search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Care"

    • பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும்.
    • கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    முகத்தில் இயற்கையான பளபளப்பு தோன்றும் வகையில் அழகுபடுத்த பெண்கள் பல வகையான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் சருமம் உள்ளிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே இயற்கையான பளபளப்பை பெற நீங்கள் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பாதவர் யார்? பெண்கள் அழகாக இருக்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். மேலும் பல கிரீம்களை தங்கள் முகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையான பளபளப்பைக் காண விரும்பினால், சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக மாற்றுவது தான்முக்கியம்.

    இதற்காக, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை கடைப்பிடித்தால், படிப்படியாக தோல் பிரச்சினைகள் மறைந்துவிடும், மேலும் சில அழகுசாதனப் பொருட்களில் இருந்தும் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

    அன்றாட வழக்கத்தின் நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை நோய்களில் இருந்து விலக்குவது மட்டுமல்ல. இதனுடன், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே எந்தெந்த நல்ல பழக்கங்கள் உங்கள் முகத்தில் பொலிவைத் தரும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

    நாம் விழா அல்லது வெளியில் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேவையவற்றை உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 10 நாட்கள் அல்லது 1 வாரத்திற்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ருட் போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். ஜங்க்புட் தவிர்த்துவிட வேண்டும்.

    தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கைகால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இரவில் தூங்கும்போது தேங்காய் எண்ணெய், கற்றாழை, வைட்டமின் E மாத்திரை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து தூங்கி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    அதன்பிறகு பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும். இதை விட முக்கியமான ஒன்று தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன் மாசு மருக்கள் தவிர்க்கலாம்.

    காலை உணவு முதல் இரவு உணவு வரை சரியான நடைமுறையைப் பின்பற்ற முடியும், மேலும் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக மாறும். கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டிடாக்ஸாக வேலை செய்கிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் பச்சை மற்றும் பருவகால காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து, சீரான உணவைப் பின்பற்றுங்கள்.

    ரோஸ் வாட்டர் சிறந்த இயற்கை மூலப்பொருளாகும், இது சருமத்தை அழகாக்க பயன்படுகிறது. தினமும் இதை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

    • சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
    • சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

    கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

     

    1. சரும பராமரிப்பு:

    கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலக்காதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம்தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

     2. சன்ஸ்கிரீன் பயன்பாடு:

    சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமான நாட்களில் கூட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நேராமல் தற்காத்துக்கொள்ள அவை உதவுகின்றன.

    3. புளிப்பு வகை உணவு:

    கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உட்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கும் வித்திடும் புரோபயாட்டிக்குகள் நிறைந்தவை.

    4. நீர் அருந்துதல்:

    உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    5. தூக்கம்:

    ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்திற்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

    6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:

    கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.

    7. மன அழுத்தம்:

    மன அழுத்தமும் முகப்பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.

    8. உணவு வழக்கம்:

    கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பேணவும் வழிவகுக்கிறது.

    • அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.
    • ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது.

    பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் காஜல், மஸ்காரா, பவுண்டேஷன், ஐ லைனர், லிப் லைனர், ரோஸ் என பல பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. அந்தவகையில், மேக்கப் போட விரும்பாத பெண்களாக இருந்தால் அழகுகுறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

     தண்ணீர் குடித்தல்

    உடலில் நீர்ச்சத்து குறையும் போது சருமம் வறண்டு விடக்கூடும் என அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

     புருவங்களைத் திருத்துதல்

    பெண்களின் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் புருவ அழகுதான். அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களைத் திருத்திக் கொள்ளலாம். மேலும், கண்மைகளை பயன்படுத்தி புருவத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

     சரும பராமரிப்பு

    சருமத்தில் எவ்வித பிரச்சனைகள், அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்க, முகத்திற்கு எண்ணெய் மற்றும் சீரம் பயன்படுத்தவும். மேலும், ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அதிகளவு உண்ணவேண்டும்.

     ஹேர் ஸ்டைல்

    மேக்கப் விரும்பாத பெண்கள், சிகை அலங்காரத்திலும் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆடைகளுக்கு ஏற்ற விதவிதமான ஜடைகள், பூக்கள் போன்றவற்றை வைத்து அழகாக்கிக்கொள்ள முடியும்.

     உதடு பராமரிப்பு

    உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்ல லிப் பாம் மட்டும் உபயோகிக்கலாம்.

     உடைகளில் கவனம்

    உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை அணிவது உங்களை அழகாக காட்டும்.

    இயற்கை அழகுசாதனப் பொருள்கள்

    முகத்திற்கு மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற இயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.

     மகிழ்ச்சியாக இருத்தல்

    ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே முகம் அழகாக தெரியும்.

     தூக்கம்

    சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் கண்களை சுற்றி கருவளையம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது தூக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    • வீட்டு உபயோகப்பொருட்களை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.
    • தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    சருமத்துக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கு வீட்டு உபயோகப்பொருகளை எளிமையான முறையில் பயன்படுத்தினாலே போதுமானது.

