என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து"

    • இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது.
    • இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    செவில்லே:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    நேற்று ஒரே நாளில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்பட 8 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.

    ஐரோப்பா கண்டத்தில் 'இ' பிரிவில் நடந்த தகுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-துருக்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 16 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து தகுதிப்பெற்றது.

    2010-ம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 13-வது முறை உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது. ஒட்டுமொத்தமாக 17-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது.

    'ஜே' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 7-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ் டீன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 18 புள்ளியுடன் தகுதிபெற்றது. தொடர்ந்து 4-வது தடவையாகவும், ஒட்டு மொத்தத்தில் 15-வது முறையாகவும் உலக கோப்பையில் ஆட உள்ளது. 2018-ல் 3-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

    'எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரியா 8-வது முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற்றது. 1954-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்ததே ஆஸ்திரியாவின் சிறந்த நிலையாகும். 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் ஆடுகிறது. 'பி' பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்தும் (13-வது தடவை), 'சி'பிரிவில் இருந்து ஸ்காட்லாந்தும் (9-வது தடவை) தகுதிபெற்றன.

    வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி (2-வது முறை) உலக கோப்பைக்கு தகுதிபெற்றன. 52 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதி உலக கோப்பையில் ஆட உள்ளது. இதேபோல அங்கிருந்து முதல் முறையாக குராசா நாடு தகுதிபெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர் லாந்து, பெல்ஜியம், ஆஸ்தி ரியா, சுவிட்சர்லாந்து. ஸ்பெ யின், ஸ்காட்லாந்து, பனாமா, ஹைதி, குராசா.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றில் இருந்து செல்லும் 39 அணிகள் என இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • தொடர்ந்து 19-வது முறையாக உலக கோப்பையில் ஜெர்மனி ஆடுகிறது.
    • 12-வது தடவையாக நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறி இருக்கிறது.

    லீப்ஜிக்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள் தேர்வாகின்றன. ஆசியா-8, ஆப்பிரிக்கா-9, வட, மத்திய அமெரிக்கா கரீபியன்-3, தென்அமெரிக்கா-6, ஓசினியா-1, ஐரோப்பா-16.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயான பிளே-ஆப்ஸ் மூலமாக 2 அணிகளுமாக,மொத்தம் (43+3+2) 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் தேர்வாகும்.

    நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் நகரில் நடந்த ஆட்டத்தில் ஜெர்மனி 6-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி 'ஏ' பிரிவில் 15 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றது.

    4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அந்த அணி தொடர்ந்து 19-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. ஒட்டுமொத்தத்தில் 21-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது. சுலோ வாக்கியா 12 புள்ளிகளுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

    ஐரோப்பிய தகுதி சுற்று 'ஜி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லுதுனியாவை தோற்கடித்தது. இதன் மூலம் அந்த பிரிவில் 20 புள்ளிகளை பெற்று உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது.

    12-வது தடவையாக நெதர்லாந்து உலக கோப்பைக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி 3 முறை 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பிரிவில் போலந்து 17 புள்ளியுடன் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோ ஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 31 அணிகள் என இதுவரை 34 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 12 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும்.
    • ரோமில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை நார்வே தோற்கடித்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடந்த போட்டி முடிவில் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 29-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நார்வே தகுதி பெற்றது.

    ரோமில் நடந்த ஆட்டத்தில் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை தோற்கடித்தது. நட்சத்திர வீரர் ஹாலண்ட் 2 கோலும் (77 மற்றும் 79-வது நிமிடம்), நுசா (63), லார்ஸ் லார்சன் (93) ஆகியோர் நார்வே அணிக்காகவும், எஸ்போசிஸ்டோ (11), இத்தாலி அணிக்காகவும் கோல் அடித்தனர்.

    குரூப் 1 தகுதி சுற்றில் நார்வே 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் தகுதி பெற்றது. ஒட்டு மொத்தத்தில் 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 29 அணிகள் என இதுவரை 32 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 16 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
    • போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    சாகிரேப்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே , இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன. நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.

    27-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள குரோஷியா தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரோயேயை தோற்கடித்தது. குரோஷியா 7-வது முறையாக தகுதி பெற்றது. தொடர்ச்சியாக 4-வது தடவையாக முன்னேறியுள்ளது. 2018-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 27 அணிகள் என இதுவரை 30 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 18 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.
    • இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

    48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

    இதனையடுத்து அடுத்த உலக கோப்பை தொடர் 2034-ல் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாயில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இது ஸ்கை ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

    இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்டேடியம் தொடர்பான திட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
    • மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    புடாபெஸ்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.

    இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.

    40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி
    • 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.

    தோகா:

    உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டு திருவிழா, உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    கடைசியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018ம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 20-ந் தேதி கத்தாரில் தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்று உள்ளது. மீதமுள்ள 31 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெற்றன.

    இந்த 32 நாடுகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வோரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெரும்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்துக்கு ரூ.244 கோடி வழங்கப்படும். 3-வது இடத்துக்கு ரூ.219 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.203 கோடியும் கிடைக்கும்.

    கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

    • போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
    • உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

    அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) சந்திக்கின்றன. இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 35 வயதான நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சிக்கு (அர்ஜென்டினா) இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம்.

    அவரிடம் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மெஸ்சி கூறுகையில், 'இது பற்றி விவாதிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட அணிகள் குறித்து தான் நாம் பேசுகிறோம். மற்றவர்களை விட பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கு சற்று வாய்ப்பு அதிகமிருப்பதாக நினைக்கிறேன்.

