என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cristiano Ronaldo"

    • கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், கிளப் நிர்வாகியாகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
    • ஸ்பெயினின் இரண்டாம் நிலை லீக் கிளப்பான UD அல்மேரியா அணியின் இணை உரிமையாளராக ரொனால்டோ ஆகியுள்ளார்.

    போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயினின் இரண்டாம் நிலை லீக் கிளப்பான UD அல்மேரியாவின் 25% பங்குகளை வாங்கி, அந்த அணியின் இணை உரிமையாளர் ஆகியுள்ளார். இதன் மூலம் கால்பந்து வீரராக மட்டுமல்லாமல், கிளப் நிர்வாகியாகவும் தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

    அல்மேரியா அணி தற்போது ஸ்பானிஷ் செகுண்டா பிரிவில் விளையாடி வருகிறது. ரொனால்டோவின் வருகை அந்த அணியின் வீரர்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    அல்மேரியா கிளப்பின் தற்போதைய உரிமையாளரான துர்கி அல்-ஷேக் என்பவருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரொனால்டோ 25% பங்குகளைக் கைப்பற்றியுள்ளார். துர்கி அல்-ஷேக் சவுதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவராவார்.

    இந்த முதலீட்டின் மூலம் அல்மேரியா கிளப்பை மீண்டும் ஸ்பெயினின் முதன்மை லீக் ஆன லா லிகா தொடருக்குத் தகுதி பெறச் செய்வதே ரொனால்டோவின் முக்கிய இலக்காகும்.

    இதற்கு முன்னதாக, பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ, ஸ்பெயினின் 'ரியல் வல்லடோலிட்' கிளப்பின் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே பாணியில் ரொனால்டோ களம் இறங்கியுள்ளார்.

    ரொனால்டோவின் வருகை இந்த சிறிய கிளப்பின் வணிக மதிப்பையும், உலகளாவிய ரசிகர் பட்டாளத்தையும் பல மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர்.
    • ரொனால்டோ குறித்த எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை.

    சென்னை:

    போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியுமான ஜெம்மா அட்கின்சன், ரொனால்டோவை பற்றி மோசமாக பேச தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் பேசுகையில், "2007ம் ஆண்டு ரொனால்டோவை பிரிந்தபோது அவரைப் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு நிறைய பணம் கொடுத்தனர். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ரொனால்டோ குறித்து எந்த எதிர்மறையான கருத்தையும் சொல்ல முடியவில்லை" என்றார்.

    தற்போது ஜெம்மா அட்கின்சன், பிரபல நடனக் கலைஞர் கோர்கா மார்க்வெஸ் என்பவரை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மியா மற்றும் தியாகோ என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாயில் குளோப் சாக்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார்.

    துபாய்:

    துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், 1000 கோல் இலக்கை எட்டும் வரை ஓய்வு பெறப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    மான்செஸ்டர் யுனைடெட், யுவன்டஸ் உள்பட அனைத்து கிளப் அணிக்காக 813 மற்றும் போர்ச்சுகல் அணிக்கு 143 கோல்கள் சேர்த்து 1,297 போட்டிகளில் 956 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் மெஸ்ஸி (896 கோல்) உள்ளார்.

    ரொனால்டோவுக்கு 1000 கோல் எட்ட இன்னும் 44 கோல் தான் தேவை. வரும் 2026-ல் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில், துபாயில் நடந்த 2025 குளோப் சாக்கர் விருது விழாவில் முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட குளோப் ஸ்போர்ட்ஸ் விருதை டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச் வென்றார்.

    கால்பந்துக்கு அப்பாற்பட்ட சாதனைகளை மதிப்பிடும் இந்த விருதை கிரிஸ்டியானோ ரொனால்டோ அவருக்கு வழங்கினார். அவரது அசாதாரணமான அர்ப்பணிப்பு, நீண்ட கால வெற்றி மற்றும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

    விருதை வழங்கி பேசிய ரொனால்டோ, எனக்கு அவர் ஒரு உதாரணம். அவர் தன்னிடமிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுகிறார். எனவே அவர் இதற்கு தகுதியானவர் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இந்த தலைமுறைக்கு, அனைத்து தலைமுறைகளுக்கும், வரவிருக்கும் தலைமுறைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.

    • ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.
    • ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.

    2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.

    2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், ரியல் மேட்ரிட் அணிக்காக ஓராண்டில் அதிக கோல்கள் (59) அடித்தவர் என்ற ரோனால்டோவின் சாதனையை கில்லியன் எம்பாப்பே சமன் செய்துள்ளார்.

    • சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.
    • இந்த நிகழ்ச்சியில் டிம் குக், எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.

    • ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார்.
    • மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் 2018 வரை விளையாடினார்.

    2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரூ.94 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது இது உலக சாதனை தொகையாக இருந்தது.

    2018-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் இருந்து ஜுவென்டஸ் அணிக்கு சென்றார். அவரை அந்த அணி ரூ.100 மில்லியன் கொடுத்து வாங்கப்பட்டார்.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் மொத்தம் 438 போட்டிகளில் விளையாடி 450 கோல்கள் அடித்தார். இது அந்த அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார் என அந்த அணி நட்சத்திர வீரர் எம்பாப்வே புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கால்பந்து ஜாம்வான் ரொனால்டோ, தற்போது சவுதியின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இருந்தாலும் இன்றும் ரியல் மாட்ரிட் அணியின் முகமாகவே திகழ்கிறார். மேட்ரிட் மக்கள் இன்னும் ரொனால்டோவை மறக்கவில்லை.

    என்று அவர் கூறினார்.

    எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணியில் 2024-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போர்ச்சுகீசிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    • அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது.

    போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அவரது நிகர சொத்து மதிப்பு $1.4 பில்லியன் என அதிகரித்துள்ளதாக Bloomberg நிறுவனம் கூறியுள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது லாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற பிராண்டுகளுடனான விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் பிற வணிக முயற்சிகளால் இத்தகைய பெருமையை அவர் அடைந்துள்ளார்.

    இந்த விஷயத்தில் அவர் லயோனல் மெஸ்ஸி போன்ற பிற கால்பந்து ஜாம்பவான்களை மிஞ்சியுள்ளார். இதனால் அவர் விளையாட்டின் முதல் பில்லியனரானார். பிரேசிலிய கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் (R9 என அழைக்கப்படுபவர்) 2025 ஆம் ஆண்டு வரை அவரது நிகர மதிப்பு சுமார் $160 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்கள் அடித்துள்ளார்.
    • போர்ச்சுக்கல் அணிக்காக ரொனால்டோ 138 கோல்கள் அடித்துள்ளார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், 4 வெவ்வேறு கால்பந்து க்ளப்கள் மற்றும் நாட்டுக்காக 100+ கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற அபார சாதனையை ரொனால்டோ.படைத்துள்ளார்

    ரொனால்டோ REAL MADRID அணிக்காக 450 கோல்களும் MAN UTD அணிக்காக 145 கோல்களும் PORTUGAL அணிக்காக 138 கோல்களும் JUVENTUS அணிக்காக 101 கோல்களும் AL NASSR அணிக்காக 100 கோல்களும் அடித்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    • பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர்.
    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    வாஷிங்டன்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி (அர்ஜென்டினா) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இன்டர்மியாமி மற்றும் என்.ஒய் ரெட் புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர்மியாமி அணிக்காகவும், ரொனால்டோ அல் நசர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். 

    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
    • ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்

    குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது. 

    • இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம்.
    • ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

    லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.

    என கூறினார்.

    • 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.
    • தற்போது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

    உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

    இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×