search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைவளர்ப்பு"

    • பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள்.
    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தங்களின் நடை, உடை, பாவனைகள் பிள்ளைகளிடத்தில் பிரதிபலிக்கும் என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் பின்பற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்து பிள்ளைகளும் அவற்றை பின்தொடர்வார்கள். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றியும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    ஒழுங்கற்ற நடத்தை:

    தாய், தந்தையரில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். காபி பருகினால் டம்ளரை பருகிய இடத்திலேயே வைத்துவிடுவார்கள். அவரசமாக புறப்படும்போது குளித்துவிட்டு வந்த டவலை நாற்காலியில் அப்படியே போட்டுவிடுவார்கள். ஆடை மாற்றும்போதும் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிடுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை நேர்த்தியாக மடித்து அலமாரியில் வைக்கமாட்டார்கள்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே காலணிகளை நேர்த்தியாக கழற்றி வைக்காமல் தனித்தனியாக சிதறி கிடக்கும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனையே பின்பற்ற தொடங்குவார்கள். அது வாழ்நாள் முழுவதும் பின்தொடர வழிவகுத்துவிடும். அதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தங்கள் பழக்கவழக்கங்களில் ஒழுங்கற்ற நடத்தைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

     போட்டி மனப்பான்மை

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் திறன்களை மதிப்பிடுகிறார்கள். அப்படி செயல்படுவது குழந்தைகள் தங்களுடைய தனித்திறனை கண்டறியவோ, மெருகேற்றவோ வழி இல்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் கடுமையாக போட்டிப்போடும் மன நிலையே மேலோங்கும். அது அவர்களின் சுய மரியாதையை எதிர்மறையாக பாதிக்கலாம். இத்தகைய போட்டியில் வெற்றிபெற முடியாமல் போகும்போது விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு உண்டாகலாம். குழந்தைகள் சுயமாகவே தங்கள் திறமையை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடக்கூடாது.

    சுகாதாரம்

    தினமும் குளிப்பது, உள்ளாடைகளை மாற்றுவது, சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேர்த்தியாக ஆடை அணிவது போன்ற பழக்கவழக்கங்களை பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்பே எந்த உணவுப்பொருளையும் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் பல் துலக்காமல் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை என்று கூறி அத்தகைய பழக்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் குழந்தைகளும் அப்படியே செயல்பட தொடங்கிவிடும். இது வாய்வழி சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தினமும் குளிக்கும் வழக்கத்தை பின்பற்ற தவறினால் குழந்தைகளுக்கும் அத்தகைய பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     மற்றவர்களை தாக்குதல்

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அடித்து கண்டிக்கும் பழக்கத்தை பெற்றோர் பின்பற்றக்கூடாது. தவறு செய்தவர்களை அடிப்பதுதான் சரி என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தங்களிடம் பிரச்சினை செய்யும் மற்ற குழந்தைகளை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றிவிடுவார்கள். தவறு செய்யும்போது மென்மையாக கண்டிக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்தான் குழந்தைகளும் அத்தகைய பழக்கத்தை பின் தொடர்வார்கள்.

    வார்த்தைகள்

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பேச ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் பயன்படுத்தும் சொற்களை கொண்டு தங்களுடைய சொற்களஞ்சியத்தை உருவாக்குவார்கள். பெற்றோர் கெட்ட வார்த்தைகள் பேசினால் அதுவும் அவர்கள் மனதில் பதிந்துவிடும். தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களின் குடும்ப விஷயங்களை பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

     நகம் கடித்தல்

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர் நகம் கடிப்பார்கள். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அந்த பழக்கத்தை குறிப்பிட்ட வயதுக்குள் கைவிட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுதல்

    மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பெற்றோர் அதிகமாக பயன்படுத்தினால் குழந்தைகளும் அந்த நடைமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் குறிப்பிட்ட நேரமே பார்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது குழந்தைகள் மோகம் கொள்வதை தவிர்க்க முடியும்.

     ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

    உணவு, நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடும்போது அவை தரையில் விழாமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அப்படி சாப்பிட பழகுவார்கள். உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உணவுப்பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கேக், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளை பெற்றோர் பின்பற்றினால்தான் குழந்தைகளிடத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

    • கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
    • ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.

    குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படுவது அல்லது சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சினைகள் சிறுநீர்ப்பாதையிலோ, சிறுநீர்ப்பையிலோ, சிறுநீரகங்களிலோ கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

     எனவே, நீங்கள் குழந்தைக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அந்த பரிசோதனைகளின் மூலம் கிருமித்தொற்று உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எந்த இடத்தில் தொற்று உள்ளது என்றும், எந்த வகையான கிருமித்தொற்று என்றும் தெரிய வரும். அந்த பரிசோதனை முடிவுகளை வைத்து, பிரச்சினைக்கு எந்த ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முடிவுசெய்து பரிந்துரைப்பார்.

     ஆண்குறியின் முன்தோல் துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (ஃபிமோசிஸ்) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும். இந்த பிரச்சினையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்சினை ஏற்பட்டாலோ, அடைப்பு அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

    • அறிவு திறன் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த சில வழிகள் உள்ளது. உங்கள் பிள்ளைக்கு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையின் திறனையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

     விளையாட்டுகள்:

    ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு வேடிக்கையான மற்றும் சவாலான பிரைன் கேம்கள் தேவைப்படுகின்றன. இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும். அத்துடன் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும்.

    மன அழுத்தம்:

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தை வழங்க வேண்டும், மேலும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. எனவே உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பள்ளிப் பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    தூக்கம்:

    குழந்தைகளின் நினைவாற்றலை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்கள் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம், மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அவசியம். இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெற்றிருப்பார்கள்.

    நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் ப்ரோசீடிங்சில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர்.

     பச்சை காய்கறிகள்:

    பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் எ,பி , சி, டி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சிறந்த காய்கறிகளாகும். உங்கள் குழந்தை தினமும் இவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான குழம்புகளிலும் பயன்படுத்தலாம்.

     நட்ஸ்:

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    மேலும் பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

    முட்டை:

    நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது. இவை பெரும்பாலும் முட்டை மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தையின் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள்.
    • 20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள்

    படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள். ஆனால் பாடங்களை படிக்கும்போது ஒரு சில நுட்பங்களை கையாண்டால் அவற்றை எளிதாக மனதில் பதிய வைக்க முடியும். இவ்வாறு நினைவாற்றல் நுணுக்கங்களை கடைப்பிடிக்கும் மாணவர்கள், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...

    நீங்கள் படிக்கும் பாடங்களை ஒலிப்பதிவு (ரெக் கார்டு) செய்து வைத்துக் கொண்டு, அதை ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது ஒலிக்கச் செய்து கேளுங்கள். உங்களுடைய குரலில் பதிவு செய்யப்படும் தகவல்களை முளை சீக்கிரமாகவே உள்வாங்கிக்கொள்ளும்.

    20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள். முதல் இருபது நிமிடங்கள் படித்த பாடத்திற்கும். அடுத்த 20 நிமிடங்கள் படிக்கப்போகும் பாடங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் புதிய பாடங்கள் எளிதாக மனதில் பதியும்.

    படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது, அவற்றை மனதில் நிறுத்துவதற்கான வழி என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 'மைண்ட் மேப் எனப்படும் மன வரைபடம் செய்யும் முறையும் அதிக பலன் தரும். ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் 'மைண்ட் மேப்' செய்யுங்கள்.

    தூங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் படித்த பாடங்களை ஒரு கதை போல நினைவுபடுத்துங்கள்.

    முக்கியமான வினாக்கள் அல்லது மறந்து போகக்கூடிய வினாக்களை அடிக்கடி படியுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அவற்றை திரும்பத்திரும்ப சொல்லிப் பாருங்கள்.