    தினமும் காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சிறிதளவு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு குளியல் போடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமம் பொலிவு பெறும்.

    உருளைக்கிழங்கு சாறும் சருமத்திற்கு அழகு சேர்க்கும். குறிப்பாக கருவளையங்களை போக்கி சருமப் பொலிவை அதிகப்படுத்தும். தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு உருளைக்கிழங்கு சாறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருவளையங்கள் மறையும். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் வித்திடும்.

    ஒரு கைப்பிடி புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். இந்த செயல்முறை முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும். `பளிச்' தோற்றத்தையும் தரும்.

    ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக கலந்து குழைத்து முகத்தில் பூசவும். அவை உலர்ந்ததும் முகத்தை கழுவினால் பொலிவு கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு தேன் கலந்து பூசி வர, முகச்சுருக்கம் நீங்கும்.

    • சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.
    • குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.

    குங்குமப்பூ எண்ணெய் மசாஜ்

    குங்குமப்பூ எண்ணெய்யுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் சேர்த்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஈரப்பதமூட்டுவதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் உணர வைக்கும்.

     குங்குமப்பூ பேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் தேன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிருடன் சிறிதளவு குங்குமப்பூ இழைகளை கலந்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ் மாஸ்க் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். சருமத்துக்கு கூடுதல் பிரகாசம் அளிக்கும்.

    கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் சூரிய கதிர்வீச்சுகளின் வீரியம் அதிகமாக இருக்கும் வேளையில் வெளியே நடமாடினால் சருமம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும். அதனை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    இயற்கை முறையில் சருமத்தை பாதுகாக்க விரும்புபவர்களின் தேர்வாக குங்குமப்பூ அமைந்திருக்கிறது. அது வெப்பத்தை விரட்டியடித்து சருமத்திற்கு பொலிவை தரக்கூடியது. வெப்பமான மாதங்களில் குங்குமப்பூவை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * குங்குமப்பூவில் குரோசின், குரோசெடின், சப்ரானால் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் மற்றும் சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன.

    * குங்குமப்பூ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் ஒவ்வாமை, எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    * குங்குமப்பூவில் வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை சரும வளர்ச்சிக்கு வித்திடக்கூடியவை. இளமை தோற்றத்தை தக்க வைக்கவும் துணை புரியும்.

    * குங்குமப்பூவில் உள்ள இயற்கையான கரோட்டினாய்டுகள் சரும நிறத்தை மேம்படுத்தக்கூடியவை.

     சரும பராமரிப்புக்கு ஏற்ற குறிப்புகள்:

    நீரேற்றத்துடன் இருங்கள்:

    சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

    சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:

    தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, எஸ்.பி.எப் 30 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

    சமச்சீர் உணவை உண்ணுங்கள்:

    பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்த கீரைகள், பெர்ரி வகை பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சருமத்தை சுத்தம் செய்யுங்கள்:

    சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தவறாமல் சுத்தப்படுத்துங்கள். வெளி இடங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் 'பேஸ் வாஷ்' கொண்டு முகம் கழுவுங்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சருமத்தை சுத்தம் செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள். இறந்த செல்களை அகற்றவும், மென்மையான, பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

    • சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
    • முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    `வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ…

     சோப்பின் பயன்பாடு:

    சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

    இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

     மேக்-அப் போடும் முறை:

    மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

     ஆரோக்கியமான கூந்தல் பெற:

    இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம். இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

    மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

     கைகள் பராமரிப்பு:

    இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம். அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
    • மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

    குளிர்ந்த காலநிலையானது அதன் இயற்கையான ஈரப்பதத்தை தோலில் இருந்து அகற்றி, சருமத்தை உலர்ந்ததாகவும் மந்தமானதாகவும் மாற்றும். குளிர்காலத்தின் உறைபனி காற்று, சருமத்தை எளிதில் வறண்டு போக வைக்கின்றன. இருப்பினும், பயப்பட வேண்டாம், சரியான பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தை கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

    உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை வலுப்படுத்தும் அத்தியாவசிய பேஸ் மாஸ்க்குகளை கண்டறிய வேண்டும் மற்றும் குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் பிரகாசமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

     தேன் மற்றும் தயிர் மாஸ்க்

    தேனின் ஈரப்பதமூட்டும் பண்புகளை தயிரின் ஊட்டமளிக்கும் நன்மையுடன் இணைக்க வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன் ஈரப்பதத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

     அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

    அரை அவகேடோ பழத்தை மசித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும், அதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. எனவே இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

     வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய் ரேடியன்ஸ் மாஸ்க்

    ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவ வேண்டும். வாழைப்பழங்கள் வைட்டமின்கள் மற்றும் ஈரப்பதத்துடன் நிரம்பியுள்ளன. மேலும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு கதிரியக்க பிரகாசத்தை சேர்க்கிறது. மந்தமான குளிர்கால சருமத்திற்கு உயிர் சக்தியை மீட்டெடுக்க இந்த மாஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    • சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன.
    • ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    ரெட் ஒயின் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாகும், சில ஆய்வுகள் மிதமாக உட்கொள்ளும் போது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

    மருத்துவர்கள் கூறுகையில், "சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும். இருப்பினும், சிவப்பு ஒயின் தோலை சேதப்படுத்துகிறது, ஏனெனில் அது ரோசாசியாவை (தோல் நிலை), நீரிழப்பு மற்றும் ஹிஸ்டமினிக் எதிர்வினைகளை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உணர்திறன் சாத்தியத்தை அதிகரிக்கும்.

