என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்டினா ரொனால்டோ"

    • சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் டிம் குக், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.

    • கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
    • அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை

    2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.

    • கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
    • அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்.

    2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை போட்டியாகும்.

    ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணியாகவும் 950-க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.

    • 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
    • மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    புடாபெஸ்ட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.

    இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.

    40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
    • போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்

    ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    • பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர்.
    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    வாஷிங்டன்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர்மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர்மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

    • கிறிஸ்டினா ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து விலகியுள்ளார்
    • தன்னை சவுதி அரேபியா லீக்கில் விளையாட கேட்டுக் கொண்டதாக ரொனால்டோ தகவல்

    உலகின் தலைசிறந்த, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மாட்ரிட் கிளப் அணிகளுக்கான பல வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைப் படைத்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து விலகி, யுவென்டஸ் கிளப்பிற்கு சென்றார். பின்னர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். ஒரு சீசன் கூட முழுமையாக விளையாடாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகியுள்ளார்.

    டிரான்ஸ்பர் ஃபீஸ் இல்லாமல் வேறு கிளப்பிற்கு செல்ல இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய பல்வேறு கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் உடனான பிரச்சினை குறித்து பேசும்போது ரொனால்டோ, ''சவுதி அரேபியா கிளப் ஒன்று 360 மில்லியன் டாலரில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கான தன்னை அணுகியது. எனினும், தான் அதை மறுத்துவிட்டார்'' என்ற செய்தி வெளியானது.

    இதுகுறித்து சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளையாட்டு மந்திரி இளவரசர் அல் பைசல் ''ரொனால்டாவை அணுகியது குறித்து தனக்கு ஏதும் தெரியாது. இதுதான் எனது நேரடி பதில். நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை தெரிந்தீர்களோ? அதேபோல்தான் நானும் அறிந்து கொண்டேன். அவருடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது எனக்குத் தெரியாது.

    சவுதி அரேபியா கிளப்பில் ரொனால்டா விளையாடுவதை பார்க்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஏன் இல்லை? எங்களிடம் வலுவான லீக் உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ஏழு வெளிநாட்டு வீரர்களை பெற்றுள்ளது. அதை அதிகப்படுத்த பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியாவில் எங்கள் அணி டாப் லெவலில் விளையாடுகிறது. சவுதியில் கால்பந்து வலிமையாக உள்ளது. ஆகவே, ஏன் அவர் விளையாடுவதை விரும்பக் கூடாது? என்றார்.

    தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சவுதி அரேபியா அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
    • பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.

    ரியாத்:

    கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .

    பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

    • குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் ரொனால்டோ வெளியிட்டார்.
    • ‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார்.

    பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.

    'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்தார். குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.

    இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    • 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
    • முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.

    கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.

    2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.

    மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

    இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.

    மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

    இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.

    ×