search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivaji ganesan"

    • நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.

    • 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாக புகார்.
    • 1000 பவுன் நகையை அபகரித்துக் கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியிருந்தனர்.

    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர்.

     

    பிரபு - ராம்குமார்

    பிரபு - ராம்குமார்

    சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமாரும், பிரபுவும் ஏமாற்றி விட்டனர். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    இந்நிலையில் சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நடிகர் பிரபு தரப்பும். சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது என்று தனியார் கட்டுமான நிறுவனமும் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு விளக்கத்தை ஏற்று சிவாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

    • திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது.
    • அதற்காக ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தை அண்ணா எழுதினார்.

    ஒரு முறை கணேசன் வீட்டுத் தெருவில் கட்டபொம்மன் ஆட்டம் நடந்தது. கட்டபொம்மன் நாடகத்தை மட்டுமே நடத்தும் கம்பளத்தார் கூத்து அங்கே நடந்தது. கூத்துப் பார்க்கப் போன கணேசனுக்குக் கூத்தில் வெள்ளைக்கார சிப்பாய்களில் ஒருவனாக வீர நடை போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணேசன் போட்ட முதல் வேஷம் அதுதான். இப்படி நடித்ததற்காக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான அப்பாவிடம் முதுகில் அடி வாங்கினார் கணேசன். அடி வாங்கிய கணேசனுக்கு காய்ச்சலும் வந்தது; நடிக்கும் ஆசையும் வந்தது.

    வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவது வாடிக்கையானது. கடைசியில் "அப்பா அம்மா இல்லாத அனாதை நான்" என்று பொய் சொல்லி எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்தான் கணேசன்.

    திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது. அதற்காக 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். நாடகத்தை எழுதிய உடன் நடிகர் டிவி நாராயணசாமியிடம் "உனக்காகவே ஒரு நாடகத்தை எழுதி இருக்கிறேன். நீதான் அதில் நடிக்கவேண்டும்" என்று சொன்னார். அண்ணா சொன்னவுடன் சத்ரபதி சிவாஜி வேடத்தில் எம்ஜிஆரை நடிக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று டி.வி.என் நினைத்தார்.

    டி.வி.என், எம்ஜிஆரிடம் சென்றார். "சிவாஜி வேடத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். நடிக்கிறேன் என்று விருப்பம் தெரிவித்த எம்ஜிஆரை சிவாஜி வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எம்ஜிஆரின் சிவந்த நிறமும் கட்டான உடல்வாகும் அண்ணாவைக் கவர்ந்தது. தான் கற்பனை செய்த சிவாஜி இவர்தான் என்று அவரும் எம்ஜிஆரை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    எம்ஜிஆருக்கு சிவாஜி உடைகள் தைக்கப்பட்டன. வசனம் ஒப்படைக்கப்பட்டது. வசனத்தை படித்துப் பார்த்த எம்ஜிஆர் ஒரு சில காட்சிகளில் வசனத்தைத் திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கிய ராஜகுமாரி என்ற படத்தில் அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தார்.

    அண்ணாவுக்கு நேரம் கிடைக்காவிட்டால் நானே காட்சிகளைத் திருத்திக் கொடுக்கட்டுமா என்று கேட்டார் சாமி. அண்ணாவும் பெருந்தன்மையோடு அதற்கு சம்மதித்தார். ஆனால் அண்ணா எழுதி சாமி திருத்தி அதில் நடிப்பதா என்று எம்ஜிஆருக்குக் குழப்பமாக இருந்தது. அதனால் "இப்போது என்னால் நடிக்க இயலாது. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று டி.வி.என்னிடம் சொன்னார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் நடிக்காத பட்சத்தில் எஸ்.வி.சுப்பையா, கே.பி. காமாட்சி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. அவர்களும் நடிக்க மறுத்து விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் திராவிடநாடு அலுவலகத்தில் கே. ஆர். ராமசாமி, சிவசூரியன், சிதம்பரம் போன்ற நடிகர்களோடு கணேசனும் தங்கியிருந்தார். அவர்களில் சிதம்பரம் "சிவாஜி வேடத்தில் நம்ம கணேசனைப் போட்டால் என்ன?"என்று டி.வி.என்னிடம் கேட்டார்.

    அண்ணாவிடம் சென்று "சிவாஜி நடிப்புக்கு கணேசனைப் போட்டால் என்ன?" என்று கேட்டார் டி.வி.என். "கணேசன் பெண் வேடங்களில்தானே நடித்துள்ளார். அவர் சரியாக வருவாரா?" என்று கேட்டு யோசித்தார் அண்ணா. "கணேசனைத் தயாரித்து விடலாம்" என்றார் டி.வி.என்.

