search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Massage"

    • ஆண்களுக்கு கூடுதலாக கனமான தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் போடுவது போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
    • மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

    முடி உதிர்வு என்பது பெண்களை போன்றே ஆண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவருகிறது.

    உலகளவில் மூன்றில் ஒரு சதவீதத்தினர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாக முடி உதிர்வு என்பதை தாண்டி அதிகப்படியான முடி உதிர்வை ஆண்களும் சந்தித்துவருகிறார்கள். முடி உதிர்தலுக்கு பொதுவாக உணவு, தாது பற்றாக்குறை, மருந்துகள், மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மரபியல் ரீதியிலான காரணங்கள் சொல்லப்படுகிறது.

    ஆண்களுக்கு கூடுதலாக கனமான தொப்பியுடன் அலைவது, ஹெல்மெட் போடுவது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆண்கள் முடி உதிர்தலை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

    தலைமுடியை லேசாக ஷாம்பு போட்டு அலசி எடுங்கள். குறைவான முடி என்பதால் எளிதாக தலை குளியல் மேற்கொள்ளலாம். தினசரி தலை குளியல் செய்வதால் பொடுகு உண்டாகும் அபாயம் குறையும். சுத்தமான கூந்தல் என்பதால் முடி உதிர்வு அதிகமாக இருக்காது.

     

    வைட்டமின்கள் உடல் ஆரோக்கியம் போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியவை. வைட்டமின் இ உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. முடியின் வேர்க்கால்களை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி சத்து முடி ஆரோக்கியத்தையும் நிறத்தையும் பராமரிக்க உதவுகிறது. அதனால் உணவில் புரதத்தை மேம்படுத்தும் உணவுகள் எடுத்துகொள்வது நல்லது. இறைச்சிகள், மீன், சோயா போன்ற புரதம் உள்ள உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும்.

    அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தமுடியும். சிறிதளவு எண்ணெய் எடுத்து மயிர்க்கால்களை மசாஜ் செய்தாலே போதுமானது. இது மயிர்க்கால்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

    தலைகுளியலுக்கு பிறகு ஈரத்தலையோடு துவட்ட வேண்டாம். முடி ஈரமாக இருக்கும் போது பலவீனமான நிலையில் இருக்கும். அப்போது வேகமாக துவட்டினால் முடி உதிர்வு வேகமாக இருக்கும். அதே போன்று ஈரத்தலையோடு எப்போதும் சீவ வேண்டாம். அவசரம் எனில் பற்கள் பெரிதாக இருக்கும் சீப்பை பயன்படுத்தலாம். விரல்களால் தலையை கோதியபடி தலைமுடியை ஒழுங்குப்படுத்தலாம். அதே போன்று தலை முடி காய வேண்டும் என்று ஹேர் டிரையர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இது முடியை பலவீனமாக்கும்.

    முடி உதிர்வு இருக்கும் போது பெண்களை போன்று ஆண்களும் முடி உதிர்வுக்கான பராமரிப்பு செய்யலாம். பூண்டு சாறு, வெங்காய சாறு அல்லது இஞ்சி சாறு என ஏதாவது ஒன்றை எடுத்து தலை முழுக்க உச்சந்தலை முதல் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். இரவு நேரங்களிலும் இதை தடவி இரவு முழுக்க ஊறவைத்து மறுநாள் காலை தலையை தேய்த்து குளித்தால் முடி உதிர்வு நிற்கும்.


    முடி உதிர்வு அதிகமாக இருக்கும் போது என்ன செய்வது என்று கேட்கும் ஆண்கள் இந்த பராமரிப்பை மேற்கொள்ளலாம். ஆண்கள் க்ரீன் டீ கூந்தலில் தடவும் போது அவை முடி உதிர்வு பிரச்சனையை நீக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. வெந்நீரில் இரண்டு க்ரீன் டீ பேக் சேர்த்து காய்ச்சி அவை குளிர்ந்ததும் தலைமுடியில் தடவவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் முடி உதிர்வு கட்டுப்படும்.

    முடி உதிர்வு இருக்கும் போது ஆல்கஹால் பழக்கத்தை கொண்டிருந்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே நல்லது. புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை குறைக்க செய்யும். இது முடி வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி முடி உதிர்வை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை விரும்பினால் இந்த பழக்கங்களை தவிர்ப்பதே நல்லது.

    மன அழுத்தம் அதிகமாகும் போது முடி உதிர்வும் அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தியானம் செய்வதன் முலம் மன அழுத்தம் குறைந்து ஹார்மோன் சமநிலை அடைகிறது.

    • இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.

    சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

    போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை நடவடிக்கை
    • ஸ்பாக்களின் உரிமையாளர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    சென்னையில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ், பாலியல் தொழில்கள் சட்டவிரோதமாக நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

    ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா வீடியோ பதிவு.
    • 2 செல்போன், லேப்டாப் பறிமுதல்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவர் அங்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.

    அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக அவர் உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அவர்கள் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் முன்னிலையிலேயே பெண்ணின் உறவி னர்கள் சரமாரியாக தாக்கினர். பின்பு அவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.

    அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் கிளு கிளு வீடியோ காட்சிகள் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை.
    • மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    நீளமான அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. இதை எப்படி எளிதில் பெறுவது என்று சொல்கிறோம்.

    மசாஜ்

    உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும்.

    அவ்வபோது ட்ரிம் செய்யவும்

    நீங்கள் சலூனுக்கு செல்வதை விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம்தானே! ஆனால், உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். இது உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.

