search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oily Skin"

    • எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறைகளை பார்க்கலாம்.
    • தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

    இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

    இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

    * அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

    * தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

    * தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

    * துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

    இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

    • பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான்.
    • வறண்ட சருமத்திற்கு ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது.

    சருமத்தில் 4 வகைகள் உள்ளன. சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம். ஒரு பழமொழி உண்டு `ஆல் த நேச்சுரல் புராடெக்ட்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் குட்' உங்கள் சருமத்திற்கு பொருந்துகிற

    இயற்கை பொருள் என்னுடைய சருமத்திற்கு விஷமாக இருக்கலாம். இயற்கையான புராடெக்ட்களிலேயே இந்த நிலை இருக்கும்பட்சத்தில் காஸ்மெட்டிக், கெமிக்கல் எனில் இன்னும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.

    பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான். இதனை எல்லா சருமத்திற்கும் பெரும்பாலான பார்லர்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு கிளென்சிங் முறை உள்ளது.

    உதாரணத்திற்கு ஃபேஸ் வாஷ்களே ஜெல் முறை எனில் வறண்ட சருமத்திற்கு, வேம்பு, ஆரஞ்ச் அடிப்படையாக கொண்ட ஃபேஸ் வாஷ் எனில் ஆயில் சருமத்திற்கு வேறு என பிரிப்பது போல் கிளென்சிங்கிலும் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    ஆனால் அந்த அளவிற்கு இங்கே மெனெக்கெடுகிறார்களா? என கவனிக்கவும். மேலும் அதீத வறண்ட சருமம் கொண்ட சருமத்திற்கு பொதுவாக ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது. காரணம் ஏற்கனவே வறண்ட சருமத்தின் துளைகள் திறந்து தான் இருக்கும் எனும்போது அதனை சரும இறுக்கத்திற்கான ஃபேஷியல்கள் தான் கொடுக்க வேண்டும். இதனால் முகம் இளமை பெற்று, சுருக்கங்கள் மறையும்.

    அதேபோல் ஆயில் சருமம் எனில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் ஃபேஷியல்களை கொடுக்க வேண்டும். இதனால் பருக்கள், வடுக்கள் மறையும்.

    இந்த கோல்டு, டைமண்ட் ஃபேஷியல்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தங்கம் விற்கும் விலைக்கு எப்படி சரும காஸ்மெட்டிக்குகளில் பயன்படுத்த முடியும். எனவே இப்படியான மாய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

    ஃபேஷியலின் சிறப்பே கொடுக்கப்படும் மசாஜ் மற்றும் க்ளீனிங் முறையில் தான் சிறப்பே உள்ளது. உங்கள் பிரச்சினை என்னவோ, சருமம் எப்படிப்பட்டதோ அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஃபேஷியல் தேர்வு இருக்க வேண்டும். எந்த கிரீம்களும் சருமத்தின் இயற்கையான மெலனினை கட்டுப்படுத்தி உங்களை வெள்ளையாக்காது, எனவே சிவப்பு நிறத்திற்கு மயங்க வேண்டாம். ஆரோக்கியமான சருமம் தான் முக்கியம். அதற்கான ஃபேஷியல் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.

    ×