    "கணேசா, நீ நடிக்கிறாயா?" என்று அண்ணா கேட்டதும், "என்னால் முடியுமா?" என்று கேட்டுத் தயங்கினார் கணேசன். "முயற்சி செய்து பார் கணேசா. உன்னால் முடியும்" என்று அண்ணா கூறினார். மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை கணேசனிடம் கொடுத்து, "நான் வீட்டுக்குச் சென்று வருகிறேன். நீ இதைப் படித்துக் கொண்டிரு. எப்படிப் பேசுகிறாய் பார்ப்போம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அண்ணாவிடம் இருந்து 11 மணியளவில் வசனப்பிரதிகளைப் பெற்றார் கணேசன். மாலை ஆறு மணி போல் திரும்பி வந்தார் அண்ணா. "என்னவாயிற்று?" என்று கேட்டார் கணேசனிடம்.

    "வசனங்களை நான் பேசுகிறேன். நீங்கள் கேளுங்கள்" என்றார் கணேசன். அண்ணாவின் ஆற்றல்மிகு வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசி சிவாஜியாகவே மாறிவிட்டார் கணேசன். அண்ணா எழுதிக்கொடுத்த காகிதங்களைப் பார்க்காமலேயே வசனங்களை அழகுற உச்சரித்தார் கணேசன். அண்ணா, கணேசனை கட்டித் தழுவிக்கொண்டார். "நீதான் சிவாஜி.. கணேசா" என்றார்.

    மாநாட்டில் நாடகத்தை ரசித்துப் பார்த்தார் பெரியார். "நான் பத்து மாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்களை அண்ணா ஒரே நாடகத்தில் கூறிவிட்டார்." என்று பாராட்டினார். தொடர்ந்து, "யாரோ ஒரு சின்னப் பையன் சிவாஜி வேடத்தில் குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்தானே, அவன் யார்?" என்று கேட்டார்.

    பின்னாலிருந்து "அவன் பெயர் கணேசன்" என்று சொல்லி அவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். "ஆமா கணேசன். சிவாஜி கணேசன்... நல்லா நடிச்சார். சிவாஜி மாதிரி இருந்தார்" என்று பாராட்டினார் பெரியார். "கணேசா இன்று முதல் நீ சிவாஜி" என்று சொல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதற்குப் பிறகுதான் கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவதால் தன் உயிர் போகும் என்றால் போகட்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #Koovathur
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன். போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராகவும் பேசியதற்காகவும் பழிவாங்கப்படுகிறேன். நான் ஒரு சமுதாயவாதி.

    நான் கூட்டணி கட்சி தலைவர், தோழமை கட்சி என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமற்று பேசி வருகின்றனர்.

    நான் லொடுக்கு பாண்டி அல்ல. லொடுக்கு பாண்டியன், பெயரை சரியாக உச்சரியுங்கள். முக்குலத்து சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை வரும் தேர்தலில் முக்குலத்து மக்கள் காண்பிப்பார்கள்.

    கோப்புப்படம்

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.

    நான் முக்குலத்தோர் புலிப்படை என போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்கிறீர்கள், நேற்று அண்ணா சாலையில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?

    எடப்பாடி அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து வருகிறது. அமைச்சர்கள் நிலையறிந்து பேசவேண்டும், நானாவது தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் சீட் வாங்கி வென்றவன்.

    அமைச்சர்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்.

    எத்தனையோ சிலைகள் மெரினாவில் இருக்கிறது, மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முக்கிய சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கருணாசை தினகரன் ஆதரவாளரும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். #Karunas #Koovathur
    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #SivajiGanesan
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசனின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி அடையாறில் அமைந்திருக்கும் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், விக்ரம் பிரபு, நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

    ‘நடிகர் சங்கம் சார்பாக அப்பாவுக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களை பார்க்கும்போது எங்களுக்கு எங்கள் தந்தை நினைவு வருகிறது. அவர்களுக்கு எங்களை பார்க்கும்போது எங்கள் தந்தை நினைவுக்கு வருகிறார்.

    நாசர் என் தந்தையை அண்ணன் என்று அழைப்பார். நியாயமாக பார்த்தால் சித்தப்பா என்று அழைக்க வேண்டும். சிவாஜி எல்லோர் வீடுகளிலும் அப்பாவாக, தாத்தாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    உங்கள் அனைவரையும் பார்க்கும்போது என் தந்தையே நேரில் வந்தது போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகள்’ என்று கூறினார்.


