search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Croatia"

    • வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
    • வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு

    இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.

    இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.

    ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

    யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
    • உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    லுசைல்:

    கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.

    குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.

    ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.

    உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

    அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    உலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். #FIFAWC2018 #Champion #France
    மாஸ்கோ:

    ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கனவே பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    பிரான்ஸ் அணி கோப்பையை வென்ற மறு வினாடியே பிரான்ஸ் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது. ரசிகர்கள் தெருக்களுக்கு திரண்டு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கொடிகளுடன் தெருக்களில் வெற்றி உலா வந்தனர். பாரீஸ் உள்பட சில இடங்களில் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் வரம்பு மீறியது. சிலர் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வெற்றிக்கு பிறகு பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வென்றது உண்மையிலேயே அற்புதமானதாகும். இறுதிப்போட்டியில் நாங்கள் பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் எங்களது மன உறுதியை வலுவாக வெளிப்படுத்தினோம்’ என்றார்.

    உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் கால்பந்து அணி நேற்று நாடு திரும்பியது. பாரீஸ் நகரில் வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட போது எடுத்தபடம். வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்களிப்பில் நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. சிறப்புக்குரிய இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் என்பதால் நாங்கள் தொடக்கத்தில் சற்று பயத்துடன் தான் செயல்பட்டோம். போகப்போக இயல்பு நிலைக்கு திரும்பி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தோம். அதில் நாங்கள் வித்தியாசத்தை காட்டினோம். உலக கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் ஆவலுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    பிரான்ஸ் அணியின் நடுகள வீரர் பால் போக்பா கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எனது இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களால் இந்த கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நமது உலக கோப்பை கனவு, நனவாக இன்னும் 90 நிமிடங்கள் தான் இருக்கிறது என்று எல்லோரிடமும் தெரிவித்தேன்’ என்றார்.

    தோல்வி கண்ட குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நடுவர்களின் முடிவு குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இருப்பினும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இதுபோல் பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கக்கூடாது. இதனால் பிரான்ஸ் அணியின் வெற்றி தரம் எந்த வகையிலும் குறைந்து விடாது. இந்த உலக கோப்பை போட்டியில் நாங்கள் ஆடிய சிறந்த ஆட்டம் இதுவாக இருக்கலாம். நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். ஆனால் கோல்களை விட்டு விட்டோம். பிரான்ஸ் போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுகையில் தவறு செய்யக் கூடாது. இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளித்தாலும், உலக கோப்பை போட்டியில் எங்களது செயல்பாட்டை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த குரோஷியா அணி நேற்று சொந்த நாட்டுக்கு திரும்பியது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சி. லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து குரோஷிய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் பெனால்டி வாய்ப்பு எங்களை வெளியேற்றி விட்டது. பெனால்டிக்கு பிறகு மீண்டு வருவது கடினமாகி விட்டது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆனால் கால்பந்து ஆட்டத்தின் மகத்துவம் இது தான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. நாங்கள் சுய கோலும், பெனால்டி வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கி விட்டோம். எனது எதிர்காலம் குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது. நாடு திரும்பி ஓய்வுக்கு பிறகு முடிவு செய்வேன்’ என்றார். #FIFAWC2018 #Champion #France
    உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France
    பாரீஸ்:

    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.



    இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.



    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.

    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.



    இதேபோல், நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியை உலகின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து ரசிகர்கள் கண்டு களித்தனர். #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.  

    பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை என பதிவிட்டுள்ளார்.



    இதேபோல், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தங்க பந்து விருதை வென்றார். #WorldCup2018 #LucaModric #GoldenBall
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. இதேபோல், உலக கோப்பையில் 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்த தங்க காலணி விருது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

    மேலும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் தியாபட் கோர்டாய்க்கு வழங்கப்பட்டது. 

    இந்த உலக கோப்பையின் இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே பெற்றார். #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு 188 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் இன்றுடன் நிறைவடைகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இறுதி ஆட்டம் நடந்தது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    ரஷியாவில் இன்று உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஷிய அதிபர் புதினுக்கு 9-ம் எண் கொண்ட டிஷர்ட்டை குரோஷிய அதிபர் பரிசாக வழங்கினார். #Russia #2018WorldCup
    மாஸ்கோ:

    4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு ரஷியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் குரோஷியா அணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் குரோஷியா அணியும், பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இந்த கால்பந்து போட்டியை காணவும், வீரர்களை உற்சாகப்படுத்தவும் குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்யா வந்துள்ளார். இதையடுத்து இன்று ரஷிய அதிபர் மாளிகையில் அதிபர் புதினுடனான சந்திப்பின் போது, புதின் என அச்சிடப்பட்ட கால்பந்து வீரர்கள் அணியும் டிஷர்ட்டை குரோஷிய அதிபர் கொலிண்டா கிராபர் கிடாரோவிக் ரஷ்ய அதிபருக்கு நினைவு பரிசாக வழங்கினார். #Russia #2018WorldCup
    பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் ஆகியோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என குரோஷியா பயிற்சியாளர் சவால் விடுத்துள்ளார். #FIFA2018 #Croatia #France
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை (இரவு 8.30 மணி) மாஸ்கோவில் மோத உள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.

    பிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.

    இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார். #FIFA2018 #Croatia #France
    ×