என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமன்னா"

    • 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது.
    • நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன்.

    தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் தெற்கில் நடிக்க தொடங்கியபோது, மிகவும் இளமையாக இருந்தேன். நான் நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்றால், அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசி நான் கற்றுக்கொண்டேன்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க தொடங்கியதில் இருந்து சினிமா மாறி உள்ளது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நடிகையாக இருக்க விரும்புகிறேன்.

    நான் நானாகவே என் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். நான் ஒரு மாலுக்குள் நுழைந்தாலோ அல்லது ஒரு திரையரங்குக்குள் நுழைந்தாலோ, மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இன்னும் அந்த இடங்களுக்குள் நுழைவேன், ஏனென்றால் நான் இன்னும் என் வாழ்க்கையை நான் விரும்பும் வழியில் வாழ்வேன். எனக்கு மக்களைப் பிடிக்கும். எனக்கு மக்களுடன் சுற்றித் திரிவது பிடிக்கும். நான் சிறு வயதிலிருந்தே அப்படித்தான்.

    30 வயது வரை நடிப்பேன். அதன் பிறகு, நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவேன் என்று நினைத்தேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், நான் வேலை செய்து கொண்டிருந்தபோதும், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தபோதும், நான் உண்மையில் என் சொந்த நிலைக்கு வந்தேன், அப்போது அதிர்ஷ்டவசமாக இந்தத் துறை உண்மையில் சுவையான பகுதிகளை எழுதத் தொடங்கியது. இது உலகம் முழுவதும் நடந்த ஒரு பொதுவான மாற்றம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்த வயது பயம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பலர் வயதானதைப் பற்றி ஏதோ ஒரு நோய் போலப் பேசுகிறார்கள். வயதானது மிகவும் அற்புதமானது. ஆனால் மக்கள் வயதானதைப் பற்றி ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
    • 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார்.

    தமிழ் சினிமாவில் உள்ள பணக்கார நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

    அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா அதிக சொத்து சேர்த்த நடிகை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    2-வது இடத்தில் பால்நிற மேனி நடிகை தமன்னா இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.

    முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார். 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.

    • Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

    இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.

    இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா

    முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.

    இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    • மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
    • 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.

    இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 வருடங்களுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

    மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்."
    • இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

    படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னா "காவாலா" என்ற பாடலுக்கு சிறப்பு நடனமாடிருப்பார். அப்பாடல் மிகப்பெரிய வைரலானது. அதேப்போல் ஜெயிலர் 2 படத்திலும் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    • தமன்னா எந்த கவலையும் இல்லாமல் படங்களில் பிசியாகிவிட்டார்.
    • பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாகவும் பேசப்படுகிறது.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்தனர். 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' படத்தில் இருவரும் கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகளில் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த காதல் முறிந்துபோனதாக தகவல் பரவியது. இருவரும் தனித்தனியாக விழாக்களில் பங்கேற்றனர்.

    தமன்னா எந்த கவலையும் இல்லாமல் படங்களில் பிசியாகிவிட்டார். இந்தநிலையில் விரக்தியில் சுற்றிக்கொண்டிருந்த விஜய் வர்மாவுக்கு புது காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, 'தங்கல்' படத்தில் நடித்த பாத்திமா சனாகானும், விஜய் வர்மாவும் காதலிக்கிறார்களாம். இருவரும் மனிஷ் மல்ஹோத்ரா இயக்கத்தில் 'உல் ஜலூல் இஷ்க்' படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

    பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவதாகவும் பேசப்படுகிறது. வாடிப்போன மலராக காணப்பட்ட விஜய் வர்மா முகத்தில் சமீபகாலமாக பிரகாசம் குடியேறி இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

    அதேபோல, 'என்ன இருந்தாலும் தமன்னா போல வருமா?' என ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

    • மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
    • 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக ரூ.6.2 கோடிக்கு நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திவ்யா ஸ்பந்தனா தனது இன்சாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு பொருள் தரமானதாக இருந்தால் அது தானாகவே விற்பனையாகும். மைசூர் சாண்டல் சோப்பு வளமான பாரம்பரியம் மற்றும் நிலையான தரத்தை கொண்டது.

    இந்த சோப்பு ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் புகழையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்த எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. ஒவ்வொரு கன்னடரும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.

    • . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர்.

    தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

     

    இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இதை கன்னட மக்கள் எதிர்த்து " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி கேட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என கூறியுள்ளார்.

    • தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

    தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 8.88 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
    • இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.

    ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

    • ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.
    • காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

    இவருக்கும், இந்தி நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள்.

    இருவருமே நண்பர்களுக்கு காதல் முறிவு விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசுபொருளாக மாறி உள்ளது.

    அந்த பதிவில், ''வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    காதல் தோல்வி வேதனையில் இருந்து மீள்வதற்காக இந்த பதிவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசுகிறார்கள். தைரியமாக இருங்கள். காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன்.
    • ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன். தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ரவீனா டாண்டன் திருமணமாகி தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.

    அவருக்கு ராஷா ததானி என்ற மகள் இருக்கிறார். இவரும் திரை உலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ராஷா ததானியும் தமன்னாவும் மிக நெருங்கிய தோழிகள். அவரது வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமன்னா தவறாமல் பங்கேற்று வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு ராஷா ததானி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகையில் தமன்னா பங்கேற்று மகிழ்ச்சியாக ஹோலியை கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக தமன்னா, ரவீனா டாண்டன், இப்ராகிம் அலிகான், மனிஷ் மல்கோத்ரா, ஆமன் தேவ்கன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த தமன்னா ஆடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது. ரூ.46 ஆயிரம் மதிப்பிலான கருப்பு நிற பாடிகான் உடையில் அவரது அழகான நடை, அங்கு குவிந்து இருந்த மொத்த கேமரா கண்களிலும் பளிச்சென மின்ன தொடங்கியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×