என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA"

    • அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.

    நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.

    2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.
    • ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.

    தஜிகிஸ்தானில் நடைபெற்ற CAFA நேஷன்ஸ் கோப்பையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், FIFA வெளியிட்ட தரவரிசையில், ஒரு இடம் பின்தங்கி 134வது இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்பெயின் 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனி முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி உள்ளது.

    எட்டு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த பிளே-ஆஃப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமனை வீழ்த்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அக்டோபரில் நடைபெறும் AFC ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா அடுத்ததாக மோத உள்ளது.

    இதனிடையே, FIFA நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில், ஸ்பெயின் முதலிடமும், பிரான்ஸ் இரண்டாவது இடமும், அர்ஜென்டினா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேசில், நெதர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, இத்தாலி ஆகியவை முறையே அடுத்தடுத்து இடங்களை பிடித்து முதல் 10 இடங்களில் உள்ளன.

    நான்கு முறை உலக சாம்பியனான ஸ்லோவாக்கியா தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.

    • இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
    • பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி அணி

    FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.

    இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. 

    • 2016ஆம் ஆண்டு 135ஆம் இடத்தை பிடித்திருந்திருந்தது.
    • அதன்பின் தற்போது 133ஆவது இடத்தை பிடித்துள்ளது.

    பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 6 இடங்கள் சரிந்து 133ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கான மோசமான தரவரிசையை பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது. ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்திற்கான எதிரான சர்வதேச நட்பு போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.

    இதனால் பிபா தரவரிசையில் 133ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகவும் மோசமான இடத்திற்கு சரிந்துள்ளது. அப்போது 135ஆவது இடத்தில் இருந்தது.

    இந்தியா கடந்த 1996ஆம் ஆண்டு 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. அதுதான் இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.

    • மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
    • 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.

    FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

    இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

    அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.

    ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.

    26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.

    பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.

     பில் ஃபோடன்

    போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.

    டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.   

    • வணிகம் தொடர்பான குறியீடுகளை பயன்படுத்த பிஃபா தடை
    • பெல்ஜியம் பாரம்பரிய சிவப்பு ஜெர்சியில் இருந்த வெள்ளை நிறத்திற்கு மாறியது

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பெடரேசனான பிஃபா இந்தத் தொடரை நடத்துகிறது. இந்த தொடரில் வீரர்கள் தங்களுடைய ஜெர்சியில் விளம்பரம் தொடர்பான லோகோவை அணிந்து விளையாடக் கூடாது.

    பெல்ஜியம் வீரர்கள் பாரம்பரியமாக பல வண்ணங்களுடைய சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். Tomorrowland என்ற பெயரில் மியூசிக் திருவிழா பெல்ஜியத்தில் நடைபெற்றது. இந்த Tomorrowland கடந்த டிசம்பர் மாதம் பல வண்ணங்கள் (பெல்ஜியம் ஜெர்சி) பன்முகத்தன்மை, ஒற்றுமை, உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான சின்னம் என அறிவித்தது.

    இதனால் அந்த ஜெர்சியுடன் விளையாடினால் அந்த வணிகத்திற்காக ஒரு நிறுவனத்தை பிரபலப்படுத்துவதாக இருக்கும் என பிஃபா தடைவிதித்தது. இதனால் பெல்ஜியம் அணி வெள்ளை நிற ஜெர்சியுடன் களம் இறங்குகிறது.

    மேலும், டி-சர்ட்டின் காலரில் Love என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடைவிதித்து.

    ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுமார் 8 அணிகளின் கேப்டன்கள் தங்கள் கையில் அணியுடன் பட்டையில் பல நிறங்களை உள்ளடக்கிய இதயம் வடிவிலான லோகோவில் Love என்ற வார்த்தை பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கும் பிஃபா தடை விதித்துள்ளது. ஒருவேளை கேப்டன் தடையை மீறி அணிந்தால் மஞ்சள் அட்டை வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்தில் பாகுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. அப்போது One Love என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் பிஃபா தடைவிதித்துள்ளது.

    • பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
    • பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.

    பாரிஸ்:

    சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச கால்பந்து சங்கம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • 5 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச கால்பந்து சங்கம் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் 36 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

    பிரான்ஸ் 2-வது இடமும், பிரேசில் 3 வது இடமும், இங்கிலாந்து 4-வது இடமும், பெல்ஜியம் 5-வது இடத்திலும் உள்ளது.

    சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 100-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    • அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018-ம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.

    ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டாலர்களை செலுத்த அல் நஸர் தவறிவிட்டது.

    இதையடுத்து, 2021-ம் ஆண்டில் பணத்தைச் செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என பிபா எச்சரித்தது.

    இந்நிலையில், எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின.
    • மூன்றாவது இடத்துக்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி முடிவில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 7-6 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்றது. காலிறுதி ஆட்டங்களை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 15) முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

     

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியிாக ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்கான போட்டி ஆகஸ்ட் 19-ம் தேதியும், இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    • மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வென்று ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
    • மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

     

    முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

    இந்த போட்டியில் 1-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
    • ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா செய்தார்.

    மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலானது. லூயிஸ் ரூபியேல்சின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். எனினும், கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என மகளிர் அணி வீராங்கனைகள் தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை லூயிஸ் ரூபியேல்ஸ் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு ஃபிஃபா மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடத்திய குழு தீர்ப்பு குறித்த முழு விவரங்களை வழங்கவில்லை. வீராங்கனைகளுக்கு முத்தமிட்ட விவகாரத்தில் லூயிஸ் மீது ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ×