search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exfoliate"

    • எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
    • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.

    உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.

    எக்ஸ்ஃபோலியேட்

    வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

    மாய்ஸ்ச்சரைஸர்

    நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    • முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம்.
    • அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.

    டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

    முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவோம். அது சருமத்தின் மேல்புறத்தில் இருக்கிற அழுக்குகள் மட்டும் தான் வெளியேறும். அதனால் டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்.

    இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருள்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவற்றை நீக்கும்.

    சருமத்தை க்ளன்சிங் செய்து விட்டால் மட்டும் போதுமா என்றால் போதாது. அதன்பிறகு சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.

    க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும். கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.

    சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம். தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

    கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.

    கிரீன் டீயை நன்கு நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் ஸ்பிரே செய்து விட்டு முகத்தை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சுற்றுச்சூழுல் மாசுக்களால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.

    • வெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன் ஏற்படும்.
    • கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அறிவோம்.

    சன்ஸ்கிரீன் லோஷன் என்பது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை நீக்க பயன்படுகிறது. பணிகள்காரணமாக சூரியவெளியில் சுற்றும் வேலை உள்ளவர்கள் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயப்படுத்த வேண்டும். அவ்வாறுவெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன், தோல் உறிந்து வருவது போன்றவை ஏற்படும்.

    சன்ஸ்கிரீன் இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு பிசிக்கல் சன்ஸ்கிரீன், மற்றொன்று கெமிக்கல் சன்ஸ்கிரீன். பிசிக்கல்சன்ஸ்கீர்னில் உள்ள மாலிக்கியூவில் சூரியஒளியினால் ஏற்படும் தாக்கத்தை உடனடியாக வெளியேற்றுகிறது. இந்த பிசிக்கல் சன்ஸ்கிரீனில் அவன் ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் சின்க் ஆசைடு உள்ளது.

    நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் யூவி கதிர்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பு அடுக்கை பராமரிக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த பல நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

    இதுவே மழைக்காலம் என்று வரும் பொழுது சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆஃப்டர் சன்கேர் என்று சொல்லப்படும் சூரிய வெளிச்சத்திற்கு நமது சருமத்தை வெளிப்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமானதாக இருக்காது.

    வானிலையை துளியும் பொருட்படுத்தாமல் சூரியனானது நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்களை ஆண்டு முழுவதும் தொடர்ந்து வெளியிடுகிறது. சூரிய கதிர்களால் நமது சருமம் சன்பர்ன் அல்லது வறண்ட சருமம் உருவாகலாம். இது      நீண்ட காலத்திற்கு நிகழும் பொழுது முன்கூட்டிய வயதான அறிகுறிகள் முதல் சரும புற்றுநோய் வரை ஏராளமான ஆபத்துக்களை உண்டாக்கும்.

    வழக்கமான எஸ்பிஎப் பயன்படுத்துவது இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்கக்கூடியது. 90  சதவீத முன்கூட்டிய வயதான அறிகுறிகள் சூரியனின் விளைவுகளால் ஏற்படுபவை தான்! எனவே வீட்டை விட்டு வெளியேசென்று வீடு திரும்பிய பிறகு சருமத்திற்கு தேவையான பராமரிப்பை வழங்குவது மிகவும் அவசியம். இந்த காரணத்தை பூர்த்திசெய்யும் வகையில் ஏராளமான புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    நீங்கள் எவ்வளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சருமத்திற்கு பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது தவிர வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.

    மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின்சி பயன்படுத்துவது சூரிய கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டிஆக்சிடென்டாக செயல்படுவதன் மூலம் வைட்டமின் சி யூவி கதிர்களால் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆகவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு வைட்டமின் சி சார்ந்த சீரம் பயன்படுத்துவது உங்கள்

    சருமத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மட்டுமே உங்கள் சருமத்தை பாதுகாக்க போதாது. கூடுதலாக 5 நிமிடங்கள் செலவு செய்வதால் உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் என்றும் இளமையாகவும் பார்த்துக் கொள்ளலாம்.

    • வயதாகும்போது நம் சருமத்திற்கும் வயதாகிறது.
    • வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது.

