என் மலர்

    நீங்கள் தேடியது "banana"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
    • பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
    • வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இங்குள்ள சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. கிராமத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    நள்ளிரவு நேரத்தில் யானை வருவதை அறிந்த கிராம மக்கள், வனத்துறை யினர் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொண்டும் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    மக்கள் விரட்டும்போது, வனப்பகுதிக்குள் செல்லும் யானை, மீண்டும் நள்ளிரவு நேரத்தில் கிராமத்துக்குள் வந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வனத்துறை யினரும் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி கண் விழித்து யானையை விரட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால், தார் காட்டில் இருந்து நீதிபுரம் வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

    தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், உணவு தேடியும் யானை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் யானையை அடர் வனப்பகு திக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு யூனியனில் உள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர்.

    இவர்கள் வாழை நடவு செய்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், திடீரென்று வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பால், வாழை இலைகள் சீக்கிரமாகவே மஞ்சள் நிறமாகி, பழுத்து வீணாகி வருகின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

    இதையடுத்து நெல்லை தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் தலைமையில் களக்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சண்முகநாதன், தோட்டக்கலை அலுவலர் இசக்கி முத்து, உதவி அலுவலர் கிளாஸ்டன் ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் களக்காடு பகுதிக்கு விரைந்து வந்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அதிகாரிகளை இலைக்கருகல் நோயால் வாழைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

    வாழையில் இலைக்கருகல் நோயை பார்வையிட்ட அதிகாரிகள், தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாறுபாட்டால் 'சிக்கோடக்கா' என்கிற இலைப்புள்ளி நோய் வாழைப்பயிரை தாக்கி யுள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பயிர்களை காப்பாற்ற என்ன மருந்து கலவையை வாழைப்பயிர்கள் மீது தெளிக்க வேண்டும் என்கிற விளக்கத்தையும் அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளுக்கு தெரி வித்தனர்.

    இலைக்கருகல் பாதிப்பால் வாழையின் மகசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால், வாழை பயிர் செய்த விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக இலைக்கருகல் நோய் பாதிப்புக்கு உள்ளான வாழை பயிர் செய்துள்ள விசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    வாழையில் இலைக்கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. விவசாயப் பெருமக்கள் தங்களது விவசாயம் சார்ந்த உரிய ஆவணங்களுடன் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வேளாண் துறையில் மனு கொடுத்து, ஊக்கத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அதேநேரம், தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஊக்கத்தொகை சிறிய தொகைதான். இது, அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விடாது. அதனால், இதுபற்றி முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

    அதேவேளையில், வாழையில் இலைக்கருகல் நோய் பாதிப்பை சரிசெய்ய வேளாண் அதிகாரிகள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி வாழைப்பயிர்களை பாதுகாக்குமாறு விவசாயப் பெருமக்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது.
    • பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டி ருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம்

    செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.

    அதேபோல் இரு சக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்றகூலி தொழி லாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். கடைகளுக்கு செல்லும் சிலர் குடைகளைப் பிடித்துக் கொண்டு சென்றனர் . கார்கள், வேர்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் சாலையில் செல்லும்போது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.

    விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வகை யான பண பயிர்கள் சாகு படி செய்துள்ளனர். வாழை தோட்டங்களில் மழை வெள்ளம் சூழுந்து குளம்போல் காணப்ப டுகிறது. இதனால் வாழை அழுகும் சூழ்நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
    • விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.

    கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.

    அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

    இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது.
    • அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கத்திரிப்பட்டி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வந்த 2 யானைகள், நேற்று இரவு கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன.

    தகவல் அறிந்து, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ. சதாசிவம் கூறும்போது, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு மற்றும் வனத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார். அப்போது, கொளத்தூர் ஒன்றியக் குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு வாரத்துக்கு முன்பாகவே பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.
    • புதிதாக முளைத்த மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று சிறிய கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கடவுள் படங்கள் முன்பு பொறி, அவல், சுண்டல், தேங்காய் பல்வேறு வகையான பழங்கள் வைத்து படையல் செய்யப்படும்.

    பூசணிக்காய் உடைத்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.

    நாளை சரஸ்வதி பூஜையும் வருவதால் பெரும்பாலான வீடுகளில் சரஸ்வதி படம் முன்பு பூஜை பொருட்கள் வைத்து தீபாராதனை காண்பித்து சாமி கும்பிடுவர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது புத்தகங்களை சரஸ்வதி படம் முன்பு வைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் தஞ்சையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.

