என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Ramya"

    • தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது.
    • தேர்தல் ஆணையம் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.

    குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரம்யா, "ராகுல் காந்தி சொல்வது சரியானது. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததுகுறிப்பிடத்தக்கது. 

    • 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

    குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.

    இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.

    இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

    • எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன்.
    • தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.

    பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழில் ரம்யா என்ற பெயரில் சிம்பு ஜோடியாக குத்து என்ற படத்தில் அறிமுகமானார். தனுசின் பொல்லாதவன், ஜீவாவுடன் சிங்கம்புலி, அர்ஜுனுடன் கிரி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.

    இந்த நிலையில் ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் முடிவாகி இருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

    இதனால் காட்டமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எத்தனை முறை இதை செய்தனர் என்று தெரியவில்லை.

    எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன். தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.

    • என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள்.
    • நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் தந்தார்கள்.

    சினிமா துறையில் சமீபகாலமாக கதாநாயகர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    தமிழில் 'குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான ரம்யாவும் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் ரம்யா பங்கேற்று பேசும்போது, ''என்னுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள். நான் முதலில் என்னைவிட குறைவான சம்பளம் பெறும் நடிகர்களோடு பணியாற்றியபோது அந்த படம் ஹிட்டானதும், அந்த நடிகர்களின் அடுத்த படங்களுக்கு என்னைவிட ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்தார்கள்.

    நடிகர்களான அவர்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் கொடுத்தால், எனக்கு ரூ.1 கோடி மட்டும்தான் தந்தார்கள். நாங்களும் நடிகர்கள் வேலையை செய்யும்போது இவ்வளவு சம்பள வித்தியாசம் ஏன் வருகிறது.

    இப்படி சினிமா துறையில் சொல்வதற்கு நிறைய கதைகள் இருந்தாலும், அதை யாரும் தைரியமாக சொல்ல முன்வருவது இல்லை. வித்யாபாலன் திறமையான நடிகை. அவருக்கு கூட நடிகர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை'' என்றார்.

    கன்னட சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் அதிகமாக வர வேண்டும். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப ஒத்துப்போகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, வலுவான கதைசொல்லல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துமாறு நடிகைகளை அவர் வலியுறுத்தினார்.

    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா.
    • கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. தற்போது சினிமாவில் நடிக்காமல் ரம்யா ஒதுக்கி இருக்கிறார். இந்த நிலையில், கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகை ரம்யா பார்த்திருந்தார். பின்னர் கடந்த 6-ந் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சார்லி-777 திரைப்படம் சிறப்பாக இருப்பதாக அவர், கருத்து பதிவிட்டு இருந்தார்.

    ரம்யாவின் கருத்தை பலர் வரவேற்று பதிவு செய்திருந்தார்கள். ஆனால் 'ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து பதிவு செய்திருந்தார். இதை பார்த்து நடிகை ரம்யா அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய மா்மநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்தார்.

    இதுபற்றி பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியுடன் தொலைபேசியில் நடிகை ரம்யா பேசியதாக தெரிகிறது. பின்னர் மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி ரம்யாவுக்கு, போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் உள்ள மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார்.

    அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியை, ஹிட்லருடன் ஒப்பிட்டு நடிகை ரம்யா டுவிட்டரில் கருத்து கேட்டு இருந்தார். ‘போட்டோஷாப்பில்’ திருத்தம் செய்த ஹிட்லர் படத்துடன் மோடியை ஒப்பிட்டதாக பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ActressRamya #PMModi #Hitler
    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.

    இவர் சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் பதிவிடும் சில தகவல்கள் அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறி விடுகின்றன.

    இந்த நிலையில், நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‘சர்வாதிகாரியான’ ஹிட்லர் சிறுமி ஒருவரின் காதை திருகுவது போன்ற படமும், பிரதமர் நரேந்திர மோடி சிறுவன் ஒருவனின் காதை திருகுவது போன்ற படமும் இடம் பெற்று இருந்தது. மேலும், ‘உங்களின் கருத்துகள் என்ன?’ என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    நடிகை ரம்யாவின் இந்த டுவிட்டர் செய்தி ‘சர்வாதிகாரி’ ஹிட்லரும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மேலும், நடிகை ரம்யா பதிவிட்ட ஹிட்லரின் படம் ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.



    அதாவது ஹிட்லரின் கைகள், சிறுமியின் தோள் மீது இருக்கும் படத்தை ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்து ஹிட்லரின் கைகள் சிறுமியின் காதுகளை திருகுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உண்மையான படத்தையும் வெளியிட்டனர்.

    மேலும், நடிகை ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கன்னட காமெடி நடிகர் ‘புல்லட் பிரகாஷ்’ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் புல்லட் பிரகாஷ் கூறியிருப்பதாவது-

    ‘ரம்யா மேடம் (பத்மாவதி), இந்த குழந்தையை போல் நீங்கள் இருந்த போது உங்களது தந்தை உங்கள் காதை திருகி இருந்தால் நீங்கள் 2 தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். நரேந்திர மோடி பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. நாளை வீடியோ மூலம் பதில் அளிக்கிறேன்’.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகை ரம்யா ஆகியோரின் படங்களை பிறருடன் ஒப்பிட்டு தவறான முறையிலும் கருத்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #ActressRamya #PMModi #Hitler
    ×