search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannah"

    • நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.


    இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.


    என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்" என்றார் பேசினார்.

    • நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தமன்னாவை பார்க்க பாய்ந்த ரசிகர்

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னா, விழா அரங்கை விட்டு வெளியில் வந்த போது திடீரென ரசிகர் ஒருவர் தமன்னாவை நெருங்கினார். உடனே உடனிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரைத் தடுத்த நிறுத்தினர். அப்போது தமன்னா தனது பாதுகாவலர்களுக்கு அறிவுரை கூறி விலகச் செய்து, தன் ரசிகரின் ஆசைப்படி அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    இந்நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, புனே, அபுதாபி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


    இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    இந்நிலையில், நடிகை தமன்னா, விஜய்யுடன் 'சுறா' படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். 'சுறா' படப்பிடிப்பின்போதே எனக்குத் தெரியும், அது வொர்க்அவுட் ஆகாது என்று. நிறைய படங்களில் நமக்கே தெரியும் இது சரிவராது என்று ஆனால் நடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தாகவேண்டும். அது வேலையின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை தமன்னா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் 'சைரா நரசிம்மா ரெட்டி' திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதை நடிகை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் பரவி வந்தது. மேலும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்பட்டது.


    தமன்னா பதிவு

    இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், "இது வெறும் 'பாட்டில் ஓபனர்'தான், வைரம் இல்லை" என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

    • ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் நாளை (6-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவர்ச்சியான உடையில் தமன்னா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.





    • நடிகை தமன்னா, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பில் ’லஸ்ட் ஸ்டோரிஸ்’ இரண்டாம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    அதுமட்டுமல்லாமல் 'லஸ்ட் ஸ்டோரிஸ்' இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்த வெப்தொடர்ன் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப்தொடரில் தமன்னாவின் படுக்கையறை காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.


    இது குறித்து தமன்னா கூறியதாவது:- சமீபத்தில் லஸ்ட் ஸ்டேரிஸ் 2-ல் நான் நடித்த காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகையாக ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் ஒரு பயணமாகவே கருதுகிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ்-2 காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது மிகவும் சிரமப்படுவேன், படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். மற்றபடி நான் ஒரு கலைஞனாக என்னை நினைத்து அதற்கான வேலையை செய்து மகிழ்ச்சி அடைகிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ்-2வை ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.



    சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின்னர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை காண்பித்தார். ரசிகரின் அன்பை நெகிழ்ந்து பார்த்த தமன்னா, கண்கலங்கி அவரை கட்டியணைத்தார். மேலும் அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகை தமன்னா 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பில் 'ஜி கர்தா' வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் தமன்னா கவர்ச்சியாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'ஜி கர்தா' வெப் தொடரிலும் தமன்னா அளவிற்கு மிஞ்சிய ஆபாச காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.

    இந்த காட்சிகள் குறித்து பலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், இது குறித்து தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில், "கதைக்கு தேவையாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடித்தேன். ஜி கர்தா வெப் தொடர் பள்ளி பருவத்து காதல் கதை. எனவே அந்த கதைக்கு நெருக்கமான காட்சிகள் தேவை என்பதால் நடித்தேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா.
    • இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது.


    தமன்னா

    நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பழக முடிந்தது. இவர் தான் நான் எதிர்பார்த்த நபர்.


    தமன்னா -விஜய் வர்மா

    நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாக ஒரு பெண் அவரது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்" என்று பேசினார்.

    • நடிகை தமன்னா தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபகாலமாக இவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    தமன்னா

    சமீபகாலமாக தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் பரவி வருகின்றன. இதுதொடர்பாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.


    தமன்னா

    இதற்கு முன்பு தமன்னாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ஜமுனா சமீபத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • இவரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜமுனா. சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார்.


    ஜமுனா

    மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்த ஜமுனா, தங்கமலை ரகசியம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவருக்கு 1999-ல் தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. நடிகை ஜமுனா 1980ம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பின் 1990-களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


    தமன்னா

    சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், ஜமுனாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமுனா உயிரோடு இருந்தபோதே திரைக்கதை முழுவதும் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாகவும் ஜமுனா கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×