    பாடங்களை சில பொருட்கள் அல்லது சூழ் நிலைகளுடன் தொடர்புப்படுத்தி மனப்பாடம் செய்யுங்கள். உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள்.

    படித்த பாடங்களில் உள்ள தகவல்களை 'மைண்ட் மேப்' செய்யும் முறை:

    முதலில் மனதுக்குள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதன் நடுவில் ஒரு சிறிய வட்டம் வரையுங்கள். அதற்கு நீங்கள் படிக்கப்போகும் பாடத்தின் முதன்மை தலைப்பை வையுங்கள். அதைச் சுற்றிலும் பல வட்டங்களை வரைந்து, அவற்றில் எல்லா துணை தலைப்புகளையும் அடுக்குங்கள். அவற்றின் கீழ் அந்த தலைப்புகளுக்கான இதர தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். இவ்வாறு கற்பனை செய்து படிக்கும்போது நீங்கள் படித்தது எளிதாக மனதில் பதியும்.

    நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரையாடுங்கள். நீங்கள் படிக்கும் பாடத்தின் பொருள் புரியவில்லை என்றால். அதை புரிந்து கொண்ட பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

    பாடங்களை உணர்ந்து படியுங்கள். உதாரணமாக உடற்கூறியல் தேர்வுக்கு படிக்கும்போது, உடற் கூறு மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, அவற்றின் பெயர்களை உரக்கச் சொல்லி படியுங்கள், உங்களுக்கு பிடித்த பாடல்களின் ராகத்தில், பாடங்களை அமைத்துப் பாடிய படி படியுங்கள். இவ்வாறு செய்யும்பொது பாடங்கள் நினைவில் பதியும். உலகம் முழுவதும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

    • தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோர்கள் பிசியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

    குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெற்றோருக்கு முதன்மை பொறுப்பு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆளுமையின் முழுமையான இணக்கமான வளர்ச்சிக்கு, அவர்கள் ஒரு குடும்ப சூழலிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் கொண்ட சூழ்நிலையிலும் வளர வேண்டும்

    * ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் என்றால் என்ன? தவறான தொடுதல் என்றால் என்ன? என்பதை பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * மேலாடை இன்றியோ, ஆடை இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாக தெரியலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    * குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடுநேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனமாக இருக்க வேண்டும்.

    * பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால் அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர் வீட்டு முகவரி உள்பட வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    * தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    * நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

    • பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது.
    • எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்வது அவசியமானது. அது குழந்தைகளின் சருமத்துக்கும், எலும்புகளுக்கும் வலுசேர்க்கும். உடல் எடை, வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.

    * முதலில் குழந்தையின் தலையில் கைகளை வைத்து சிறிது எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்ய தொடங்க வேண்டும். கைவிரல்களின் அழுத்தம் மென்மையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் எலும்பு பகுதிகளும், இணைப்பு பகுதிகளும் வலிமையாக இருக்காது.

    * மூக்கு, காது மடல்களை மென்மையாக வருடிவிட வேண்டும்.

    * பின்னர் இரு கைகளையும் மார்பு பகுதியில் வணங்குவது போல் குவித்து வைத்து மெதுவாக நீவி விட வேண்டும்.

    * வயிற்று பகுதியில் மசாஜ் செய்யும்போது அடி வயிற்றில் கையை வைத்து கடிகார முட்கள் சுழலுவது போல் மெதுவாக அழுத்திவிட வேண்டும்.

    * மேலும் குழந்தையின் முட்டியையும், பாதங்களையும் பிடித்தபடி வயிற்றை நோக்கி மெதுவாக அமுக்க வேண்டும்.

    * பின்னர் தொடை பகுதியில் இருந்து உள்ளங்கால் வரை நீவி விட வேண்டும்.

