search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beauty Tips"

    • சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
    • பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.

    கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.

    ஆனால், மழைக்காலங்களில் வேறுவிதமான சரும பிரச்சினைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

    இதனை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..

    தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும் ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். 

    சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும். 

    அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம். 

    உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.           

    • உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
    • ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.

    பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.


    உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

    தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.

    கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது.

    எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.

    உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.


    வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது.
    • பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள்.

    நாகரிகம் என்ற பெயரில் 16 வயதிலிருந்தே ஆணும்-பெண்ணும் தங்கள் தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது என்பது உலகம் முழுவதும் சகஜமாகிவிட்டது.

    நம் நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். அதிலும் நரைத்த வெள்ளை முடியை கறுப்பாக ஆக்குவதற்கு தான் இதை பயன்படுத்துகிறார்கள்.

    பெரும்பாலான ஹேர் டைகளில் `பேராபினைலின் டை அமைன்' (பி.பி.டி) என்கிற ரசாயனப் பொருள் உள்ளது. இது சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.


    இந்த ரசாயனப் பொருள் தோலில் படும் இடம் எரிச்சலடைந்து சிவந்து வீக்கமடைந்து தடித்துப் போவதுண்டு.

    ஹேர் டை உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு ஹேர் டை கலவையை உங்கள் காதுக்கு பின்புறமோ அல்லது உங்கள் முழங்கையின் பின் பக்கமோ லேசாகத் தடவி கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.

    பின்னர் தடவிய இடத்தில் தோலில் நிறமாற்றம், அரிப்பு, எரிச்சல் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். ஒன்றும் ஏற்படவில்லை என்று தெரிந்த பின்பு ஹேர் டையை தலைமுடியில் உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

    தலைமுடிக்குத் தானே டை அடிக்கிறோம். அலர்ஜி ஏற்பட்டாலும் தலையில் இருக்கும் தோலோடு போய்விடும் என்று நினைக்காதீர்கள்.


    சிலருக்கு இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னந்தலை, நெற்றி, காதுகள், கண் இமைகள் உச்சந்தலை ஆகிய இடங்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்துவிடும்.

    சில ஹேர்டை உபயோகித்த அடுத்த ஒரு நிமிட நேரத்திற்குள்ளேயே பாதிப்பைக் காட்டிவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்படலாம்.

    ஹேர் டை அடித்துவிட்டு அதிக நேரம் தலையை காயவிடாதீர்கள். தலைமுடியை பலமுறை நன்றாக அலசி கழுவி உலர்த்துங்கள். பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருத்துவம் கூடாது.

    எப்பொழுது நீங்கள் தாத்தா அல்லது பாட்டி ஆகிவிட்டீர்களோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது அனுபவம் சொல்வது.

    எப்பொழுது உங்கள் உடலுக்கு, தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது மருத்துவம் சொல்வது.

    எப்பொழுது உங்கள் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஒத்துவரவில்லையோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது சமுதாயம் சொல்வது.


    தோற்றத்தைப் பார்த்தால் 60 வயதுக்கு மேல் தோன்றுகிறது. ஆனால் இன்னமும் ஹேர் டை அடிப்பதை நிறுத்தவில்லையே என்று பிறர் சொல்லக்கூடாது. உங்கள் வயதோடும் உங்கள் உடல் அமைப்போடும் ஹேர் டை ஒத்துப் போகவேண்டும். அவ்வளவுதான்.

    • கருப்பு, மெரூன், பச்சை போன்ற அடர்ந்த நிறங்களில் தேர்வு செய்யும்போது நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.
    • நன்றாக கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன், ஜார்ஜெட் புடவைகள் அணியலாம்.

    பெண்கள் வீடுகளில் தேவதைகளாக ஜொலித்தாலும் அலுவலகம் செல்லும்போது உடை விஷயத்தில் மிகவும் கவனமாகவும், அதே சமயம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமலும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு நூல் இடைவெளி மீறினாலும் நம் மீதுள்ள கண்ணியம், மரியாதையை பிறர் எடைபோடக்கூடும். எனவே அழகாக, டிரெண்டிங்காக இருப்பது மட்டுமின்றி வெளியிடங்களில் மரியாதை கிடைக்கும் வகையில் உடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேண்ட், பார்மல் சட்டை, ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்து செல்லலாம். சில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும். எனவே அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் வீட்டு அலமாரியில் வைத்திருக்க வேண்டிய சில உடைகள்...

    அழகிய டாப், நீண்ட பிளவுஸ்

    அணியும் லெக்கின் அல்லது ஜீன்சுக்கு ஏற்ப லாங் அல்லது ஷார்ட் டைப் டாப்களை அணியலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப துப்பட்டா அணியலாம். ஆனால் ஒருசில டாப்களுக்கு எப்படி அணிந்தாலும் துப்பட்டா பொருந்தாது. பாட்டமுக்கு தகுந்தாற் போல் மொராக்கன் டாப், டியுனிக், குர்த்திகள் என விதவிதமான டாப்களை அணியலாம். காலர் டைப் குர்த்திகள் பலரின் சாய்ஸாக உள்ளது; அணியும் போது பர்ப்பெக்ட் லுக் கொடுக்கும். கருப்பு, மெரூன், பச்சை போன்ற அடர்ந்த நிறங்களில் தேர்வு செய்யும்போது நேர்த்தியான தோற்றம் கிடைக்கும்.

    முக்கியமான மீட்டிங் போன்ற நேரங்களில் பட்டனுடன் கூடிய சட்டைகளை தேர்வு செய்யலாம். உயர் அதிகாரிகள் வரும் மீட்டிங், இன்டர்வியூ போன்ற இடங்களுக்கு அடர் நிற கீழ் ஆடையுடன் (பாட்டம்), வெளிர் நிற பட்டன் சட்டையை முயற்சித்து பாருங்கள். கருப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேண்டுகளுக்கு வெள்ளை, நீலம், பீச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும்போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம் அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.

    காட்டன் புடவைகள்

    நன்றாக கஞ்சி போட்டு சலவை செய்த காட்டன், ஜார்ஜெட் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக ஜிமிக்கி, எம்பிராய்டரி வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கதவு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை 'பிளீட்' எடுத்து பின் குத்தினால் 'ரிச்' லுக் கிடைக்கும்.

    பிளேஸர்

    அலுவலகத்தில் ஸ்டைலான, மிடுக்கான தோற்றத்தை பிளேஸர்கள் அளிக்கின்றன. இப்போது பலரின் விருப்பமும் இதுதான். ஷார்ட் மற்றும் லாங் டைப் ஸ்கர்ட், பேன்ட் போன்றவைக்கு பிளேஸர் பர்பெக்ட்டாக பொருந்தும். பிளேஸருக்கு பொருத்தமான அதே நிறத்தில் பேண்ட்களும் கிடைக்கின்றன. மீட்டிங்கில் பிளேஸர் அணிந்தால் கிடைக்கும் 'லுக்கே' தனிதான்.

    • அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
    • குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள்.

    கொஞ்ச நாளாக ஆன்மீகமே தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் மருத்துவ கருத்துக்கள் விட்டுப் போகின்றதே என்ற கவலையும் நெருடலாய் இருக்கின்றது.

    இரண்டும் கலந்து ஒரே கட்டுரையில் கொண்டு வருவது என்பதும் சரிப்படாது. ஆகவே அவ்வப்போது மாற்றி எழுதலாம் என்ற நினைப்பேன் இம்முறை மருத்துவக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஒரு நிகழ்வு. நன்கு அறிந்த ஒரு பெண்மணி. தனது தோற்றத்திற்கு அதிக கவனம் கொடுப்பவர். அதாவது சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு என எல்லாவற்றிலும் கவனமாய் இருப்பவர். அவரை சில வருடங்களுக்கு பிறகு நான் சந்திக்க நேர்ந்தது.

    முகத்தில் வயதுக்கு மீறிய கோடுகள், சுருக்கங்கள், முதுமை தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே மாறி இருந்தது. பார்த்தாலே ஏதோ உடல் நலம் இல்லாதவர் போல் இருந்தார்.

    காரணம் கேட்டபோது வாழ்வில் ஏற்பட்ட சில பாதிப்புகள், வேதனைகள் அதிக மன உளைச்சலை தந்ததாகவும் இதனால் சர்க்கரை உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றார்.

    சிலருக்கு காலையில் எழுந்தவுடனேயே ஜிலேபி மற்றும் பால் அருந்துவது வழக்கம். சிலர் இட்லி, தோசை, உப்புமா, கஞ்சி என எதற்கும் சர்க்கரை போட்டுக் கொள்வர். சிலர் டீ, காபியினை கூட பாயாசம் போல் சர்க்கரை சேர்த்து அருந்துவர்.

    இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கொலாஜன் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.

    * கொலாஜன், எலாஸ்டின் இரண்டுமே சரும கட்டமைப்பிற்கு காரணமாகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்து கின்றது. இந்த வீக்கம் சரும திசுக்களை பாதிக்கின்றது. தொடர் வீக்கம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

    * உடலுக்குரிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தியினை உடல் இழக்கின்றது.

    * இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகின்றது.

    * சருமம் சொர சொரப்பாக இருக்கும்.

    * சருமத்தில் திட்டு, புள்ளிகள், கறுப்பு போன்றவை ஏற்படுகின்றது.

    * சருமம் தொய்ந்து வலுவிழந்து காணப்படுகின்றது.

    எனவே சர்க்கரையைத் தவிர்ப்பதே பல நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள். இதில் அனைத்து பிரிவுகளும் அடங்கும். வெள்ளை சர்க்கரை கூடுதல் பாதிப்பினைக் கொடுக்கும். மற்ற பிரிவுகளை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் ஒரு மாதம் இவ்வாறு இருந்து பாருங்கள். கேக், சாக்லேட், பிஸ்கட், வெள்ளை சர்க்கரை இனிப்பு இவை அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்தித்தான் பாருங்களேன்.


    கடந்த சில மாதங்களாக வெய்யிலின் கடுமை தாங்காது மயக்கம், ஜுரம், சோர்வு என பாதிப்புக் கடுமையாய் இருந்தன. இதில் 'மைக்ரேன்' பாதிப்பு தலைவலி எனக் கூறியவர்களும் அதிகம்.

    இந்த தலைவலி வருவதற்கு முன், வந்த பிறகு, தலைவலி போன பிறகு என்ன அறிகுறிகளைக் காட்டும். முதலில் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * உடைக்கும் தலைவலி அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம், சத்தம், நல்ல மனம் இவை கூட தொந்தரவாக இருக்கும்.

    * எரிச்சலுடன் இருப்பர். முகம், கழுத்து, மண்டை இவற்றில் வலி இருக்கும்.

    * மூக்கடைப்பு இருக்கும்.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

    * வயிறு உப்பிசம், ஜீரண கோளாறு இருக்கலாம்.


    மைக்ரேன் தலைவலி:

    * மைக்ரேன் தலைவலி துடிக்கும் தலைவலியாக இருக்கும்.

    * அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம் ஆகாது. தலை வலியுடன் வயிற்று பிரட்டல் வாந்தி என இருக்கும்.

    * சற்றும் நகரக் கூட முடியாது.

    * காரணமற்ற சோர்வு, அதிக கொட்டாவி இருக்கும்.

    இந்த அறிகுறிகள் சாதா தலைவலியில் இருந்து மாறுபட்டவை. அதிக முறை சிறுநீர் போகும். கொட்டாவி வரும். சிலர் சாக்லேட் சாப்பிட்டவுடன் ஏற்படும். இவை அனைத்தும் 'நான் வந்து விட்டேன்' என மைக்ரேன் சொல்லும் அறிகுறிகள்.

    * மனச்சோர்வு, திடீரென்று உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினை, கலங்களான பார்வை. இவை கூட மைக்ரேன் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உணர்ந்து கொள்ளும் அறிகுறிகளாகத் தெரியும்.

    * இந்நேரங்களில் நெய், வெண்ணை, சீஸ், கொட்டை வகைகள், மது, புளித்த உணவுகள், ஊறுகாய் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

    இது மைக்ரேன் தான் என உணர்ந்தவர்கள் வெளிச்சம், இல்லாத அறையில் இருப்பது, வெகு வெதுப்பான நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பது. மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றினை செய்யலாம். ஆயினும் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    * தலைவலி ஆரம்பிக்கும் முன்போ அல்லது அப்போதோ பார்வையில் மாறுதல்கள் ஏற்படலாம்.

    * கை, கால், முகம் இவற்றில் குறுகுறுப்பு உணர்வு இருக்கலாம்.

    * பேச்சு தடுமாற்றம் இருக்கலாம்.

    * காதில் சத்தம், ஒரு பக்க முகம், உடல் பலமிழந்தது போல் இருக்கலாம்.

    * இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவை.

    * மைக்ரேன் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.

    * குடும்ப ரீதியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஏற்படுகின்றது.

    * அதிக மன உளைச்சல், படபடப்பு, தூக்கமின்மை இவை இந்த பாதிப்பினை கூட்டலாம்.

    * ஹார்மோன் மாறுபாடு ஏற்படும் காலங்கள், சீதோஷ்ண நிலை மாறுபடும் காலங்கள், சில வகை மருந்துகள் அதிக உடற்பயிற்சி, புகையிலை, சிகரெட், சில வகை உணவுகள் ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

    மருத்துவ கருத்துக்கள் விழிப்புணர்விற்காக எழுதப்படுபவை தானே தவிர, தானே முடிவு செய்து தானே சிகிச்சை செய்து கொள்வ தற்காக அல்ல. ஆக படியுங்கள். அறிந்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாதீர்கள்.


    * நீங்கள் முயற்சி செய்யாமல் வேகமான எடை குறைவு ஏற்படும் போது

    * தொடர் சோர்வு இருப்பது. போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாகவே இருப்பது.

    * தொடர்ந்து வலி எந்த காரணமும் இன்றி இருப்பது, சாதாரண வலி நிவாரணிகள் மூலம் பயன் இல்லாது இருப்பது.

    * உடல் மஞ்சள் நிறம், கண்ணில் மஞ்சள் நிறம், உடல் அரிப்பு போன்றவை (இது மஞ்சள் காமாலை பாதிப்பால் இருப்பதுதான். என்றாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது)

    * சரும மரு, மச்சம் இவற்றில் மாற்றம், சரும புண்கள் ஆறாது. ரத்தம் கசிதல்.

    * கழிவு வெளிப் போக்கில் ரத்தம், அடிக்கடி வயிற்றுப் போக்கு அடிக்கடி மலச்சிக்கல்.

    * சிறுநீர் செல்லும் போது வலி நிற மாற்றம்.

    * விழுங்குவதில் கடினம்.

    * மாத விலக்கு சுற்றில் மாற்றம் போன்றவை உடனடி யாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது வளரக்கூடியவை.
    • பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

    * பேன்கள் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் சிறகில்லாத ஆறுகால் பூச்சிகள்.

    * மனிதரின் தலை, உடல், மேகனம் (பாலுறுப்பில் ரோமங்கள் வளரும் இடம்) ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம்.

    * தலையில் வசிக்கும் பேனும், உடற்பேனும் ஒன்றுபோல இருக்கின்றன. ஆனால் மேகனப்பேன் சிறியது.

    * இவற்றின் கால்களில் உள்ள உகிர்களால் இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. இதனால் பேன்கள் தலை மயிர்களையும், உடைகளின் துணிகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன.

    * பேன்களின் உறிஞ்சு குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது.

    * தலையிலிருக்கும் பேன் வெப்பநிலை சாதகமாக இருக்கும்போது செழித்தோங்கி வளரக்கூடியவை.

    * தட்டையாகவும், வெண்பழுப்பு நிறமுள்ள தலைப் பேன்கள் தோலைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சும். அப்போது ஒரு நச்சுப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் கடித்த இடத்தில் ரத்தம் உறையாத படியும் எரிச்சலையும், நமைச்சலையும் கொடுக்கும். அவ்விடத்தில் சிவந்து நீர்க்கசிவு ஏற்பட்டு சீழ்பிடித்து கழுத்தின் பிற்பகுதியில் நெறிகட்டும். உடலின் மேற்பகுதியில் காணாக்கடியும் உண்டாகும்.

    * பேனின் ஆயுள் ஒரு மாதம் தான். ஒவ்வொரு நாளும் 10 முட்டைகள் வரை இடும்.

    * பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை.

    * ஒரு மாதத்திற்கு 300 முதல் 1000, 2000 என முட்டைகளை இடுகின்றது.

    * பேனின் முட்டையே ஈரு என்று சொல்லப்படும்.

    * முட்டைகளை தலைமயிரில் ஒட்ட வைத்து விடுகின்றன.

    * எட்டு தினங்களுக்குப் பிறகு குஞ்சு உண்டாகும். இது மறு எட்டு தினத்திற்குள் வளர்ந்து விடும்.

    * பேன் முட்டைகள் முக்கியமாக காதின் பின் பக்கம், கழுத்தின் பின்பக்கம் அதிகமாக காணப்படுகிறது

    * பேன்கள் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கின்றது. 15 முதல் 20 சதவிகிதம் பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பாதிக்கின்றது.

    * தோலில் உள்ள குருதியை உறிஞ்சி வாழும்.

    * இவை மனிதனின் உடைகளின் மடிப்புகளில் வசிப்பதுடன் அங்கேயே தங்கள் முட்டைகளை வைத்துவிடுகின்றன.

    * முட்டைகளில் இருந்து வரும் லார்வாக்கள் முதிர்ந்த தலைப் பேன்களைப் போல் இருக்கின்றன.

    * வயதானவர்களிடம், கும்பலாகக் கூடி வசிக்கின்றவர்களிடமும், நீண்ட நாட்களாக உடை மாற்றாதவர்களிடமும், அதிக உடைகளை அணிகின்ற குளிர் நாட்டு வாசிகளிடமும், ராணுவத்தினரிடமும் அதிகம் காணப்படும்.

    * உடல் முற்றும் அல்லது சிறப்பாகத் தோள் பட்டை, மார்பு, பிட்டம் முதலிய இடங்களிலும் அரிப்பு ஏற்படும்.

    * சொறிந்த இடங்களில் நகக்காயங்களும், ரத்தக் கசிவும், பக்கு கட்டுதலும் ஏற்படும். மேகனப்பேன் அல்லது அடிவயிற்றுப்பேன்:

    * மேகனத்தில் இருக்கும் சுருண்ட ரோமங்களிடையே காணப்படும்.

    * இப்பேன்கள் ரோமம் உள்ள கண் இமைகளிலும் அக்குள் ரோமங்களிலும், நெஞ்சு முடிகளிலும் பரவும்.

    * இவை ஒரு நாளைக்கு 10 செமீ அளவு ஊர்ந்துசெல்லும். இதனுடைய எடையை காட்டிலும் பலமடங்கு ரத்தத்தை உறிஞ்சக்கூடியது,

    * இவை உடலுறவின் மூலம் ஆணுக்கும் பரவி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை வெகு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடியது.

    * மேகனத்தில் அரிப்பு, சொறிவதால் புண்கள் உண்டாகும்.

    * அடிவயிறு, தொடை, நெஞ்சு, கைகளில் கரு நிறமுள்ள சிறு தடிப்புகள் ஏற்படும்.

    பேன்கள் பரவும் விதம்:

    * தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றும்.

    * குழந்தைகளுக்கு ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு தங்களுடைய பொருட்களை பகிர்வதால் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

    * மாணவியர் விடுதிகளிலும், ஒருவருடைய சீப்பினை மற்றொருவர் எடுத்து உபயோகிக்கும் பொழுதும், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சீப்பினை பயன்படுத்தும் பொழுதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பேன் பரவுகிறது.

    * மேலும் பேன் உள்ளவர் பயன்படுத்திய ஆடை மூலமாகவும், தலையணை உறை, போர்வை ஆகியவற்றின் மூலமாகவும் பரவுகிறது.

    * நீண்ட தலைமுடி, சுத்தக்குறைவினாலும் பேன் பரவுகின்றது.

    * முக்கியமாக உடல் மற்றும் மேகன பகுதியில் வரும் பேன்கள் ஒழுங்கான சுகாதார முறைகளை பின்பற்றாமல் இருப்பதால் தோன்றும்.

    மருத்துவம்:

    * குழந்தைகளுக்கு பேன்கள் பற்றிய ஒரு அறிவையும் பேன் எப்படி பரவுகிறது என்பதனையும், பேன்களால் ஏற்பட கூடிய பிரச்சனைகளை பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

    * பேன்களை நீக்கும் பொழுது ஆண்பேன், பெண்பேன், பேன் முட்டை முதலிய அனைத்தையும் முற்றிலுமாக நீக்க வேண்டும்.

    * உடலைச் சுத்தமாக வைத்திருப்பது போல துணிகளையும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பேன்கள் குறையும்.

    * ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பேன் தொற்றுவதைத் தவிர்க்க தலையணை உறைகள், போர்வைகள், ஆடைகள் ஆகியவற்றை கொதிக்கும் வெந்நீரில் இட்டு உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.

    * தலைப்பேனை ஒழிக்க மொட்டையடித்து ரோமத்தை அறவே நீக்குதல் வேண்டும். இல்லையேல் முடியை ஒட்ட வெட்டிவிடுதல் வேண்டும். அதேபோல் மேகனப்பேனை ஒழித்திட மேகன பாகத்திலுள்ள ரோமத்தை அகற்ற வேண்டும்.

    * குடும்பத்தில் அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அந்த சீப்புகளை அடிக்கடி கழுவி அழுக்குகளை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

    புறமருந்து:

    * தேங்காய் எண்ணெய்யுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ தலையில் உள்ள பேன்கள் நீங்கும்.

    * தேங்காய் எண்ணையை சூடு செய்து அதில் வேப்பிலைச் சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிக்க பேன் நீங்கும்.

    * வேப்பம்பூவினை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தினம் பயன்படுத்த பேன்கள் வருவது குறையும்.

    * மரத்தினால் ஆன பேன் சீப்புகளைக் கொண்டு அடிக்கடி தலையினை சீவி தலையில் உள்ள பேன்களை நீக்க வேண்டும்.

    * தேங்காய் எண்ணையில் ஒரு டீஸ்பூன் அளவு வேப்ப எண்ணெய் கலந்து தலை முழுவதும் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து குளிக்க பேன் நீங்கும். வாரத்திற்கு இருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்

    * கிராம்பு பொடி செய்து வேப்ப எண்ணைய்யில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிக்க பேன்கள் நீங்கும். வாரத்திற்கு இருமுறை செய்யலாம்.

    * துளசி மற்றும் வேப்பிலை இரண்டையும் தனித் தனியாகக் காயவைத்து, பொடி செய்து இவற்றை சமமான அளவுகளில், எடுத்து, அதைக் கற்றாழை ஜெல்லுடன் சேர்த்துக் கலக்கி தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சுத்தமாக அலசிவிடவும்.

    * நன்றாகப் பொடி செய்த காக்கை கொல்லிப் பருப்பை நீர்விட்டு அரைத்துத் தலையில் தேய்க்கப் பேன்கள் சாகும்.

    * துளசியைத் தலையணைக்கு அடியில் வைத்தும் தூங்கலாம். ஆனால், இதில் பலன் கிடைப்பதற்குக் கொஞ்சம் காலம் ஆகும்.

    * தேவையான அளவு கடுகு எண்ணைய்யை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, அதிகபட்சமாக 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு, சீயக்காய்த்தூள் போட்டு தலைக்குக் குளிக்க வைக்க பேன் தொல்லை நீங்கும்.

    * பத்து வெற்றிலைகளை நன்கு அலசி அரைத்து பேஸ்ட்டாக்கவும். அதைத் தேங்காய் எண்ணைய்யுடன் கலந்து தலையில் பேக்காகப் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசிவிடவும்.

    * ஒரு கைப்பிடி கொழுந்து வேப்பிலைகளை எடுத்து, மிக்சியில் போட்டு பேஸ்ட்போல அரைத்து, இதைத் தலை மற்றும் கூந்தல் முழுவதும் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்க பேன்கள் சாகும்.

    * தேயிலை எண்ணையை தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து குளிக்க பேன் நீங்கும்.

    • உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம்.
    • டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும்.

    ஆண்கள் பலருக்கும் அதிக மீசை, தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதுள்ள காலக்கட்டத்தில் ஏணைய ஆண்களுக்கு மீசை, தாடி அடர்த்தியாக வளருவதில்லை. இதற்கு மோசமான உணவுப் பழக்கம், தவறான உணவு முறை உள்ளிட்ட பல காரணங்களால் மீசை, தாடி வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது.

    அதேபோல் குறிப்பாக சோப்பு, முகத்தில் தடவும், கிரீம், வேலை பார்க்கும் இடத்தின் சுற்றுச்சூழல் நிலை போன்ற காரணங்களாலும் மீசை தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

    புரோட்டீன் நிறைந்த உணவுகள்

    மீசை தாடி வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பிரச்சனை இருக்காது. இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பீன்ஸ், மீன், முட்டை, பால் உள்ளிட்ட உணவுகளை உங்கள் உணவு முறையில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    விளக்கெண்ணெய்

    மீசை மற்றும் தாடி அடர்த்தியாக வளருவதற்கு மற்றொரு மிக எளிதான வழி விளக்கெண்ணெய் கொண்டு தினமும் 15 நிடமிடம் நன்கு மசாஜ் செய்வது நல்லது.

    தூக்கம்

    தூக்கம் உடலுக்கு மிக முக்கியம். உடலின் பல ஆரோக்கிய நன்மைகள் தூக்கத்தை பொறுத்தே இருக்கிறது. அதேபோல் மீசை, தாடி வளர்ச்சிக்கும் தூக்கம் மிக முக்கியம்.

    டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்

    டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருந்தாலும் முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். காரணம் இந்த ஹார்மோன் தான் முடி வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    இந்த ஹார்மோனை அதிகரிக்க மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் 

    ஹேர் க்ரீம்

    ரோஸ்மேரி ஆயில், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பின்பு கழுவினால். மீசை, தாடி வளர்ச்சிக்கு நன்கு உதவும்.

    தண்ணீர்

    உடலில் டாக்ஸின் அல்லது வறட்சி இருந்தாலோ முடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக தினசரி குறைந்தது 8 கிளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மீசை, தாடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தலைமுடி நரைப்பதற்கும் இது முக்கிய காரணமாகும்.

    • பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது.
    • பருவ கால மாறுபாட்டின்போது வெப்பம் அதிகமாக வெளிப்படும்.

    கோடை காலம் முடிவடைந்து நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெண்கள் பலர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

    இத்தகைய பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது. வானிலையில் ஏற்படும் மாற்றமும், மாறும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றமும் முடி உதிர்தலுக்கு வித்திடும்.

    பொதுவாகவே குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்பானது. முடி வளர்ச்சி அடைவதற்காக இயற்கையாக நடைபெறும் சுழற்சியின் ஒரு அங்கமாக முடி உதிரும். ஆனால் அதிகம் முடி உதிர்வது பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    பருவ கால முடி உதிர்வுக்கான காரணங்கள்

    ஈரப்பதம்

    ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உச்சந்தலையின் ஈரப்பத சமநிலையை பாதிக்கலாம். முடி வறட்சி அடையவோ அல்லது அதிகப்படியான எண்ணெய் உற்பத்திக்கோ வழிவகுக்கலாம். இவை இரண்டுமே முடி உதிர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

    சூரிய ஒளி

    தலை முடியில் சூரிய கதிர்வீச்சு அதிகம் படும்போது முடியின் மயிர்கால்கள் சேதமடையக்கூடும். முடி உடைவதற்கும் காரணமாகிவிடும்.

    வெப்பநிலை மாற்றம்

    பருவ கால மாறுபாட்டின்போது சில சமயங்களில் வெப்பம் அதிகமாக வெளிப்படும். சில சமயங்களில் மேகக்கூட்டங்கள் ஒன்று திரண்டு மந்தமான காலநிலையை ஏற்படுத்தும். வெப்பநிலையில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் உச்சந்தலை முடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதுவும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

    தடுக்கும் வழிகள்

    * தலைமுடி, கெரட்டின் என்னும் ஒரு வகை புரதத்தால் ஆனது. பால், பன்னீர், தயிர், முட்டை, கோழிக்கறி, மீன், சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் போதுமான அளவு புரதங்கள் உள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    * உண்ணும் உணவில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவையும் முடி வளர்ச்சிக்கும், முடி வலிமைக்கும் உதவிடும். கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது.

    முட்டை, நட்ஸ் வகைகள், முழு தானியங்களில் வைட்டமின் பி காணப்படுகிறது. இறைச்சிகள், கீரைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து உள்ளடங்கி இருக்கிறது. நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் துத்தநாகம் உள்ளடங்கி இருக்கிறது. இவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூந்தல் நலனை மேம்படுத்தலாம்.

    * தலைமுடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

    * ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை பாதுகாக்கும் இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையில் இருந்து நீங்க வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் தலைமுடியை அலசுவதை தவிர்க்க வேண்டும். முடி வறட்சி அடைவதற்கும், முடி உடைவதற்கும் அது வழிவகுக்கும்.

    * ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடி உடைவதை குறைக்கவும் முடியும்.

    * உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மயிர்க்கால்களை மேம்படுத்துவதற்கும் தலையில் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.

    * உச்சந்தலையில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை நீக்குவதும் முடி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உண்டாக்கும்.

    * சூரிய வெப்பத்தில் இருந்து தலை முடியை பாதுகாக்க, தொப்பி அணியலாம்.

    * நீச்சல் குளம் மற்றும் கடலில் குளித்தால் உடனே நல்ல தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும்.

    • தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.
    • ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    நன்றாக தூங்குவது

    தூக்கமின்மை உடலின் இயற்கையான பழுதுபார்க்கும் செயல்முறைகளை சீர்குலைக்கிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்யும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. கூடுதலாக, இது நச்சுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை பலவீனப்படுத்துகிறது. இந்த வாழ்க்கை முறை தோல் தொய்வு, கருமையான வட்டங்கள் மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இளமை தோற்றத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.

    மது பழக்கத்தை தவிர்க்கவும்

    அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் வயதை அதிகமாக்கும். ஏனெனில் இது சருமத்தை நீரிழப்பு செய்கிறது, வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது. இந்த காரணிகள் முன்கூட்டிய சுருக்கங்கள், மந்தமான மற்றும் சீரற்ற தோல் தொனிக்கு வழிவகுக்கும்.

    நீரிழப்பு

    நிறைய தண்ணீர் குடிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் திறவு கோலாகும். நீரிழப்பு உயிரியல் முதுமையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்க தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


    உடற்பயிற்சி இல்லாமை

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக தோல் பிரகாசம் அதிகரிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சியானது ஆரோக்கியமான மற்றும் அதிக சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மாறாக, உடற்பயிற்சியின்மை உடல் பருமன், நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    புகைபிடித்தல்

    நமது உடல் உறுப்புகளில் புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அதன் விளைவுகள் வயதான செயல்முறைக்கு நீட்டிக்கப்படுகின்றன. மேலும் உடலில் அழற்சியின் அளவை உயர்த்துகின்றன. இந்த வீக்கம் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை சேதப்படுத்துகிறது, இது சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் மந்தமான நிறத்தை உருவாக்க வழிவகுக்கிறது. தோல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதுகாக்க புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

    சூரிய வெளிப்பாடு

    சூரியனின் புற ஊதா (UV) கதிர்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துவது உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அழிக்கிறது. இதனால் அது சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளுக்கு ஆளாகிறது. இது மட்டுமல்லாமல், இந்த தீங்கு விளைவிக்கும் கதிர்களை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது தோல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உங்கள் சருமத்தை இளமையாகவும், புள்ளிகள் இல்லாமலும் வைத்திருக்க, வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.


    மன அழுத்தம்

    மன அழுத்தம் என்பது முதுமைக்கு ஒரு வேகமான வழியாகும். அறியப்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கு அப்பால், மன அழுத்தம் உங்கள் சருமத்தை மங்கச் செய்யும் வீக்கத்தைத் தூண்டுகிறது மற்றும் உங்கள் சரும செல்களை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கிறது. எனவே, தியானம், யோகா அல்லது பொழுதுபோக்குடன் இளமைப் பொலிவு மற்றும் உயிர்ச்சக்தியை அப்படியே வைத்திருக்கவும்.

    ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

    ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழந்து, தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஏற்றுவதன் மூலம் வயதானதை விரைவாகக் கண்காணிக்கலாம். மோசமான ஊட்டச்சத்து தோலின் வயதை துரிதப்படுத்துகிறது. மந்தமான தன்மை, சுருக்கங்கள் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது. கூடுதலாக, அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வீக்கத்திற்கு வழிவகுக்கும், மேலும் வயதான செயல்முறையை விரைவுபடுத்துகிறது. ஒரு சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை ஏற்றுக்கொள்வது இளமை நிறத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சருமத்தை வளர்க்கும்.

    • தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. உடலுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
    • ஊட்டச்சத்து குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    உடலின் உச்சிப் பகுதியை ஆக்கிரமித்துள்ளவை ரோமங்களே. அதை தலைமுடி என்றும், கேசம் என்றும், கூந்தல் என்றும் அழைக்கின்றோம். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்புடனும் இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆண்களை விட பெண்களே கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் கேசத்தைப் பராமரிக்க ஒரு தொகையையே செலவு செய்கின்றனர்.

    தலைமுடி அழகை மட்டும் தருவதில்லை. தலைக்குப் பாதுகாப்பையும், சீதோஷ்ண நிலையை சமப்படுத்தி உடலுக்குப் பாதுகாப்பையும் அளிக்கிறது. சித்தர்கள். முனிவர்கள், ரிஷிகள், ஜடாமுடியுடன் காட்சி தருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

    பிறவியிலேயே எல்லோருக்கும் ஆரோக்கியமான கூந்தல் இருக்கிறது. ஆனால் கவலைப்படுவதாலும், கூந்தலை பாதுகாக்காததாலும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் முடி கொட்டுதல் ஏற்படுகிறது.

    நாம் தலை வாரும்போது சீப்பில் சில முடிகள் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதை அருவருக்கத்தக்க அன்னிய பொருளாகத் தூக்கி எறிந்து விடுகிறோம். உதிர்ந்த முடிகளுக்கு புதிய முடிகள் அதே இடத்தில் முளைத்து விடுவது இயற்கை. சில சமயம் இயற்கை தன்மைக்கு மாறுபட்டு தலைமுடி வேரோடு கொட்டுவதையே முடி கொட்டுதல் என்கிறோம்.

    முடி கொட்டுதலுக்கான காரணங்கள்:

    மனச்சோர்வு, தூக்கமின்மை, மற்றும் நீண்ட நாள் நோய் காரணமாக முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஊட்டச் சத்தின்மையாலும், அதிக சூடான நீரில் குளிப்பதாலும், குளித்த பின் தலையை நன்கு உலர விடாத காரணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன், ஆண்களுக்கு ஆண்மையை வெளிப்படுத்தும் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்களின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களும் முடி கொட்டுதலை ஏற்படுத்தும்.

    தலையில் ஏற்படும் பொடுகு, தோல் நோய்கள், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ரத்த சோகை, ஒத்துவராத மருந்துகள், ரசாயனக் கலப்புள்ள ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவற்றினாலும் முடி கொட்டுதல் ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுவதாலும், உடல் உஷ்ணத்தாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

    • இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம்.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    இனி முகத்தை பிரகாசமாக வைக்க பார்லர் செல்ல வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

    * பச்சை பயறு மாவு, தயிர், மஞ்சள் சேர்த்து முகத்தில் கழுத்து பகுதியில் தடவி காயவைத்து கழுவினால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறம் குறையும்.

    * 2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின்னர் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையும்.

    * கற்றாழை சாறை குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் தடவி, வந்தால் முகப்பரு குறையும். சிலருக்கு இது ஒவ்வாமை இருந்தால் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளலாம்.

    * பப்பாளி சாறுடன், முல்தானி மெட்டியை மிக்ஸ் செய்து முகத்தில் தடவிவிட்டு காய்ந்த பின்னர் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

    * வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழத்தின் தோல்களை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.

    * பாலை காய்ச்சி ஆற வைத்த பின்னர் காட்டன் பஞ்சை வைத்து பாலில் தோய்த்து முகத்தை துடைத்து வந்தால், முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு சுத்தமாகும்.

    • ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    • முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.

    இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாகும். எனினும், இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.

    முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முக முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இந்த வீட்டு வைத்தியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் முக முடிகளை அகற்றுவதன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.

    முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கன்னம், காதுகள், நெற்றி பகுதிக்கு அருகில் முடி வளரத் தொடங்குகிறது.

    முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் முறைகளைக் காணலாம்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிக்க முதலில் பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை சுத்தமாக்கலாம். இதனுடன் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.

    கடலை மாவு மற்றும் மஞ்சள்

    கடலை மாவு மஞ்சள் பேக் முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

    எலுமிச்சை மற்றும் தேன்

    முகப்பொலிவுக்கு ஒரு ஸ்பூன் அளவிலான தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம். இப்போது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.

    முட்டை மற்றும் சோளமாவு

    சோளமாவு மற்றும் முட்டையைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவை தலா ஒரு டீஸ்பூன் அளவிலான சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.

    இந்த கலவையை பிரஷ் கொண்டு முகம் முழுவதும் மற்றும் முடிகள் உள்ள பகுதியில் நன்கு தடவிக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடம் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை

    கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவிலான சர்க்கரை மற்றும் அரை எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் தடவி பின்னர் கன்னங்கள் மற்றும் நெற்றியில் மெதுவாக தேய்க்க வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள முடியை நீக்க உதவுகிறது.

    பால் மற்றும் மசூர் பருப்பு

    முகத்தை வறட்சி மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, 2 ஸ்பூன் அளவிலான மசூர் பருப்பை பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.

    இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த பேக் பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை நீக்கி, முகத்தில் உள்ள கறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

    இந்த ஃபேஸ் பேக்குகளின் உதவியுடன் முகத்தில் தோன்றும் முடியை எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நீக்கலாம். எனினும், உணர்திறன் மிகுந்த சருமம் என்பதால், புதிய பொருட்களைத் தேர்வு செய்யும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    ×