    ஆனால் உலக கோப்பை கால்பந்தில் வாகை சூடுவது யார்? என்பதை கணிப்பது மிகவும் கடினம். சவால் நிறைந்த இந்த போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் களம் இறங்க மிகவும் ஆர்வமாக உள்ளோம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம்' என்றார். 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் அர்ஜென்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் சவுதிஅரேபியாவை 22-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.
    • உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது.

    தோகா:

    உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளத்தால் அங்கு பணம் கொழிக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அந்நாட்டு அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது.

    உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே கத்தார் சென்று விட்டன.

    இந்த நிலையில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தோகா சென்றடைந்தன. அந்நாட்டு வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டு அணியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று பிறகு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    • பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது.
    • உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தாரில் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து நாடு வீரர்களும் கத்தார் வந்த வண்ணம் உள்ளனர்.

    அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் கத்தார் வந்தடைந்தபோது, அவர்கள் இந்திய ரசிகர்கள் டிரம்ப் வாசித்து வெகு விமர்சையாக வரவேற்றனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தது அனைவரையும் ஆச்சர்யமாக இருந்தது. மேலும், வரவேற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த நிலையில், ரசிகர்களை போட்டி அமைப்பாளர்கள் பணம் கொடுத்து அழைத்து வந்து வரவேற்பு அளித்தார் என விமர்சனம் எழுந்தது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என போட்டிக்கான உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

    பல்வேறு அணிகளுக்கு வரவேற்பு கொடுக்க கடந்த வாரம் கத்தார் நூற்றுக்கணக்கான போலி ரசிகர்களுக்கு பணம் வழங்கியது என செய்தி வெளியானது. இதை கத்தார் மறுத்த நிலையில் தோகா வந்தடைந்த அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிக்கு நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்கள் வரவேற்பு அளித்தது கேள்வியை எழுப்பியது. அவர்கள் போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றிருக்கலாம் என செய்தி பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    கத்தாரில் வசிக்கும் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இவ்வாறு குவிந்தனரா? அல்லது அதிகாரிகளால் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்பது தெளிவாக புலப்படவில்லை என விளையாட்டு செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று, அங்கு கூடியிருந்த ரசிகர்களில் சிலரிடம், போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து பணம் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினோம். அப்படி ஏதும் இல்லை. நாங்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிலாந்து அணி மற்றும் பிரிமீயர் லீக் குறித்து தெளிவான தெரிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    போட்டிக்கான உயர்மட்ட குழு, ''உலகம் முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்கள் - அவர்களில் பலர் கத்தாரை தங்கள் வீடாக மாற்றியுள்ளனர். சமீபத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கு பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் ரசிகர்கள் அணிவகுப்புகளை ஏற்பாடு செய்து பல்வேறு தேசிய அணிகளை அவர்களது ஹோட்டல்களில் வரவேற்றனர்'' எனத் தெரிவித்துள்ளது.

    உலகக் கோப்பைக்கான மைதானங்களை கட்டமைக்கும்போது கத்தார் அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறந்த வீரரில் ஒருவராக திகழ்கிறார்
    • பேயர்ன் முனிச் கிளப்பிற்காக விளையாடி வரும் சானேவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது.

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் செனேகல் அணியில் விளையாடுகிறது. அந்த அணியின் சிறந்த வீரர் சாடியோ மானே. 30 வயதான இவர் ஜெர்மனியின் முன்னணி களிப்பான பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.

    அந்த அணிக்காக விளையாடியபோது காலி காயம் ஏறுப்ட்டது. காயம் குணமடைந்து விடும் என நினைக்கையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், அவர் உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என செனேகல் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    ஆப்பிரிக்காண கண்டத்தின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இரண்டு முறை வென்றுள்ள சானே இடம் பெறாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    செனேகல் குரூப் ஏ-வில் இடம் பிடித்துள்ளது. இந்த அணியுடன் கத்தார், ஈக்வடார், நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. செனேகல் வருகிற 21-ந்தேதி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    1930-ம் ஆண்டு உருகுவேயில் உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உருகுவே சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இரண்டாம் உலக போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக உலக கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்தது. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நாளை (20-ந் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.

    இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் விவரம்:-

    கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ('ஏ' பிரிவு), இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் (பி), அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து (சி), பிரான்ஸ் ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா (டி), ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான் (இ), பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா (எப்), பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் (ஜி), போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா (எச்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். டிசம்பர் 2-ந் தேதியுடன் 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக்அவுட்டுக்கு தகுதி பெறும்.

    டிசம்பர் 3 முதல் 6-ந் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ந் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ந் தேதி நடக்கிறது.

    பிரேசில் அதிகபட்சமாக 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, இத்தாலி தலா 4 முறையும் அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, ஸ்பெயின் தலா 1 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

    4 முறை சாம்பியனான இத்தாலி இந்த முறையும் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

    இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), லெவன்டோஸ்கி (போலந்து), எம்பாப்பே (பிரான்ஸ்), ரொனால்டோ (போர்ச்சுக்கல்), கெவின் டு புருயின் (பெல்ஜியம்), கரீம் பென்சிமா (பிரான்ஸ்), நெய்மர் (பிரேசில்), ஹாரிகேன் (இங்கிலாந்து), மோட்ரிச் (குரோஷியா) போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள்.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. 'ஏ' பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    தொடக்க விழாவில் பிரபல பி.டி.எஸ். பாடகர் ஜங்குக் மற்றும் அமெரிக்க குழுவான ஐட்பீஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து பாடகர் பதேகி வில்லியம்ஸ், நோரா பதவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். கொலம்பிய பாடகி ஷகிரா தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விலகினார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×