    வயதாகும்போது நமது வயதின் எண்ணிக்கை மட்டும் கூடுவதில்லை. நம் சருமத்திற்கும் வயதாகிறது. அதுவரை பொலிவாக இருந்த சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் அதிகரிக்கத் தொடங்கும். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் சருமத்திற்கு வயதாவதை தள்ளிப்போட முடியும். அதற்கான ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    க்ளென்சர்

    வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இயற்கையாக முகத்தில் சுரக்கும் எண்ணெய் மற்றும் ஊட்டச்சத்துகள் போன்றவற்றையும் இழக்கிறது. அந்த காலகட்டத்தில் நுரை வரும் வகையிலான சோப்புகளை உபயோகிப்பது சருமத்துக்கு மென்மையாக இருக்காது. எனவே க்ரீம் க்ளென்சரை பயன்படுத்தலாம். க்ளென்சர்கள் சருமத்தின் மேற்பரப்பில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் க்ளென்சரால் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து முகம் கழுவி வர வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்

    எக்ஸ்ஃபோலியேட்டிங் என்பது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் முகத்தில் அடைபட்ட சருமத் துளைகளை சுத்தம் செய்வதோடு, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமம் பிரகாசமாகும். இதற்கு ஸ்கிரப் பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்.

    முகத்தை கழுவியவுடன் சீரம் அப்ளை செய்வது நல்லது. வயதாகும்போது செல் மீளுருவாக்கம் குறையும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையும். இதனால் சருமம் வறண்டு மந்தமாக தோற்றமளிக்கும். சீரம் சருமத்தை உடனடியாக மென்மையாக்கி, புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

    மாய்ஸ்ச்சரைசர்

    சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்க மாய்ஸ்ச்சரைசர்கள் உதவும். காலை மற்றும் மாலை நேரத்தில் முகத்தில் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தும்போது, முகத்தில் மட்டும் இல்லாமல், கழுத்து மற்றும் மார்பு பகுதியிலும் சேர்த்து அப்ளை செய்யலாம். ஏனெனில் இந்த பகுதிகளிலும் வறண்டு கோடுகள் விழ வாய்ப்புண்டு.

    கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கங்கள், கருவளையம் மற்றும் கோடுகளை சரிசெய்வதும் முக்கியம். எனவே முகத்துக்கு அப்ளை செய்யும் க்ரீமை கண்களுக்கு கீழ் அப்ளை செய்யும்போது மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அங்கு ரத்தம் ஓட்டம் கிடைக்கப்பெற்று கருவளையம் மற்றும் வீக்கம் குறையும்.

    வயதான சரும தோற்றத்துக்கான மற்றொரு காரணம், முகத்தில் இயற்கையாக உருவாகும் எண்ணெய் உற்பத்தி குறைவது. தினமும் காலையில் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்த பின் ஃபேஷியல் ஆயில் தடவுவதன் மூலம் ஆன்டி ஏஜிங் சருமத்தை சீரமைக்கலாம்.

    ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன்

    சருமம் வறட்சியாக பொலிவிழந்து இருக்கும்போது, காஸ்மெடிக்கையும் அதற்கு தகுந்தார்போல் தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஸ்கின் டைப்புக்கு ஏற்றார்போல் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    தூங்குவதற்கு முன் மேக் அப்பை அகற்றுவது முக்கியம். நன்றாக முகத்தை கழுவி விட்டு தூங்கச் செல்லவும். இதனால் சருமத்தில் காஸ்மெடிக் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

    தூக்கம் உங்கள் மனதுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள நேரம் கொடுக்கிறது தூக்கம். அந்த நேரத்தில் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய நைட் க்ரீம் பயன்படுத்தலாம்.

    • டபுள் க்ளென்ஸிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது.
    • பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம்.

    தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    கொரியன் பியூட்டி அல்லது கே-பியூட்டி எனப்படும் ட்ரெண்டானது பலரது சரும பராமரிப்பு வழக்கத்தை மாற்றி இருக்கிறது. டிரெண்டாக இருக்கும் கொரியன் பியூட்டி சரும பராமரிப்பு டிப்ஸ்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குவதால் பிரபலமாக இருக்கின்றன.

    டபுள் க்ளென்ஸ்: டபுள் க்ளென்சிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீன் அனைத்தையும் அகற்ற இரண்டு வெவ்வேறு க்ளென்சர்களை பயன்படுத்துவதே டபுள் க்ளென்சிங் ஆகும். இந்த டிப்சை பின்பற்றும் போது சருமத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை நீக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரை முதலில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற இரண்டாவதாக நீர் சார்ந்த க்ளென்சரை பயன்படுத்த வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்: எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீங்கி நமக்குபளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கிறது. இருப்பினும், அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தை சேதப்படுத்த கூடும் ஜென்ட்டிலாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும், அதே சமயம் அடிக்கடி செய்ய கூடாது. வாரத்திற்கு அதிகபட்சம் 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பழக்கமாக இருக்கும்.

    தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: வெயில் காலமோ, மழை காலமோ அல்லது பனி காலமோ கிளைமேட்டை பொருட்படுத்தாமல் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    போதுமான தூக்கம்: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம். போதுமான அளவு தூங்காத போது, உங்கள் உடல் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. கார்டிசோல்என்பது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உடைக்க கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும். எனவே தினசரி இரவு முதல் காலை வரை 7-8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள்.

    ×