    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது ‘நேற்று இன்று என்று இல்லை எப்போதுமே சிவாஜி நம்முடன் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவர் போட்ட தடத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர் பயணித்த அளவுக்கு நாங்கள் பயணிக்க முடியாது. சினிமா நடிகர்கள் மட்டும் அல்ல நாடக நடிகர்கள் சார்பாகவும் சிவாஜி பிறந்த தினத்தை அரசு நிகழ்ச்சியாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவாஜி விமர்சனத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். கலைக்காகவே வாழ்ந்தவர்’

    இவ்வறு அவர் கூறினார்.  #NadigarThilagam #SivajiGanesan
    நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

    ‘சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட, தமிழக மக்களின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக எங்கள் தந்தை வாழ்கிறார்.

    அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மிக சிறப்பாக பிரதிபலித்தார். சமூக நற்பணிகளுக்காக நிறைய உதவிகள் செய்து இருக்கிறார்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் சட்டசபையில் சிவாஜி கணேசனை பாராட்டி பேசி உள்ளனர். அவர் மீது ரசிகர்கள் இன்றைக்கும் அன்பாக இருக்கிறார்கள். அவருக்கு சிறப்பு சேர்த்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் நன்றி’.

    இவ்வாறு பிரபு கூறினார்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர், தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர், கலைத்துறைக்கு பெருமை சேர்த்த கலைமாமணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

    காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முயற்சி எடுத்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் கே.ஆர்.விஜயா. சிவாஜிகணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது பற்றி கே.ஆர்.விஜயா கூறியதாவது:-


    ‘நடிகர் திலகம்’ ஒரு கலைக்கூடம். 4 வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து, அனுபவம் பெற்றவர். அவர் நடித்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகள், வித்தியாசமான வேடங்கள். நடிப்பு பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், அவர் நடித்த 10 படங்களை பார்த்தால் போதும். நூலகத்தில் விடை கிடைத்தது போல இருக்கும். அந்தளவுக்கு நடிப்புத்திறன் வேறு யாருக்கும் இருக்குமா? என்பது சந்தேகம். நடிப்புத்திறமை, அவருக்கு கடவுள் கொடுத்த வரம். அவருக்கு கிடைத்த மரியாதை கலைக்குடும்பத்துக்கு கிடைத்த மரியாதை.

    இவ்வாறு கே.ஆர்.விஜயா கூறினார்.

    நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:-

    ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது என்று எடுத்த முடிவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி தான். அவருடைய தமிழ் வசன உச்சரிப்பு வேறு எந்த நடிகருக்கும் வராது. அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை நடிகர்களுக்கு பெருமையான விஷயம். நான் ஒரு ரசிகையாக மட்டுமல்ல, ஒரு மகளாகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்களுக்கு அவர் ஒரு புத்தகம் மாதிரி. வருங்கால தமிழ் சந்ததிகளுக்கு இது ஒரு உதாரணமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் ராஜேஷ் கூறியதாவது:-

    ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது சந்தோஷம். அவருடைய சிலையை எடுத்ததால் வருத்தப்பட்ட எங்களை போன்ற நடிகர்களுக்கும், என்னை போன்ற ரசிகர்களுக்கும் இது ஒரு ஆறுதல். மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல தியாகிகளின் வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் ‘நடிகர் திலகம்’.

    பல தெய்வங்களின் வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றார். சீனா, பாகிஸ்தான் போர்களின்போது நாட்டின் எல்லைக்கே சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி ராணுவ வீரர்களை சந்தோஷப்படுத்தி, நிதியும் திரட்டி கொடுத்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டி கொடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ள மரியாதை பொருத்தமானது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியதாவது:-

    தமிழ் திரை உலகில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் நடிப்பு திறமையால் மக்கள் இதயங்களை வென்றவர் நடிகர் சிவாஜி கணேசன்.

    அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ந்தேதி தேதியை அரசு விழாவாக கொண்டாடுவது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உலகெங்கும் வாழும் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவாஜி கணேசனின் பிறந்தநாள் (அக்டோபர் 1-ந் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது போன்று, சிவாஜி கணேசன் பிறந்தநாளை ‘கலை வளர்ச்சி நாள்’ என்று அறிவித்து கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளனர். #SivajiGanesan
    எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தமிழர்களின் வீடுகளில் ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக, ஒரு அண்ணனாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டு இருக்க கூடியவர் எங்கள் தந்தை.

    அந்த வகையில் தமிழக ரசிகர்கள் சார்பாக இந்த அறிவிப்புக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் கட்ம்பூர்ராஜு உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பிரபு.

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் சிவாஜி அவர்கள். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
    ×