    சப்ளிமென்ட்

    சரியான விட்டமின்களை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். கடைகளில் கிடைக்கும் விட்டமின் மாத்திரைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருக்கும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்றசப்ளிமென்ட்களும் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

    ஷாம்பு

    நல்ல ஷாம்பூ நல்ல கூந்தலை கொடுக்கும். ஷாம்பூ கூந்தலை நன்றாக கிளென்ஸ் செய்து தூசிகளில் இருந்து காத்து கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

    குளிர்ந்த நீரில் கூந்தலை அலசவும்

    இந்த எளிமையான டிப் உங்கள் கூந்தலுக்கு பல வித்தியாசங்களை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ததும் குளிந்த நீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்க்கவும்.

    ஹீட் ஸ்டலிங் செய்வதை குறைத்திடுங்கள்

    ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கர்லர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும். சரியான ஹீட் புரொடெக்டிவ் கிரீம், ஸ்பிரேக்களை பயன்படுத்திய பிறகே இந்த சாதனங்களை கூந்தலில் பயன்படுத்தவேண்டும்.

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    • ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தொடரப்பட்டது
    • இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது

    ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

    அந்த மனுவில், ஆகஸ்ட் 18, 2021 அன்று டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்கின்றனர். ஆகவே ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது, டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே அந்த வழக்கின் முடிவு தெரியும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    தள்ளுபடி செய்யப்பட்ட அந்த மனுவில், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்துடன் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.
    • வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

    * கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

    * தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அத்துடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

    * முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

    * முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.

    * ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

    * கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

    * வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.

    * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து, முகத்தில் தேய்த்து காய்ந்ததும், அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * முட்டைகோசுடன் பன்னீர் ரோஜாவை மசித்து அதில் பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    * வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

     * சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்.

    * தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏன் கட்டிப்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி பார்ப்போம்.

    உடல் நலம்

    வலி நிவாரணம்:

    உடல் ரீதியான தொடுதல், மசாஜ் அல்லது எளிய அரவணைப்பு போன்றவை இயற்கை வலி நிவாரணிகளான எண்டோர்பின்களின்வெளியீட்டை தூண்டும். வலியின் உணர்வை குறைக்கவும், அசவுகரியத்தை போக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு:

    கட்டிப்பிடிப்பது போன்ற நேர்மறையான உடல் தொடர்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதும், ஆக்சிடாசின் வெளிப்படுவதும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இதய ஆரோக்கியம்:

    உடல் தொடுதல், குறிப்பாக கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    மன நலம்

    மனநிலை மேம்பாடு:

    கட்டிப்பிடிப்பது உட்பட உடல் ரீதியான தொடுதல் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடும். உணர்வுகளை சீராக கடத்துவதற்கு வழிவகை செய்யும். இயற்கையாகவே மன நிலையை மேம்படுத்துவதில் அரவணைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    கவலை-மனச்சோர்வு:

    கட்டிப்பிடித்தல் போன்ற உடல் ரீதியான தொடுதல் ஆறுதலையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு உணர்வையும் தரும்.

    மன அழுத்தம்:

    தொடுதல் ஆக்சிடாசின் வெளியீட்டை தூண்டி மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோலின் அளவை குறைக்கும். அதனால் மன அழுத்தம் குறையும். நாள்பட்ட மன அழுத்தத்தில் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும். மன அழுத்த மேலாண்மையை நிர்வகிக்கும் கருவியாக செயல்படும். அன்றாட வாழ்வின் சவால்களை சமாளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    உணர்ச்சி:

    கட்டிப்பிடித்தல் என்பது வாய்மொழி அல்லாத சக்தி வாய்ந்த தொடர்பு வழிமுறையாகும். உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.

    நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தவிர செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிக்கவும் மறவாதீர்கள். தன்னைத்தானே கட்டிப்பிடிப்பதும் கூட சிறப்பானதுதான். மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு இரு கைகளையும் தோள்பட்டைகளில் அழுத்தி தழுவி அரவணையுங்கள். சுய இரக்கத்துடனும், சுய அன்புடனும் கைகளை தழுவுவது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.

    அன்பு, பாசம், இன்பம், துக்கம் என அத்தனை வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த பிணைப்பாக அரவணைப்பு அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்டிப்பிடிப்பது ஆக்சிடாசின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டச் செய்யும். இது காதல் ஹார்மோன், பிணைப்பு ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது.

    கட்டிப்பிடிக்கும் நபரிடத்தில் நம்பிக்கை, பச்சாதாபம், இணக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதில்இருந்து உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்துவது வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.

    • ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
    • தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.

    சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.

     அரவைணப்பு:

    குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.

    பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.

     மசாஜ்:

    தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சூடான நீரில் குளிக்க வைத்தல்:

    குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.

    ஆடை:

    குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தடுப்பூசி:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

    தாய்ப்பால்:

    பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    டயப்பர் மாற்றுதல்:

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

    • பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது.
    • எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.

    * முதலில் குழந்தையின் தலையில் கைகளை வைத்து சிறிது எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

    * மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

    * பின்னர் இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

    * வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

    * மேலும் குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்க வேண்டும்.

    * பின்னர் தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.

    * அதேபோல் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

    * அதன்பிறகு குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலை கொண்டு நீவ வேண்டும்.

     * குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விட வேண்டும்.

    * இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.

    ×