலிகமாக சான்டியாகோ சோலரியை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் கவுட்டினோ முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி சுவாரஸ் கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோ கோல் அடித்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் நம்பமுடியாத வகையில் விளையாடினார்கள். சுவாரஸ் 75-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் எளிதாக மேலும் ஒரு கோல் அடித்தார்.
சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 87-வது நிமிடத்தில் விடால் தலையால் முட்டி கோல் அடிக்க 5-1 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது பார்சிலோனா.
இதில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் களம் இறங்குவார்கள். ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றதால், ரியல் மாட்ரிட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரியல் மாட்ரிட் அணியால் கடைசி வரை கோல் அடிக்க இயலவில்லை. அதேபோல் அட்லெடிகோ டி மாட்ரிட் அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா - அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அத்லெடிக் கிளப் அணியின் டி மார்கோஸ் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
2-வது பாதி நேரத்தில் கோல் அடிக்க பார்சிலோனா கடும் முயற்சி எடுத்தது. 84-வது நிமிடத்தில் முனிர் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளம் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் பாதி நேரத்தில் மெஸ்சி விளையாடவில்லை. 55-வது நிமிடத்தில்தான் களம் இறங்கினார்.
ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைனதாத்தில் விளையாடினாலும் ரியல் மாட்ரிக் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. எஸ்பான்யல் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரியல் மாட்ரிட் தடுமாறியது.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அசென்சியோ ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. பார்சிலோனா 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்