என் மலர்
நீங்கள் தேடியது "Cosmetics"
- ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
- ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது. இந்த ஜெல்லை பயன்படுத்து முறைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி வறட்சி, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இயற்கையான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துவதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதற்கு ஆளிவிதை ஜெல் பெரிதும் உதவுகிறது
ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உதவுகிறது. இதில் வைட்டமின் பி மற்றும் ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது.

ஆளிவிதை ஜெல்லின் நன்மைகள்
ஆளி விதை ஜெல் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் ஊட்டச்சத்தை அளிக்கவும், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை குறைக்கவும் உதவுகிறது.
இதற்கு ஆளிவிதை ஜெல்லை முடிக்கு பயன்படுத்தும் முன்னும், பின்னும் முடி வளர்ச்சியைக் கண்காணித்து வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க
ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை அழற்சி உறுப்பு மாற்றத்தைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆளிவிதை ஜெல்லை உச்சந்தலையில் பயன்படுத்துவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

சுருள் முடிக்கு ஆளிவிதை ஜெல்
ஆளிவிதைகளில் உள்ள வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆக்ஸிஜனேற்ற மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துச் செயல்பட்டு சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. எனவே இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும். சுருள் முடிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
நரைமுடியை தடுக்கிறது
ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. இது முடி உதிர்தல், முடி முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
- சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
- சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
வெயிலில் அதாவது இயற்கை வெளிச்சத்தில் பல உருவத் தோற்றமுடைய பல வடிவமுள்ள தோல் வெடிப்புகளும் சிகப்பு நிற தடிப்புகளும் உடலில் சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. மேலே சொன்னது போல தோலில் வேனற்கட்டி போன்ற சிறிய சிறிய சிகப்பு புள்ளிகள் சில பேருக்கு உடல் முழுவதும் ஏற்படுவதுண்டு.
சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் தோலில் படுவதாலும் அல்லது வேறு சில செயற்கை ஒளிக்கதிர்கள் தோலில் படுவதாலும் ஏற்படுவதுண்டு. இதனால் நமது உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டு அது இந்த சிகப்பு நிற தடிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.

மொத்தத்தில் வெயில் அதாவது சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். இது உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் இதைத் தெரிந்தவர்கள் மருந்தைத் தேடிக் கொள்வார்கள். தெரியாதவர்கள் குணமாகும்வரை பல மருந்துகளைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
பரம்பரையாகக் கூட சிலருக்கு சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. சில மருந்துகள், ரசாயனப் பொருட்கள், சரும வியாதிகள், கிருமி நாசினிகள், வாசனைத் திரவியங்கள் முதலியனவைகளை உபயோகிப்பவர்களுக்குக்கூட சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. இவைகளில் எதனால் உங்களுக்கு வருகிறது என்பதை நீங்கள் உபயோகிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்திப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.

சூரிய ஒளி அலர்ஜி சிலருக்கு லேசாக வந்து எந்தவித சிகிச்சையும் தேவைப்படாமல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சூரிய ஒளி அலர்ஜி இருப்பவர்கள் உடலை முடிந்தவரை மூடி மறைக்குமாறு ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் போவதற்கு சுமார் 20 நிமிடங்கள் முன்பே புறஊதாக் கதிர் தடுப்பு கிரீம்களை தடவிக் கொள்ள வேண்டும்.

இயற்கையாகவே நமது உடல் சூரிய ஒளியை நல்ல வகையில் மிக அதிகமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலுக்கு வைட்டமின் 'டி' சத்து போதுமான அளவு கிடைக்க சூரிய ஒளி மிகவும் உபயோகமாக இருக்கிறது.
இதன் மூலம் நமது உடல் எலும்புகள் அனைத்தும் உறுதியாகிறது. உடலுக்கு புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
- முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும்.
- தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
பெண்கள் எப்போதும் தங்கள் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவது மிகவும் இயற்கையானது. இதற்கு பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ் கிரீம்களை சோப்புகள் முகத்தை கழுவும் பழக்கம் உள்ளது.
இயற்கை அழகுக்கு செயற்கையான சோப்பும் கிரீம்களும் எதற்கு? நமது அழகு கெடாமல் இருக்கவும் அந்த அழகை அதிகரிக்கவும் ஒரு சில இயற்கை பொருட்கள் போதும். செயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.
தினமும் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை கொண்டு முகத்தை கழுவுங்கள். வித்தியாசத்தை நன்றாக பார்க்கலாம். இது எளிதான முறையும் கூட. அது என்ன முறை என்பதை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
முல்தானி மெட்டி (முல்தானி மண்)
தக்காளி
இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுது கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இந்த தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் வட்டமாக மசாஜ் செய்வது சிறந்தது. கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 நிமிடம் கழித்து சிறிது காய்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவலாம். சோப்புக்குப் பதிலாக காலையிலும் மாலையிலும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.