    * அதேபோல் தோள்பட்டையில் இருந்து உள்ளங்கை வரைக்கும் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தையின் மணிக்கட்டை அனைத்து திசைகளிலும் மெதுவாக திருப்பி மசாஜ் செய்து விட வேண்டும்.

    * அதன்பிறகு குழந்தையின் உள்ளங்கால்களில் பெருவிரலை கொண்டு நீவ வேண்டும்.

     * குழந்தையின் கால்களின் பத்து விரல்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை கொண்டு மெதுவாக சொடுக்கு எடுத்து விட வேண்டும்.

    * இறுதியில் குப்புற படுக்கவைத்து விரல் நுனிகளால் குழந்தையின் முதுகெலும்புகளை மேலிருந்து கீழாக மெதுவாக நீவி விட வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து குழந்தைகளுக்கு மசாஜ் செய்து வந்தால் ரத்த ஓட்டம் மேம்படும். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையும் வராது.

    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது.
    • குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

    குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பல பெற்றோர்களின் அணுகுமுறை தவறானதாக இருக்கிறது. சிறு தவறு செய்தால் கூட குழந்தைகளை கடுமையாக திட்டும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவும் செய்கிறார்கள். அவர்கள் விளையாடுவதற்கு கூட நேரம் ஒதுக்காமல் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இத்தகைய அணுகுமுறை குழந்தைகளை மனதளவில் பலவீனப்படுத்தும்.

    எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் விதைத்து பெற்றோரை எதிரியாக பாவிக்க வைத்துவிடும். குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள் குறித்தும், அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    பாதுகாப்பு

    குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அன்பினால் அவர்களின் நலன் மீது பெற்றோர் கூடுதல் அக்கறை கொள்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கத்தில் வெளி இடங்களுக்கு செல்லும்போது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சில பெற்றோர் அருகில் இருக்கும் பகுதிக்கு கூட குழந்தைகள் தனியாக செல்ல அனுமதிப்பதில்லை.

    சமூகம் மீது தவறான புரிதலை குழந்தைகளிடத்தில் விதைப்பதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்ட வேண்டுமே தவிர, பயத்தையும், பீதியையும் மனதில் பதிய வைத்துவிடக்கூடாது.

    வெளி இடங்களுக்கு குழந்தைகள் சுதந்திரமாக சென்று வர வேண்டும். ஏதேனும் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தால் கூட அதை துணிச்சலோடு எதிர்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். தற்காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கலாம். அது மன வலிமையை அதிகப்படுத்தும். சுய பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தும். துன்பங்களையும், சவால்களையும் சமாளிக்க போராடும் ஆற்றலையும் கொடுக்கும்.

    படிப்பு

    இன்றைய போட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள். படிப்பை முன்னிறுத்தி அவர்களின் தனித்திறமைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். வெறும் படிப்பு மட்டுமே ஒரு குழந்தையை வாழ்வின் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லாது. தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமயோசிதமாக செயல்படும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அவற்றை வளர்ப்பதற்கு முயற்சிக்காமல் கல்வியில் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு கூட மதிப்பளிப்பதில்லை.

    இத்தகைய போக்கு குழந்தைகளிடத்தில் பதற்றம், மன அழுத்தம், சோர்வுக்கு வித்திடும். குழந்தைகளின் விருப்பங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை கேட்டறிந்து அதில் போதுமான நேரத்தை செலவளிக்க அனுமதிக்க வேண்டும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ளும் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். அதனை புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

    தனிப்பட்ட விருப்பம்

    பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதற்கு குழந்தைகளை நிர்பந்திக்கிறார்கள். குழந்தைகளின் தேவைகளை விட தங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். தங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ளாவிட்டால் கடுமையாக தண்டிக்கவும் செய்வார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பங்களை கவனத்தில் கொள்வதில்லை. உங்கள் விருப்பங்களை குழந்தைகளிடத்தில் திணிப்பது சுயநலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களை வழிநடத்துவதே சரியானது.

    தண்டனை வழங்குதல்

    குழந்தைகள் சிறு தவறு செய்தால் கூட கடுமையாக திட்டுவது, அடிப்பது, மனரீதியாக காயப்படுத்துவது போன்ற கடுமையான அணுகுமுறையை பல பெற்றோர் கையாளுகிறார்கள். குழந்தைகளை திருத்துவதற்கு இந்த அணுகுமுறைதான் சரியானது என்று கருதுகிறார்கள். அப்படி கடுமையாக நடந்து கொள்வது உறவில் விரிசலை ஏற்படுத்தும். மீண்டும் தவறு செய்தால் பெற்றோரிடம் கூறாமல் மறைப்பதற்கு முயற்சிக்கும். அது தவறான பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்கு அடிகோலிடும். செய்த தவறுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இனி தவறு நடக்காமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிடலாம். அவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். அவர்களின் பேச்சில் வெளிப்படும் தவறுகளை திருத்துவதற்கு முயற்சிக்கலாம்.

    ஒப்பிடுதல்

    குழந்தைகளை சக குழந்தைகள், உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிடுவது இயல்பானது. இந்த அணுகுமுறை குழந்தையின் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்திறமைகள் வேறுபடும். அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் தனித்துவமான குணங்கள் மற்றும் சாதனைகளை கொண்டாடுங்கள். அவர்களின் ஆர்வங்களை ஊக்குவியுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிருங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குங்கள்.

    • குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
    • குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை.

    குளிர்காலத்தில் பெரும்பாலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குளிரை தாங்கும் அளவுக்கு அவர்களது உடல்வாகு அமைந்திருப்பதில்லை. அதனால் குளிர்காலம் நெருங்கிவிட்டாலே பெற்றோர் குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குளிரை சமாளிப்பதற்கு ஏதுவான ஆடைகளை வாங்கி கொடுப்பார்கள். குளிரை விரட்டும் கவசத்தை தலைக்கு அணிவிப்பார்கள்.

    ஆனால் நார்வே நாட்டில் இதற்கு தலைகீழாக நடக்கிறது. அங்கு பனி காலம் தொடங்கிவிட்டால் சக்கர தள்ளுவண்டியில் குழந்தைகளை ஏற்றிவிடுகிறார்கள். விளையாடுவதற்குத்தான் குழந்தைகளை அதில் வைக்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்.

    அதுதான் குளிர்காலத்தில் குழந்தைகளின் வசிப்பிடம். ஆம்! குளிர்காலத்தில் குழந்தைகள் வீட்டு படுக்கை அறைக்குள் சொகுசாக தூங்குவதில்லை. இந்த தள்ளுவண்டியில்தான் தூங்கவைக்கப்படுகிறார்கள். அதுவும் வீட்டுக்கு வெளியேதான். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உறைபனியில் இப்படி குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இது நார்வே மக்களிடையே பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை.

    கடுமையான குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய அப்பகுதியின் குளிர் காலநிலைக்கு குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக பெற்றோர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டில் உறங்குவதை விடவும், வெளியில் அதிக நேரம் உறங்குவதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.

    குழந்தைகளை இப்படி குளிரில் நடுங்க விடுவது புதிய நடைமுறை அல்ல. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றப்படும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது.

    • குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
    • உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைகளின் புத்தி கூர்மையும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு வயதிலேயே எண்ணி பார்க்க முடியாத சாதனைகளை அசாத்தியமாக படைக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உலக சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடிக்கிறார்கள்.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை உலக சாதனை படைத்து 'கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு', 'இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு' ஆகிய சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளது.

    அந்த குழந்தையின் பெயர் சாய் ஈஷா. தந்தை சக்தீந்திரன், தாய் முத்தம்மாள். புலியூர்குறிச்சி கிராமத்தில் வசிக்கிறார்கள். சக்தீந்திரன் டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இல்லத்தரசியான முத்தம்மாள் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே பி.ஏ. படித்து வருகிறார்.

