என் மலர்
நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து 2026"
- 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
- இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.
மியாமி:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். 3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாக பிபா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமானது.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் போட்டி நடைபெற இருப்பதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் டிக்கெட் வாங்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள். இருந்தும் 48-இல் 28 திடல்களில் மட்டுமே நிரம்பி இருப்பதாக பிபா தெரிவித்துள்ளது.
டிக்கெட் வாங்கும் நாடுகளில் டாப் 10 நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ் என்ற வரிசையில் இருக்கின்றன
இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலைகள் ரூ.8.38 லட்சம் முதல் ரூ.50.57 லட்சம் வரை என 3 விதங்களில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
- கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
பிரையா:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா,கானா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 22-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேப்வெர்டே நாடு தகுதி பெற்றது.
நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் குரூப் டி பிரிவில் கேப்வெர்டே 23 புள்ளிகளை பெற்று உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக கேமரூன் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
கேப்வெர்டே முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலக கோப்பை போட்டிக்கு இதுவரை 6 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.