உங்கள் முகத்தில் உள்ள வெள்ளை செல்கள், கருப்பு செல்கள், முகப்பரு போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். சருமத்தை மென்மையாக்குகிறது.
தக்காளி விழுது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை அகற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தக்காளி பழ விழுது உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முறையை தினமும் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் முகத்தில் நிச்சயம் வித்தியாசம் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.
- சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாம் முகத்துக்கு பயன்படுத்தப்படும் சார்க்கோல் என்பது ஆக்டிவேட்டடு சார்க்கோல் ஆகும். ஆக்டிவேட்டடு சார்க்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம் ஆகும்.
இது அழகு சாதனப்பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுவதோடு மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சார்க்கோல் பயன்பாடு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.

சருமத்தின் துளைகளில் இருக்கும் துகள்களை ஆழமாக சுத்தம் செய்ய இந்த சார்கோல் ஃபேஸ் மாஸ்க், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சருமத்தில் இருக்கும் துகள்களால் சருமம் எளிதில் வெடிப்பு, எண்ணெய் பசை போன்றவற்றை உண்டாக்கும். இதை எளிதில் சரிசெய்வதற்கு சார்கோல் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது.
சார்கோல், அடைப்பை சரி செய்து சருமத்தை சுத்தமாக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் தொற்று முகப்பரு போன்றவை குறைகிறது.
அதிகப்படியான வியர்வை, திறந்த காயம், அழுக்குப்படிவது மற்றும் முகச்சீர்ப்படுத்தும் கருவிகளை பலரும் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சருமத்தில் அழுக்குகள் தேங்கும். அப்போது சார்கோல் பயன்படுத்தினால், நல்ல பலனைத் தரும்.
ஆக்டிவேட்டட் கரித்தூளில் உள்ள துகள்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை துடைக்க உதவுகிறது. மேலும் பளிச்சென்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.

ஆக்டிவேட்டட் சார்கோல் எண்ணெய் சருமத்துக்கு சிறந்த துணையாக இருக்கும். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்குவதால் சருமம் வறண்டிருந்தாலும் கூட, சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்கவும் இது உதவுகிறது.
மேலும் இதை ஆலோவேரா உடன் கலந்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் செய்கிறது. சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்கு சீரான பிரகாசத்தையும் கொடுக்க உதவுகிறது.
- கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும்.
- காபி தூள் இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி அழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
சிலருக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு சோர்வாகவும், பொலிவில்லாமலும் தோற்றமளிக்கும்.
இதனால் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள்.
ஆனால் நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் இதனை சரி செய்து விடலாம். முகம் வறட்சியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

பாதம்
பாதாம் வைத்து உங்கள் முகத்தை நீங்க ஸ்கிரப் செய்து வந்தால் உங்கள் முகம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும்.
முதலில் ஒரு கப் பாதாம் பவுடரில், அரை கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்று கலந்து பின் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்து காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவி எடுத்தால் முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக காட்சியளிக்கும்.

கீரின் டீ
வறட்சியான சருமத்திற்கு கிரீன் டீ ஸ்கிரப் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு பவுளில் கிரீன் டீ சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் இந்த கிரீன் டீ பேஸ்ட்டை நம் முகத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு பேஸ்ட் உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். கிரீன் டீ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கிருமிகளை அழித்து பல நன்மைகளை உண்டாக்கும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி மென்மையான மற்றும் பொலிவான சருமத்தை நமக்கு தருகிறது.
இதை செய்வதற்கு அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்து இரண்டு டீஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும், பின் இதில் ஒரு டீஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறையும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து ஸ்கிரப் உலர்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

