என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசன கட்டணம்"

    • கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்
    • கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

    இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்யும் பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய, காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனர். தற்போது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் கீழ் உள்ள அறநிலையத்துறை, திருக்கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, இனி ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறவுறுத்தியிருப்பது. உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

    மேலும் பக்தர்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே இராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். ஆண்டவன் அருளை பெருவதற்காக மனத்தூய்மையோடு கோயிலுக்கு வரும் உள்ளூர் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு ஆற்றொன்னா துயரத்தையும், செலவையும் ஏற்படுத்தும் வகையிலும் எடுத்துள்ள கட்டண வசூல் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்துசமய அறநிலையத்துறையை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி உள்ளனர்.
    • கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது.

    திருப்பூர்:

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கந்த சஷ்டி விழா கோவில்கள் தோறும் நடைபெற்று க்கொண்டிருக்கிறது. கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறையினர் அபிஷேக கட்டணத்தை ரூ.500லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், விஸ்வரூப தரிசன கட்டணத்தை ரூ.100 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியும் செய்தி வெளியிட்டிருப்பது மிகவும் வேதனையான விஷயமாக உள்ளது. இந்து அறநிலையத்துறையினரின் செயலானது கடவுளை காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பதாக உள்ளது.

    அத்துடன் முக்கியமான விழாக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, அல்லது பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கட்டணத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்?. முக்கிய விழாக்காலங்களில் கோவில்களில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பது தெரிந்தும் தமிழக அரசு கண்டும் காணாதது மாதிரி நடந்து கொள்வதை சிவசேனா கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×