    120 பொருட்கள் மற்றும் காட்சிகளை சரியாக அடையாளம் காட்டும் புத்திக் கூர்மை தான் இவர்களின் மகளான சாய் ஈஷாவை சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வைத்துள்ளது. குழந்தையின் திறமை பற்றி தாயார் முத்தம்மாள் பகிர்ந்து கொண்டவை...

    ''சாய் ஈஷா 9 மாத குழந்தையாக இருந்தபோது, மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பார்க்கும் பொருட்களை சரியாக அடையாளம் காட்டத் தொடங்கினாள். அதை நான் கவனித்தேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்தால் அதை அவள் அப்படியே திருப்பி செய்து காட்டுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கும் சரி, விருந்தினர்கள் வீட்டுக்கு வரும் போதும் சரி வணக்கம் சொல்வாள். இதையெல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுக்காமலேயே செய்தாள்.

    இதை வைத்து நாம் செய்வதை எல்லாம் புரிந்து வைத்துக்கொண்டு செயல்படுகிறாள், அதனால் அவளிடம் எளிதாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம்.

    எந்த வகையில் பயிற்சி அளித்தீர்கள்?

    ஒவ்வொரு பொருளாக கொடுத்து பயிற்சி அளித்தோம். எந்த பொருளையும் மறக்காமல் நினைவில் வைத்து சொல்ல தொடங்கினாள். இப்படி 120 பொருட்களை 10-வது மாதத்தில் சரியாக அடையாளம் காட்டினாள். ஆரம்பத்தில் காலையில் எழுந்ததும் அவள் பார்க்கும் சூரியன், இரவில் பார்க்கும் நிலவு ஆகியவற்றை காட்டிக்கொடுத்து பயிற்சி அளித்தோம். இதை பிளாஷ் கார்டில் காண்பித்து கேட்கும்போதும் அதை அவள் சரியாக அடையாளம் காட்டினாள்.

    அதேபோல் வீட்டில் உள்ள பொருட்களை காட்டி பயிற்சி அளித்து விட்டு, மறுநாள் கேட்கும் போது சரியாக அடையாளம் காட்டினாள். இவ்வாறு அவளுக்கு தினமும் பயிற்சி அளித்தோம். மேலும் உடலின் பாகங்களை பட அட்டைகள் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். அதையும் அவள் சரியாக அடையாளம் காட்டினாள். சில படக்காட்சிகளை லேப்டாப் மூலம் காண்பித்து பயிற்சி அளித்தோம். இவ்வாறு 80 படங்களை சரியாக அடையாளம் காட்டினாள்.

    சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது பற்றி?

    கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு, இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய 2 உலக சாதனை புத்தகத்துக்கும் நாங்கள் விண்ணப்பித்தோம். அப்போது உலக சாதனை புத்தக நிர்வாகிகள், 'சாதாரணமாக குழந்தைகள் 50 பொருட்களை அடையாளம் காட்டுவார்கள். அதிக நினைவாற்றல், புத்திக்கூர்மை உள்ள குழந்தையாக சாதனை படைக்க வேண்டும் என்றால் 100-க்கும் மேலான பொருட்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்கு' என்றனர்.

    10 மாதத்தில் இதுவரை எந்தக் குழந்தையும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களை அடையாளம் காட்டி சாதனை படைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

    இந்த சாதனையை படைக்க குழந்தைக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தோம். இந்த பயிற்சியின் தாக்கம் 120 பொருட்கள் வரை அடையாளம் காட்டினாள். அதுதொடர்பான வீடியோ காட்சிகளை உலக சாதனை புத்தகத்துக்கு அனுப்பியிருந்தோம்.

