search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "memory"

    • ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
    • பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள்.

    ஸ்மார்ட்போன் உபயோகத்தை நேரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள். ரைம்ஸ், பள்ளிக்கூட பாடங்களைத் தவிர்த்து பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு கடிவாளம் போடுங்கள். நீச்சல், ஸ்கேட்டிங், சிலம்பம், நடனம்... போன்ற பயிற்சிகளில், அவர்களை பிசியாக்குங்கள். குடும்பமாக விளையாடுவது, பூங்கா-கடற்கரைக்கு அழைத்துச் செல்வது... என குடும்பமாக நேரம் செலவழியுங்கள்.

    காமன் சென்ஸ் மீடியா என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில், ஸ்மார்ட்போனுக்கு 50 சதவித இளையோர்களும் (13-18 வயது), 36 சதவித பெரியவர்களும் (18-24 வயது) அடிமையாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், பெற்றோர் குழந்தைகள் முன்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையும், வீடியோக்கள் பார்ப்பதையும், விளையாடுவதையும் குறைத்து கொண்டு, முன்மாதிரியாக நடந்து கொள்வது அவசியம்.

    குறும்புத்தனம் நிறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைக்க, சாப்பாட்டை எளிதாக ஊட்ட... என குழந்தை வளர்ப்பில் இந்த காலத்து பெற்றோர் கையில் எடுத்திருக்கும் ஆபத்தான விளையாட்டு பொருள்தான், ஸ்மார்ட்போன்.

     வசதியில்லாதவர்கள், வசதியானவர்கள் என்ற எந்தவித பாரபட்சமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லா குழந்தைகளின் கைகளிலும் ஸ்மார்ட்போன் தவழ்கிறது. `பேபி ரைம்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளின் மூளைக்குள் ஊடுருவி, `யூ-டியூப் ஷார்ட்ஸ்', `பேஸ்புக் ரீல்ஸ்' பார்க்கும் அளவிற்கு, குழந்தைகளின் மூளையை ஸ்மார்ட்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    குழந்தைகள், ஸ்மார்ட்போன் பார்ப்பது தவறில்லை, என்றாலும் அது கட்டுப்பாட்டோடு நடைபெற வேண்டும். இல்லையேல், குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

    பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரை யிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும். `ஸ்மார்ட்போன்' என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும்.

    2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்துகொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடான `ஸ்கிரீனிங்' நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

     கடந்த 8 ஆண்டுகளில், நிறைய குழந்தைகள் `ஸ்பீச் தெரபி' எனப்படும், பேச்சுப்பயிற்சிக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஸ்மார்ட்போன்கள் மிகமுக்கிய காரணம். ஆம்...!

    8 மாதம் தொடங்கி, 2 வயதிற்குள்தான் குழந்தைகள் பேச கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி, அதற்கு பதில் பேசி பழகவும், மற்றவர்களின் கேள்விக்கு யோசித்து பதில் கொடுக்கவும் அந்த வயதில்தான் பழகுவார்கள். அந்த காலகட்டத்தில், ஸ்மார்ட் போனுக்குள் குழந்தைகள் மூழ்கும்போது பேச்சுப்பயிற்சி, பதில் பேசும் திறன்... என எல்லாமே தடைப்படும்.

    வழக்கமான குழந்தைகளில் இருந்து வேறுபட்டு, சிறப்பு குழந்தைகளை போல செயல்பட ஆரம்பிப்பார்கள். அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல், பதில் பேச தெரியாமல் தவிப்பார்கள்.

    அதேபோல, `காக்னெட்டிவ் டெவலெப்மெண்ட்' எனப்படும் அறிவாற்றல் வளர்ச்சியும் தடைப்பட்டு, குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மேலும் சமூகத்துடன் சேர்ந்து வாழ, தயக்கம் காட்டுவார்கள்.

    ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் பிஞ்சு குழந்தைகளின் கண்களை வெகுவாக பாதிக்கும். கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிப்பதால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல் உண்டாகும். எதிலும் முழு கவனமின்றி, மிகவும் குழப்பமாகவே காணப்படுவார்கள். இதுமட்டுமல்ல, அவர்களது தூக்கம், உணவு முறை, உடல் பருமன் என பல்வேறு பிரச்சினைகளை ஸ்மார்ட்போன் உண்டாக்கும்.

    • பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள்.
    • 20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள்

    படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்வது மாணவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. பலரும் தங்களுக்கு ஞாபகத்திறன் இல்லை என்று வருந்துகிறார்கள். ஆனால் பாடங்களை படிக்கும்போது ஒரு சில நுட்பங்களை கையாண்டால் அவற்றை எளிதாக மனதில் பதிய வைக்க முடியும். இவ்வாறு நினைவாற்றல் நுணுக்கங்களை கடைப்பிடிக்கும் மாணவர்கள், மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...

    நீங்கள் படிக்கும் பாடங்களை ஒலிப்பதிவு (ரெக் கார்டு) செய்து வைத்துக் கொண்டு, அதை ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது ஒலிக்கச் செய்து கேளுங்கள். உங்களுடைய குரலில் பதிவு செய்யப்படும் தகவல்களை முளை சீக்கிரமாகவே உள்வாங்கிக்கொள்ளும்.

    20 நிமிடங்கள் என பிரித்து பாடங்களைப் படியுங்கள். முதல் இருபது நிமிடங்கள் படித்த பாடத்திற்கும். அடுத்த 20 நிமிடங்கள் படிக்கப்போகும் பாடங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் புதிய பாடங்கள் எளிதாக மனதில் பதியும்.

    படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது, அவற்றை மனதில் நிறுத்துவதற்கான வழி என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 'மைண்ட் மேப் எனப்படும் மன வரைபடம் செய்யும் முறையும் அதிக பலன் தரும். ஆகையால் ஒவ்வொரு பாடத்திற்கும் 'மைண்ட் மேப்' செய்யுங்கள்.

    தூங்குவதற்கு முன்பு அன்றைய நாளில் படித்த பாடங்களை ஒரு கதை போல நினைவுபடுத்துங்கள்.

    முக்கியமான வினாக்கள் அல்லது மறந்து போகக்கூடிய வினாக்களை அடிக்கடி படியுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அவற்றை திரும்பத்திரும்ப சொல்லிப் பாருங்கள்.

    பாடங்களை சில பொருட்கள் அல்லது சூழ் நிலைகளுடன் தொடர்புப்படுத்தி மனப்பாடம் செய்யுங்கள். உங்களுடைய பாடத்தை ஒரு கதை போல உருவாக்கி அதை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள்.

    படித்த பாடங்களில் உள்ள தகவல்களை 'மைண்ட் மேப்' செய்யும் முறை:

    முதலில் மனதுக்குள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதன் நடுவில் ஒரு சிறிய வட்டம் வரையுங்கள். அதற்கு நீங்கள் படிக்கப்போகும் பாடத்தின் முதன்மை தலைப்பை வையுங்கள். அதைச் சுற்றிலும் பல வட்டங்களை வரைந்து, அவற்றில் எல்லா துணை தலைப்புகளையும் அடுக்குங்கள். அவற்றின் கீழ் அந்த தலைப்புகளுக்கான இதர தகவல்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். இவ்வாறு கற்பனை செய்து படிக்கும்போது நீங்கள் படித்தது எளிதாக மனதில் பதியும்.

    நண்பர்களுடன் சேர்ந்து விவாதியுங்கள். தெரிந்ததை பகிர்ந்தும், தெரியாததை விளக்கியும் உரையாடுங்கள். நீங்கள் படிக்கும் பாடத்தின் பொருள் புரியவில்லை என்றால். அதை புரிந்து கொண்ட பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

    பாடங்களை உணர்ந்து படியுங்கள். உதாரணமாக உடற்கூறியல் தேர்வுக்கு படிக்கும்போது, உடற் கூறு மாதிரிகளை எடுத்து ஒவ்வொரு பகுதியையும் உணர்ந்து, அவற்றின் பெயர்களை உரக்கச் சொல்லி படியுங்கள், உங்களுக்கு பிடித்த பாடல்களின் ராகத்தில், பாடங்களை அமைத்துப் பாடிய படி படியுங்கள். இவ்வாறு செய்யும்பொது பாடங்கள் நினைவில் பதியும். உலகம் முழுவதும் இந்த முறையை பின்பற்றுகிறார்கள்.

    • சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது.
    • நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும்.

    இந்த காலத்து குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட்டானவர்கள். கற்றுக்கொடுக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கும், சில ஸ்மார்ட்டான பயிற்சிகள் தேவை.

    குறிப்பாக, கவனம் சிதறாமல் இருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்க செய்யவும் ஒருசில மன பயிற்சிகள் தேவைப்படுகிறது'' என்று பக்குவமாக பேச ஆரம்பிக்கிறார், திரேசா.

    சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்.சி. சைகாலஜி படித்திருக்கிறார். கூடவே, குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது குறித்தும், கவனிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறார். இதுசம்பந்தமான ஆய்வுகளில் கடந்த 10 வருடங்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டிருப்பதோடு, இதற்காக தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

    அந்த அனுபவத்தின் அடிப்படையில், நினைவாற்றல் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி அதை ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் மீது அதீத அக்கறை காட்டுவதோடு, அவர்களை சாதனையாளர்களாக மாற்ற முயற்சிக்கிறார்.

    ''சாதாரண மனிதர்கள், சாதனையாளர்களாக மாற அசாத்திய புத்திக்கூர்மை அவசியமாகிறது. புத்திக்கூர்மைக்கு, கவனிப்பு திறனும், சிறப்பான நினைவாற்றலும் தேவை. நம் குழந்தைகளிடம் இவை இரண்டையும் மேம்படுத்திவிட்டால், அவர்கள் இயல்பானவர்களைவிட சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட்டானவர்களாக மாறிவிடுவார்கள்'' என்று கூறுபவர், சிறுசிறு பயிற்சி மற்றும் முயற்சிகளினால் குழந்தைகளின் நினைவாற்றலையும், கவனிப்பு திறனையும் மேம்படுத்த முடியும் என நம்பிக்கை கொடுக்கிறார்.

    ''5 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள், தொடர்ச்சியாக ஒருசில பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய நினைவாற்றல் மற்றும் கவனிப்பு திறன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. பல வருடங்களாக, குழந்தைகளுடன் பேசி பழகி ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான், இதை உறுதிப்படுத்தினோம்.

    நினைவாற்றல் அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தைகளின் கவனமும் எந்த பக்கமும் சிதறாமல், ஒரே இலக்கில் நிலைநிறுத்தப்பட்டு, கற்றலும்-புரிதலும் அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மை பயக்கும் பயிற்சிகளைத்தான், நான் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்'' என்பவர், இத்தகைய பயிற்சிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றி, அதை சுலபமான வழிகளில் கொண்டு சேர்க்கிறார்.

    ''கல்வி, வகுப்பு தேர்வுகள்.... என ஏற்கனவே 'ஸ்டிரெஸ்' மனநிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இந்த பயிற்சிகள் சுகமான அனுபவமாக இருக்கவேண்டுமே தவிர, கூடுதல் சுமையாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், அவர்கள் விரும்பும் வகையிலான பயிற்சி முறைகளை வடிவமைத்திருக்கிறோம்.

    எழுத்து பயிற்சிகள், ரூபிக் கியூப் விளையாட்டுகள், சிந்திக்க தூண்டும் கேள்வி பதில்கள், புதிர் விளையாட்டுகள், யோகா-தியானம்... என பயிற்சி அனுபவத்தை விளையாட்டு அனுபவமாக்கி, குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கிறேன்.

    என்னுடைய பயிற்சிகளை குழந்தைகளும் விரும்புகிறார்கள்'' என்றவர், இந்த பயிற்சிகள், அவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் மாற்றும் என்கிறார்.

    ''நினைவாற்றல் பயிற்சி குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். எதையும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். தங்களுடைய முழு திறனையும் உணர்ந்திருப்பார்கள். சமூக உறவிலும், குடும்ப உறவிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்வார்கள்.

    பிரச்சினைகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட பயிற்சிகள்தான், இந்த காலத்துக் குழந்தைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறது'' என்பவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பதாக கூறினார்.

    • இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
    • ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

    வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது.

    ''உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது என்று நோயாளிகள் அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன். உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும். இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'' என்கிறார், அமெரிக்க மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் மார்க் ஹைமன். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தவறாமல் தினமும் பின்பற்றுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    இன்சுலின் உணர்திறன்:

    உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

    மூளை ஆரோக்கியம்:

    உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும். அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.

    நாள்பட்ட நோய்கள்:

    உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், வகை ௨ நீரிழிவு, பக்கவாதம், மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    நச்சு நீக்கம்:

    உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியும். கடுமையான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றும்போது வியர்வை வெளியேறும். அதன் மூலம் நச்சுக்களும் வெளியேறிவிடும். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்படவில்லை என்றால் நீராவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் வெளியேறிவிடும்.

    கடினமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றமுடியாதவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றலாம். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும். அது ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், நிணநீர் மண்டலத்தில் உருவாகும் அனைத்து நச்சு திரவங்களைவெளியேற்றவும் உதவி புரியும்.

    • ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது.
    • அவர்களின் பாடங்களை உண்மையாக புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு நேரத்தை வழங்க வேண்டும்.

    உங்கள் குழந்தையின் கற்றல்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் போராடலாம், மேலும் தன்னம்பிக்கையுடன் உணரலாம். நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. உங்கள் பிள்ளைக்கு குறிப்பாக எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிப்பது அவர்களின் நினைவாற்றலையும் மூளையையும் மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

    ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் சவாலான வழி நினைவக விளையாட்டுகளை விளையாடுவதாகும். இவை எங்கும் விளையாடக்கூடிய சுயமாக உருவாக்கப்பட்ட கேம்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடுவதற்கான போர்டு கேம்களாக இருக்கலாம், நண்பர்களுடன் விளையாடும் ஆன்லைன் கேம்களாக இருக்கலாம்.

    விருப்பங்களும் யோசனைகளும் வரம்பற்றவை. உங்கள் குழந்தை வளரும் ஆண்டுகளில் இதுபோன்ற விளையாட்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்கு பயிற்சி அளித்து, விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுபடுத்தும் மற்றும் நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்கும். (உதாரணத்திற்கு விடுகதை, பொதுஅறிவு).

    பள்ளி பாடங்களை கற்றுக்கொள்வதற்கு இது குறிப்பாக பொருந்தும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறை உள்ளது. அவர்களின் பாடங்களை உண்மையாக புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு நேரத்தை வழங்க வேண்டும். மேலும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும்போது அவர்கள் எந்தவித அழுத்தமோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உணரக்கூடாது. மாறாக, உங்கள் பிள்ளையின் ஆர்வத்தை ஊக்குவித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இந்த மனப்பான்மை மிகவும் அவசியம், அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    நினைவகத்தை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் சுமார் 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வழக்கமான தூக்க அட்டவணையை வைத்திருப்பதும் முக்கியம். மேலும் அவர்கள் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்வது முக்கியம்.

    இதனால் அவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு எழுந்திருக்கும் முன் போதுமான ஓய்வு பெறலாம். குறிப்பாக இளம் வயது குழந்தைகளுக்கு தூக்க நேரமும் முக்கியமானது.

    நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஆய்வில், காலையில் பார்த்த கார்ட்டூன் படங்களை நினைவுபடுத்தும் குழந்தைகளின் திறன் பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு 10 சதவீதம் அதிகரிக்கிறது.

    பச்சை இலை காய்கறிகள் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் வளமான மூலமாகும். ஏ, பி, சி, ஈ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், கடுகு இலைகள், கீரை, பீட்ரூட் இலைகள் போன்றவை சேர்க்க வேண்டிய காய்கறிகள்.

    உங்கள் குழந்தை தினமும் அவற்றை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீரையுடன் சாலட்களையும் தயார் செய்யலாம். புதினா இலைகளை புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் சேர்க்கலாம், கொத்தமல்லி இலைகளை அனைத்து வகையான கறிகளையும் அலங்கரிக்க பயன்படுத்தலாம்.

    குழந்தைகள் பெரும்பாலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். மேலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க அவர்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. அவர்களின் உணவில் கொட்டைகள் மற்றும் விதைகளை சேர்ப்பது ஆற்றலை வழங்குவதோடு அவர்களின் மூளையை திறனை அதிகரிக்கவும் உதவும். வால்நட்ஸ் மூளையின் வடிவத்தை ஒத்திருக்கிறது மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்குவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

    பாதாம் பருப்பை 28 நாட்களுக்கு உட்கொள்வது நினைவாற்றலை கணிசமாக மேம்படுத்தும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஆரோக்கியமான பருப்புகளில் நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை.

    பூசணி விதை, சியா விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகள் அழற்சி எதிர்ப்பு விளைவை கொண்டிருக்கின்றன, இது குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இவற்றை நேரடியாக சாப்பிடலாம் அல்லது கேக், மில்க் ஷேக், கீர் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

    நமது மூளை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஎச்ஏ போன்ற கொழுப்புகளால் ஆனது, அவை பெரும்பாலும் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சால்மன் போன்ற மீன்களில் காணப்படுகின்றன. இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை உருவாக்கி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். உங்கள் பிள்ளை அசைவ உணவுகளை உட்கொண்டால், இது அவர்களின் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் விட்டமின் டி, பி6, பி12 போன்றவையும் நிறைந்துள்ளன.

    குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
    ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
     
    கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
     
    கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம்  உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது  தெரியவந்துள்ளது.
     
    மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு  இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
     
    மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின்  டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
     
    வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது  உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
     
    பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர்  மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
    குழந்தைகளுக்கு நினைத்திறன் பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இந்த பயிற்சியை பற்றி பார்க்கலாம்.
    பள்ளிகள் தொடங்கி பாடங்கள் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. பாடங்களை திட்டமிட்டபடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் தங்கள் பணியில் கவனமாக இருப்பார்கள். ஆனால் அதே வேகத்தில் பாடங்களை எழுதுவதும், படிப்பதும் சில மாணவர்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்களும் படித்த பாடங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வழியிருக்கிறது. நினைவுத்திறனை பயிற்சியின் மூலம் அதிகரிக்க முடியும். அதற்கான சில எளிய வழிகளை அறிவோமா...

    முதலில் உங்கள் நினைவுத்திறனை சோதிக்கும் சிறு பயிற்சி...

    தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நீண்ட செய்தியை எடுத்துக் கொண்டு அறிவைக் குறிக்கும் ‘அ’, ‘றி’, ‘வு’ என்ற எழுத்துக்கள் வருவதை வட்டமிட்டுக் குறியுங்கள். இப்போது மீண்டும் நீங்களாகவே அந்தச் செய்தியைப் படித்து எந்தெந்த இடங்களில் அந்த எழுத்துகளை வட்டமிடாமல் விட்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். மற்றொருவர் துணையுடனும் நீங்கள் சரியாக அனைத்தையும் வட்டமிட்டிருக்கிறீர்களா? என்று பரிசோதிக்கலாம். ஒரே முறையில் நீங்கள் அனைத்து அ, றி, வு என்ற எழுத்துகளை மறக்காமல் வட்டமிட்டிருந்தால் நீங்கள் நினைவுத்திறனில் கெட்டியாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

    நீங்கள் ஒரு சில எழுத்துகளை வட்டமிட மறந்திருக்கிறீர்களா, பரவாயில்லை ரகம். நிறைய எழுத்துகளை வட்டமிட தவறியிருந்தால் உங்கள் நினைவுத் திறனை கண்டிப்பாக கீழ்வரும் பயிற்சிகளை கடைப்பிடித்து மேம்படுத்த வேண்டும்.

    இதோ நினைவுத்திறனை வளர்க்கும் எளிமையான பயிற்சிகள்...

    ஞாபக சக்திக்கு காரணமாக இருப்பது மூளை. அந்த மூளையை சுறுசுறுப்பாக இயக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கி, எப்போதைய நிகழ்வையும் எளிதாக நினைவுக்கு கொண்டுவந்துவிடும். சரி... வாகனத்துக்கு பெட்ரோல் போல, மூளைக்கு பெட்ரோல் எது தெரியுமா? ஆக்சிஜனும், குளுக்கோசும்தான். மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்கும்போது, குளுக்கோஸை சக்தியாக மாற்றி நன்கு இயங்குகிறது.

    சரி மூளைக்கு ஆக்சிஜன் நிறைய கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மூச்சுப் பயிற்சிதான் எளிய வழி. யோகா முறையில் இதை பிராணயாம பயிற்சி என்பார்கள். இந்த பயிற்சியை செய்வதும் எளிதுதான், முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்போது மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிடுங்கள். பத்து அல்லது இருபது முறை இப்படி செய்துவிட்டு, பிறகு ஒற்றை நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மற்றொரு நாசியின் வழியே காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியிடவும். இதுபோல சில முறைகள் செய்தபிறகு, அந்த துவாரத்தை மூடிக்கொண்டு பின்னர் மற்றொரு துவாரம் வழியே மூச்சுப் பயிற்சி செய்யவும்.

    மாணவர்கள் தினமும் காலையில் 20 நிமிடம், மாலையில் 20 நிமிடம் இந்தப் பயிற்சியை செய்தால் மூளைக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் கிடைத்து சுறுசுறுப்பாக செயல்படும். உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்குவதை காண்பீர்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர மாற்றங்களை நீங்களே உணர முடியும்.

    பிராணயாமம் போலவே மற்றொரு விளையாட்டு பயிற்சியும் நினைவுத் திறனை வளர்க்கும். இந்தப் பயிற்சியை நீங்கள் பூச்சொல்லி விளையாடுதல் அல்லது வேறு பெயரில் நீங்கள் அறிந்திருக்கலாம். அதையே எண்களோடு சேர்த்து பயிற்சி செய்து நினைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி இது.



    ஒன்று முதல் 100 வரை உங்களுக்கு எண்ணத் தெரியும்அல்லவா? அது பயிற்சியல்ல. அதை 100 முதல் 99, 98, 97 என்று ஒன்றுவரை குறைத்துக் கொண்டே பயிற்சி எடுங்கள். பின்னர் இரண்டு இரண்டாக குறைத்து 100, 98, 96, 94 என்று 2 வரை பயிற்சி செய்யுங்கள். அடுத்து மூன்று மூன்றாகவும், பின்னர் நான்கு, நான்காகவும், இறுதியில் 9 வரை கழித்துக் கொண்டே எண்ணி பயிற்சி பெற்றால் நினைவுத்திறன் படுவேகமாக செயல்படுவதை உணரலாம். எப்போது கேள்வி கேட்டாலும் உங்களால் எந்த எண்ணிலிருந்தும் கழித்துக் கொண்டே எண்கள் விடுபடாமல் சொல்ல முடிந்தால் நீங்கள் நினைவுத்திறனில் படுசுட்டியாக மாறிவிட்டீர்கள் என்று பொருள்.

    7 வயது வரை உள்ள குழந்தைகள் 50 வரையும், 14 வயது வரை உள்ள குழந்தைகள் 100 வரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரிசைப்படி எண்களை குறைத்துச் சொல்லி நினைவுத்திறன் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    மேற்கண்ட பயிற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், நினைவுத்திறன் சிறப்பாக செயல்படும். இனி படித்த பாடங்கள் மறக்கவே மறக்காது அல்லவா?!

    தினசரி பழக்கங்கள்

    ஞாபக சக்திக்காக தினசரி செய்ய வேண்டிய சில பழக்கங்கள்...

    வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சரியான நேரத்திற்குத் தூங்கச் செல்வது மூளைக்கு போதிய ஓய்வைக் கொடுத்து நினைவுத்திறன் சிறப்பாக செயல்பட துணை செய்யும்.

    அதேபோல சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதும், மூளை சிறப்பாக செயல்பட துணை செய்யும். மூளைக்கு அவசியமான ஒமேகா-3, ஒமேகா-6 உள்ளிட்ட சத்துப் பொருட்கள் நிரம்பிய உணவுகளை உங்கள் விருப்ப உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    உடல் எடையை கட்டுக்குள் வைப்பதாக கருதி, உணவை குறைத்தால் அது மூளை இயக்கத்தை தடை செய்து ஞாபகசக்தி குறைவை ஏற்படுத்தலாம்.

    ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என்றிருக்காமல் அவசியமான வேலைகளை நினைவுபடுத்தி மனதில் பதிய வைப்பது சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

    விளையாட்டுகள் மூளைக்கு சிறந்த பயிற்சியைத் தந்து நினைவுத்திறனை அதிகரிக்கும். 
    ×