காபி பவுடர்
காபி பவுடர் வைத்து முகத்தை ஸ்கிரப் செய்யும் போது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு டீஸ்பூன் அளவு காபி பவுடரை ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீரில் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து நம் முகத்தில் ஃபேஸ் மாஸ்க் போல் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி எடுத்துக் கொள்ளலாம்.
- மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள்.
- வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும்.
மேக்கப்பை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள். சருமத்தை பொலிவாக்குவதற்காக விதவிதமான அழகு சாதனப்பொருட்களை கையாளுவார்கள். அவற்றை முறையாக உபயோகிக்க வேண்டும். தவறாக பயன்படுத்தி மேக்கப் செய்தாலோ, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்க வழக்கங்களை தொடர்ந்தாலோ வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தலாம்.
சருமம் சோர்வாகவும், மந்தமாகவும் மாறலாம். சருமத்தை விரைவாக வயதானதாக மாற்றும் ஒப்பனை தவறுகள் பற்றியும், அவற்றை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் பார்ப்போம்.

சன்ஸ்கிரீனை தவிர்க்காதீர்கள்
முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்ப்பதற்கு சூரிய ஒளியே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இளமை பருவத்தை கடப்பதற்கு முன்பே சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது முக்கியமல்ல. அது எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினாலும் கூட அது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்காது. அத்துடன் எஸ்.பி.எப் 30-க்கு அதிகமான சன்ஸ்கிரீனை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தினமும் பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
வறண்ட சருமம்
ஈரப்பதமில்லாத, வறண்ட சருமத்தில் மேக்கப் செய்வது தவறான பழக்கமாகும். அது வயதை அதிகரிக்கச் செய்துவிடும். அந்த ஒப்பனை நீரேற்றம் இல்லாத பகுதிகளில் படர்வதால் கோடுகள், சுருக்கங்கள் அதிகமாக தெரியும்.
அதனை தவிர்க்க மேக்கப் செய்வதற்கு முன்பு சருமத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும், அதில் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும். அதற்கேற்ற அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தில் மென்மைத்தன்மையை உண்டாக்கும். மேக்கப் உலர்ந்த பகுதிகளில் ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்படும்.

பவுண்டேஷன் பயன்பாடு
சருமத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு பலரும் பவுண்டேஷன் பயன்படுத்துவார்கள். அதனை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அடர் பவுண்டேஷன்களை பயன்படுத்துவது சிலருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
காலப்போக்கில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றலாம். தடிமனான அடுக்கு கொண்ட பவுண்டேஷன்கள் சருமத்துளைகளை அடைத்து, உலர்வடைய செய்துவிடும். சரும எரிச்சலுக்கும் வழிவகுக்கும். அதனால் நீரேற்றத்தன்மை கொண்ட மென்மைத்தன்மையுள்ள பவுண்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். அவை சருமத்திற்கு அழகுடன் பாதுகாப்பையும் அளிக்கும்.

கண் பகுதியை புறக்கணித்தல்
கண்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. அதனை முறையாக பராமரிக்காவிட்டால் விரைவில் முதுமை தோற்றம் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும். ஒப்பனை செய்யும்போது பலரும் கண் பகுதியை கவனிப்பதில்லை.
கனமான கன்சீலர்கள் மற்றும் கண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை பயன்படுத்தும்போது கண் பகுதியில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றக்கூடும். கண்களின் அடிப்பகுதியில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண் கிரீம்கள் மற்றும் கன்சீலர்களைப் பயன்படுத்துவது நல்லது.

ஒப்பனையை அப்புறப்படுத்துதல்
எவ்வளவு சோர்வாக வீடு திரும்பினாலும் தூங்குவதற்கு முன்பு மேக்கப்பை அப்புறப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மேக்கப் சருமத் துளைகளை அடைத்து, சருமத்தில் காற்றும், ஈரப்பதமும் படர்வதை தடுத்துவிடும். விரைவாக வயதான தோற்றத்திற்கும் வழிவகுத்துவிடும்.
மேக்கப்பை அகற்றுவதை புறக்கணிப்பது காலப்போக்கில் சருமத்திற்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். அதை தவிர்க்க தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அது சருமம் புதுப்பித்தல் செயல்முறையை தொடங்குவதற்கு வித்திடும்.
காலாவதி பொருட்களை பயன்படுத்துதல்
காலாவதியான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், வீக்கத்தை ஏற்படுத்தும். தோல் பிரச்சனைகளை உண்டாக்கி விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.
அழகு சாதனப்பொருட்களின் காலாவதி தேதிகளைத் தவறாமல் சரிபார்ப்பதோடு, அழகு சாதன நிபுணர்கள் பரிந்துரைக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
- நெயில்பாலிஷ்கள் நகங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.
கைகளை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். அதிலும் கை விரல்களில் உள்ள நகங்கள், நெயில்பாலிஷ்கள் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில்பாலிஷை போடுவார்கள். ஆனால் சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

ஹேன்ட் சானிடைஷர்
நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.

வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு
நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டன் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
நகங்களில் உள்ள கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுவது போல நெயில் பாலிஷையும் அகற்றுகிறது. இதற்கு சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்க வேண்டும். இந்த நீரில் 5-ல் இருந்து 10 நிமிடங்கள் நகங்கள் நனையும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.

டூத் பேஸ்ட்
முதலில் டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.

பெர்ஃபியூம்
நெய்ல் பாலிஷை அகற்ற பெர்ஃபியூம் உதவியாக இருக்கிறது. சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.
- அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
குளிக்கும் போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனை. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே எளிதில் தீர்வு காண முடியும்.
முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் கூட தலைமுடியையை தேய்த்து குளிக்கும் போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள்.

பலர் தலைமுடியை கட்டிக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவிழ்த்து விடுவார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம் உண்டு. எனவே குளிப்பதற்கு முன் தலைமுடியை சீப்பு வைத்து சீவி சிக்குகளை அகற்றிவிட்டு தேய்த்து குளிக்கும் போது முடி உதிர்வை தவிர்க்க முடியும்.
சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரான ஆறு குளங்களில் தலைக்கு குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் முடியின் வேர்கள் வலுவிழக்க நேரிடும். குறிப்பாக முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தலைமுடியை சுத்தம் செய்யும் போது ஷாம்பு போட்டு சுத்தம் செய்வதுண்டு. குறிப்பாக ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும் போது முடி வறட்சி அடைந்து முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும் ஷாம்புவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். குறிப்பாக வறண்ட கூந்தலை உடையவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாவிட்டால் முடி உடைதல், முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படும்.
பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக இருப்பார்கள், தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும் போது முடி பலவீனம் அடைந்து உதிர்கிறது.

முடி உதிர்வுக்கான காரணங்கள்:
* போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்.
* வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்.
* உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும்.
* தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

* பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்.
* கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும்.
* இருதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்.
* அதிக ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்.
* புற்றுநோய், குடல் நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்.
* கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், தலைமுடி உதிர்வு ஏற்படும்.
* சரியான முறையில் தலைமுடியை பராமரிக்கவில்லை என்றாலும், முடி உதிர்வு ஏற்படும்.
* வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும்.
* உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்.
- எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க் நன்மை பயக்கும்.
- தேவையற்ற முடிகளை அகற்றாது.
சருமத்தில் தூசி மற்றும் காற்று மாசுபாடு, பாக்டீரியாக்கள் போன்றவை படிந்தால், முகப்பரு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தோலை பராமரிக்க சந்தையில் ஏகப்பட்ட கிரீம்கள் கிடைக்கின்றன.
அப்படி, அனைவராலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பீல்-ஆஃப் மாஸ்க் (peel-off mask) என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. ஏனென்றால், இது எக்கச்சக்க நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதை உபயோகிக்கின்றனர்.

குறிப்பாக, சருமத்தில் காணப்படும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற Peel Off மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஜெல் அல்லது நீர் சார்ந்த பீல்-ஆஃப் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தில் செய்யும் அதிசயங்களையும் காணலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க்குகள் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை துளைகளை அடைப்பதன் மூலம் உங்கள் தோலில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. மேலும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனர்களை விட தோலை நீக்கும் முகமூடிகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.

