search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanser"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படும்.
    • பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள்.

    காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

    சூடான நீரை பயன்படுத்துதல்:

    சூடான நீரை கொண்டு ஒருபோதும் முகம் கழுவக்கூடாது. வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீரும் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவதுதான் சரியானது.

    ஈரப்பதமான துடைப்பான் பயன்படுத்துதல்:

    `வெட் வைப்ஸ்' எனப்படும் ஈரப்பதமான துடைப்பான்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவற்றை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவை தற்காலிகமாக முகத்தை சுத்தம் செய்தாலும், சருமத்தில் படிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் பசைத்தன்மை மற்றும் அழுக்கை முழுமையாக அகற்றாது. சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி சருமத்திற்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். அதனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

     சோப் உபயோகித்தல்:

    தோல் வகைக்கு பொருத்தமான பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கடினத்தன்மை கொண்ட சோப், கிளென்சரை பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பேஸ்வாஷை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

     அழுக்கு துண்டு பயன்படுத்துதல்:

    முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்யவேண்டும். அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

     சருமத்திற்கு அழுத்தம் கொடுப்பது:

    கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியை கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

    இறந்த செல்களை அகற்றுதல்:

    குறிப்பிட்ட கால இடைவெளியில் இறந்த சரும செல்களை நீக்குவது முக்கியமானது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இறந்த செல்களை நீக்குவதற்கு தோல் வகைக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்போலியண்டை தேர்வு செய்வது நல்லது.

     எத்தனை முறை முகம் கழுவலாம்?

    காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாடால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒருமுறை முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும். எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

    • வெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன் ஏற்படும்.
    • கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அறிவோம்.

    சன்ஸ்கிரீன் லோஷன் என்பது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை நீக்க பயன்படுகிறது. பணிகள்காரணமாக சூரியவெளியில் சுற்றும் வேலை உள்ளவர்கள் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயப்படுத்த வேண்டும். அவ்வாறுவெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன், தோல் உறிந்து வருவது போன்றவை ஏற்படும்.

    சன்ஸ்கிரீன் இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு பிசிக்கல் சன்ஸ்கிரீன், மற்றொன்று கெமிக்கல் சன்ஸ்கிரீன். பிசிக்கல்சன்ஸ்கீர்னில் உள்ள மாலிக்கியூவில் சூரியஒளியினால் ஏற்படும் தாக்கத்தை உடனடியாக வெளியேற்றுகிறது. இந்த பிசிக்கல் சன்ஸ்கிரீனில் அவன் ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் சின்க் ஆசைடு உள்ளது.

    நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் யூவி கதிர்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பு அடுக்கை பராமரிக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த பல நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

    இதுவே மழைக்காலம் என்று வரும் பொழுது சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆஃப்டர் சன்கேர் என்று சொல்லப்படும் சூரிய வெளிச்சத்திற்கு நமது சருமத்தை வெளிப்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமானதாக இருக்காது.

    வானிலையை துளியும் பொருட்படுத்தாமல் சூரியனானது நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்களை ஆண்டு முழுவதும் தொடர்ந்து வெளியிடுகிறது. சூரிய கதிர்களால் நமது சருமம் சன்பர்ன் அல்லது வறண்ட சருமம் உருவாகலாம். இது      நீண்ட காலத்திற்கு நிகழும் பொழுது முன்கூட்டிய வயதான அறிகுறிகள் முதல் சரும புற்றுநோய் வரை ஏராளமான ஆபத்துக்களை உண்டாக்கும்.

    வழக்கமான எஸ்பிஎப் பயன்படுத்துவது இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்கக்கூடியது. 90  சதவீத முன்கூட்டிய வயதான அறிகுறிகள் சூரியனின் விளைவுகளால் ஏற்படுபவை தான்! எனவே வீட்டை விட்டு வெளியேசென்று வீடு திரும்பிய பிறகு சருமத்திற்கு தேவையான பராமரிப்பை வழங்குவது மிகவும் அவசியம். இந்த காரணத்தை பூர்த்திசெய்யும் வகையில் ஏராளமான புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    நீங்கள் எவ்வளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சருமத்திற்கு பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது தவிர வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.

    மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின்சி பயன்படுத்துவது சூரிய கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டிஆக்சிடென்டாக செயல்படுவதன் மூலம் வைட்டமின் சி யூவி கதிர்களால் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆகவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு வைட்டமின் சி சார்ந்த சீரம் பயன்படுத்துவது உங்கள்

    சருமத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மட்டுமே உங்கள் சருமத்தை பாதுகாக்க போதாது. கூடுதலாக 5 நிமிடங்கள் செலவு செய்வதால் உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் என்றும் இளமையாகவும் பார்த்துக் கொள்ளலாம்.

    • வயதாகும்போது நம் சருமத்திற்கும் வயதாகிறது.
    • வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது.

    வயதாகும்போது நமது வயதின் எண்ணிக்கை மட்டும் கூடுவதில்லை. நம் சருமத்திற்கும் வயதாகிறது. அதுவரை பொலிவாக இருந்த சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் அதிகரிக்கத் தொடங்கும். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் சருமத்திற்கு வயதாவதை தள்ளிப்போட முடியும். அதற்கான ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    க்ளென்சர்

    வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இயற்கையாக முகத்தில் சுரக்கும் எண்ணெய் மற்றும் ஊட்டச்சத்துகள் போன்றவற்றையும் இழக்கிறது. அந்த காலகட்டத்தில் நுரை வரும் வகையிலான சோப்புகளை உபயோகிப்பது சருமத்துக்கு மென்மையாக இருக்காது. எனவே க்ரீம் க்ளென்சரை பயன்படுத்தலாம். க்ளென்சர்கள் சருமத்தின் மேற்பரப்பில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் க்ளென்சரால் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து முகம் கழுவி வர வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்

    எக்ஸ்ஃபோலியேட்டிங் என்பது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் முகத்தில் அடைபட்ட சருமத் துளைகளை சுத்தம் செய்வதோடு, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமம் பிரகாசமாகும். இதற்கு ஸ்கிரப் பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்.

    முகத்தை கழுவியவுடன் சீரம் அப்ளை செய்வது நல்லது. வயதாகும்போது செல் மீளுருவாக்கம் குறையும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையும். இதனால் சருமம் வறண்டு மந்தமாக தோற்றமளிக்கும். சீரம் சருமத்தை உடனடியாக மென்மையாக்கி, புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

    மாய்ஸ்ச்சரைசர்

    சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்க மாய்ஸ்ச்சரைசர்கள் உதவும். காலை மற்றும் மாலை நேரத்தில் முகத்தில் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தும்போது, முகத்தில் மட்டும் இல்லாமல், கழுத்து மற்றும் மார்பு பகுதியிலும் சேர்த்து அப்ளை செய்யலாம். ஏனெனில் இந்த பகுதிகளிலும் வறண்டு கோடுகள் விழ வாய்ப்புண்டு.

    கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கங்கள், கருவளையம் மற்றும் கோடுகளை சரிசெய்வதும் முக்கியம். எனவே முகத்துக்கு அப்ளை செய்யும் க்ரீமை கண்களுக்கு கீழ் அப்ளை செய்யும்போது மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அங்கு ரத்தம் ஓட்டம் கிடைக்கப்பெற்று கருவளையம் மற்றும் வீக்கம் குறையும்.

    வயதான சரும தோற்றத்துக்கான மற்றொரு காரணம், முகத்தில் இயற்கையாக உருவாகும் எண்ணெய் உற்பத்தி குறைவது. தினமும் காலையில் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்த பின் ஃபேஷியல் ஆயில் தடவுவதன் மூலம் ஆன்டி ஏஜிங் சருமத்தை சீரமைக்கலாம்.

    ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன்

    சருமம் வறட்சியாக பொலிவிழந்து இருக்கும்போது, காஸ்மெடிக்கையும் அதற்கு தகுந்தார்போல் தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஸ்கின் டைப்புக்கு ஏற்றார்போல் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    தூங்குவதற்கு முன் மேக் அப்பை அகற்றுவது முக்கியம். நன்றாக முகத்தை கழுவி விட்டு தூங்கச் செல்லவும். இதனால் சருமத்தில் காஸ்மெடிக் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

    தூக்கம் உங்கள் மனதுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள நேரம் கொடுக்கிறது தூக்கம். அந்த நேரத்தில் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய நைட் க்ரீம் பயன்படுத்தலாம்.

    ×