search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kylian Mbappe"

    • பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்டனர்.
    • தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பின் தூண்களான மெஸ்ஸி, நெய்மர் வெவ்வேறு கிளப்களுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மற்றொரு நட்சத்திரமான எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய பல அணிகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணி 120 மில்லியன் யூரோக்களுக்கு (1,086 கோடி) எம்பாப்பேயை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    எம்பாப்பே ரியல் மேட்ரிட் அணிக்கு மாறினால், ஸ்ட்ரைக்கராக வினிசியல் ஜூனியருடன் இணைந்து மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் நீடிப்பதே எம்பாப்பேயின் விரும்பம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்
    • 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்

    ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

    இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    • ஆட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் ஜிராடு கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாப்பே கோலாக்கினார்

    ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு. பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆடடங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

    'பி' பிரிவில இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

    • அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
    • அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    கத்தார்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.

    அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

    உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann
    பாரீஸ்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

    இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும். இதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் 10 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான எம்பாப்பே, கீரிஸ்மேன் ஆகியோருக்கு இடம் கிடைத்து உள்ளது. இருவரும் இந்த உலக கோப்பையில் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர். இதேபோல பிரான்ஸ் நாட்டின் பின்கள வீரரான ரபெல் வரனேயும் அந்த பட்டியலில் உள்ளார்.

    உலக கோப்பையில் 6 கோல்களை அடித்து விருது பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனும் இடம் பெற்றுள்ளார்.

    லியோனல் மெஸ்சி, கிறிஸ்டினோ ரொனால்டோ ஆகியோருடன் இவர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு இடம் இல்லை.



    உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 வீரர்கள் விவரம்:-

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எம்பாப்பே, கிரீஸ்மேன், ரபெல் வரெ (பிரான்ஸ்), ஈடன் ஹசாட், கெவின் டிபுருயன் (பெல்ஜியம்), ஹாரிகேன் (இங்கிலாந்து) மோட்ரிச் (குரோஷியா), முகமதுசாலா (எகிப்து). #KylianMbappe #AntoineGriezmann
    பிரான்ஸ் அணியின் இளம் வீரரான மப்பே தனது உலகக்கோப்பை சம்பளம் மற்றும் போனஸை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். #Mbappe
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி வரை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் 19 வயதே ஆன கிலியான் மப்பே இடம் பிடித்திருந்தார். இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

    உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் உலகக்கோப்பை தொடரில் கிடைக்கும் சம்பளம் மற்றும் போனஸை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை பயிற்சிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி மப்பே ஒரு போட்டிக்கு தலா 29 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார்.



    இதன்மூலம் 7 போட்டிகளில் விளையாடி இரண்டு லட்சத்து 3 ஆயிரம் டாலர் சம்பளமாக பெற்றார். உலகக்கோப்பையை வென்றதால் போனஸாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் டாலர் கிடைத்தது. இரண்டையும் சேரத்து கிடைத்த 5 லட்சத்து 53 ஆயிரம் டாலரை (3 கோடியே 80 லட்சம் ரூபாய்) தற்போது நன்கொடையாக வழங்கியுள்ளார்.
    பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இளம் வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான 11 கொண்ட அணி வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்னணி வீரரான கிலியான் மப்பே இடம்பிடித்துள்ளார்.



    மப்பேவிற்கு 19 வயதுதான் ஆகிறது. இதன்மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் இளம் வயதில் களம் இறங்கிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கால்பந்து ஜாம்பவான் பீலோ 1958-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார். அதன்பின் இத்தாலி வீரர் பெர்கோமி 1982-ல் தனது இளம் வயதில் களம் இறங்கியுள்ளார்.
    காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று உருகுவே வீரர் சுவாரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்றில் உருகுவே போர்ச்சுக்கல் அணியை 2-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 4-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    பிரான்ஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் கிலியான் மப்பே. இவர் அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க பிரான்ஸ் 4-2 என முன்னிலைப் பெற்றது. காலிறுதியில் உருகுவே அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்ற கணிக்கப்படுகிறது.



    இந்நிலையில் கிலியான் மப்வேவை கொண்ட பிரான்ஸ் அணியை எதிர்த்து சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக உருகுவே அணியின் முன்னணி வீரரான சுவாரஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உருகுவே நட்சத்திர வீரர் சுவாரஸ் கூறுகையில் ‘‘கிலியான் மப்பே சிறந்த வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை கட்டுப்படுத்தும் வகையில் எங்களிடம் சிறந்த டிபென்ஸ் உள்ளது’’ என்றார்.

    உலகக்கோப்பை போட்டிக்காக தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் மாற்றுதிறனாளி மற்றும் ஆதரவற்றோரின் விளையாட்டுக்காக பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே தெரிவித்துள்ளார். #KylianMbappe

    கிலியான் மப்பே என்ற பெயர் உலகம் முழுவதும் தற்போது சென்று சேர்ந்துள்ளது. ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாக்-அவுட் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக பிரான்ஸ் அணி வீரர் மப்பே இருந்துள்ளார்.

    19 வயதான மப்பே அடித்த இரண்டு கோல்களால் அர்ஜென்டினா அணி வெளியேறியது. இந்த போட்டியை அடுத்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த மப்பே, தற்போது இன்னொரு நெகிழ்வான செயலாலும் அனைவராலும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த உலககோப்பையில் விளையாடுவதால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரான்ஸில் உள்ள ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுக்காக செலவிட உள்ளார்.

    இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.2 கோடியை தொடும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியில் முன்கள வீரராக இருக்கும் மப்பே, பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பிரான்ஸ் கால்பந்து அணி வீரரான மப்பேயிடம் என்னைவிட அதிக திறமை உள்ளது சக நாட்டு வீரரான பால் போக்பா தெரிவித்துள்ளார். #WorldCup2018 #Mbappe
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜென்டினா மோதின. இதில் 4-3 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றிக்கு பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான கிலியான் மப்பே இரண்டு கோல்கள்தான் முக்கிய காரணம். 19 வயதே ஆன மப்பே 64 மற்றும் 68-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.



    மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் மற்றொரு பிரான்ஸ் வீரரான பால் போக்பா சிறந்த வீரராக கருதப்படுகிறார். மிட்பீல்டரில் சிறந்த வீரரான போக்பா, என்னைவிட கிலியான் மப்பேவிற்கு அதிக திறமை உள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து பால் போக்பா கூறுகையில் ‘‘கிலியான் மப்பே மிகவும் வேகமாக ஓடக்கூடியவர். அவரை ஒப்பிட்டு பேசுவது சரியாகாது. என்னைவிட அவருக்கு அதிக திறமை உள்ளது’’ என்றார்.
    ×