கவனிக்க வேண்டியவை:
* Peel Off மாஸ்க் உண்மையில் சரும சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்த வகை மாஸ்கினை வாரம் 1 அல்லது 2 முறை (தேவை இருப்பின்) பயன்படுத்தினால் போதுமானது.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின்னர் முகத்தை கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இதற்கான பதில் வேண்டாம் என்பது தான். எனினும் எரிச்சல், அரிப்பு இருப்பது போல் உணர்பவர்கள் முகத்தை கழுவலாம்.
* Peel Off மாஸ்க்-கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை (பெண்களின் மீசை) அகற்றுமா என்ற சந்தேகம் இருப்பின், கவலை வேண்டாம். இந்த பேக், தேவையற்ற முடிகளை அகற்றாது. வெண்புள்ளிகளை மட்டுமே அகற்றும்.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின் சருமம் பொலிவாக இருப்பது போல் தோன்றுவது உண்மை தான். சருமத்தின் இறந்த செல்களை இந்த மாஸ்க் அகற்றுவதால் இப்படி தோன்றுகிறது, எனினும் இந்த பொலிவு நிரந்தரமான ஒன்று அல்ல.
* Peel Off மாஸ்க் பயன்படுத்துகையில் வலி உண்டாவது உண்மை தான். அதேப்போன்று இந்த மாஸ்க் ஆனது, சருமத்துளைகள் சேதம் மற்றும் சிவத்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், நிபுணர்கள் அதிகம் இந்த மாஸ்கினை பரிந்துரைப்பதில்லை.
- தோல் பராமரிப்பு விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை.
- தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட் ஆகிவிட்டது. எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சில அழகு குறிப்புகள் இங்கே...
சுற்றுச்சூழலில் உள்ள தூசி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது சருமத்தையும் பாதிக்கிறது.
பெண்கள் தங்கள் சரும அழகில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. எப்பொழுதும் ஏதாவதொரு வேலையில் பிசியாக இருக்கும் இவர்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் சிலர் இப்போதெல்லாம் ஆண்களும் தங்கள் அழகு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஒரு வேளை, தாங்கள் அழகாகத் தெரிந்தால் மற்றவர்களை கவர முடியும் என்ற எண்ணத்தினாலோ அல்லது தங்கள் தன்னம்பிக்கையின் காரணமாகவோ, முகத்தில் பொலிவு மற்றும் நல்ல உடலமைப்புக்காக ஏங்குகிறார்கள்.
சில சமயங்களில், பெண்களை விட ஆண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் மற்றும் அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆனால் ஆண்கள் தங்கள் தோல் பராமரிப்பு விஷயத்தில் சில சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் அதிகமாக வெளியே செல்வார்கள்.
அவர்களின் தோல் ஏற்கனவே கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் போது முகம், தாடி மீசையில் தூசி போன்றவற்றால் தோல் எரிச்சல் ஏற்படலாம். இதை தவிர்க்க தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்:
நீரேற்றமாக இருங்கள்:
சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்க வேண்டும். உடல் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் போதுமான நீர் உட்கொள்ளல் அவசியம்.
எண்ணெய் பசை சருமத்தை போக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

சன்ஸ்கிரீன்:
வெளியில் செல்லும் போது உங்கள் சருமத்தில் சன் ஸ்க்ரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். இந்த சன் ஸ்கிரீன் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சருமத்திற்கு நல்லது.
இது தீங்கு விளைவிக்கும் மாசுக்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் சருமம் கருமையாவதையும் தடுக்கிறது. வெளியில் செல்லும்போது தூசி மற்றும் அழுக்குத் துகள்கள் காற்றில் வந்து தோலில் படர்ந்து சருமத் துளைகளை அடைத்துவிடும்.
அவை சருமத்தில் பருக்கள், வெடிப்புகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சன் ஸ்க்ரீன் தடவினால் இந்தப் பிரச்னைகள் வராது. ஆனால் சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

சமச்சீர் உணவு:
சருமத்தில் ஏற்படும் மாசுபாட்டின் விளைவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அழகுசாதனப் பொருட்கள் அல்ல. எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க மிக முக்கியமான விதி சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும் உணவைத் தேர்ந்தெடுக்கவும். இது உடலை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைக்கிறது.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்.
சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்க, காரமான உணவுகள், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கங்களைத் தவிர்க்கவும்.

இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட். எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சந்தையில் பல பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்ளன.
ஆண்களுக்கான கரி முகமூடிகள் மற்றும் திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் தோல் கண்டிஷனர்கள் இதில் அடங்கும். இவற்றை காலையில் தடவினால், நாள் முழுவதும் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
யோகா, தியானம், ஜிம் போன்ற தினசரி பயிற்சிகள் உங்களை உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
- உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.

மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

மீன் எண்ணெயில் உள்ள நன்மைகள்:
சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது.
ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த ரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
இது போன்று மீன் எண்ணெய்களை பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
- அரிசி கழுவிய நீரினால் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.
அரிசி கழுவிய நீரின் பயன்கள்:
அரிசி கழுவு போது அந்த தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டவேண்டும். அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலசினால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுடன் காணப்படும்.

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.

இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.