    ஒயினில் உள்ள பாலிபினால்கள் திராட்சை மற்றும் பிற பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படலாம் என்றும் அது ஒயின் மூலம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

    "ஆல்கஹால் ஆக்சிஜனேற்ற சேதத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் வயதாகிவிடுவதால், உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சிவப்பு ஒயினை தவிர்க்க வேண்டும். சிவப்பு ஒயினில் ஆக்சிஜனேற்றங்கள் இருந்தாலும், பொதுவாக, ஆல்கஹால் தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    நீரேற்றம், சரியான தோல் பராமரிப்பு மற்றும் உகந்த தோல் நல்வாழ்வுக்கான அடித்தளமாக சத்தான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த சரும நன்மைகளுக்கு மதுவை நம்புவதற்குப் பதிலாக, சருமத்தைப் பராமரிப்பதில் எளிமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளைத் தழுவுவது நல்லது.

    அதிகப்படியான மது அருந்துதல் தோல் நீரிழப்புக்கு வழிவகுக்கும், முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும். ஒரு சமநிலையான அணுகுமுறை, பல்வேறு ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உள்ளடக்கியது, உகந்த தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

    மிதமான சிவப்பு ஒயின் நுகர்வு தோல் தொடர்பான சில நன்மைகளை அளிக்கும் போது, தனிநபர்கள் சீரான உணவு, நீரேற்றம், சூரிய பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    ஒயின் குடிப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று பெரும்பாலான தோல் மருத்துவர்கள் கருதினாலும், தனிப்பட்ட உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெற தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் சிறந்தது.

    • குருத்துகளை பறித்து பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ.
    • ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும்.

    தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'ஒயிட் டீ' என்ற பெயர் உண்டானது.

    ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம். இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்கே...

    சரும பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள ஃபிரீரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் சருமத்தின் இளமை மற்றும் மிருதுவான தன்மையை பாதுகாக்கிறது.

    ஒயிட் டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க வயதான தோற்றம் உண்டாவதை தாமதப்படுத்தும். தோல் நோய்களால் சருமம் சிவப்பதையும், வீங்குவதையும் குறைக்கும். தினமும் 2 கப் ஒயிட் டீ குடுப்பதால் சருமம் சுத்தமாகும்.

    எடை குறைப்பு:

    ஒயிட் டீ, உடலில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்பை எரிக்க உதவும். புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கும். இதில் காணப்படும் கேட்சின்கள் செரிமான செயல்முறைகளை துரிதப்படுத்தும்.

    தலைமுடியின் ஆரோக்கியம்:

    ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் உச்சந்தலை தோல் நோய்களை குணப்படுத்தும். முடி வறட்சியை தடுத்து கூந்தலுக்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒயிட் டீயில் காணப்படும் எல்-தியானைன் எனும் ரசாயனம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

    பற்கள் பாதுகாப்பு:

    ஒயிட் டீயில் பிளேவனாய்டுகள், டானின்கள் மற்றும் புளோரைடுகள் உள்ளன. இவை பற்கள் ஆரோக்கியமாகவும். வலுவாகவும் இருக்க உதவுகின்றன. பல் சிதைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தடுக்கின்றன. ஒயிட் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

    சர்க்கரை நோய் கட்டுப்பாடு:

    ஒயிட் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் பிற ஆக்சிஜனேற்றிகள், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒயிட் டீ ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    இதய பாதுகாப்பு:

    ஒயிட் டீ இதயத்தில் ஏற்படும் ரத்த உறைவு, பக்க வாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக்குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    ஒயிட் டீ தயாரிப்பு:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் 2 டீஸ்பூன் ஒயிட் தேயிலை இலைகளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த இலைகளை வடிகட்டி ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி குடிக்கவும். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

    • அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
    • இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

    அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

    இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.

    கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

    செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.

    இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.

    அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.

    • சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
    • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுவாசம் மேம்படும்

    துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.

    சரும பாதுகாப்பு

    துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    செரிமானம்

    அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.

    அழற்சி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.

    மன நலம்

    துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.

    ரத்த சர்க்கரை

    துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.

    எடை மேலாண்மை

    துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.

    இதய ஆரோக்கியம்

    துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    ×