என் மலர்
நீங்கள் தேடியது "அல் நாசர் கிளப்"
- ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை.
- கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.
சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார்.
இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத் தாண்டியது.

களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ பணம் சம்பாதித்து வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்ரான் ஜேம்ஸ்
- ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர்.
- இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.
ரியாத்:
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.
இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.
இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
- பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.
ரியாத்:
கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .
பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.






