என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை கால்பந்து"

    • மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.
    • 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.

    FIFA கிளப் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஜுவென்டஸை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி குரூப் ஜி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

    இது குரூப்பில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.

    அமெரிக்காவின் கேம்பிங் வேர்ல்ட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மி டோகு மூலம் மான்செஸ்டர்சிட்டி முன்னிலை பெற்றது.

    ஆனால் மூன்று நிமிடங்களுக்குள், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனின் தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஜுவென்டஸ் அணி, மீண்டும் போராடி ஸ்கோரை 1-1 என சமன் செய்தது.

    26வது நிமிடத்தில், பியர் கலுலு கோல் அடித்ததால் மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முன்னிலை பெற்றது. மாற்று வீரர் எர்லிங் ஹாலண்ட் இரண்டாவது பாதியின் ஏழு நிமிடங்களில் மூன்றாவது கோலை அடித்தார்.

    பின்னர் பில் ஃபோடன் மூன்று நிமிடங்களுக்குள் மற்றொரு கோல் அடித்தார். அதைத் தொடர்ந்து சவின்ஹோவின் நீண்ட தூர ஸ்ட்ரைக் மான்சஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தது.

     பில் ஃபோடன்

    போட்டியின் போது எர்லிங் ஹாலண்ட் தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார். 52வது நிமிடத்தில் அவரின் கோல் கிளப்பின் 300வது சர்வதேச கோலாக மாறியது.

    டுசன் விளாஹோவிக் 84வது நிமிடத்தில் ஜுவென்டஸின் ஆறுதல் கோலை அடித்தார். இறுதியில் 5-2 என்ற கணக்கில் மான்சஸ்டர் சிட்டி வெற்றியைப் பதிவு செய்தது.   

    • மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.

    மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

    மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.

    இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
    • இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது.

    கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.

    இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.

    • வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பியூனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல கேப்டனும், நட்சத்திர வீரரு மான லியோனல் மெஸ்சி முக்கிய பங்கு வகித்தார். அவர் 7 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அதோடு 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்து உள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் 35 வயதான மெஸ்சியின் கனவு நனவாகியுள்ளது. 5-வது உலக கோப்பையில் தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இதற்கு முன்பு 2014-ல் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி யுடன் தோற்று கோப்பையை இழந்தார். தற்போது இறுதி போட்டியில் பிரான்சை தோற்கடித்து மெஸ்சி தனது உலக கோப்பை கனவை நனவாக்கி கொண்டார்.

    அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப் பையை வென்றது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டு களில் அந்த அணி சாம்பி யன் பட்டம் பெற்று இருந்தது. மரடோனா வழி யில் மெஸ்சி தன்னை இணைத்துக் கொண்டார். உலக கோப்பையை வென்ற தன் மூலம் கால்பந்தின் அனைத்துக் கால கட்டத் துக்கும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை மெஸ்சி நிரூபித்து விட்டார்.

    36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

    அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. வெற்றி கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் இன்று தாயகம் திரும்பினார்.அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணி தனது நாட்டுக்கு திரும்பியது. பாரீஸ் நகரில் கால்பந்து வீரர்களை அந்நாட்டு ரசி கர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கும், அதிக கோல்களை (8) அடித்து தங்க ஷூ வென்ற வருமான எம்பாப்வேயை வாழ்த்தி ரசிகர்கள் கோஷ மிட்டனர்.

    உலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். #FIFAWC2018 #Champion #France
    மாஸ்கோ:

    ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. ஏற்கனவே பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    பிரான்ஸ் அணி கோப்பையை வென்ற மறு வினாடியே பிரான்ஸ் நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியது. ரசிகர்கள் தெருக்களுக்கு திரண்டு வந்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கொடிகளுடன் தெருக்களில் வெற்றி உலா வந்தனர். பாரீஸ் உள்பட சில இடங்களில் ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டம் வரம்பு மீறியது. சிலர் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வெற்றிக்கு பிறகு பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வென்றது உண்மையிலேயே அற்புதமானதாகும். இறுதிப்போட்டியில் நாங்கள் பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் எங்களது மன உறுதியை வலுவாக வெளிப்படுத்தினோம்’ என்றார்.

    உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ் கால்பந்து அணி நேற்று நாடு திரும்பியது. பாரீஸ் நகரில் வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட போது எடுத்தபடம். வீரர்களை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

    பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்களிப்பில் நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியவில்லை. சிறப்புக்குரிய இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் என்பதால் நாங்கள் தொடக்கத்தில் சற்று பயத்துடன் தான் செயல்பட்டோம். போகப்போக இயல்பு நிலைக்கு திரும்பி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தோம். அதில் நாங்கள் வித்தியாசத்தை காட்டினோம். உலக கோப்பையை எங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் ஆவலுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    பிரான்ஸ் அணியின் நடுகள வீரர் பால் போக்பா கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எனது இளம் வயதிலேயே கனவு கண்டேன். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களால் இந்த கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு நமது உலக கோப்பை கனவு, நனவாக இன்னும் 90 நிமிடங்கள் தான் இருக்கிறது என்று எல்லோரிடமும் தெரிவித்தேன்’ என்றார்.

    தோல்வி கண்ட குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கருத்து தெரிவிக்கையில், ‘நான் நடுவர்களின் முடிவு குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இருப்பினும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இதுபோல் பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கக்கூடாது. இதனால் பிரான்ஸ் அணியின் வெற்றி தரம் எந்த வகையிலும் குறைந்து விடாது. இந்த உலக கோப்பை போட்டியில் நாங்கள் ஆடிய சிறந்த ஆட்டம் இதுவாக இருக்கலாம். நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தோம். ஆனால் கோல்களை விட்டு விட்டோம். பிரான்ஸ் போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடுகையில் தவறு செய்யக் கூடாது. இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளித்தாலும், உலக கோப்பை போட்டியில் எங்களது செயல்பாட்டை நினைத்து பெருமிதம் அடைகிறோம்.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது இடம் பிடித்த குரோஷியா அணி நேற்று சொந்த நாட்டுக்கு திரும்பியது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காட்சி. லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து குரோஷிய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் பெனால்டி வாய்ப்பு எங்களை வெளியேற்றி விட்டது. பெனால்டிக்கு பிறகு மீண்டு வருவது கடினமாகி விட்டது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் அதிகம் விரும்பினோம். ஆனால் கால்பந்து ஆட்டத்தின் மகத்துவம் இது தான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. நாங்கள் சுய கோலும், பெனால்டி வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கி விட்டோம். எனது எதிர்காலம் குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்க முடியாது. நாடு திரும்பி ஓய்வுக்கு பிறகு முடிவு செய்வேன்’ என்றார். #FIFAWC2018 #Champion #France
    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் அந்நாட்டு அதிபர் எழுந்து நின்று ஆடியபோது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #MacronCelebrates
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரான்ஸ் அணி ஒவ்வொரு கோல் போடும்போதும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம்போட்டதையும், ஆரவாரமாக முழக்கம் எழுப்பியதையும் காண முடிந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மைதானத்திற்கு வந்திருந்து போட்டியை கண்டுகளித்தார்.



    அவ்வப்போது சைகை அசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அவர், பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார். உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கையைவிட்டு எழுந்து, சாதாரண ரசிகர்களைப் போன்று துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #MacronCelebrates
    2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்புகளை ரஷிய அதிபர் புதின் கத்தார் அமீரிடம் இன்று ஒப்படைத்தார். #Russia #WorldCupFootball #Qatar
    மாஸ்கோ:

    உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் விளையாட்டு போட்டிகளில் ஒன்று கால்பந்து. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    இன்று நடைபெறும் இறுதி போட்டியுடன் ரஷியாவில் கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடையும் நிலையில், வரும் 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று ரஷ்ய அதிபரின் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக்கோப்பை கால்பந்தை ஃபிபா தலைவர் கியானி இன்பான்ட்டினோவிடம் ஒப்படைக்க அதனை கத்தார் மன்னர் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் ஒப்படைத்தார்.

    இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தியதும், அடுத்த உலகக்கோப்பைக்கான பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்த அனுபவும் சாதனைக்குரிய நிகழ்வு என தெரிவித்துள்ளார். #Russia #WorldCupFootball #Qatar
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #BELENG #ENGBEL
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே இங்கிலாந்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    பெல்ஜியம் அணியின் தாமஸ் மியுனியர் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார். இவர் அரையிறுதியில் சஸ்பெண்ட் காரணமாக இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.



    அதன்பின் இரு அணி வீரர்களும் 45 நிமிடங்கள் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று பிபா தலைவர் கூறியுள்ளார். #FIFA2018 #WorldCup
    சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மாஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஷியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது.

    இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை. கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வி.ஏ.ஆர். முறை அமல்படுத்தியதன் மூலம் ஆப்-சைடு கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷியா வந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் டெலிவிஷன் மூலம் கண்டு களித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup
    ×