என் மலர்

    நீங்கள் தேடியது "Palani Temple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.
    • மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.

    நேற்று சஷ்டியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மாத கார்த்திகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி, ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பொழுதில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்டநேரம் வெயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சோர்வடையும் பக்தர்கள் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தபோதும் இலவச தரிசன வரிசையில் நிழல் இருந்ததால் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    எனவே கோடைகாலம் தொடங்கியுள்ளநிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது.
    • 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மண்டலபூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

    மேலும் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளிபொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    தைப்பூசதிருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் நடராஜன் தலைமையில் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது. 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.

    3-ம் நாளாக நேற்று இரவு 10மணிவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் உண்டியல் வருவாயாக ரூ.7கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 கிடைத்துள்ளது. தங்கம் ஒருகிலோ 248கிராம், வெள்ளி 48கிலோ 377கிராம் ஆகியவை கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2529 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளியாலான வேல், மயில், திருமாங்கல்யம், காவடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக திருவிழா குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் மட்டுமே நடந்தது. கடந்த வருடமும் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த வருடம் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் உண்டியல் வருவாய் ரூ.7 கோடிக்குமேல் கிடைத்துள்ளது. பழனி கோவில் உண்டியல் வருவாயில் இதுவரை கிடைத்த அதிக வருவாயாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
    • பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

    இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
    • அதிகாரிகள் வேலை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர்.

    பழனி:

    பழனி கோவில் தைப்பூசத்திருவிழாவுக்காக தற்போது பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் பக்தர்கள் வழிபாட்டுக்காக 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது இந்த வேலை அவர்கள் வைத்து விட்டு திருவிழா நிறைவடைந்ததும் எடுத்துச் சென்று விடுவார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வேல் முன்பு நின்று செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் செல்வார்கள். ஆனால் இந்த வேல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழனி வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆகியோர் இந்த வேலை அகற்றினர்.

    இதனால் பக்தர்கள் மற்றும் வேலை பிரதிஷ்டை செய்த வேல் வழிபாட்டுக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பழனி நகரில் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் புகார் அளித்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் பழனி பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அமைத்த வேல் வைப்பதால் எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை.

    சண்முக நதி கரையோரம் இருக்கும் வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் அதிகாரிகள் இதனை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். எனவே மீண்டும் அதே இடத்தில் வேல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
    • தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

    திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    மேலும் வார விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. தைப்பூசத்திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தற்போதே மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று அடிவாரம், மலைக்கோவில், மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சராசரியாக வருடத்துக்கு 1.20 கோடி பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காத்திருக்கும் இடங்களில் மின் விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அர்த்தமண்டபம் அருகில் மட்டும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பழனி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். எனவே உட்பிரகாரத்தில் உள்ள தரிசன வரிசை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ரூ.24 லட்சம் மதிப்பில் லண்டனில் இருந்து பிரத்தியேகமாக குளிர்விக்கும் எந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணி தொடங்கியது. இதன் மூலம் கூட்ட நெரிசலிலும் பக்தர்களுக்கு புத்துணர்ச்சியான காற்று கிடைக்கும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
    • ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் கருவறையில் உள்ள மூலவரான நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெறாமல் உள்ளதால் இதுகுறித்து பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்தது.

    ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழனி முருகன் கோவில் நவபாஷாண பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது. நீதிஅரசர் பொங்கியப்பன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் இதில் இடம்பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஸ்தபதி உள்பட 11 பேர் கொண்ட குழு ஆலோசனைக்கூட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக பாதுகாப்புக்குழு நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேர ஆய்வுக்கு பிறகு குழுவின் ஆலோசனைக் கூட்டம் மலைக்கோவிலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஓரிரு நாளில் மருந்து சாத்துதல் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
    • ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.

    அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    திண்டுக்கல்:

    பழனி முருகன் கோவிலில் வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பழமையான சிற்பங்கள் புனரமைக்கப்பட்டு புதிய வண்ணங்கள்தீட்டும் பணி நடந்து வருகிறது.

    கோவில் உட்பகுதியில் சன்னதி மண்டபங்களில் பக்தர்கள் வசதிக்காக பொருத்தியிருந்த ராட்சத குளிர்சாதன பெட்டிகளுக்கு பதிலாக ரூ.25 லட்சம் மதிப்பில் நவீனகுளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதற்காக கோவில் உட்பகுதியில் மூலவர் சன்னதி பகுதியில் இருந்து பழைய குளிர்சாதன பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகம் அவசரகதியில் நடத்தப்படுவதாகவும், இதற்கு கோவில் அர்ச்சகர்கள் யாரும் ஒத்துழைக்க கூடாது என்பது போல அர்ச்சகர் சங்கதலைவர் பேசும் ஆடியோ வாட்ச்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்களில் வெளியாகி உள்ளது.

    இதுபக்தர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தங்களுக்கு தெரியாது என தெரிவித்துவிட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர்.
    • சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    பழனி:

    பழனி கோவிலுக்கு தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்து வருகின்றன.

    அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை மிரட்டி பல்வேறு பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கடை வைத்திருப்பவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றபோது கோவில் இணை ஆணையர் லட்சுமி பார்வையிட்டார். அவரிடம் ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் வியாபாரிகள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சாலையோர வியாபாரி பூவாயி என்பவரை இணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அனைவரும் இணை ஆணையர் லட்சுமியை முற்றுகையிட்டனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இணை ஆணையர் தனது அலுவலகத்திற்கு வந்துவிட்ட போதிலும் வியாபாரிகள் அவரை பின்தொடர்ந்து வந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவரிடம் கேட்டபோது தான் யாரையும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும் பூவாயி என்பவர் கூறுகையில், தனது கழுத்தில் அணிந்திருந்த கயிரை பிடித்து இழுத்து இணை ஆணையர் கன்னத்தில் அறைந்ததாக கூறினார். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை சமரசம் செய்ய முயன்றும் கேட்கவில்லை.

    இதனால் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo