என் மலர்
நீங்கள் தேடியது "Stadium"
- கண்காட்சி வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
- கண்காட்சி நடைபெற உள்ள இடத்ைத அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை
கோவை வ.உ.சி மைதானத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைபடகண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.
வ.உ.சி மைதானத்தில் வருகிற 7-ந் தேதி இந்த புபைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.
கண்காட்சியானது வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. புகைப்பட காண்காட்சியை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை.
இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. இதில் கோவைக்கு முதல்-அமைச்சர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரபடுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயபடுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள்.
மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.
இதில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகு பந்து விளையாடுவதற்காக விளையாட்டு அரங்கப் பணிகளை நடபெறுகிறது.
- பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகுபந்து விளையாடுவதற்காக நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பணிகள் முடிவடைந்து விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம் என்று இருவரும் கூறினர். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
- ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.
ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.
இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
- வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் மாதிரிபுகைப்படத்தினை அரசுக்கு அளித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில், 2021- 2022ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, வீரபாண்டிய கட்டபொம்மனை நயவஞ்சகமாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயருக்குப் பாடம் புகட்டும் வகையில் தஞ்சையிலிருந்து திருப்பூர் மாவட்டம் தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆண்ட்ரூ கேதிஷ் என்ற ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்நாயக்கர் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அவருக்கு உருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
மேலும் மேற்படி அரங்கம் மற்றும் சிலை அமைத்திட ஏதுவாக, 2021-2022ம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை திருப்பூர் கலெக்டர் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மைதலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைத்திட நிர்வாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூ. 2கோடியே 60லட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.திட்ட மதிப்பீட்டில் உள்ளடக்கியுள்ள முக்கிய பணிகளின் விவரம் பின்வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை வட்டம், தளி-2 கிராமம், மஜரா திருமூர்த்தி நகர், பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.80.98 ஹெக். நிலத்தினை தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கருக்கு அரங்கம் அமைத்திடவும்,உருவச்சிலையினை உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தின் முன் பகுதியில் அமைத்திட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு முன்நுழைவு அனுமதி வழங்கியும் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் வம்சாவழியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் ஆகியோர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிபுகைப்படத்தினை, இணைத்தனுப்பி தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளார்.மேலும் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2.53,26,974 க்கு நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.