    இன்று தஞ்சையில் கீழவாசல், மானம்புசாவடி, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.‌ சாலை ஓரங்களில் ஏராளமான கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது.

    புதிதாக முளைத்த கடைகளில் மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    இதைவிட மற்ள கடைகளில் பொறி, சுண்டல், அவல், பூசணிக்காய், வாழை இலை, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    காலையில் மிதமான அளவில் இருந்த பொதுமக்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் தஞ்சையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக கீழவாசலில் கூட்டம் அதிகரித்தது.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே ஏற்பட்டது.

    இது தவிர பெரும்பாலான கடைகளில் சரஸ்வதி சாமி படமும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவற்றையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பூஜை பொருள்கள் தேவை அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் சற்று அதிகரித்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரத்து அதிகரிப்பால் வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ள
    • வேதனையில் விவசாயிகள்

    கரூர்:

    தொடர் மழை காரணமாக, வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவில் விலை இல்லாததால் வாழை விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயு தம்பாளையம், புகழூர், வாங்கல், திருமுக்கூடலுார், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப் படுகிறது.

    நடப்பாண்டு கடந்த மே 24 முதல் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இது தவிர, அமராவதிஅணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வந்ததால் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், கரூர் மாவட்டத்தில்பரவலாக மழை பெய்து வந்த தாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை.இந்நிலையில் கடந்த, 25ல் மகாளய அமாவாசை அனுசரிக்கப் பட்டது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, வாழைத்தார்கள் கரூர் மார்கெட்டுக்கு விற் பனைக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன், 600 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூர வள்ளி 450 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற பச்சைநாடன் 400 ரூபாய்க்கும் நேற்று ஏலம் போனது.

    இது குறித்து வாழை வியாபாரிகள் கூறியதாவது:

    கடந்தாண்டை விட, நடப்பாண்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கு, மாநிலம் முழுவதும் பெய்த மழை தான் காரணம். வரத்து அதிகரிப்பால், விலை எதிர்பார்த்த அளவில் உயர வில்லை. என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
    • வேதனையில் விவசாயிகள்; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

    கரூர்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சிய டைந்துள்ளது.

    கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளான வேலாயுதம்பா ளையம், புகளூர், வாங்கல், திருமுக்கூடலூர், மாயனூர், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைத்தார் சாகுபடி நடக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தவிர, அமரா வதி, நொய்யல் ஆறுகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், வாழைத்தார் சாகுபடி அதிகரித்துள்ளது. நாளை மறுநாள் (25-ந் தேதி) மகாளய அமாவாசை அனுசரிக்கப்பட உள்ளது.

    இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து, மார்க்கட்டுக்கு கூடுதலாக வாழைத்தார்கள் வரத் தொடங்கியுள்ளன.

    பூவன் பழம் ரூ. 150 முதல் 200 வரையிலும், ரஸ்தாளி ரூ. 200 முதல் 300 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 150 முதல் 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றன.

    இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் மிக குறைந்த விலைக்கு பழம் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • களக்காடு பம்பன்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
    • பன்றிகள் அட்டகாசத்தால் 400-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலவடகரை பம்பன்குளம் பத்துக்காட்டில் கடந்த 2 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டு பன்றிகள் கூட்டம் பம்பன்குளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

    இதைப்பார்த்த விவசாயிகள் அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை நாசம் செய்தன. பன்றிகள் அட்டகாசத்தால் 400க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது.

    இவைகள் 3 மாதமான ஏத்தன் ரக வாழைகள் ஆகும். பன்றிகள் சேதப்படுத்திய வாழைகள் மேலவடகரையை சேர்ந்த முருகபெருமாள் (40), அய்யா (40), பண்டாரம் (45), பாண்டி (30), நம்பிநாராயணன் ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

    வாழைகள் நாசமானதால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வரும் வேளையில் காட்டு பன்றிகளும் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

    களக்காடு மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பெரும் போராட்டமே நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை.

    வனத்துறையினரிடம் மனு கொடுத்தும், அவர்கள் இழப்பீடும் வழங்காமல், வனவிலங்குகளை விரட்டவும் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக இருந்து வருவதாக களக்காடு பா.ஜனதா பிரமுகர் சேர்மன்துரை புகார் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin