search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "face scrub"

    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    • கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் கழுத்தில் கருமை தோன்ற ஆரம்பிக்கும்.
    • கருமை நீங்க பாசிப்பயிறு மிகவும் உதவியாக இருக்கும்.

    சிலருக்கு முகம் முழுவதும் பளிச்சென்று இருந்தாலும், கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இது போல கண்டிப்பாக நிறைய பேருக்கு இருக்கும். அது மட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் கழுத்தில் அதிக கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் இது போல கருமை தோன்ற ஆரம்பிக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் பல பேருக்கு கழுத்து கருமை பிரச்சனை அதிகம் இருக்கும். இந்த கருமை பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள்...

    கழுத்து கருமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் சரியான பராமரிப்பின்மையே. இது சிலருக்கு மிக அடர்த்தியாக இருக்கும். இதனால் எவ்வளவு மேக்கப் செய்தாலும் அதில் பயனில்லாமல் இருக்கும். இதற்கு பாசிப்பயிறு மிகவும் உதவியாக இருக்கும். கழுத்து கருமை நீங்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. பாசிப்பயிரை சிறிது சூடு செய்து அரைத்து கழுத்தில் தடவி வந்தால் கருமையும் குறையும்.

    முதலில் கழுத்தில் தயிரை தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்பு மஞ்சள், தேன் கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி விட்டு பாசிப்பயிறு, தயிர் சிறிது கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து கருமை குறையும். பாசிப்பயிரை அரைக்கும்போது கல்லுப்பு சிறிது சேர்த்து அரைத்தால் கெடாமல் இருக்கும். பின்பு தக்காளியை இரண்டாக நறுக்கி மஞ்சளில் தேய்த்து கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கும்.

    அதன் பின்னர் 2 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, இதை கருமையான இடத்தில் கழுத்தை சுற்றி நன்கு தடவிக் கொள்ளுங்கள். பின்பு நன்கு உலர்ந்த பின்பு அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால் மீதம் இருக்கும் கருமை மற்றும் இறந்த செல்கள், அழுக்குகள், கிருமிகள் எதுவாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

    ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்து பிறகு துடைத்து எடுத்தீர்கள் என்றால் கழுத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி விடும்.

    • பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும்.
    • கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    முகத்தில் இயற்கையான பளபளப்பு தோன்றும் வகையில் அழகுபடுத்த பெண்கள் பல வகையான அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் சருமம் உள்ளிருந்து ஊட்டத்தைப் பெறுகிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே இயற்கையான பளபளப்பை பெற நீங்கள் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பாதவர் யார்? பெண்கள் அழகாக இருக்க ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். மேலும் பல கிரீம்களை தங்கள் முகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் இயற்கையான பளபளப்பைக் காண விரும்பினால், சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாக மாற்றுவது தான்முக்கியம்.

    இதற்காக, உங்கள் அன்றாட வழக்கத்தில் சில பழக்கங்களை கடைப்பிடித்தால், படிப்படியாக தோல் பிரச்சினைகள் மறைந்துவிடும், மேலும் சில அழகுசாதனப் பொருட்களில் இருந்தும் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

    அன்றாட வழக்கத்தின் நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை நோய்களில் இருந்து விலக்குவது மட்டுமல்ல. இதனுடன், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள் மற்றும் உங்கள் தோல், முடி மற்றும் நகங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே எந்தெந்த நல்ல பழக்கங்கள் உங்கள் முகத்தில் பொலிவைத் தரும் என்பதை நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

    நாம் விழா அல்லது வெளியில் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேவையவற்றை உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. 10 நாட்கள் அல்லது 1 வாரத்திற்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ருட் போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும். ஜங்க்புட் தவிர்த்துவிட வேண்டும்.

    தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கைகால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இரவில் தூங்கும்போது தேங்காய் எண்ணெய், கற்றாழை, வைட்டமின் E மாத்திரை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து தூங்கி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    அதன்பிறகு பசும்பாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும். இதை விட முக்கியமான ஒன்று தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன் மாசு மருக்கள் தவிர்க்கலாம்.

    காலை உணவு முதல் இரவு உணவு வரை சரியான நடைமுறையைப் பின்பற்ற முடியும், மேலும் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக மாறும். கிரீன் டீ பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டிடாக்ஸாக வேலை செய்கிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் முகத்தில் பளபளப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். உங்கள் தினசரி வழக்கத்தில் பச்சை மற்றும் பருவகால காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து, சீரான உணவைப் பின்பற்றுங்கள்.

    ரோஸ் வாட்டர் சிறந்த இயற்கை மூலப்பொருளாகும், இது சருமத்தை அழகாக்க பயன்படுகிறது. தினமும் இதை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

    • வெயில் காலத்தில் கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும்.
    • பப்பாளி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

    பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுப்பதில்லை. கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

     எலுமிச்சை ஸ்க்ரப்:

    முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதனை கைகளில் தடவி, சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எனவே கைகளில் இருக்கும் கருமை நிறம் மாறி கைகள் பளிச்சென்று இருக்கும்.

      பப்பாளி ஸ்க்ரப்:

    கைகளில் உள்ள கருமை நீங்க பப்பாளி அதிக அளவில் உதவும். இந்த பேக் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் பப்பாளி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

     காபி ஸ்க்ரப்:

    இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி, தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஸ்க்ரப்பை கைகளை தடவி சிறிது நேரம் கழித்து நன்றாக மசாஜ் செய்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும்.

    தயிர் மற்றும் மஞ்சள் பேக்:

    இதற்கு அரை கப் தயிர் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளில் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

    • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம்.
    • அத்திப்பழ ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    பொதுவாக அத்திப்பழத்தில் சத்துக்கள் அதிகம் இருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் படி மருத்துவர்கள் நமக்கு கூறியுள்ளனர். இதோடு இந்த அத்தி பழத்தை பேஸ்ட்டாக அரைத்து, நம் முகத்தில் அப்ளை செய்து கொண்டால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குமாம். அப்படிப்பட்ட இயற்கையான மருத்துவ குணமுள்ள இந்த அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    அத்திப்பழம் – 2

    தேன் – 3 டீஸ்பூன்

    தயிர் – 2 டீஸ்பூன்

    செய்முறை:

    அத்திப்பழ ஃபேஸ் பேக்கை தயாரிக்க அத்திப்பழத்தை தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும். இதோடு 2 ஸ்பூன் தயிர் மற்றும் 3 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவி சுத்தமாக துணியில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு நாம் அரைத்து வைத்துள்ள, ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழிவிக்கொள்ளலாம். அத்திபழத்தில் இருக்கும் சில சத்துக்கள் நம் முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி, அழகான முகம் கிடைக்க உதவியாக இருக்கும்.

    • முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது.
    • எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது.

    சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத தவறுகள் நிறைய இருக்கின்றது. அதில் சில தவறுகள் இங்கே உங்களுக்காக...

    * வெந்நீரில் குளிப்பது நல்லது தான் ஆனாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது கூந்தலில் உள்ள வேர்களை பாதிப்பதோடு, பலவீனமாக்கும்.

    * மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால் ஏற்படக்கூடும். அது அழகு பிரச்சினை இல்ல, ஆரோக்கியப் பிரச்சினை என்று புரிந்துகொண்டு டாக்டரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    * உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு இயற்கையாகவே அழகு கிடைக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதில் எல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்கு கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாகத்தான் கையாள வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினால் போதுமானது.

    * எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படி செய்தால் பரு போகாது. அதனுள் இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்புகளை அதிகமாக்கவே செய்யும்.

    * உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினால் சருமத்துக்கு பல மடங்கு வேகமாக வயசான தோற்றத்தை அளிக்கும் என்று கூறுகிறார்கள் சரும நிபுணர்கள்.

    * ரசாயனங்களால் ஆன பிளீச்... அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

    * சில யூடியூப் வீடியோக்களில `ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா'னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமாக உலரச் செய்யும். எனவே முகத்தில் பருக்கள், அரிப்பு, வீக்கம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

    * தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் முடியின்வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால் அதை தவிர்ப்பதே நல்லது.

    இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு... ஒரு விஷயத்தைப் செய்தால் கிடைத்துவிடும். அது தான், சத்தான உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணி குடிக்க வேண்டும். அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்...!

    • பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்.
    • கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும்.

    சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். பருக்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்.

    பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள், கிள்ளாதீர்கள், கிழிக்காதீர்கள். அப்படி செய்தால் தோல்களில் உள்ள கொலாஜென் என்னும் செல்கள் இறந்து அந்த இடத்தில் பெரிய குழி அல்லது அது தழும்பாக மாறிவிடும். கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் முகத்தில் உள்ள சதைகளை குறைந்தது 5 நிமிடங்களாவது மசாஜ் செய்து இலகுவாக செய்ய வேண்டும்.

     தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அந்த கலவையை தினமும் 30 நிமிடம் தடவி வந்தால் நிச்சயமாக 30 நாட்களுக்குள் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும்.

     தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கண்ட்ரோல் செய்யும். அதுமட்டுமல்லாது ஆன்டி ஏஜிங் கொலாஜென் செல்கள் உயிர்பிக்க வழிவகுக்கும்.

    தினமும் சீரகம் கலந்த தண்ணீர் 4 லிட்டர் கண்டிப்பாக அருந்த வேண்டும். ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும். ஐஸ் கியூப் கொண்டு தினமும் 2 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து ஒரு பளபளப்புத்தன்மை உருவாகும்.

    • முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
    • பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

    வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..

    ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:

    முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

    பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

    பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.

    பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:

    பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

    பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:

    பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.

    • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது
    • கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்கிறது.

    நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

    ரோஜா பூ - 1 கப்(உலர்ந்தது )

    பொடித்த சர்க்கரை- 1 டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

    தண்ணீர் - 1 டீஸ்பூன்

    முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா, பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.

    10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். உங்கள் முகம் அழகிய பூ போல மலந்திருப்பதை பார்க்க முடியும்.

    ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.

    ×