search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இன்ஸ்டாகிராமில் ஆபாச பதிவு: மர்மநபர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை ரம்யா
    X

    இன்ஸ்டாகிராமில் ஆபாச பதிவு: மர்மநபர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை ரம்யா

    • கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா.
    • கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரு:

    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா. தற்போது சினிமாவில் நடிக்காமல் ரம்யா ஒதுக்கி இருக்கிறார். இந்த நிலையில், கன்னடத்தில் சார்லி-777 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகை ரம்யா பார்த்திருந்தார். பின்னர் கடந்த 6-ந் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சார்லி-777 திரைப்படம் சிறப்பாக இருப்பதாக அவர், கருத்து பதிவிட்டு இருந்தார்.

    ரம்யாவின் கருத்தை பலர் வரவேற்று பதிவு செய்திருந்தார்கள். ஆனால் 'ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து பதிவு செய்திருந்தார். இதை பார்த்து நடிகை ரம்யா அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய மா்மநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் முடிவு செய்தார்.

    இதுபற்றி பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியுடன் தொலைபேசியில் நடிகை ரம்யா பேசியதாக தெரிகிறது. பின்னர் மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி ரம்யாவுக்கு, போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் உள்ள மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார்.

    அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×