search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய்கள்"

    • தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து சாலைகளில் படுப்பது,வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பது, நடந்து செல்வோரை துரத்துவது என அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இந்த அட்டகாசத்தால் நாய் கடிக்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது வெளியே பெரும்பாலானவர்களின் புலம்பலாக உள்ளது.

    ஆங்காங்கே சுற்றித்திரியும் நாய்கள் தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிடக்கும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு வளர்கின்றன.இது தவிர சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று திரிகின்றன.இதில் சில வெறி நாய்களாக மாறும் போது சாலைகளில் செல்வோர்களை எல்லாம் கடிக்க தொடங்கி விடுகிறது.

    இதுஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் ரெயில்வே நிலையங்களில் பஸ் மற்றும் ரெயில் ஏறுவதற்காக வேகமாக வரும் பயணிகளை நாய்கள் விரட்டி கடிப்பதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஊசி போட்டு செல்கின்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் ஒய்.எம்.ஆர். பட்டி, ரவுண்ட் ரோடு, ரெயில்வே காலனி, அனுமந்தநகர், மரியாநாதபுரம், சுப்புராமன் பட்டறை, தென் போஸ்கோ நகர் குள்ளனம்பட்டி, வேடப்பட்டி, நாகல்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

    பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் நாய்கள் வாகன ஓட்டிகளில் செல்வோரை விடாமல் துரத்துகிறது. இப்படி நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது.
    • முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க் கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாய் செல்கின்றன. இதில் வெறி பிடித்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு திட்டக்குடி நகர சாலையில் சென்ற பா.ம.க. நகர செயலாளர் சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள் திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேசுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி தனி யார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களினால் பள்ளி குழந்தைகள், பாதசாரிகள், முதியோர்கள் என அனை வரும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர்.

    எனவே, திட்டக்குடி நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல வேண்டுமென திட்டக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெரு நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன.
    • சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் சாலையில் கால்நடைகள், நாய்கள் சுற்றித்திரிவதை கட்டு ப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    சாலையின் குறுக்கே திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் கருத்தடை செய்தனர். இதனால் சற்று குறைந்திருந்த நாய்கள் தொல்லை தற்போது மீண்டும் அதிகரி த்துள்ளது. நாகல்நகர், பஸ் நிலையம், ஆர்.எம்.காலனி, ரெயில் நிலையம், பாரதிபுரம், சந்தைபேட்டை, பழனிசாலை உள்பட நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி திரிகின்றன.

    இதனால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சில ெதருநாய்கள் காயங்களுடன் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. எனவே சாலைகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
    • இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    • தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை புகார் அளித்து வந்தனர்.
    • கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களால் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் திருப்பூர் மாநகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் மூலம் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13, 24, 22 வார்டுகளில் உள்ள பிச்சம்பாளையம் பிரிவு சிங்காரவேலன் நகர் , அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர். இது பொதுமக்கள் இடையே சற்று ஆறுதல் பெற்றுள்ளது. தொடர்ந்து மாநகர் முழுவதும் இது போன்ற தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
    • திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.

    திருச்செங்கோடு:

    தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.

    திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு

    நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகராட்சி 87 -வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ராஜூ நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரங்களில் ஒரு நாய் குரைக்கும்போது, அதன் சத்தத்தை கேட்டு மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் கெடும் நிலை உள்ளது. மேலும் சிறிய குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்குவதற்காக வெளியே கடைக்கு வரும்போது நாய் துரத்தும் அவல நிலையும் உள்ளது.

    சில சமயங்களில் நாய் துரத்தும் போது ஓடிச் செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய் துரத்துவதால், அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வேகமாக சென்று தடுமாறி கீழே விழுகின்றனர்.

    கார் செல்லும்போது அந்த காரை தெரு நாய்கள் கூட்டமாக குறைத்துக் கொண்டே துரத்துகிறது. இன்னும் ஒரு சில சமயங்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு கடித்துக் குதறி கொள்ளும் காட்சியும் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாயும் ரத்தம் சொட்ட சொட்ட தெருகளில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,

    இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நாய் துரத்தும் போது அத்தனை நாய்களும் சேர்ந்து துரத்துகிறது.

    இதனால் அடிக்கடி தலை தெரிக்க ஓடும் நிகழ்வு ஏற்படுகிறது. வீட்டின் கதவை தெரியாமல் மறந்து திறந்து வைத்து விட்டால் நாய்கள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. பின்னர் அந்த நாய்களை மிகவும் சிரமப்பட்டு தான் துரத்த முடிகிறது.

    மேலும் தற்போது தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால், நாய்களின் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, தெரு நாய்களும் சேர்ந்து வளர்ப்பு நாயின் மீது பாய்கிறது.

    அதனை சமாளித்துக் வளர்ப்பு நாயை அழைத்து செல்வதற்குள் போதும் என்றாகி விடுகிறது. கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்படுவது குடியிருக்கும் மக்கள்தான் என்றனர்.

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரையில் 460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,   துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தீர்மானமாக இந்துக்கள் மயான கரையில் மின்மயானம் ரூ.1கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் 460 தெரு நாய்கள் பிடிக்க ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டதால் நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். 

    கடந்த முறை ஒரு நாயை பிடிக்க ரூ.350 வழங்கிய நிலையில் தற்போது ரூ.700 வழங்கியதால் கடும் வாக்கு வாதம் நடந்து, பின்னர் தீர்மானம் நிறைவேறியது. 

    மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி. குடிநீர் வழங்குவது குறித்தும், சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமலே பல பணிகளை நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டினர்.  அதைத்தொடர்ந்து மற்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர் மீரான் அலி, மேலாளர் பத்மநாதன், துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    பெரியகுளத்தில் பொதுமக்களை தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம், பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்காக இந்த சாலை வழியாக சென்று வருவார்கள்.

    இதனால் இச்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்வர்.

    இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையை கடந்து வருகின்றனர்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.

    படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×