என் மலர்
கால்பந்து
- டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
- அரசு பள்ளி மாணவர்களுடன் மெஸ்சி கால்பந்து விளையாடவுள்ளார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என தெரிவித்தார்..
இந்நிலையில் மெஸ்சி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
- மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
- தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது.
- இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.
செவில்லே:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
நேற்று ஒரே நாளில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்பட 8 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றன.
ஐரோப்பா கண்டத்தில் 'இ' பிரிவில் நடந்த தகுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-துருக்கி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 16 புள்ளிகளுடன் அந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து தகுதிப்பெற்றது.
2010-ம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் தொடர்ச்சியாக 13-வது முறை உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பை பெற்றது. ஒட்டுமொத்தமாக 17-வது தடவையாக தகுதி பெற்றுள்ளது.
'ஜே' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 7-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ் டீன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 18 புள்ளியுடன் தகுதிபெற்றது. தொடர்ந்து 4-வது தடவையாகவும், ஒட்டு மொத்தத்தில் 15-வது முறையாகவும் உலக கோப்பையில் ஆட உள்ளது. 2018-ல் 3-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.
'எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரியா 8-வது முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற்றது. 1954-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்ததே ஆஸ்திரியாவின் சிறந்த நிலையாகும். 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் ஆடுகிறது. 'பி' பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்தும் (13-வது தடவை), 'சி'பிரிவில் இருந்து ஸ்காட்லாந்தும் (9-வது தடவை) தகுதிபெற்றன.
வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி (2-வது முறை) உலக கோப்பைக்கு தகுதிபெற்றன. 52 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதி உலக கோப்பையில் ஆட உள்ளது. இதேபோல அங்கிருந்து முதல் முறையாக குராசா நாடு தகுதிபெற்றது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் வருமாறு:-
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெ கிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உரு குவே, கொலம்பியா, பரா குவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ், குரோஷியா,போர்ச்சுக்கல், நார்வே, ஜெர்மனி, நெதர் லாந்து, பெல்ஜியம், ஆஸ்தி ரியா, சுவிட்சர்லாந்து. ஸ்பெ யின், ஸ்காட்லாந்து, பனாமா, ஹைதி, குராசா.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றில் இருந்து செல்லும் 39 அணிகள் என இதுவரை 42 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரியவந்துள்ளது. இன்னும் 6 அணிகள் தகுதி பெற வேண்டும்.
- போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும்.
- ரோமில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை நார்வே தோற்கடித்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனி சியா, எகிப்து, அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே, இங்கிலாந்து, கத்தார், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல், பிரான்ஸ் , குரோஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடந்த போட்டி முடிவில் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து 29-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நார்வே தகுதி பெற்றது.
ரோமில் நடந்த ஆட்டத்தில் அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் இத்தாலியை தோற்கடித்தது. நட்சத்திர வீரர் ஹாலண்ட் 2 கோலும் (77 மற்றும் 79-வது நிமிடம்), நுசா (63), லார்ஸ் லார்சன் (93) ஆகியோர் நார்வே அணிக்காகவும், எஸ்போசிஸ்டோ (11), இத்தாலி அணிக்காகவும் கோல் அடித்தனர்.
குரூப் 1 தகுதி சுற்றில் நார்வே 8 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியில் தகுதி பெற்றது. ஒட்டு மொத்தத்தில் 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 29 அணிகள் என இதுவரை 32 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 16 அணிகள் தகுதி பெற வேண்டும்.
- கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
- அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை
2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.
- மெஸ்சி இதுவரை 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
- ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு இருந்தது.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார்.
இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.
ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார்.
அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
- போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
சாகிரேப்:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே , இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன. நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
27-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள குரோஷியா தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரோயேயை தோற்கடித்தது. குரோஷியா 7-வது முறையாக தகுதி பெற்றது. தொடர்ச்சியாக 4-வது தடவையாக முன்னேறியுள்ளது. 2018-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.
3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 27 அணிகள் என இதுவரை 30 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 18 அணிகள் தகுதி பெற வேண்டும்.
- கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
- அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்.
2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை போட்டியாகும்.
ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணியாகவும் 950-க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.
- ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
- அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சவுதி கால்பந்து லீக்கில் அல் நசார் க்ளப்காக 100 கோல்கள் பங்களிப்பு (83 கோல்கள் + 17 Assists) செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
- விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.
மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார்.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.
2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.






