என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishal"

    • நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார்.
    • நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.

    விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார். இதனை விஷாலுக்கு பதிலாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியது. நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.

    தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமானது.

    இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பி தர உத்தரவிடக்கோரி விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டனர்.

    • சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது

    அண்மையில் நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அவர்களது காதல் மற்றும் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இச்செய்தி மிகவும் வைரலானது. மொரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு திருமணம் நடைப்பெறுவதை குறித்து நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.

    யோகி டா படத்தை கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ மோனிகா சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.
    • விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

    பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். 'பெண் பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு...' என்று கூறிய விஷால், தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் குறிப்பிடாமல் தவிர்த்தார்.

    இதனிடையே, முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகா, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகி டா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக விழாவில் பங்கேற்றது, கைகோர்த்து பேசிக்கொண்டிருந்தது இருவரது காதலையும் சொல்லாமல் சொல்லியது.

    மேலும் விழாவில் பேசிய இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மித்ரன் ஜவஹர், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது இருவருமே வெட்கத்துடன் தலையை ஆட்டி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர்.



    விழாவில் சாய் தன்ஷிகா பேசும்போது, '15 வருடங்களாக நானும், விஷாலும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இதை அப்படியே தொடரலாமா, வேண்டாமா? இல்லை அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாமா? என்று கூட யோசித்து இருக்கிறோம். இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.

    நானும், விஷாலும் காதலிக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

    அதனைத் தொடர்ந்து விஷால் பேசியதாவது:-

    கிசுகிசு இனியும் பரவ வேண்டாம். இருக்கும் கிசுகிசுவே போதும் என்று முடிவெடுத்து விட்டேன். நல்ல வேலையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தை வரவில்லை. வந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பார்.

    இப்போது அறிவிக்கிறேன் எனது திருமணம் முடிவாகிவிட்டது. என் காதலி தன்ஷிகா. அவரை திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்போகிறேன். அவர் இப்போது ஆக்சன் கதாநாயகி. ஆனாலும் வடிவேலு-கோவை சரளா போல நாங்கள் இருக்க மாட்டோம். ஆனாலும் தன்ஷிகாவிடம் கொஞ்சம் சூதானமாகத்தான் இருக்க வேண்டும்.

    அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் எப்போதுமே இருக்கும். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது நடிப்புக்கும், திறமைக்கும் நான் தடை சொல்லமாட்டேன். ஒரே வீட்டில் இனி ஆக்சன் ஹீரோ, ஆக்சன் ஹீரோயின் இருக்கப்போகிறார்கள். இனி எங்கள் வீட்டுக்கு பாதுகாவலரே தேவையில்லை.

    தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன். இதுதான் எனது இலக்கு. அவர் சிரித்தால் அழகாக இருப்பார். அவரை காதலி, மனைவி, வாழ்க்கை துணை என்று எந்த வார்த்தையை சொல்வது என்று தெரியவில்லை. விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.



    பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஷால்- தன்ஷிகாவின் திருமணத்திற்கு பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த 'விழித்திரு' பட விழாவில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் டி. ராஜேந்தர் குறித்து குறிப்பிடாமல் தன்சிகா பேசினார். இதனால் டி.ராஜேந்தர் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே திட்டினார். பின் தன்ஷிகா மன்னிப்பு கேட்டு அவர் ஏற்கவில்லை, இந்த விவகாரம் பெரிதானது.

    அப்போது நடிகர் சங்க தலைவராக விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அன்று முதல் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அது அப்படியே காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. 

    • இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

    பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். 'பெண் பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு...' என்று கூறிய விஷால், தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் குறிப்பிடாமல் தவிர்த்தார். ஆனால் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவைதான் காதலிக்கிறார் என்று 'தினத்தந்தி' மட்டும்தான் குறிப்பிட்டிருந்தது. அது நேற்று உண்மையானது.

    முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகா, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகி டா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக விழாவில் பங்கேற்றது, கைகோர்த்து பேசிக்கொண்டிருந்தது இருவரது காதலையும் சொல்லாமல் சொல்லியது.

    மேலும் விழாவில் பேசிய இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது இருவருமே வெட்கத்துடன் தலையை ஆட்டி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர்.



    விழாவில் சாய் தன்ஷிகா பேசும்போது, '15 வருடங்களாக நானும், விஷாலும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இதை அப்படியே தொடரலாமா, வேண்டாமா? இல்லை அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாமா? என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால் இன்று (அதாவது நேற்று) காலை தினத்தந்தி பத்திரிகை செய்தியை பார்த்தேன். இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.

    நானும், விஷாலும் காதலிக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

    அதனைத் தொடர்ந்து விஷால் பேசியதாவது:-

    கிசுகிசு இனியும் பரவ வேண்டாம். இருக்கும் கிசுகிசுவே போதும் என்று முடிவெடுத்து விட்டேன். நல்ல வேலையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தை வரவில்லை. வந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பார்.

    இப்போது அறிவிக்கிறேன் எனது திருமணம் முடிவாகிவிட்டது. என் காதலி தன்ஷிகா. அவரை திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்போகிறேன். அவர் இப்போது ஆக்சன் கதாநாயகி. ஆனாலும் வடிவேலு-கோவை சரளா போல நாங்கள் இருக்க மாட்டோம். ஆனாலும் தன்ஷிகாவிடம் கொஞ்சம் சூதானமாகத்தான் இருக்க வேண்டும்.

    அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் எப்போதுமே இருக்கும். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது நடிப்புக்கும், திறமைக்கும் நான் தடை சொல்லமாட்டேன். ஒரே வீட்டில் இனி ஆக்சன் ஹீரோ, ஆக்சன் ஹீரோயின் இருக்கப்போகிறார்கள். இனி எங்கள் வீட்டுக்கு பாதுகாவலரே தேவையில்லை.

    தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன். இதுதான் எனது இலக்கு. அவர் சிரித்தால் அழகாக இருப்பார். அவரை காதலி, மனைவி, வாழ்க்கை துணை என்று எந்த வார்த்தையை சொல்வது என்று தெரியவில்லை. விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விஷால்- தன்ஷிகாவின் திருமணம் உறுதியானது முதல் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமண அறிவிப்பு குறித்த தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இருவரின் வயது வித்தியாசம் குறித்த தகவலும் வைரலாகி வருகிறது.

    நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. நடிகை சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது. பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
    • தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார். "எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தா வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற இருக்கிறது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொள்கிறார். அதிகாரப்பூர்வமாக விஷால் அவர்களது திருமணத்தை பற்றி இந்த விழாவில் கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2006-ல் திமிரு படப்பிடிப்புக்காக நான் மதுரை வந்தேன்.
    • நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் மண்டபத்தில் இன்று நடிகர் விஷால் மக்கள் நல இயக்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த விஷால் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்ட செயலாளரான எனது தம்பியின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். மதுரைக்கு வந்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு செல்ல முடியும். அப்படி சென்றால் எனது தாய் வீட்டுக்குள் சேர்க்க மாட்டார்கள். மேலும் எனது தாய் மீனாட்சி அம்மனுக்கு சாற்றுவதற்காக புடவை எடுத்துக்கொடுத்து அனுப்பி வைத்தார்.

    கடந்த 2006-ல் திமிரு படப்பிடிப்புக்காக நான் மதுரை வந்தேன். தற்போது 19 ஆண்டுகள் கழித்து மதுரைக்கு வந்திருக்கிறேன். மீனாட்சி அம்மனை மனதார மனதார வேண்டிக் கொண்டேன்.

     

    நடிகர் விஷால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள்

    நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு நான் காரணம் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து கோர்ட்டுக்கு சென்றதால் 3 ஆண்டுகள் தாமதம் ஆகி விட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரியதாக வந்துவிடும்.

    மதுரை மக்கள் என்னை விட்டு விட மாட்டார்கள். நானும் மதுரைக்காரன்தான். இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது, இதை தவிர்த்து இருக்கலாம். நம்மையும், நாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் இருநாடுகளுக்கு இடையே போர் என்பதே தேவையில்லை. மதுரை மக்கள் இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். ஒன்று பாசம், மற்றொன்று உணவு. நூறு ஆண்டுகள் கழித்து வந்தாலும் அதே பாசமும், சிரிப்பும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால்.
    • சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது உடல்நிலை குறித்து சமீபத்தில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார். அதற்கு பின் கூட்ட நெரிசல் மற்றும் சாப்பிடாமல் இருந்ததே அதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறினர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு, எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான் " என தெரிவித்துள்ளார்.

    இதனால் விஷால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    • என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
    • எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

    நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. 'மதகஜராஜா' புரோமோஷன் விழாவில் கை நடுங்க, வாய் குளறி அவர் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டதால் பரபரப்பு உருவானது.

    ஆனால் வைரல் காய்ச்சலே காரணம் என்று விஷால் தரப்பினர் விளக்கம் கொடுத்தனர். உரிய சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தார்.

    இதற்கிடையில் விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அளவுக்கு அதிகமான கூட்டம், சாப்பிடாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதே மயக்கத்துக்கு காரணம் என்று அவரது மானேஜர் ஹரி விளக்கம் கொடுத்தார்.

    இந்தநிலையில் தனது உடல்நிலை குறித்து விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். "மது, சிகரெட் என எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. இது என்னை பாதிக்கவும் செய்யாது.

    நான் சீக்கிரம் மீண்டு வருவேன். எனக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி'', என்று விஷால் கூறியிருக்கிறார்.

    இது விஷாலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ.
    • ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் நடிகரான சிவக்குமார் நடிகர் சூர்யாவின் வலர்ச்சி மற்றும் தொடக்க காலத்தில் பணியாற்றிய படத்தை பற்றியும். பிறகு தமிழ் சினிமாவில் உடலை மெருகேற்றி 6 பேக் கொண்டு வந்த முதல் நடிகர் சூர்யாவை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

    அதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் உண்மையில் சூர்யா தான் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 6 பேக் கொண்டு வந்தாரா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கு வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் விஷால் பதிலளித்துள்ளார். அதில் " 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தான் முதன் முதலில் சிக்ஸ் பேக் கொண்டு வந்தார். அதை தொடர்ந்து மத கஜ ராஜா மற்றும் சத்யா திரைப்படத்தில் நான் 6 பேக் வைத்தேன். மக்கள் மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்" என கூறினார்.

    வாரணம் ஆயிரம் மற்றும் சத்யா திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
    • 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் நகைக்கடை அதிபர் உம்மிடி உதய்குமார்- உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் மகனான உம்மிடி கிரிட்டிஸ்க்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், வங்கிக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், விஷாலின் தங்கை கணவரான உம்மிடி கிரிட்டிஸ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.5.5 கோடி கடன் பெற உடந்தையாக இருந்ததாகவும் ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக கிரிட்டிஸ் இருந்துள்ளார்.

    மேலும் மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஷாலுடன் நாடோடிகள், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்த அபிநயா காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
    • இது குறித்து நடிகை அபிநயா விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் விஷாலும், நடிகை அபிநயாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் இணைய தளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநயா நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

     

    அபிநயா - விஷால் 

    அபிநயா - விஷால் 

    தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. விஷாலை ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைத்து பேசினர். பின்னர் அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. அபிநயாவுடனான காதல் உண்மையா? என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

     

    விஷால் - அபிநயா 

    விஷால் - அபிநயா 

    இந்நிலையில் அபிநயா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் மனைவியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக நாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் எங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் வதந்திகளை பரப்பி உள்ளனர். இது பொய்யான தகவல்" என்று கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    • நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்துள்ளார்.
    • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.


    விஷால்

    தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.

    இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.  


    ×