search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    • இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

    இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.

    இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.

    • தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவெறுப்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
    • இதனால் தர்ஷன் திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு மோசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 15 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனால் பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி எனக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமிக்கு கூறியிருப்பதாவது:-

    பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை மந்திரி மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசுவாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது.

    இது எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய மகன் வினீஷ் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.
    • கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

    • தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது.
    • தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார்

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

    மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 8-ந் தேதி நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்து செல்வதாக கூறி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு காரில் கடத்தி வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் உள்ள ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள பாலத்தின் அருகே வீசி சென்றனர்.

    இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்கள் 2 பேர் ரேணுகாசாமியின் உடலை எடுத்து சென்றதும் இதற்காக புனித் என்பவரின் காரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து புனித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புனித் நேற்று கைது செய்யப்பட்டார். அதுபோல், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஹேமந்த் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


    இதற்கிடையே இந்த கொலையில் தனது பெயர் வெளியே தெரியாமல் இருக்க நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகள் 4 பேருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து போலீசில் சரணடைய செய்தார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. மேலும் ரூ. 30 லட்சம் பணத்துக்காக நடிகர் தர்ஷனை காப்பாற்ற இவர்கள் போலீசில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் தனியாக வேறு வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தனது கூட்டாளிகள் 4 பேருக்கு தர்ஷன் கொடுத்த ரூ. 30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக கர்நாடக மந்திரி ஒருவர் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அம்மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வரா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரசிகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு போலீசார் எந்த சலுகையும் அளிக்கவில்லை. மற்றவர்களை போலவே தர்ஷனும் போலீஸ் நிலையத்தில் நடத்தப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் பிரியாணி கொடுத்ததாக கூறுவது தவறு. தர்ஷனை காப்பாற்ற யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. எனவே ஆதாரம் இல்லாமல் வெளியாகும் தகவல்கள் பொய்யானது. நடிகர் தர்ஷனுக்கு எந்த ராஜ உபச்சாரமும் நடைபெற வில்லை. திட்டமிட்டே இது பரபரப்ப படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
    • தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

     

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.

    டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தவறு செய்தவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்.

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் கன்னட திரைத்துறையின் முக்கியமான, முன்னணி நடிகராக உள்ளார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு கன்னட திரைத்துறையில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக திரைப்பட வா்த்தக சபை தலைவர் என்.எம்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நடிகர் தர்ஷனுக்கு திரைத்துறையில் நடிக்க தடை விதிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு என்.எம்.சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைத்துறையில் தர்ஷன் மிகப்பெரிய நடிகர். இந்த கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதல் தெரிவிக்கிறோம். சினிமாவில் நடிக்க தர்ஷனுக்கு தற்போதைக்கு தடை விதிக்கவில்லை. அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால், அதன் பிறகு நாங்கள் மீண்டும் கூடி ஆலோசித்து தடை விதிப்பது குறித்து முடிவு எடுப்போம்.

    ரேணுகாசாமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாங்கள் இன்று சித்ரதுர்காவுக்கு செல்கிறோம். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்ய உள்ளோம். தவறு செய்தவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.
    • நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    பெங்களூரு:

    கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன் (வயது 47). இவர் கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காடீரா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூலை குவித்தது.

    இவரது திரைப்படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போது கொலை வழக்கு ஒன்றில் நடிகர் தர்ஷன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் அருகே கடந்த 9-ந் தேதி அன்று ஆண் பிணம் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளி காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது பிணமாக கிடந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி ( 33) என்பதும், அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

    அதாவது கைதானவர்கள் வினய், மைசூருவை சேர்ந்த நாகராஜு, ஆர்.பி.சி. லே-அவுட்டை சேர்ந்த லட்சுமண், கிரிநகரை சேர்ந்த பிரதோஷ், கார்த்திக், கேசவ் மூர்த்தி, ஆர்.ஆர். நகரில் வசித்து வரும் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பவன், தீபக் குமார், மண்டியாவை சேர்ந்த நந்தேஷ், பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டாவை சேர்ந்த நிகில் நாயக், சித்ரதுர்கா டவுனை சேர்ந்த ராகவேந்திரா ஆகிய 11 பேர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர்கள் தான் ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.

    அவர்கள் 11 பேரையும் நடிகர் தர்ஷன் தான் கூலிப்படையாக ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா(36) ஆவார். பவித்ரா கவுடாவும் நடிகை ஆவார். நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    அதுதொடர்பான விவகாரம் அவ்வப்போது வெடித்து வருகிறது. இந்த நிலையில் கொலையான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். அவர், நடிகர் தர்ஷனுடன் நடிகை பவித்ரா கவுடா நெருங்கி பழகுவது தர்ஷனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், தர்ஷன் - அவருடைய மனைவி விஜயலட்சுமி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிவு ஏற்படும் எனவும் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவர், நடிகை பவித்ரா கவுடாவை பற்றி சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

    இதுபற்றி நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திராவை அழைத்து பேசி உள்ளார்.

    அப்போது ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு அழைத்து வரும்படி தர்ஷன் கூறி உள்ளார். அதன்படி ராகவேந்திரா, சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் இருந்த ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடந்த 8-ந் தேதி இரவு காரில் அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் ராஜராஜேஸ்வரி நகர் பட்டனகெரே பகுதியில் உள்ள வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு ரேணுகாசாமியை அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து ரேணுகாசாமியை ராகவேந்திரா உள்பட 11 பேரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    அவரது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடு வைத்தும், வாய் மற்றும் முகம் உள்பட உடலின் 15 இடங்களில் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியும் உள்ளனர். இதில் ரேணுகாசாமி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தது தெரிந்தது. அவரை துடிக்க துடிக்க அவர்கள் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

    இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து காமாட்சிபாளையா போலீசார் நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகை பவித்ரா கவுடாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தின் 200 மீட்டர் எல்லைக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாக தகவல்.
    • உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது.

    கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கன்னடா திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டதை பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் கிரிஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.

    மைசூருவில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகாசுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேருடன் நடிகர் தர்ஷனுக்கு பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரேனுகாசுவாமியின் சடலம் பெங்களூருவை அடுத்த காமாக்ஷிபாளையத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.
    • பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.

    கோவிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

    பின்னர் பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    108 தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

    இதன்பின் வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • பக்தருக்கு சிறிது அசவுகரியம் ஏற்பட்டாலும் வத்திராயிருப்பு மற்றும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது.முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கை யுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்திருந்தனர்.

    பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை யேறும்போது சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுவதும், நெஞ்சுவலி ஏற்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே மலையடிவாரத்தில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்த முறை மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை. பக்தருக்கு சிறிது அசவுகரியம் ஏற்பட்டாலும் வத்திராயி ருப்பு மற்றும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களின் உயிருக்கு மதிப்பு அளித்து வருங்காலங் களில் தாணிப்பாறையில் மருத்துவ குழுவினரை பணியமர்த்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    ×