என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Divya Spandana"

    • ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது
    • 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ள தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

    இந்நிலையில் இந்தக் கருத்தை குறிப்பிட்டு, "ஆண்களின் மனதையும் கணிக்க முடியாது, அவர்கள் எப்போது குற்றம் செய்வார்கள் என்று தெரியாது, அதற்காக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா? என நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது -- அவன் எப்போது பாலியல் வன்கொடுமை/கொலை செய்வான் என்று தெரியவில்லை, எனவே எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர்.

    நடிகை திவ்யா தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான AppleBox Studios மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை துணிச்சலாகப் பதிவு செய்து வருகிறார்.


    திவ்யா ஸ்பந்தனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    • மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
    • 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக ரூ.6.2 கோடிக்கு நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திவ்யா ஸ்பந்தனா தனது இன்சாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு பொருள் தரமானதாக இருந்தால் அது தானாகவே விற்பனையாகும். மைசூர் சாண்டல் சோப்பு வளமான பாரம்பரியம் மற்றும் நிலையான தரத்தை கொண்டது.

    இந்த சோப்பு ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் புகழையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்த எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. ஒவ்வொரு கன்னடரும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன்.
    • தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.

    பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழில் ரம்யா என்ற பெயரில் சிம்பு ஜோடியாக குத்து என்ற படத்தில் அறிமுகமானார். தனுசின் பொல்லாதவன், ஜீவாவுடன் சிங்கம்புலி, அர்ஜுனுடன் கிரி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.

    இந்த நிலையில் ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் முடிவாகி இருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    இதனால் காட்டமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எத்தனை முறை இதை செய்தனர் என்று தெரியவில்லை.

    எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன். தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.

    ×