    அதைப்பார்த்துவிட்டு, வீடியோ கால் மூலம் குழந்தையை பரிசோதித்து உலக சாதனை புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். அதற்கான விழா சென்னையில் நடந்தது. அதற்கு எங்களை அழைத்திருந்தார்கள். உடல்நலக்குறைவு காரணமாக எங்களால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் விருதை எங்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

    இந்த ஆண்டு வெளியாகும் அவர்களுடைய சாதனை புத்தகத்தில் 'எக்ஸ்டிராடினரி கிராஸ்பிங் பவர்' பிரிவில் எனது குழந்தையின் பெயரும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவித்தனர். விருது கிடைத்ததாக எனக்கு தகவல் வந்ததும் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

    இந்த சாதனை புத்தகத்துக்கு நானாகத்தான் விண்ணப்பித்தேன். குழந்தை விருது பெற்றது தொடர்பாக எனது கணவரிடம் நான் சொன்னபோது அவர் நம்பவில்லை. விருது வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் அவரும் நம்பியதோடு எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷம் அடைந்தனர்.

    எதிர்கால லட்சியம்?

    எதிர்காலத்தில் அவள் என்ன ஆக விரும்புகிறாளோ அதற்கு நான் உதவியாக இருப்பேன். அவள் வளரும்போதுதான் லட்சியம், நோக்கம் எல்லாம் தெரியவரும். எதில் ஆர்வம் காட்டுகிறாளோ அது தொடர்பாக படிக்க வைக்க எண்ணியிருக்கிறேன். எனது குழந்தை டாக்டராக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதை அவளிடம் திணிக்க விரும்பவில்லை. அவளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பாக படிக்க வைப்பேன்.

    அவளுக்கு இருக்கிற நினைவாற்றல், புத்திக்கூர்மையை பயன்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவும் அவளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அதிலும் அவள் சாதனை படைப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது என பெருமிதத்துடன் கூறுகிறார், முத்தம்மாள்.

    • தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது.
    • சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் என பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இதுபோன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    * குழந்தைகளைக் கோடைக்காலத்தில் குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதில் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா என பார்க்க வேண்டும்.

    * அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்கு சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதில் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து குளிக்க வைக்கலாம்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருட குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது என சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல்இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு என கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்கு குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்க கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்து குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்கு குளிக்க வைத்த பிறகு, உடலுக்கு குளிக்க வைக்க வேண்டும். சளி பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்கலாம்.

    • எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும்.
    • என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம்.

    அடுத்த ஐந்து ஆண்டுகள் எந்தெந்தத் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் இருக்கும், அதற்கு இப்போது என்ன படிப்பினைத் தேர்வு செய்து படிக்கலாம் என வழிகாட்டுகிறது இந்த பதிவு.

    அனிமேஷன் சார்ந்த படிப்புகள்

    திரைப்படங்கள் முதல் மொபைல் செயலிகள் வரை பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அனிமேஷன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கண்டுபிடிக்கப்போகும் பொருள்களுக்கு முன்வடிவம் கொடுத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனிமேஷன் உதவுகிறது.

    நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ்

    மருத்துவப் படிப்பு என்றால் எம்.பி.பி.எஸ் என்று மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால், அதைத் தாண்டியும் பல்வேறு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. பல் மருத்துவம், கால்நடை மருத்துவம்தான் எம்.பி.பி.எஸ்-க்கு அடுத்தபடியாகப் பலரும் கால்பதிக்கும் இடமாக இருக்கிறது. இதற்கும் அடுத்தபடியாக இருப்பது, நேச்சுரோபதி மற்றும் யோகா சயின்ஸ். இந்தப் படிப்புக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

    வர்த்தக கலை படிப்புகள்

    கடந்த கால் நூற்றாண்டாக அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பு ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இப்போது அந்தப் படிப்புகளுக்கான வரவேற்பு சற்றுக் குறைந்து, வர்த்தகப் படிப்புகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கித் துறை, இன்சூரன்ஸ் துறை, மியூச்சுவல் பண்ட் துறை எனப் பல துறைகள் கணினி மயமாகிவிட்டன. இதனால் அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை வழங்கப்படுவது சாத்தியமாகி இருக்கிறது.

    மீன்வளப் பொறியியல்

    மெக்கானிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப் பலரும் அறிந்த பொறியியல் படிப்புகள் ஒருபக்கம் இருக்க, மீன்வளப் பொறியியல் போன்ற பலரும் அறியாத பொறியியல் பாடப்பிரிவுகள் நிறையவே உள்ளன. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கும் பிரிவும் நல்ல கல்லூரியும் அவசியம்.

    மீன்வளத்துறை சார்ந்து மீன்வளப் பொறியியல் நான்காண்டு படிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பொறியியல் கல்லூரி நாகப்பட்டினத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 35 இடங்கள் சேர்க்கைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

    மருத்துவப் படிப்புகள்

    மனிதர்களுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவப் படிப்புக்கு என்றுமே தனி மவுசு உண்டு. காரணம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப புதுப்புது நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களின் தேவையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போதைய சூழலில், மருத்துவத்துறையில் தனிப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    ரோபாட்டிக் சர்ஜரி, ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபாட்டிக்ஸ் முதலிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும்பட்சத்தில் மருத்துவப் படிப்பு படித்தவர்களுக்கு இனி சிறப்பான வரவேற்பு கிடைக்கும். கால்நடைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இனிவரும் காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்

    பொறியியல் துறையை எடுத்துக்கொண்டால், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பொறியியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. பொறியாளர்களுக்கான தேவை என்றுமே அதிக அளவில் உள்ளன. ஐ.டி தொழில்நுட்பத்தின் தேவை குறிப்பிட்ட சில பிரிவுகள் என்றில்லாமல், இன்று அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுகின்றன.

    தாவரவியல் மற்றும் விலங்கியல்

    இளங்கலை மூன்றாண்டு படிப்பான தாவரவியல் மற்றும் விலங்கியல், பலராலும் கவனம் பெறாத படிப்பாக உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான அடிப்படை, பள்ளிகளில் படிக்கிற தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகள்தாம். இன்று தனியார் கல்லூரிகள் அதிக அளவில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளை வழங்குவதில்லை. இதனால் பள்ளிகளில் இந்தப் படிப்புகளைக் கற்றுத் தருவதற்கான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகள் படித்தால் எதிர்காலத்தில் குறைந்தபட்சம் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.

    கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பு

    எல்லோருக்கும் தெரிந்த படிப்புதான் கணிதம் என்றாலும் இன்றைக்கு கம்ப்யூட்டர் மற்றும் நிதி சார்ந்த துறை உள்பட பல்வேறு படிப்புகளுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றனர் கணிதம் மற்றும் புள்ளியியல் படிப்பினைப் படித்த மாணவர்கள். ஆசிரியர் பணி என்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பினைத் தாண்டி, டேட்டா அனாலிட்டிக்ஸ், ஆக்சூவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல சம்பளத்துடன்கூடிய வேலைவாய்ப்பு இருக்கிறது. வெறும் கணிதப் படிப்பு என்பதுடன் நின்றுவிடாமல், பைதான், ஆர் லாங்குவேஜ் ஆகிய படிப்புகளையும் கற்று வைத்திருந்தால், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இளங்கலை கணிதப்படிப்பு படித்தாலே நல்ல வேலை கிடைக்கும் என்கிறபோது, முதுகலை கணிதப் படிப்பினைப் படித்தால் எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

    • மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன.

    இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

    பால்

    புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மீன்

    ஞாபக சக்தி அதிகரிப்பதில் முக்கியமான உணவுப்பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முட்டை

    முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உருவாக்கத்திற்கு முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

    நட்ஸ்:

    வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5 அல்லது 6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுக்க வேண்டும்.

    ஆரஞ்சு பழம்:

    ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது, இது ஆரோக்கியமானது. மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு நாள் முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

    ×