என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற ஊதாக்கதிர்கள்"

    • AUSvIND 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
    • ஓவல் மைதானத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 4 முறை மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில், ஓவல் மைதானத்தில் மழை பெய்து வருவதால் மைதானத்தின் ஈரப்பதத்தை அகற்ற புற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மைதானத்தின் ஈரப்பதத்தை போக்கி விரைவாக உலர வைக்கலாம்.

    ஆஸ்திரேலியா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மைதானத்தை உலரவைக்கும் நிலையில், பணக்கார கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் கொண்டு மைதானத்தை உலரவைக்கிறது என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.

    அப்போதே பிசிசிஐ இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.

    ரூ.7000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் கவுன்சில் மைதானத்தை உலரவைக்க ற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தும் நிலையில், ரூ.20,000 கோடி சொத்துமதிப்பு கொண்ட பிசிசிஐ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது ஏன்? என்றும் பிசிசிஐ-ன் வருமானம் என்று எல்லாம் எங்கு தான் செல்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    ×