என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "milk"

    • வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
    • இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.

    நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

    வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.

    • திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    பழனி:

    தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.

    இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    • பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
    • எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது.

    இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், குழந்தை ஒன்றை நேரடியாக பசுவின் மடியில் இருந்து ஒருவர் பால் குடிக்க வைக்கும் காட்சிகள் உள்ளது.

    பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு பிறகுதான் இணை உணவுகள் சேர்த்து வழங்கப்படும். ஆனால் வீடியோவில் ஒருவர் நேரடியாக பசுவின் மடியில் இருந்து குழந்தைக்கு பச்சை பால் ஊட்டுவது போல் உள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலானது. பயனர்கள் பலரும் இது குழந்தைக்கு நல்லதல்ல. அந்த குழந்தை நோய் கிருமிகளுக்கு ஆளாகக்கூடும் என கருத்துக்களை பதிவிட்டனர்.




    • பசு காலையில் 11 லிட்டர், மாலை 9 லிட்டர் பால் என தினமும் 20 லிட்டர் பால் கறந்து சாதனை படைத்து வருகிறது.
    • 5 வயதுடைய பசு ஒன்று 7 லிட்டர் பால் கறந்து முதல் பரிசை தட்டிச் சென்றது சாதனையாக இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், டாக்டர் அம்பேத்கர் கோண சீமா மாவட்டம், மண்ட பேட்டையை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. விவசாயி. இவர் ஓங்கோல் இன பசு ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த பசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது. இந்த பசு காலையில் 11 லிட்டர், மாலை 9 லிட்டர் பால் என தினமும் 20 லிட்டர் பால் கறந்து சாதனை படைத்து வருகிறது.

    கடந்த 2023-ம் ஆண்டு தாடே பள்ளிக்குடேமில் உள்நாட்டு பசும்பால் போட்டி நடந்தது. இதில் 5 வயதுடைய பசு ஒன்று 7 லிட்டர் பால் கறந்து முதல் பரிசை தட்டிச் சென்றது சாதனையாக இருந்தது.

    தற்போது முரளி கிருஷ்ணா வளர்த்து வரும் ஓங்கோல் பசு 20 லிட்டர் பால் கறந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தரமான, சத்தான தீவனம் கொடுப்பதால் அதிக அளவில் பால் கொடுப்பதாக விவசாயி தெரிவித்தார்.

    • கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
    • போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.

    கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.

    மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    • கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.
    • இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் விலை உயர்வை அரசு திரும்ப பெறவில்லை.

    இந்த நிலையில் பால், தயிர் விலை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.

    பெங்களூரு காமாஷிபல்யா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு மர்ம நபர் 1 லிட்டர் பால் பாக்கெட்டை திருடியுள்ளார். இந்த காட்சிகள் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இதே போல் காமாஷிபாளையம் என்ற பகுதியில் பால் பூத்துக்கு முன்பு பெட்டிகளில் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர். இந்த காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதே போல் பல்வேறு இடங்களிலும் பால், தயிர் பாக்கெட் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
    • சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    அவனியாபுரம்

    தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.

    அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.

    இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும்.
    • பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    பசுமையான மேய்ச்சல் நிலங்களை கிராமங்களில் உருவாக்கி புல், கீரைகளை தீவனமாக அளித்தார்கள். பசுக்கள் இன்று நகர-கிராம குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி திரிகின்றன. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவை உண்டு தரும் பால் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

    தமிழகத்தில் பால் மாடு வளர்ப்பு என்பது பல லட்சக்கணக்கான மக்களுக்கான வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.

    கிராமங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் கறந்த பாலை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் தனியாகவும், பண்ணைகள் மூலமாகவும் விற்கிறார்கள். பொதுவாகவே கொள்முதல் செய்யப்படும் பாலை அந்தந்த நிறுவனங்கள் ` பாஸ்டிரைசேசன் ' என்ற முறையில் 160 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் பதப்படுத்தி கிருமி நீக்கம் செய்து பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    நகரங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் பலர் ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். ஆனால், சரியான வெப்பநிலையில் காய்ச்சாத பாலில் அந்த பசுக்கள் உட்கொண்ட தீவனத்தின் மணம் மற்றும் தன்மை காணப்படுவதுடன், புருசெல்லோசிஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளும் இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும். ஆரோக்கியமான சுகாதார நிலையில் பசும் புற்கள், புண்ணாக்கு, உலர் தீவனங்கள், தூய குடிநீர் தரப்பட்டு வளர்க்கப்படும் பசுக்களில் கறந்த பசும்பால் நறுமணத்துடன், இனிப்பு சுவையோடு இருக்கும்.

    மேய்ச்சலுக்கு போகும் பசுக்கள் நிலத்தில் முளைத்திருக்கும் காட்டு வெங்காயம் போன்ற களைகளை மேயும் போது அவற்றின் பாலில் இந்த களைகளின் வாடை காணப்படும். நிறமும் வேறுபடும். இதுதான் பாலின் இயல்பு.

    இப்போது நம் நாட்டில் பசுக்களின் நிலைமையை பார்க்கலாம். தற்போது நகரங்களிலும் பல கிராமங்களிலும் கூட வளர்க்கப்படும் பசுக்களை போதிய தீவனம் அளிக்க வசதி இல்லாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இந்த பசுக்கள் தெருத்தெருவாக வீடுகளில் போய் மக்கள் தரும் எஞ்சிய இட்லி, தோசை முதல் குப்பையில் வீசப்பட்ட பாலித்தீன், நாப்கின் வரை அனைத்து கழிவுகளையும் உண்கின்றன.இந்த பசுக்களின் பால் எந்த தரத்தில் இருக்கும் என்பது கேள்விக்குறி.

    இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-

    பொதுவாக, பாலை வீட்டில் காய்ச்சும் போது அதிகபட்சமாக 100 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் தான் காய்ச்ச முடியும். இந்த கொதி நிலையிலும் தப்பி உயிர் வாழும் நுண்ணுயிரிகள் பாலில் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் செல்லும் போது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப் போன உணவை உண்டு வாழும் பசுக்களுக்கு உறுதியாக பல உடல் நல குறைபாடுகளும், அவற்றின் பாலில் தரமற்ற கொழுப்பு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படும் என்பது உறுதி.

    இந்த வகை மாடுகளின் பாலை சரியாக காய்ச்சாமல் குடிக்கும் போது மனிதர்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை வரும். இந்த பாலை குடிக்கும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களும் தொடர்ந்து வரும்.சுகாதாரமற்ற நிலையில் வளரும் பசுக்களில் எலும்புருக்கி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய் இருக்கலாம். இந்த பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதாரமற்ற பால் உற்பத்தியை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ` மாடு வளர்ப்பு என்றால் அதற்கு சுகாதாரமான கொட்டகை, சத்துள்ள பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம், தூய குடிநீர் எல்லாம் இருக்க வேண்டும். நகரங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு இப்படி எந்த வசதியும் இல்லை. பணம் செலவழித்து தீவனம் வாங்க தயங்கி பசுக்களை சாலையில் திரிய விட்டு குப்பையில் மேய விடுகின்றனர்.

    இதனை தடுக்க, நகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகளை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கும் வகையில் மாநகராட்சி ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கி மாட்டு கொட்டில்களை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நகர சாலைகளிலும் குப்பை தொட்டிகளை தேடி பசுக்கள் திரிவதை தடுக்க முடியும். மக்களுக்கு ஆரோக்கியமான பசுக்களின் பால் கிடைக்கும்' என்றார்.

    தாய்ப்பாலுக்கு அடுத்ததாக போற்றப்படுவது பசுவின் பால். மனிதனுக்கு உணவாக பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் என்றுபல விதமான பொருட்களை தரும் பசுக்களை மனிதர்கள் பாதுகாப்பாக கொட்டில், கோசாலை, பசு மடம்என்று அமைத்து வளர்த்தார்கள்.

    • 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்(பால்வளம்) சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் தேவைக்காக சுமார் 19 ஆயிரத்து 300 லிட்டர் போக மீதமுள்ள பால், 11 பால் குளிர்வு மையங்களில் தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் 55 ஆயிரம் லிட்டர் பால் குளிர்விக்கப்பட்டு, சென்னை பெருநகர தேவைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

    • பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
    • பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.

    அதேநேரம் பாலின் தரத்தை கண்டறியும் வகையில் இமெட் எனும் எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட் கருவிகளை இத்தகைய இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    அதிக அளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களை தேர்வு செய்து அங்குள்ள பொது இடங்களில் உணவு பாதுகாப்பு துறையால் இமெட் கருவி வைக்க வேண்டும்.அதன் வாயிலாக, நுகர்வோர் அனைவரும் பாலின் தரத்தை இலவசமாக பரிசோதிக்கலாம். ஏற்கனவே இக்கருவிகள் சில இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.பெரும்பாலான தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறைவாகவே உள்ளது. அங்கு இமெட் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×