search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?
    X

    இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

    • முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும்.
    • 2 மணிநேரம் முதல் 4 மணிநேரமாவது அப்படியே வைக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் சிறுவயதிலேயே நரைமுடி வருவது என்பது இயல்பாகி விட்டது. அது வருவதற்கு ஹெரிடிட்டி, டெஃபிஷியன்சி, நிறைய கெமிக்கல் கலந்த பொருட்களை உட்கொள்வது இந்த மாதிரி பல காரணங்களால் இளம்நரை ஏற்படுகிறது.

    இளம் நரையை மறைப்பதற்காக கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்தும் போது அது நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஸ்கின் இரிடேஷன், உடலில் கருப்பு தழும்புகள் ஏற்படுவது, உடல்நிலையை பாதிப்படைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரைமுடியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு ஹேர் டை செய்யலாம் என்று பார்க்கலாம்.

    மருதாணிபொடியும், அவுரி இலைபொடியையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் முடிக்கு கலரிங் செய்துகொள்ளலாம். அதற்கு முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும். அதற்கு இரும்பு பாத்திரமாக இருந்தால் வசதியாக இருக்கும். இதற்கு ஒரு இரும்பு கடாயில் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பொடியை சேர்க்க வேண்டும். இதில் ஒரு அரை கப் அளவுக்கு ஹென்னா பொடியை சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொடி முடிவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கலரிங்கை இன்னும் கருப்பாக்கி கொடுக்கும்.

    பீட்ருட் எப்போதுமே ஒரு நல்ல நேச்சுரல் கலரிங்கை கொடுக்கும். எனவே ஒரு ஸ்பூன் பீட்ருட் பொடியை சேர்க்க வேண்டும். இது கட்டாயமல்ல, வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ருட் பொடியை அதிகமாகவும் கலந்துவிடக்கூடாது. இந்த கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும். இந்த கலவையை உடனடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.

    இந்த கலவையை மறுநாள் காலையில் எடுத்து நன்றாக கலந்துவிட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு சொட்டு யூக்கலிப்டிஸ் ஆயில் அல்லது டீட்ரீ ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முடிவளர்ச்சிக்கு நல்லது.

    இந்த கலவையை எண்ணெய் இல்லாத சுத்தமான முடியில் தான் அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துவிட்டு அப்ளை செய்தால் கலர் ஒட்டாது. கைகளில் கலர் படியாமல் இருக்க கையுறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைமுடியில் மட்டும் படுகிற மாதிரி எல்லா பகுதியிலும் தேய்க்க வேண்டும். நன்றாக எல்லா முடிகளிலும் படுகிறமாதிரி அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவையை முடிகளில் தேய்த்த பிறகு நல்ல கலரிங் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் முதல் 4 மணி நேரமாவது அப்படியே வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சினை இருந்தால் ஒரு மணிநேரம் வைத்தால் போதுமானது. 4 மணி நேரம் கழித்து நல்ல தண்ணீர் கொண்டு மட்டுமே அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். சோப்பு, ஷாம்பு, சீயக்காய் வகைகளைபயன்படுத்தக்கூடாது.

    தலைமுடி பிரவுன் கலரில் இருக்கும். தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாவது கட்டமாக ஒரு பாத்திரத்தில் அரைகப் அளவுக்கு இண்டிகோ பொடியை எடுத்துக்கொள்ளவும் இதனை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து (உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும்) இண்டிகோ பொடியில் கலந்து 10 நிமிடம் மட்டுமே மூடி வைக்கவும். சூடான தண்ணீரில் மட்டும் தான் இண்டிகோ ஆக்டிவேட் ஆகும். இந்த கலவையையும் ஏற்கனவே ஹென்னா தடவி அலசிய முடியில் மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும்.

    இந்த இண்டிகோ கலவையை நன்றாக முடியில் தடவி ஒன்றரை மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை தலையில் ஊற வைத்து வெறும் தண்ணீரில் தான் கழிவ வேண்டும்., ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. இரண்டும் ஒரேநாளில் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்தடுத்த நாள் பயன்படுத்தலாம். ஆனால் இடையில் ஷாம்பு போடுவதோ, தலையில் எண்ணெய் தேய்ப்பதோ கூடாது. வெள்ளைமுடியோ, இளம் நரை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக் பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்.

    Next Story
    ×