என் மலர்
நீங்கள் தேடியது "Croatia"
- நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
- போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
சாகிரேப்:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே , இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன. நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
27-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள குரோஷியா தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரோயேயை தோற்கடித்தது. குரோஷியா 7-வது முறையாக தகுதி பெற்றது. தொடர்ச்சியாக 4-வது தடவையாக முன்னேறியுள்ளது. 2018-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 27 அணிகள் என இதுவரை 30 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 18 அணிகள் தகுதி பெற வேண்டும்.
- இந்த புதிய நாட்டிற்கு தனிக் கொடி, அமைச்சரவை, கரன்சி மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர்.
- நாடுகடந்த அரசாங்கத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'வெர்டிஸ்' என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் அதிபராகியுள்ளார்.
குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், "வெர்டிஸ் குடியரசு" என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது ஆஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் அதிபராக அறிவித்துள்ளார்.
இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி இந்த மைக்ரோநேஷனை (micronation) அவர் உருவாக்கினார். இந்த புதிய நாட்டிற்கு தனிக் கொடி, அமைச்சரவை, கரன்சி மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர்.
குரோஷிய அதிகாரிகள், ஜாக்சன் மற்றும் அவரது குடிமக்களை அக்டோபர் 2023 இல் கைது செய்து, நாட்டை விட்டு வெளியேற்றி, வாழ்நாள் தடை விதித்தனர்.
ஆனால், செர்பிய அதிகாரிகள் தனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பதாக ஜாக்சன் கூறுகிறார். அவர் தற்போது நாடுகடந்த அரசாங்கத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
- கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது.
- ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
ஒட்டாவா:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் கட்டமாக அவர் கடந்த 15-ம் தேதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு குரோஷியா சென்றடைந்தார். ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குரோஷியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
- அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
- உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
லுசைல்:
கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.
2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி நாளை (13-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் , 2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா, கடந்த முறை 2-வது இடத்தை பிடித்த குரோஷியா , ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ ஆகிய 4 நாடுகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத் தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை. 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
அர்ஜென்டினா கால் இறுதியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 9 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.
உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அரைஇறுதியில் அந்த அணி தோற்றது கிடையாது.
குரோஷியா பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது. முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பினகளத்தில் பலவீனமாக காணப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. கடைசி நிமிடங்களில் 2 கோல் வாங்கி இருந்தது. இதனால் பின் களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நட்சத்திர வீரர் மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் 4 கோல்கள் அடித்துள்ளார். முக்கியமான அரைஇறுதியில் அவர் வீரர்களை ஒருங்கிணைப்பது அவசியமானதாகும்.
ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் , மார்டினஸ் , மொலினா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். கோல்கீப்பர் மார்ட்டினஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். நடுகள வீரர் அகுனா மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது.
உலக தர வரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி கனடாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றில் ஜப்பானையும் , கால் இறுதியில் பிரேசிலையும் பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது. அந்த அணி 6 கோல் போட்டுள்ளது. 3கோல் வாங்கியுள்ளது.
சிறந்த வீரர்களை கொண்ட குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பையில் அந்த அணி அரைஇறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோற்று கோப்பையை இழந்தது.
குரோஷியா அணியில் கேப்டன் மாட்ரிச் , கிராமரிச், பெரிசிச் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். நடுகளம், பின்களத்தில் அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.
இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அர்ஜென்டினா 2 ஆட்டத்திலும், குரோஷியா 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
உலக கோப்பையில் மோதிய 2 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கிலும் , கடந்த உலக கோப்பையில் குரோஷியா 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றன. இதற்கு அர்ஜென்டினா நாளை பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அர்ஜென்டினாவும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாளை மறுநாள் (14-ந் தேதி) நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
- வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
- வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு
இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.
இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.
ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.
யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கனவே பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று இருந்தது.
பிரான்ஸ் அணி கோப்பையை வென்ற மறு வினாடியே பிரான்ஸ் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது. ரசிகர்கள் தெருக்களுக்கு திரண்டு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கொடிகளுடன் தெருக்களில் வெற்றி உலா வந்தனர். பாரீஸ் உள்பட சில இடங்களில் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் வரம்பு மீறியது. சிலர் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்களிப்பில் நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. சிறப்புக்குரிய இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் என்பதால் நாங்கள் தொடக்கத்தில் சற்று பயத்துடன் தான் செயல்பட்டோம். போகப்போக இயல்பு நிலைக்கு திரும்பி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தோம். அதில் நாங்கள் வித்தியாசத்தை காட்டினோம். உலக கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் ஆவலுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அணியின் நடுகள வீரர் பால் போக்பா கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எனது இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களால் இந்த கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நமது உலக கோப்பை கனவு, நனவாக இன்னும் 90 நிமிடங்கள் தான் இருக்கிறது என்று எல்லோரிடமும் தெரிவித்தேன்’ என்றார்.











